search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாத்தா"

    • முதல் முறையாக சைக்கிள் கண்டுபிடிக்கும் பொழுது ஒரு சக்கரம் பொருத்தி சைக்கிள் தயாரிக்கப்பட்டது.
    • ஸ்ரீதரன் என்ற முதியவர் ஒருசக்கர சைக்கிள் வாகனத்தை தானே வடிவமைப்பு ஒட்டி வருகிறார்.

    ஆரம்பக் காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒற்றை சக்கர சைக்கிளை ஓட்டி அசத்தும் முதியவரை கண்டு பொதுமக்கள் ஆச்சரியப்பட்டனர்.

    மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் பகுதியில் காப்பகத்தில் வசிக்கும் ஒரு ஸ்ரீதரன் என்ற முதியவர் ஒருசக்கர சைக்கிள் வாகனத்தை தானே வடிவமைப்பு ஒட்டி வருகிறார்.

    தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரத்தில் முக்கிய சாலைகளில் அந்த சக்கர சைக்கிளை அவர் ஓட்டி வரும் நிலையில் அதனை பலரும் வியந்து பார்த்து ஆச்சரியத்துடன் பாராட்டி வருகின்றனர்.

    வயது மூப்பிலும் தன்னால் ஒரு சக்கர சைக்கிளை ஓட்ட முடிவது மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்வதாகவும் ஆரம்ப கால பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையிலும் உள்ளதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

    முதல் முறையாக சைக்கிள் கண்டுபிடிக்கும் பொழுது ஒரு சக்கரம் பொருத்தி சைக்கிள் தயாரிக்கப்பட்டது. ஆனால் ஒரு சக்கர சைக்கிள் என்பது அனைவராலும் பயன்படுத்த முடியாத நிலையில் பின்பு படிப்படியாக மற்றொரு சிறிய சக்கரம் பொருத்தியும் பின்பு இரு சக்கரமாக சைக்கிள் வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • சித்திரை மாதம் பிறந்த குழந்தையால் தாத்தாவின் உயிருக்கு ஆபத்து.
    • தண்ணீர் பேரலில் துணி சுற்றப்பட்ட நிலையில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

    அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உட்கோட்டை கிராமத்தில் வசிக்கும், வீரமுத்து என்பவரின் மகள் சங்கீதாவுக்கும், கும்பகோணம் அருகே வசிக்கும் பாலமுருகன் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது

    சங்கீதா - பாலமுருகன் தம்பதிக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன் பின்னர் தாய் சங்கீதா குழந்தையை தூக்கி கொண்டு அப்பா வீட்டிற்கு சென்றுள்ளார்.

    இந்நிலையில் கடந்த ஜூன் 14ஆம் தேதி இரவு தாய் சங்கீதாவின் அருகே இருந்த பச்சிளம் குழந்தையை காலையில் காணவில்லை. பின்னர் குழந்தையை தேடியதில் வீட்டில் உள்ள தண்ணீர் பேரலில் துணி சுற்றப்பட்ட நிலையில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டது.

    இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மூடநம்பிக்கையால் தாத்தா வீரமுத்துவே பேரனை கொன்றுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது.

    சித்திரை மாதம் பிறந்த குழந்தையால் தாத்தாவின் உயிருக்கு ஆபத்து எனவும் குடும்பத்திற்க்கு கடன் தொல்லை அதிகரிக்கும் என்ற மூடநம்பிக்கையால் தண்ணீர் பேரலில் போட்டு குழந்தையை அவரது தாத்தாவான வீரமுத்து கொலை செய்தது நாடகம் ஆடியதை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.

    இதனை அடுத்து வீர முத்துவை கைது செய்த ஜெயங்கொண்டம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • முதியோர் இல்லங்களில் தங்கள் சுகமான நினைவுகளையும், சோகமான நிலமைகளையும் சுமந்தபடி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
    • ‘ஹெல்பேஜ்’ இந்தியா அமைப்பின் மூலம் முதியோர்களை கொண்டாடும் நிகழ்ச்சி சேத்துப்பட்டில் நடந்தது.

    கடந்த கால நினைவுகள் என்பது நடந்தது. அது எளிதாக மனதில் வந்து நிழலாடும். மகிழ்வை தரும்.

