search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரூப்லெவ்"

    • கனடாவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் சின்னர் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    டொரண்டோ:

    கனடாவில் நேஷனல் பேங்க் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ், இத்தாலி வீரர் ஜானிக் சின்னருடன் மோதினார்.

    இதில் ரூப்லெவ் 6-3, 1-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் அரையிறுதியில் ரூப்லெவ், இத்தாலி வீரர் மேட்டியோ அர்னால்டை சந்திக்கிறார்.

    • குரோசியா ஓபன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு சுற்று நடைபெற்றது.
    • இதில் ரஷிய வீரர் ரூப்லெவ் வென்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    ஜாக்ரெப்:

    குரோசியா ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு சுற்று நேற்று நடைபெற்றது. இதில் ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ், அர்ஜெண்டினாவின் கேமிலோ யூகோ உடன் மோதினார்.

    இந்தப் போட்டியின் முடிவில் ரூப்லெவ் 6-4, 7-5 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் காலிறுதியில் ரூப்லெவ், ஹங்கேரி வீரர் பேபியன் மரோஜானை சந்திக்கிறார்.

    • ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் ரஷிய வீரர் தோல்வி அடைந்தார்.

    பாஸ்தாத்:

    ஸ்வீடிஷ் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்வீடனில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன.

    இதில் ரஷிய வீரர் ஆண்ட்ரே ரூப்லெவ், அர்ஜெண்டினாவின் தியாகோ டிரண்டே உடன் மோதினார்.

    இதில் ரூப்லெவ் 6-7 (5-7), 6-3, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். தியாகோ டிரண்டே காலிறுதிக்கு முன்னேறினார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ரஷியா வீரர் ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. இரு சுற்றுகள் முடிந்து 3-வது சுற்றுப் போட்டிகள் நடந்து வருகின்றன.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று போட்டியில் ரஷிய வீரரான ஆண்ட்ரே ரூப்லெவ், இத்தாலி வீரர் மேட்டியோ அர்னால்டுடன் மோதினார்.

    இதில் அர்னால்டு 7-6 (8-6), 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ரூப்லெவை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் 4-வது சுற்றில் அர்னால்டு, சிட்சிபாசை சந்திக்கிறார்.

    • பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ரஷிய வீரர் ரூப்லெவ் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    பாரிஸ்:

    கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்துவருகிறது. தகுதிச்சுற்று முடிந்துள்ள நிலையில் முதல் சுற்றுப் போட்டிகள் இன்று தொடங்கின.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், அமெரிக்காவின் வுல்புடன் மோதினார். இதில் 6-1, 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு போட்டியில் ரஷியாவின் ஆன்ட்ரே ரூப்லெவ், ஜப்பான் வீரர் டாரோ டேனியலுடன் மோதினார். இதில் ரூப்லெவ் முதல் செட்டை 6-2 என எளிதில் கைப்பற்றினார். 2வது செட்டை டாரோ 7-6 (7-3) என போராடி வென்றார். இதனால் சுதாரித்து கொண்ட ரூப்லெவ் அடுத்த இரு செட்களை 6-3, 7-5 என கைப்பற்றி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
    • இதில் முன்னணி வீரரான ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    ரோம்:

    இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முன்னணி வீரரான ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், பிரான்ஸ் வீரர் முல்லருடன் மோதினார்.

    இதில் முல்லர் 3-6 என முதல் செட்டை இழந்தார். இதையடுத்து, அதிரடியாக ஆடிய முல்லர் அடுத்த இரு செட்களை 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இதன்மூலம் இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ரூப்லெவ் வெளியேறினார்.

    • பார்சிலோனா ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடந்து வருகிறது.
    • இதில் முன்னணி வீரரான ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    மேட்ரிட்:

    பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 8-வது இடத்தில் இருக்கும் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், அமெரிக்காவின் பிரண்டன் நகஷிமாவுடன் மோதினார்.

    இதில் ரூப்லெவ் 4-6, 6-7 (6-8) என்ற செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.

    • துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
    • இன்று நடந்த அரையிறுதியில் ரஷியாவின் ரூப்லெவ் தோலவி அடைந்தார்.

    துபாய்:

    துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், கஜகஸ்தானின் அலெக்சாண்டர் பப்லிக்குடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை ரூப்லெவ் 7-6 (7-4) என வென்றார். 2வது செட்டை அலெக்சாண்டர் பப்ளிக் 7-6 (7-5) என போராடி வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் பப்ளிக் 6-5 என இருந்தபோது வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

    இறுதியில், பப்ளிக் 6-7 (4-7), 7-6 (7-5), 6-5 என வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.

    நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் பப்ளிக் மெத்வதேவ் அல்லது யூகோ ஹம்பர்ட்டை சந்திக்க உள்ளார்.

    • துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது.
    • இன்று நடந்த போட்டியில் ரஷியாவின் ரூப்லெவ் வெற்றி பெற்றார்.

    துபாய்:

    துபாய் சாம்பியன்ஷிப் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ், அமெரிக்காவின் செபாஸ்டியன் கோர்டாவுடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை ரூப்லெவ் 6-4 என வென்றார். 2வது செட்டில் ரூப்லெவ் 4-3 என முன்னிலை பெற்றபோது செபாஸ்டியன் காயத்தால் விலகினார். இதன்மூலம் ரூப்லெவ் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

    • கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரில் நடந்து வருகிறது.
    • நேற்று நடந்த போட்டியில் ரஷிய வீரர் ரூப்லெவ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

    கத்தார்:

    கத்தார் ஓபன் டென்னிஸ் தொடர் கத்தாரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டங்கள் நேற்று நடந்தன. இரண்டாவது காலிறுதியில் ரஷிய வீரர் ஆண்ட்ரூ ரூப்லெவ், செக் நாட்டு வீரர் ஜாக்குப் மென்சிக்குடன் மோதினார்.

    இதில் ரூப்லெவ் 4-6, 6-7 (6-8) என்ற செட் கணக்கில் தோற்று தொடரில் இருந்து வெளியேறினார்.

    • மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்தது.
    • இன்று நடந்த இறுதிச்சுற்றில் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ் சாம்பியன் பட்டம் வென்றார்.

    மான்டே கார்லோ:

    மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்தது. இதில் இன்று நடந்த இறுதிச்சுற்றில் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ், டென்மார்க் வீரர் ஹோல்ஜர் ரூனேவை சந்தித்தார்.

    இதில் ரூனே முதல் செட்டை 7-5 என கைப்பற்றினார். இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ரூப்லெவ் அடுத்த இரு செட்களை 6-2, 7-5 என வென்று சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.

    • மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது.
    • இன்று நடந்த அரையிறுதிச் சுற்றில் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ் வென்றார்.

    மான்டே கார்லோ:

    மான்டே கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த அரையிறுதிச் சுற்றில் ரஷியாவின் ஆந்த்ரே ரூப்லெவ், அமெரிக்க வீரர் டெய்லர் பிரிட்சை சந்தித்தார்.

    இதில் ரூப்லெவ் 7-5, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    ×