என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியூசிலாந்து பாகிஸ்தான் தொடர்"

    • நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 1-4 என்ற கணக்கில் பாகிஸ்தான் இழந்தது.
    • நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் 73 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.

    பாகிஸ்தான் அணி டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அதன்படி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 4-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

    இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணி 50 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனையடுத்து சாப்மேன் மற்றும் டேரில் மிட்செல் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தியது.

    இருவரும் அரை சதம் கடந்தனர். டேரில் மிட்செல் 76 ரன்கள் எடுத்த போது அவுட் ஆனார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாப்மேன் சதம் விளாசி அசத்தினார். அவர் 132 ரன்கள் எடுத்த போது அவுட் ஆனார்.

    அடுத்து வந்த அப்பாஸ் அரை சதம் அசத்தினார். அடுத்த வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர். இதனால் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் 344 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக அப்துல்லா ஷஃபீக்- உஸ்மான் கான் களமிறங்கினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 83 ரன்கள் எடுத்தது. 39 ரன்கள் எடுத்த நிலையில் உஸ்மானும் 36 ரன்கள் எடுத்த நிலையில் அப்துல்லாவும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

    இதனையடுத்து பாபர் அசாம் மற்றும் கேப்டன் ரிஸ்வான் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ரிஸ்வான் 30 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பல விமர்சனங்களுக்கு உள்ளான பாபர் அசாம் அரை சதம் விளாசி அசத்தினார். அவர் 78 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த சல்மான் ஆகா 58 ரன்னில் வெளியேறினார். இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 44.1 ஓவர்களில் 271 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி அடுத்த மாதம் 2-ந் தேதி நடக்கிறது.

    • நீஷம் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட் சாய்த்தார்.
    • செய்ஃபர்ட் 38 பந்தில் 6 பவுண்டரி, 10 சிக்சருடன் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் விளாசினார்.

    பாகிஸ்தான் அணி ஒயிட்பால் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கான நியூசிலாந்து சென்றுள்ளது. முதலில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த 4 போட்டிகள் முடிவில் நியூசிலாந்து தொடரை கைப்பற்றி 3-1 என முன்னிலைப் பெற்றிருந்தது. 3-வது போட்டியில் மட்டும் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருந்தது.

    இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி வெலிங்டனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் களம் இறங்கியது.

    நியூசிலாந்து பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். கேப்டன் சல்மான் ஆகா தாக்குப்பிடித்து 39 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சதாப் கான் 28 ரன்கள் சேர்த்தார். தொடக்க வீரர் முகமது ஹாரிஸ் 11 ரன் அடித்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் ஒற்றையிலக்க ரன்கள் மட்டுமே அடிக்க பாகிஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 128 ரன்கள் மட்டுமே அடித்தது.

    நியூசிலாந்து அணி தரப்பில் நீஷம் 4 ஓவரில் 22 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். ஜேக்கப் டஃபி 2 விக்கெட்டும், பென் சியர்ஸ் மற்றும் இஷ் சோதி தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் 129 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர் டிம் செய்ஃபர்ட் அபாரமாக விளையாடினார் மறுமுனையில் பின் ஆலன் 12 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த சாப்மேன் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். செய்ஃபர்ட் ஆட்டமிழக்காமல் 38 பந்தில் 97 ரன்கள் விளாச நியூசிலாந்து 10 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டிம் செய்ஃபர்ட் 6 பவுண்டரி, 10 சிக்சர்கள் விளாசினார்.

    இந்த வெற்றியின் மூலம் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை நியூசிலாந்து 4-1 எனக் கைப்பற்றியுள்ளது. நீஷம் ஆட்டநாயகன் விருதம், டிம் செய்ஃபர்ட் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.

    இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 29-ந்தேதி தொடங்குகிறது.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 220 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய பாகிஸ்தான் 105 ரன்களில் சுருண்டது.