    நடக்கப் போகும் நினைவுகளை கண்முன் கொண்டு வந்து நிறுத்துவது முதுமை. அது இளமையை போல் இனிமையாக இருக்காது என்பதன் அடையாளங்களாக நம் கண்முன் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்தான் முதியவர்கள்.

    நமக்கும் நாளை முதுமை வரும் இப்படி ஒரு நிலமை வரும் என்ற நினைப்பு இல்லாமல் பெற்ற பிள்ளைகள், சொந்த பந்தங்களால் கைவிடப்பட்டவர்கள் பலர் முதியோர் இல்லங்களில் தங்கள் சுகமான நினைவுகளையும், சோகமான நிலமைகளையும் சுமந்தபடி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

    குடும்பம் கைவிட்டாலும், சமூகம் கைவிடவில்லை என்பதன் அடையாளமாக சர்வதேச முதியோர் தினமான இன்று 'ஹெல்பேஜ்' இந்தியா அமைப்பின் மூலம் முதி யோர்களை கொண்டாடும் நிகழ்ச்சி சேத்துப்பட்டில் நடந்தது.

    இதில் சென்னையின் பல்வேறு இல்லங்களில் பராமரிக்கப்படும் 500 தாத்தா-பாட்டிகள் அழைத்து வரப்பட்டிருந்தார்கள். எல்லோரும் புத்தாடைகள் அணிந்து முகத்தில் கட்டாயமாக வரவழைக்கப்பட்ட புன்னகையோடு அரங்கத்தில் அமர்ந்து இருந்தார்கள்.

    இந்த காலத்தில் அறுபதை தாண்டுவதே பெரும்பாடு என்ற நிலையில் தொண்ணூறை கடந்தும் நம்பிக்கையோடு பல தாத்தா-பாட்டிகள் நடந்து வந்தார்கள். அவர்களில் 5 பேரை தேர்வு செய்து விழாக் குழுவினர் கவுரவித்துள்ளார்கள்.

    நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக தாத்தா-பாட்டிகளின் நடன நிகழ்ச்சியும், ஆடை அலங்கார போட்டியும் நடந்தது.

    பாட்டி நீ இந்த வயசுலேயும் இப்படி ஆடி கலக்குறியே... இளமையில் எப்படி கலக்கி இருப்பாய்? என்று பார்வையாளர் கைகளால் திருஷ்டி சுற்றி விரல்களால் தலையில் சொடுக்கி கொண்டார்கள்.

    எத்தனை ஆசைகள்.. எத்தனை எத்தனை கனவுகள்... அத்தனையும் கலைந்து போய் இல்லங்களில் தஞ்சமடைந்து இருந்தாலும் அவர்களை உற்சாகப்படுத்தியதும் உற்சாகமாகிவிட்டார்கள்.

    தங்களை மகிழ்வித்தவர்களை மனப்பூர்வமாக வாழ்த்தினார்கள்.

    சித்தாந்தம் 97 வயது தாத்தா! ராஜா உடையில் ராஜா மாதிரி கம்பீரமாக மேடையில் தோன்றினார். அவர் அருகில் பசிந்தா மேரி 94 வயதான இந்த பாட்டி ராணியின் ராஜ உடையுடன் ராணி போல் நின்றார்.

    வாவ்... தாத்தா... வாவ் பாட்டி என்று அரங்கில் திரண்டு இருந்த மாணவ-மாணவிகள் எழுப்பிய விசில் சத்தம் அரங்கையே தெறிக்கவிட்டது.

    தொலைத்துவிட்ட மகிழ்ச்சியை மீட்டெடுத்த உணர்வுடன் நெகிழ்ந்த அவர்களின் குழி விழுந்த கண்களில் இருந்து பெருகிய ஆனந்த கண்ணீர் வெடித்து சிதறிய விளை நிலத்தில் விழுந்த மழைத்துளிபோல் கன்னத்து சுருக்கங்களில் அங்கும் இங்குமாக உருண்டோடியது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஹெல்பேஜ் இந்தியா அமைப்பின் இயக்குனர் எட்வின்பாபு செய்து இருந்தார்.

    • மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு சாமரம் வீசி தாத்தா சிவத்தொண்டாற்றி வருகிறார்.
    • அவர் மயில் தோகை விசிறியால் சாமரம் வீசி பக்தர்களின் மனதையும், உடலையும் குளிர வைப்பார்.

