என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டி.என்.பி.எல். கிரிக்கெட்"

    • மூன்றாவது போட்டியில் எஸ்.என்., எக்ஸ்போர்ட்ஸ் - தங்கமன் அணிகள் மோதின.
    • நான்காவது போட்டியில் டாலர் - சி.ஆர்., டைகர் அணிகள் மோதின.

    திருப்பூர்:

    பின்னலாடை நிறுவன அணிகள் மோதும் என்.பி.எல்., கிரிக்கெட் தொடர் திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் லீக் போட்டிகள் நடைபெற்றன.

    ஜூபிட்டர் நிட்டிங் கம்பெனி - அமேசிங் எக்ஸ்போர்ட்ஸ் அணிகள் மோதிய போட்டியில் முதலில் களமிறங்கிய ஜூபிட்டர் 15 ஓவரில் 6 விக்கெட் இழந்து 81 ரன் எடுத்தது. தொடர்ந்து ஆடிய அமேசிங் அணி 8 விக்கெட் இழப்புக்கு, 77 ரன்னுடன் தோல்வியடைந்தது. 3 ஓவர் பந்து வீசி 14 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய ஜூபிட்டர் வீரர் செமிகுமார் ஆட்டநாயகனாக தேர்வானார்.

    மற்றொரு போட்டியில் ஸ்ரீவாரி கிளாத்திங் - வார்ஷா இன்டர் நேஷனல் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த ஸ்ரீவாரி 7 விக்கெட் இழப்புக்கு 112 ரன் குவித்தது.அடுத்து களமிறங்கிய வார்ஷா 13.5 ஓவரில் 48 ரன்னில் ஆட்டமிழந்தது. 3 ஓவர் பந்து வீசி 7 ரன் மட்டும் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய ஸ்ரீ வாரி வீரர் பிரபு ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

    மூன்றாவது போட்டியில் எஸ்.என்., எக்ஸ்போர்ட்ஸ் - தங்கமன் அணிகள் மோதின. முதலில் ஆடிய எஸ்.என்., எக்ஸ்போர்ட்ஸ் அதிரடியாக விளையாடி 144 ரன் எடுத்தது.தொடர்ந்து ஆடிய தங்கமன் அணி 6 விக்கெட் இழப்புக்கு 75 ரன்னில் சுருண்டது. தான் எதிர்கொண்ட 28 பந்துக்கு 60 ரன் விளாசிய எஸ்.என்., எக்ஸ்போர்ட்ஸ் வீரர் லிபின் ஜோசப் ஆட்டநாயகனாக தேர்வானார்.

    நான்காவது போட்டியில் டாலர் - சி.ஆர்., டைகர் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த டாலர் அணி, 61 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. அசால்டாக ஆடிய சி.ஆர்., டைகர் 8.2 ஓவரில் 62 ரன்னுடன் வெற்றிபெற்றது. 3 ஓவர் பந்து வீசி 3பேரை வீழ்த்திய சி.ஆர்., வீரர் சங்கரநாராயணன் ஆட்டநாயகனாக தேர்வானார்.அடுத்த சுற்று லீக் போட்டி வருகிற 14-ந் தேதி நடைபெறுகிறது.

    • தக்கவைத்த வீரர்களின் பட்டியலை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டது.
    • வீரர்களின் மெகா ஏலம் பிப்ரவரி 15, 16-ந்தேதிகளில் நடக்கிறது.

    சென்னை:

    9-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் போட்டி ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 5 வீரர்கள் தக்க வைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதன்படி ஒவ்வொரு அணியும் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் வெளியிட்டது.

    4 முறை சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி ஆல்-ரவுண்டர் அபிஷேக் தன்வரை ரூ.12 லட்சத்துக்கும், பாபா அபராஜித்தை ரூ. 8 லட்சத்துக்கும், என்.ஜெகதீசனை ரூ.6 லட்சத்துக்கும், லோகேஷ் ராஜ், சிலம்பரசன் ஆகியோரை தலா ரூ.2.4 லட்சத்துக்கும் தக்கவைத்துள்ளது. 5 வீரர்களை மொத்தம் ரூ.30.8 லட்சத்துக்கு தக்க வைத்துள்ளது.