    மவுண்ட் மனுவா:

    பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. 3 போட்டிகள் முடிவில் 2-1 என நியூசிலாந்து முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி மவுண்ட் மனுவாவில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 220 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் அதிரடியாக ஆடி 20 பந்தில் 50 ரன்களில் அவுட்டானார். டிம் செய்பர்ட் 22 பந்தில் 44 ரன்னும் குவித்தனர்.

    கடைசி கட்டத்தில் பிரேஸ்வெல் 26 பந்தில் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராவத் 3 விக்கெட்டும், அப்ரார் அகமது 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 221 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்கோடு பாகிஸ்தான் களமிறங்கியது. நியூசிலாந்தின் துல்லிய பந்துவீச்சில் பாகிஸ்தான் அணி விரைவில் விக்கெட்களை இழந்தது.

    அப்துல் சமது 44 ரன்னும், இர்பான் கான் 24 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

    இறுதியில், பாகிஸ்தான் 105 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 115 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் டி 20 தொடரை 3-1 என கைப்பற்றியது.

    நியூசிலாந்தின் ஜேக்கப் டஃபி 4 விக்கெட்டும், ஜகாரி போக்ஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • பாகிஸ்தான் தொடக்க ஜோடி 5.5 ஓவரில் 74 ரன்கள் விளாசியது.
    • ஹசன் நவாஸ் 45 பந்தில் 105 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    நியூசிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரண்டு போட்டிகளில் நியூசிலாந்து வெற்றி பெற்ற நிலையில், 3-வது போட்டி இன்று ஆக்லாந்தில் நடைபெற்றது.

    டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து முதலில் களம் இறங்கியது. 3-வது வீரராக களம் இறங்கிய மார்க் சாப்மேன் 44 பந்தில் 94 ரன்கள் விளாச நியூசிலாந்து 19.5 ஓவரில் 204 ரன்கள் குவித்தது.

    பின்னர் 205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பாகிஸ்தான் சேஸிங்கை தொடங்கியது. முகமது ஹாரிஸ் மற்றும் ஹசன் நவாஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் நியூசிலாந்து பந்து வீச்சை துவம்சம் செய்தனர். பந்தை சிக்சர், பவுண்டரி என பறக்கவிட்டனர்.

     பாகிஸ்தான் 5.5 ஓவரில் 74 ரன்கள் எடுத்திருக்கும்போது முகமது ஹாரிஸ் 20 பந்தில் 41 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். அவரது ஸ்கோரில் 4 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும். அடுத்து கேப்டன் சல்மான் ஆகா களம் இறங்கினார். பாகிஸ்தான் பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் குவித்தது.

    ஹசன் நவாஸ், சல்மான் ஆகா ஜோடியும் அற்புதமாக விளையாடியது. 8.1 ஓவரில் பாகிஸ்தான் 100 ரன்னைக் கடந்தது. ஹசன் நவாஸ் 26 பந்தில் அரைசதம் அடித்தார். பாகிஸ்தான் 12.2 ஓவரில் 150 ரன்னையும், 15.5 ஓவரில் 200 ரன்னையும் கடந்தது. இதற்கிடையே சல்மான் ஆகா 30 பந்தில் அரைசதம் விளாசினார்.

    15 ஓவர் முடிவில் பாகிஸ்தான் 193 ரன்கள் எடுத்திருந்தது. 16-வது ஓவரை ஜேமிசன் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டி ஹசன் நவாஸ் சதம் அடித்தார். 44 பந்தில் தனது முதல் சதத்தை நிறைவு செய்தார். அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்ட பாகிஸ்தான் 16 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    ஹசன் நவாஸ் 45 பந்தில் 10 பவுண்டரி, 7 சிக்சருடன் 105 ரன்கள் எடுத்தும், சல்மான் ஆகா 31 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் 51 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். நியூசிலாந்து அணி சார்பில் ஜேமிசன் (4 ஓவர்) 54 ரன்களும், பென் சியர்ஸ் (4 ஓவர்) 51 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.