    மதுரை

    'அடியாருக்கு அடியேன்' என்பது சுந்தரமூர்த்தி நாயனாரின் வாக்கு. இதற்கு மதுரை விசிறி தாத்தா என அழைக்கப்படும் நடராஜன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார். இவருக்கு 93 வயதாகிறது.

    மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் பக்தர்களுக்கு பக்தனாக சாமரம் வீசி, கடந்த 70 ஆண்டுகளாக நடராஜன் சிவத்தொண்டாற்றி வருகிறார்.

    மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோடை வெயிலில் தவிக்கும்போது விசிறி தாத்தா அருகில் வருவார். அவர் மயில் தோகை விசிறியால் சாமரம் வீசி பக்தர்களின மனதையும், உடலையும் குளிர வைப்பார். அதற்காக இவர் சன்மானம் பெறுவதில்லை. ஒரு புன்னகையுடன் கடந்து சென்று விடுவார்.

    அதிலும் சித்திரைத் திருவிழா வந்துவிட்டால் போதும், தாத்தாவை கையில் பிடிக்க முடியாது. திருவிழா நேரத்தில் வியர்க்க விறுவிறுக்க நிற்கும் பக்தர்கள் மீது விசிறி வீசி குளிர்வித்து ஆசீர்வாதம் செய்வார்.

    பக்தர்களுக்கு சாமரம் வீசும் சேவையில், விசிறி தாத்தாவுக்கு முன்னோடி சுந்தரநாயனார். தேவாரம் பாடிய நாயன்மார்களில் ஒருவர். சுந்தர நாயனாரின் 7-ம் திருமுறை, 39-வது பதிகத்தில் திருத்தொண்டத் தொகை என்ற அத்தியாயம் உண்டு. அதில் 'தொண்டர்தம் அடியார்க்கும் அடியேன்' என்ற குறிப்பு உள்ளது.

    அதாவது ஒருவர் தான் செய்யும் தொழில் வாயி லாகவும் இறையடியார்க்கு தொண்டு செய்யலாம். காஞ்சிபுரத்தில் பிறந்த திருக்குறிப்புத் தொண்ட நாயனார், சிவனடியார் துணிகளை இன்முகத்தோடு சலவை செய்து அளிப்பதையே தொண்டாக எண்ணி, அதில் இன்பம் கண்டார். அடியார்க ளின் ஆடையில் உள்ள மாசு நீக்குவதால், தன் பிறப்பின் மாசு நீங்கும், அதுவே தெய்வப்பணி' என்பது அவரின் நம்பிக்கையாக இருந்தது. சிவனடியார் குறிப்பறிந்து தொண்டு செய்த திருக்குறிப்பு நாயனாரை போல், விசிறி தாத்தா இறை சேவையில் ஈடுபட்டு வருகிறார்.

    மதுரை வாசிகளால் நடராஜன் விசிறி தாத்தா என்று அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். அவரிடம் பேசிய போது, "நான் கடந்த 1941-ம் ஆண்டு முதல் விசிறி சேவை செய்து வருகிறேன். எனக்கு இப்போது 93 வயது ஆகிறது. இந்த மண்ணுக்கு என் உடல் போகும்வரை, விசிறி சேவையை விடாமல் செய்வேன். அனைத்து பக்தர்களும் சீரும் சிறப்புமாக இருக்க வேண்டும். அதற்காக தான் பகவான் மட்டுமின்றி என் மக்க ளுக்கும் சேவை செய்து வருகிறேன். நான் தமிழ கத்தில் கிட்டத்தட்ட அனைத்து கோவில்களுக்கும் போய் வந்து இருக்கிறேன். ஆனாலும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலே எனக்கு தாய் வீடு. 93 வயதிலும் எதிர்பார்ப்பு இல்லாமல் தெய்வ செயலாக நினைத்து, பக்தர்களுக்கு சாமரம் வீசும் சேவை செய்து வருகிறேன். அடியார்க்கு அடியாராய் சேவை செய்ய கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்கிறார்.

    'மக்கள் சேவையே மகேசன் சேவை' என்று அடியார்க்கு அடியாராய், இறைபணியில் ஈடுபட்டு வரும் நடராஜனுக்கு, வயது ஒரு பொருட்டே அல்ல!.

    ×