என் மலர்
நீங்கள் தேடியது "புத்தக தானம்"
- நாகர்கோவில் அரசு தொழில்நுட்ப கல்லூரி மைதானத்தில் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது.
- 4-வது புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி:
நாகர்கோவில் கோணம் அரசு தொழில்நுட்ப கல்லூரி மைதானத்தில் குமரி மாவட்டத்தின் 4-வது புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் சிறைத்துறை சார்பில் அமைக்கப்பட்ட அரங்கில் சிறைவாசி களுக்காக புத்தகம் தானம் பெற நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது.
இதையொட்டி புத்தக கண்காட்சியில் தானம் பெற பெட்டிகள் வைக் கப்பட்டுள்ளன. இதில் அமைச்சர் மனோதங்கராஜ், மேயர் மகேஷ் ஆகியோர் புத்தகங்களை வழங்கி தானம் செய்தனர்.
நிகழ்ச்சியில் பாளை யங்கோட்டை சிறைத்துறை சூப்பிரண்டு சங்கர், மாவட்ட கிளை சூப்பிரண்டு (பொறுப்பு) ராஜமாணிக்கம் மற்றும் சிறை காவலர்கள் கலந்து கொண்டனர்.
கண்காட்சியில் குமரி மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வலர்கள், பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு புத்தகம் தானம் செய்கிறார்கள்.
- புத்தக கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- புத்தக கண்காட்சி ஜனவரி 12-ந்தேதி வரை நடைபெறுகிறது.
சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 48வது புத்தக கண்காட்சி நடைபெற்று பெற்று வருகிறது.
புத்தக வாசிப்பாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புத்தக கண்காட்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
அரங்கிற்கு வெளியே வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையையும் அவர் திறந்து வைத்தார்.
தொடக்க நாள் நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
புத்தக கண்காட்சிக்கு தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.
இந்த புத்தக கண்காட்சி ஜனவரி 12-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இந்நிலையில், சென்னை புத்தகக் கண்காட்சியில் சிறைவாசிகளுக்கு புத்தக தானம் செய்யும் அரங்கில் பல்வேறு புத்தகங்களை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தானம் செய்தார்.