    ஜேக்கப் டஃபி 3 ஓவரில் 37 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். பிரேஸ்வெல் 2 ஓவரில் 23 ரன்களும், இஷ் சோதி 2 ஓவில் 28 ரன்களும் விட்டுக்கொடுத்தனர்.

    இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் 1-2 என பின்தங்கிய நிலையில் உள்ளது. 4-வது போட்டி வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது.

    • பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது
    • அப்ரிடி முதல் ஓவரை டிம் சீஃபர்ட் வைத்து மெய்டனாக வீசினார்.

    நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. அந்த வகையில், இரு அணிகள் மோதிய 2-வது டி20 கிரிக்கெட் போட்டி டுனிடினில் இன்று நடந்தது. மழை காரணமாக இந்தப் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    முதலில் ஆடிய பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை எடுத்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 13.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரில் நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

    இந்நிலையில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அப்ரிடி தனது 2-வது ஓவரையும் அணியின் 3-வது ஓவரையும் வீசினார். அந்த ஓவரில் நியூசிலாந்து வீரர் டிம் சீஃபர்ட் 4 சிக்சர்களை பறக்க விட்டார். மொத்தமாக அந்த ஓவரில் 26 ரன்கள் எடுக்கப்பட்டது.

    முதல் ஓவரை டிம் சீஃபர்ட்டை வைத்து தான் அப்ரிடி மெய்டன் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • மழை காரணமாக இந்தப் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
    • இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்தது.

    நியூசிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி டி20 கிரிக்கெட் தொடில் விளையாடி வருகிறது. அந்த வகையில், இரு அணிகள் மோதிய 2-வது டி20 கிரிக்கெட் போட்டி டுனிடினில் இன்று நடந்தது. மழை காரணமாக இந்தப் போட்டி 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

    முதலில் ஆடிய பாகிஸ்தான் 9 விக்கெட் இழப்புக்கு 135 ரன்களை எடுத்தது. கேப்டன் சல்மான் ஆஹா 28 பந்துகளில் 46 ரன்களை எடுத்தார். ஜேக்கப் டபி, பென் சீயர்ஸ், நீசம், சோதி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து 13.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 137 ரன் எடுத்தது. இதன் மூலம் அந்த அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டிம் ஷெய்பர்ட் 22 பந்துகளில் 45 ரன்கள், ஆலன் 16 பந்தில் 38 ரன்களை அடித்தனர்.

    இந்த வெற்றி மூலம் 5 போட்டிக்கொண்ட தொடரில் நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

    • முதல் டி20 போட்டியின் போது நியூசிலாந்து பந்துவீச்சாளரை வேண்டுமென்றே மோதியுள்ளார்.
    • குஷ்தில் ஷாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

    நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணியானது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் நியூசிலாந்து அணி அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியுள்ளது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது டி20 போட்டி நாளை டுனெடினில் உள்ள யுனிவர்சிட்டி ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

    இந்நிலையில், போட்டி விதிமுறைகளை மீறியதாக பாகிஸ்தான் வீரர் குஷ்தில் ஷாவுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது. அதன்படி நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியின் போது நியூசிலாந்து பந்துவீச்சாளர் ஸகாரி ஃபால்க்ஸை வேண்டுமென்றே மோதியதாக குஷ்தில் ஷா மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இதனை கள நடுவர்களும் உறுதிசெய்தனர்.

    இது ஐசிசி விதிகளுக்கு எதிரானது என்பதால், குஷ்தில் ஷாவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிப்பதுடன், மூன்று கரும்புள்ளிகளையும் அபராதமாக விதிப்பதாக ஐசிசி அறிவித்துள்ளது.

