என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீக்கியர்"

    • இங்கிலாந்தில் உள்ள சீக்கியர்கள் இடையே பிளவை ஏற்படுத்த காலிஸ்தான் குழுக்கள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • சீக்கியர்களிடையே பதற்றத்தை உருவாக்கி இந்தியாவுக்கு எதிராக உணர்வுகளை தூண்டுகின்றன.

    லண்டன்:

    இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகம் முன்பு சமீபத்தில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். இந்தியாவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங்கை போலீசார் கைது செய்ய முயற்சித்ததை கண்டித்து நடந்த போராட்டத்தில் இந்திய தூதரகத்தில் இருந்த தேசிய கொடி அவமதிக்கப்பட்டதை தொடர்ந்து மேலும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் இங்கிலாந்தில் உள்ள சீக்கியர்கள் இடையே பிளவை ஏற்படுத்த காலிஸ்தான் குழுக்கள் முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆலோசகர் காலின் ப்ரூம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காலிஸ்தான் குழுக்கள், இங்கிலாந்தில் அதிகாரத்தை விரும்புகின்றன. இதனால் சீக்கியர்களிடையே பதற்றத்தை உருவாக்கி இந்தியாவுக்கு எதிராக உணர்வுகளை தூண்டுகின்றன. அவர்கள் ஒரு பெரிய பிளவை உருவாக்க விரும்புகிறார்கள். இதனால் அதிக பதற்றம் உருவாக்கப்படுகிறது. இது இறுதியில் அதிகார போராட்டத்திற்கு வழி வகுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    • 21 வயதான இவர் கடந்த 2021- ம் ஆண்டு இங்கிலாந்து அரண்மனையில் நுழைய முயற்சி செய்தார்.
    • 1919-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழி வாங்கும் வகையில் ராணியை கொல்ல வந்தாக தெரிவித்தார்.

    லண்டன்:

    இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு மரணம் அடைந்தார். இவர் உயிருடன் இருக்கும் போது அவரை கொல்ல முயன்றதாக இங்கிலாந்து வாழ் சீக்கியர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். அவரது பெயர் ஜஸ்வந்த் சிங் சைலு. 21 வயதான இவர் கடந்த 2021- ம் ஆண்டு இங்கிலாந்து அரண்மனையில் நுழைய முயற்சி செய்தார். முகத்தில் முகமூடி அணிந்த நிலையில் ஊடுருவிய அவரை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாதுகாப்புபடை வீரர்கள் மடக்கி பிடித்தனர்

    விசாரணையில் ஜஸ்வந்த் சிங் இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்தை கொல்லும் நோக்கத்தில் வந்ததாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தார். 1919-ம் ஆண்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் நடந்த ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பழி வாங்கும் வகையில் ராணியை கொல்ல வந்தாக தெரிவித்தார். அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. அவருக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.

    இங்கிலாந்து போலீசார் இச்சம்பவம் தொடர்பாக ஜஸ்வந்த் சிங் சைலுவை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு இங்கிலாந்து கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜஸ்வந்த் சிங் சைலுவுக்கு 9 ஆண்டுகள் கடுங்காவல் தண்டணை விதித்து தீர்ப்பு கூறினார். 

    • பாரதிய ஜனதா கட்சிக்கு 240 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.
    • பிரதமர் மோடி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளார்.

    பாராளுமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை என்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சிக்கு 240 இடங்களில் மட்டுமே வெற்றி கிடைத்தது.

    இதனால் 16 எம்.பி.க்கள் வைத்துள்ள சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் 12 எம்.பி.க்கள் வைத்துள்ள நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு பெற்று பிரதமர் மோடி மத்தியில் கூட்டணி ஆட்சியை அமைக்க உள்ளார்.

    பாரதிய ஜனதா தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக தேர்வு ஆன மோடியை ஆட்சி அமைக்க வருமாறு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று கேட்டுக்கொண்டார். அதன்படி நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 7.15 மணிக்கு ஜனாதிபதி மாளிகையில் நாட்டின் பிரதமராக மோடி பதவி ஏற்க உள்ளார்.