    நடப்பு சாம்பியன் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் (ரூ.16 லட்சம்), வருண் சக்ரவர்த்தி (ரூ.12 லட்சம்), சந்தீப் வாரியர் (ரூ.8 லட்சம்), பாபா இந்திரஜித் (ரூ.6 லட்சம்), ஷிவம் சிங் (ரூ.2.4 லட்சம் ) ஆகியோரை தக்க வைத்துள்ளது.

    திருச்சி கிராண்ட்சோழாஸ் அணியில் சஞ்சய் யாதவ் (ரூ.6 லட்சம்), ஜாபர் ஜமால் (ரூ.2.4 லட்சம்), ராஜ்குமார் (ரூ.2.4 லட்சம்), வாசீம் அகமது (ரூ.2.4 லட்சம்), அதிசயராஜ் டேவிட்சன் (ரூ.2.4 லட்சம்), திருப்பூர் தமிழன்ஸ் அணியில் சாய் கிஷோர் (ரூ.16 லட்சம்), டி.நடராஜன் (ரூ.12 லட்சம்), துஷர் ரஹேஜா (ரூ.8 லட்சம்), முகமது அலி (ரூ.6 லட்சம்), அமித் சாத்விக் (ரூ.2.4 லட்சம்), கோவை கிங்ஸ் அணியில் ஷாருக்கான் (ரூ.16 லட்சம்), சாய் சுதர்சன் (ரூ.12 லட்சம்), எம். சித்தார்த் (ரூ.8 லட்சம்), சச்சின் (ரூ.6 லட்சம்), ஜதாவேத் சுப்ரமணியன் (ரூ.2.4 லட்சம்).

    நெல்லை ராயல் கிங்ஸ் அணியில் சோனு யாதவ் (ரூ.16 லட்சம்), அருண் கார்த்திக் (ரூ.12 லட்சம்), அஜிதேஷ் (ரூ.8 லட்சம்), ரித்திக் ஈஸ்வரன் (ரூ. 6 லட்சம்), ஹரிஷ் (ரூ.2.4 லட்சம்), மதுரை பாந்தர்ஸ் அணியில் முருகன் அஸ்வின் (ரூ.8 லட்சம்), குர்ஜப்னீத் சிங் (ரூ. 6 லட்சம்), சரவணன் (ரூ.2.4 லட்சம்), சதுர்வேத் (ரூ.2.4 லட்சம்), சேலம் ஸ்பார்டன்ஸ் அணியில் அபிஷேக் (ரூ.2.4 லட்சம்), சன்னி சந்து (ரூ.2.4 லட்சம்), விவேக் (ரூ.2.4 லட்சம்), ஹரிஷ்குமார் (ரூ.2.4 லட்சம்), பொய்யாமொழி (ரூ.2.4 லட்சம்) ஆகியோர் நீடிக்கிறார்கள்.

    8 அணிகளிலும் 39 வீரர் கள் நீட்டிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளிலும், மாநில அணிக்காக விஜய் ஹசாரே, ரஞ்சி, முஷ்டாக் அலி போன்ற போட்டிகளிலும் விளையாடிய வீரர்களுக்கு தக்கவைப்பதில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியம் நடத்திய எந்த போட்டிகளிலும் ஆடாதவர்கள் உள்ளூர் வீரர்களாக கருதப்பட்டு, அவர்களுக்கு ரூ.2.4 லட்சம் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.

    அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட மற்றும் டி.என்.பி.எல்.-ல் புதிதாக விளையாட விரும்பும் வீரர்கள் தங்களது பெயரை ஜனவரி 30-ந்தேதிக்குள் www.tnca.cricket மற்றும் www.tnpl.cricket ஆகிய இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். வீரர்களின் மெகா ஏலம் பிப்ரவரி 15, 16-ந்தேதிகளில் நடக்கிறது.

    ஏலத்தில் ஒவ்வொரு அணியும் ரூ.80 லட்சம் செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் தக்க வைத்துள்ள வீரர்களுக்குரிய ஊதியம் போக மீதமுள்ள தொகையை வைத்து தான் எஞ்சிய வீரர்களை எடுக்க முடியும்.

    ×