    அதேசமயம் சர்வதேச கிரிக்கெட்டில் இதுபோல் விதிமுறையை மீறும் வீரர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக இரண்டாம் தர குற்றங்களில் ஈடுபடும் வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 முதல் 100 சதவீதம் அபராதம் விதிப்பதுடன், இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் விளையாட தடையும் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் குஷ்தில் ஷா கடந்த 24 மாதங்களில் செய்த முதல் குற்றம் இது என்பதால் அவருக்கு அபராதம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 100-வது ஒருநாள் போட்டியில் பாபர் அசாம் 1 ரன்களை மட்டும் எடுத்தார்.
    • நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 4-1 என்ற கணக்கில் வென்றது.

    விராட் கோலி, ஜோ ரூட், கேன் வில்லியம்சன், ஸ்டீவ் ஸ்மித் ஆகிய நால்வரும் சமகாலத்தின் தலைசிறந்த 4 வீரர்களாக அறியப்பட்ட நிலையில், அவர்களுடன் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமும் இணைந்துவிட்டார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 ஃபார்மட்டிலும் அபாரமாக ஆடி ரன்களை குவிப்பதுடன், சாதனைகளையும் படைத்துவருகிறார்.

    பாபர் அசாம் சர்வதேச கிரிக்கெட்டில் 47 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3696 ரன்களையும், 100 ஒருநாள் போட்டிகளில் ஆடி 5089 ரன்களையும், 104 டி20 போட்டிகளில் ஆடி 3485 ரன்களையும் குவித்துள்ளார்.

    ஒருநாள் கிரிக்கெட்டில் விராட் கோலி பல சாதனைகளை முறியடித்து புதிய மைல்கற்களை எட்டிவந்த நிலையில், பாபர் அசாம், கோலியின் சாதனைகளையும் சேர்த்து முறியடித்து வருகிறார். அந்தவகையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் அபாரமாக பேட்டிங் ஆடி பாகிஸ்தான் அணி 4-1 என ஒருநாள் தொடரை வெல்ல உதவினார்.

    முதல் 4 போட்டிகளில் நன்றாக ஆடிய பாபர் அசாம், தனது 100-வது ஒருநாள் போட்டியாக அந்த தொடரின் கடைசி ஒருநாள் போட்டியை ஆடிய பாபர் அசாம், அந்த போட்டியில் ஒரு ரன் மட்டுமே அடித்தார். ஆனால் 100 ஒருநாள் போட்டிகளின் முடிவில் அதிகமான ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார்.

    100 ஒருநாள் போட்டிகளில் 18 சதங்களுடன் 59.17 என்ற சராசரியுடன் 5089 ரன்களை குவித்துள்ளார். இதன்மூலம் முதல் 100 ஒருநாள் போட்டிகளின் முடிவில் அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை பாபர் அசாம் படைத்துள்ளார். இந்த பட்டியலில் 2-ம் இடத்தில் ஹாஷிம் ஆம்லா (4808) மற்றும் 3-ம் இடத்தில் ஷிகர் தவான்(4309) ஆகிய இருவரும் உள்ளனர்.

    • முதல் டி20 போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி நடக்கிறது.
    • நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் கேப்டன் மற்றும் 17 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் முடிவடைந்த நிலையில் இன்னும் 2 டெஸ்ட் போட்டிகள் மீதமுள்ளது.

    இந்த தொடர் முடிவடைந்தவுடன் பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட உள்ளது.

    இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் கேப்டன் மற்றும் 17 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 போட்டி கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகி நிலையில் புதிய கேப்டனாக சாஹின் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். ஹசீபுல்லா, அப்பாஸ் அப்ரிடி ஆகியோர் டி20 தொடருக்கு முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி நடக்கிறது.

    நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் பாகிஸ்தான் அணி விவரம்:-

    ஷாஹீன் ஷா அப்ரிடி (கேப்டன்), அமீர் ஜமால், அப்பாஸ் அப்ரிடி, அப்ரார் அகமது, அசம் கான், பாபர் அசாம், ஃபகார் ஜமான், ஹாரிஸ் ரவுஃப், ஹசீபுல்லா கான், இப்திகார் அகமது, முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், உசாமா மிர், ஜமான் கான்.