    இந்நிலையில், "பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கவிருக்கும் புதிய அமைச்சரவையில் ஒரு முஸ்லிம்கூட இடம்பெற வாய்ப்பில்லை. ஆனால், இந்த அரசு 140 கோடி இந்தியர்களின் பிரதிநிதி என தம்பட்டம் அடித்துக் கொள்வார்கள்" என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா குற்றம் சாட்டியுள்ளார்.

    பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சிறுபான்மையினரான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்களில் ஒருவர் கூட பாராளுமன்ற தேர்தலில் வென்று எம்.பி.யாக வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
    • முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கம்ரான் அக்மலை வன்மையாக கண்டித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

    இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான கம்ரன் அக்மல் டி20 போட்டி நடக்கும் போது நேரலை நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரரான அர்ஷ்தீப் சிங்கை ஒரு சீக்கியர் என்பதால் அவரை அவதூராக பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கம்ரான் அக்மலை வன்மையாக கண்டித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அதில் "நீங்கள் சீக்கியர்களை பற்றி விமர்சிக்கும் பொழுது அவர்களை பற்றியும் அவர்களது வரலாற்றை பற்றியும் தெரிந்துக் கொண்டு பேசுங்கள். உங்களின் தாய்மார்கள் மற்றும் சகோதிரிகள் கடத்தப்பட்ட போது நேரம் காலம் பார்க்காமல் சீக்கியர்கள் காப்பாற்றினார்கள். அதனால் பேசும் பொழுது வார்த்தையை பார்த்து பேசுங்கள். உங்களை நினைக்கும் போது வெட்க கேடாக இருக்கிறது," என்று பதிவு செய்துள்ளார்.

    இதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு கம்ரன் அக்மல் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "நான் சமீபத்தில் சொன்ன கருத்தை நினைத்து வேதனை அடைகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். என்னுடைய வார்த்தை மரியாதை தக்கதல்ல. எனக்கும் உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. நான் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் அவ்வாறு பேசவில்லை," என கூறியிருக்கிறார்.

    • ஏஜென்ட் ரூ.40 லட்சம் கேட்டார். அதை இரண்டு தவணைகளில் செலுத்தினேன்.
    • இங்கே அதிகமாக கேள்வி கேட்டால் சுடப்படலாம் என சக பயணிகள் எங்களிடம் சொன்னார்கள்.

    அமெரிக்காவில் சட்டவிரோதமாக ஆவணங்களின்றி தங்கி இருந்தவர்களை அதிகாரிகள் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    அந்த வகையில் முதற்கட்டமாக 104 இந்தியர்கள் இந்த மாத முதல் வாரத்திலும், 116 இந்தியர்கள் நேற்று முன் தினமும் அமெரிக்கப் போர் விமானம் மூலம் நாடு கடத்தப்பட்டு பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இறக்கி விடப்பட்டனர். மூன்றாம் கட்டமாக 112 பேருடன் புறப்பட்ட அமெரிக்க ராணுவ விமானம் நேற்று இரவு 10 மணிக்கு அமிர்தசரஸ் வந்து சேர்ந்தது.

    இரண்டாவதாக இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட 116 பேரில் 38 வயதான மன்தீப் சிங் ஒருவர். அவர் தனது ஆபத்தான அமெரிக்க டாங்கி ரூட் பயணம் குறித்து செய்தியாளர்களிடம் இப்படி விவரிக்கிறார்.

    "நான் என் ஏஜென்ட்டுடன் பேசியபோது, ஒரு மாதத்திற்குள் என்னை சட்டப்பூர்வமாக அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்வேன் என்று அவர் கூறினார். ஏஜென்ட் ரூ.40 லட்சம் கேட்டார். அதை இரண்டு தவணைகளில் செலுத்தினேன். கடந்த ஆகஸ்ட் மாதம் அமிர்தசரஸிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் பயணம் தொடங்கியது.

