என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பருவம் தவறிய மழை"

    • ஆரம்பத்தில் குறைவான விவசாயிகளே பருத்தி சாகுபடி பணிகளை செய்து வந்தனர்
    • அதில் ஏற்பட்ட நஷ்டத்தை பொருட்படுத்தமால் வயல்களில் மறு உழவு செய்து மீண்டும் பருத்தி சாகுபடி பணிகளை செய்து வருகின்றனர்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியில் பருத்தி சாகுபடி பணிகள் நடைபெற்று வருகிறது.

    கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் உள்ள விவசாயிகள், ஒவ்வொரு ஆண்டும், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதும், சம்பா மற்றும் குறுவை, தாளடி நெல் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன் பிறகு உளுந்து பயறு மற்றும் வரப்பு உளுந்து சாகுபடிகளை செய்து வருகின்றனர்.

    இத்தகைய சாகுபடி பணிகளுக்கு பிறகு, மாற்று பயிராக பருத்தி சாகுபடி பணிகளை கடந்த சில ஆண்டுகளாக அப்பகுதி விவசாயிகள் செய்து வருகின்றனர்.

    என்றாலும், ஆரம்பத்தில் குறைவான விவசாயிகளே பருத்தி சாகுபடி பணிகளை செய்து வந்தனர். ஆனால், கடந்த ஆண்டு முதல் அதிகளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடி செய்து வருகின்றனர்.

    அதேபோல, நடப்பு ஆண்டில் கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் பருத்தி சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதி விவசாயிகள், வயல்களில் பருத்தி பயிர்கள் இட்டனர்.

    அப்போது, சிறு பயிர்களாக பருத்தி பயிர்கள் இருந்த போது, பருவம் தவறிய மழையால், அவைகள் சேதமாயின.

    அதில் ஏற்பட்ட நஷ்டத்தை பொருட்படுத்தமால் வயல்களில் மறு உழவு செய்து மீண்டும் பருத்தி சாகுபடி பணிகளை செய்து வருகின்றனர்.

    தற்போது, பருத்தி சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் எந்திரம் மூலம் பாத்திகட்டும் பணிகள் மற்றும் களைகள் அகற்றும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    தற்போது கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் கடுமையான வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், அப்பகுதி விவசாயிகள் பருத்தி சாகுபடி பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • விவசாயிகள் தங்களது ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து நிர்கதியாக உள்ளனர்.
    • நாளை தமிழகம் வந்து நெற்பயிர்களை ஆய்வு செய்வதுடன் நெல்கொள்முதல் நிலையங்களுக்கும் சென்று பார்வையிடுவார்கள் என தெரிகிறது.

    சென்னை:

    காவிரி டெல்டா மாவட்டங்களில் பருவம் தவறி பெய்த கனமழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகி சேதம் அடைந்தது.

    குறிப்பாக மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த 1 லட்சம் ஏக்கர் நெற்பயிர்களும், ஊடுபயிராக பயிரிடப்பட்ட உளுந்து, பாசி பயிர்களும் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.

    இதனால் விவசாயிகள் தங்களது ஒட்டுமொத்த வாழ்வாதாரத்தையும் இழந்து நிர்கதியாக உள்ளனர்.

    இதனால் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் 17 சதம் ஈரப்பதம் இருந்தால் எடுப்பது என்ற வழக்கத்தை மாற்றி 22 சதம் வரை உயர்த்தி நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கம்யூனிஸ்டு கட்சிகள் உள்பட பல்வேறு விவசாய அமைப்புகள் அரசை வலியுறுத்தி வந்தது.

    இதுகுறித்து தமிழக அரசும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

    இந்த நிலையில் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளரான உணவு பாதுகாப்பு துறையின் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் டெல்லி சென்று மத்திய அரசின் உணவுத்துறை செயலாளர் சஞ்சீவ் கோப்ராவை நேரில் பார்த்தும் இன்று வலியுறுத்தி பேசினார்.

    இதை ஏற்று, இது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் மத்திய அரசின் உணவுத்துறையின் கீழ் உள்ள சேகரிப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவை சேர்ந்த உதவி இயக்குனர்கள் நவீன், டி.எம்.பிரீத்தி மற்றும் தொழில்நுட்ப அலுவலர்கள் ராகுல், அபிஷேக் பாண்டே ஆகியோர் இடம் பெற்று உள்ளனர்.

    இந்த குழுவினர் நாளை தமிழகம் வந்து நெற்பயிர்களை ஆய்வு செய்வதுடன் நெல்கொள்முதல் நிலையங்களுக்கும் சென்று பார்வையிடுவார்கள் என தெரிகிறது.

    அதன் பிறகு அது தொடர்பான அறிக்கையை மத்திய அரசின் உணவு அமைச்சகத்திற்கு அறிக்கை சமர்ப்பிப்பார்கள். இந்த அறிக்கையின் அடிப்ப டையில் 22 சதவீத ஈரப்பதத்துடன் நெல் கொள்முதல் செய்வதற்கு மத்திய அரசு அனுமதியளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×