    • பாகிஸ்தான் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.
    • அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட உள்ளது.

    பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்ற கணக்கில் தொடரை முழுவதுமாக இழந்தது.

    இந்த தொடர் முடிவடைந்த நிலையில் பாகிஸ்தான் அணி அடுத்து நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பாகிஸ்தான் அணி விளையாட உள்ளது.

    நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் கேப்டன் மற்றும் 17 பேர் கொண்ட அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் பதவியில் இருந்து பாபர் அசாம் விலகி நிலையில் புதிய கேப்டனாக சாஹின் அப்ரிடி நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார்.

    இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி நடக்கிறது.

    நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரின் பாகிஸ்தான் அணி விவரம்:-

    ஷாஹீன் ஷா அப்ரிடி (கேப்டன்), அமீர் ஜமால், அப்பாஸ் அப்ரிடி, அப்ரார் அகமது, அசம் கான், பாபர் அசாம், ஃபகார் ஜமான், ஹாரிஸ் ரவுஃப், ஹசீபுல்லா கான், இப்திகார் அகமது, முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், உசாமா மிர், ஜமான் கான்.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 226 ரன்களைக் குவித்தது.
    • டேரில் மிட்செல் அதிரடியாக ஆடி 27 பந்தில் 61 ரன்கள் குவித்தார்.

    ஆக்லாந்து:

    பாகிஸ்தான் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து சிறப்பாக ஆடியது. டேரில் மிட்செல் அதிரடியாக ஆடி 27 பந்தில் 61 ரன்கள் குவித்தார். கேன் வில்லியம்சன் 57 ரன்கள் சேர்த்தார். நியூசிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 226 ரன்கள் குவித்தது.

    227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். மற்றவர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    இறுதியில், பாகிஸ்தான் 18 ஓவரில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 4 விக்கெட்டும், மில்னே, சீயர்ஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின்மூலம் டி20 தொடரில் நியூசிலாந்து 1-0 என முன்னிலையில் உள்ளது. ஆட்ட நாயகன் விருது டேரில் மிட்செலுக்கு அளிக்கப்பட்டது.

    • டி20 வரலாற்றில் 150 விக்கெட் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார் டிம் சவுத்தி.
    • அவருக்கு அடுத்த இடத்தில் வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 140 விக்கெட்டுடன் உள்ளார்.

    ஆக்லாந்து:

    நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் நடந்தது. முதலில் ஆடிய நியூசிலாந்து டேரில் மிட்செல் அதிரடியில் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 226 ரன்கள் குவித்தது.

    அடுத்து ஆடிய பாகிஸ்தான் 18 ஓவரில் 180 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் நியூசிலாந்து 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தி 4 விக்கெட்டும், மில்னே, சீயர்ஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இந்நிலையில், பாகிஸ்தான் வீரர் அப்பாஸ் அப்ரிடியை அவுட்டாக்கியபோது டி20 கிரிக்கெட்டில் தனது 150-வது விக்கெட்டை வீழ்த்தினார் சவுத்தி. இதன்மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 150 விக்கெட்டுகளை பதிவுசெய்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார்.

    வங்காளதேசத்தின் ஷகிப் அல் ஹசன் 140 விக்கெட்டுடன் 2-வது இடத்திலும், ஆப்கானிஸ்தானிம் ரஷித் கான் 130 விக்கெட்டுடன் 3-வது இடத்திலும், நியூசிலாந்தின் இஷ் சோதி 127 விக்கெட்டுடன் 4-வது இடத்திலும், இலங்கையின் லசித் மலிங்கா 107 விக்கெட்டுடன் 5-வது இடத்திலும் உள்ளனர். இந்திய வீரர் சஹல் 96 விக்கெட்டுடன் 14-வது இடத்தில் உள்ளார்.

    ×