    டெல்லியில் இருந்து, நான் மும்பைக்கும், பின்னர் நைரோபிக்கும், பின்னர் வேறு நாடு வழியாக ஆம்ஸ்டர்டாமுக்கும் அழைத்துச் செல்லப்பட்டேன். அங்கிருந்து, எங்களை சுரினாமுக்கு அழைத்துச் சென்றனர்.

    நான் அங்கு சென்றதும், துணை ஏஜென்ட்கள் ரூ.20 லட்சத்தைக் கேட்டனர். அதை எனது குடும்பம் இந்தியாவில் உள்ள ஏஜென்டிடம் செலுத்தியது.

    அதன்பின் சுரினாமிலிருந்து, என்னைப் போன்ற பலருடன் நெரிசலான ஒரு வாகனத்தில் ஏறினோம். நாங்கள் கயானாவிற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கிருந்து பல நாட்கள் இடைவிடாத பயணம். நாங்கள் கயானாவையும், பின்னர் பொலிவியாவையும் கடந்து ஈக்வடாரை அடைந்தோம்.

    பின்னர் எங்கள் குழுவினரை ஏஜென்ட்கள் கடுமையான பனாமா காடுகளைக் கடக்கச் செய்தனர்.

    இங்கே அதிகமாக கேள்வி கேட்டால் சுடப்படலாம் என சக பயணிகள் எங்களிடம் சொன்னார்கள்.

    13 நாட்களுக்கு, 12 கால்வாய்களை உள்ளடக்கிய கடினமும் ஆபத்தும் நிறைந்த பாதையில் நாங்கள் சென்றோம். முதலைகள், பாம்புகள் என அனைத்தையும் நாங்கள் கடந்து சென்றோம்.

    பாம்பு உள்ளிட்ட ஆபத்தான ஊர்வன ஜந்துக்களை சமாளிக்க குச்சிகள் வழங்கப்பட்டன. சரியான உணவு என்பது குறித்து சிந்திக்கவே முடியாது. அரை வேக்காட்டில் வேகவைத்த 'ரொட்டிகள்' மற்றும் சில நேரங்களில் நூடுல்ஸ் சாப்பிட்டோம். நாங்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் பயணம் செய்தோம்.

    பனாமாவைக் கடந்த பிறகு, எங்கள் குழு கோஸ்டாரிகாவில் உள்ளூர் ஏஜென்சியை தொடர்பு கொண்டு, பின்னர் ஹோண்டுராஸுக்கு எங்கள் பயணத்தைத் தொடங்கியது. அங்கு எங்களுக்கு சாப்பிட கொஞ்சம் அரிசி சாப்பாடு கிடைத்தது.     

     ஆனால் அதன்பின் நிகரகுவா வழியாக கடக்கும்போது எங்களுக்கு எதுவும் சாப்பிட கிடைக்கவில்லை. இருப்பினும், குவாத்தமாலாவில், தயிர் சாதம் சாப்பிடும் அதிர்ஷ்டம் எங்களுக்கு கிடைத்தது. நாங்கள் டிஜுவானாவை அடைந்தபோது, சீக்கியனான என் தாடி வலுக்கட்டாயமாக வெட்டப்பட்டது.

    ஜனவரி 27 ஆம் தேதி காலை, அமெரிக்காவிற்குள் பதுங்கிச் செல்லும் எல்லை வழியாக கடந்து சென்றபோது அமெரிக்க எல்லைக் காவல்துறையினரால் நாங்கள் கைது செய்யப்பட்டோம்.

    நாங்கள் நாடு கடத்தப்படுவோம் என்று அதிகாரிகள் எங்களிடம் கூறினர். நாங்கள் திருப்பி அனுப்பப்படுவதற்கு முன்பு சில நாட்கள் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டோம். அதன் பின் இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டோம்"  என்று தெரிவித்துள்ளார். 

    ×