என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கியூ.ஆர். கோடு"

    • திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது.
    • இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் நன்கொடை மற்றும் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக, பிரத்யேகமாக கியூ.ஆர்.கோடு அடங்கிய பலகை தயாரிக்கப்பட்டது.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் நன்கொடை மற்றும் காணிக்கை செலுத்துவதற்கு வசதியாக, பிரத்யேகமாக கியூ.ஆர்.கோடு அடங்கிய பலகை தயாரிக்கப்பட்டது.

    இந்த பலகை நேற்று திருச்செங்கோடு பாரத வங்கி தலைமை மேலாளரால், கோவிலின் அறங்காவலர் குழுத் தலைவர் தங்கமுத்து, கோவில் உதவி ஆணையர் ரமணிகாந்தன் மற்றும் அறங்காவலர்கள் முன்னி லையில் வழங்கப்பட்டு, கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் சுரேஷ், திருச்செங்கோடு சரக ஆய்வர் நவீன்ராஜா மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • கியூ.ஆர். கோடு மூலம் பண பரிவர்த்தனை நடந்தது.
    • பொது விநியோகத் திட்ட துணை பதிவாளர் முருகவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க கடன் சங்கங்களில் உள்ள நியாய விலை கடைகளில் கியூ.ஆர். கோடு இயந்திரம் மூலம் பண வர்த்தனை மேற்கொள்ள உரிய கருவிகளை கூடுதல் பதிவாளர் வில்வசேகரன் வழங்கினார்.

    அப்போது மண்டல இணைப்பதிவாளர் செந்தில்குமார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ராஜலஷ்மி. அருப்புக்கோட்டை சரக துணைப்பதிவாளர் ரவிச்சந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர் சரக துணை பதிவாளர் வீரபாண்டி, பொது விநியோகத் திட்ட துணை பதிவாளர் முருகவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×