என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "ஆர்சிபி அணி"
- கடந்த சில சீசன்களாக ஆர்சிபி அணியின் கேப்டனாக டூ பிளெஸ்சிஸ் வழிநடத்தி வந்தார்.
- மெகா ஏலத்தில் அணியை வழிநடத்தும் வகையில் எந்த வீரரையும் பெங்களூரு அணி நிர்வாகம் எடுக்கவில்லை.
பெங்களூரு:
10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2025 மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடக்கிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி ஏலத்திற்கு முன்பாகவே விராட் கோலி, ரஜத் படிதார், யாஷ் தயாள் உள்ளிட்ட 6 பேரை தக்க வைத்தது.
சில சீசன்களாக ஆர்சிபி அணியின் கேப்டனாக செயல்பட்ட டூ பிளெஸ்சிசை கழற்றி விட்டது. அவரை நடந்து முடிந்த ஐ.பி.எல். ஏலத்தில் டெல்லி அணி 2 கோடி ரூபாய்க்கு வாங்கியது. மெகா ஏலத்தில் அணியை வழிநடத்தும் வகையில் எந்த வீரரையும் பெங்களூரு அணி நிர்வாகம் எடுக்கவில்லை.
எனவே விராட் கோலி அல்லது ரஜத் படிதார் இருவரில் ஒருவரையே பெங்களூரு அணி நிர்வாகம் கேப்டனாக தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இருக்கும் என தகவல்கள் வெளியாகி வந்தது.
Welcome to your Raj, Ra-pa. ?The baton has been passed, and your name has made it to the history books. It's time for a new chapter! Let's give the best fans in the world what they've been waiting for all these years. ? #PlayBold #ನಮ್ಮRCB #RCBCaptain #Rajat #RajatPatidar… pic.twitter.com/AKwjM9bnsq
— Royal Challengers Bengaluru (@RCBTweets) February 13, 2025
இந்நிலையில் ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
- 12 போட்டிகளில் விளையாடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.
- பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் 12 போட்டிகளில் விளையாடி 16 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.
ஐதாரபாத்தில் உள்ள பிலிம் நகர் பகுதியில் உள்ள முகமது சிராஜ் புதிய வீட்டிற்கு விராட் கோலி உள்பட ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வீரர்கள் சென்றுள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஒவ்வொரு அணியும் பிளே ஆஃப் சுற்றுக்காக போராடி வருகின்றன. இதில், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியாகியுள்ளன. இதைவிட குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுள்ளது. கடந்த சீசனிலும் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://media.maalaimalar.com/h-upload/2023/05/16/1882485-virat.webp)
இதுவரையில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 12 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இன்னும் 2 போட்டிகள் உள்ள நிலையில், இரண்டிலும் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் சிராஜ் 12 போட்டிகளில் விளையாடி 42 ஓவர்கள் வீசி 327 ரன்கள் கொடுத்து 16 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். இதில் ஒரேயொரு முறை மட்டும் 4 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதுவரையில் 77 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள முகமது சிராஜ் தற்போது வரையில் 78 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.
![](https://media.maalaimalar.com/h-upload/2023/05/16/1882487-play-bold.webp)
இந்த நிலையில், ஐதராபாத்தில் பிறந்து வளர்ந்த சிராஜ், ஐதராபாத்தில் உள்ள பிலிம் நகர் பகுதியில் புதிதாக வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த வீட்டின் திறப்பு விழாவிற்கு விராட் கோலி உள்பட மற்ற ஆர்சிபி வீரர்கள் அணிவகுத்து சென்றுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Virat Kohli And RCB team visited Siraj New House Opening In Film Nagar Jubilee Hills , HYD ❤️?❤️❤️#ViratKohli #Siraj #RCB #RoyalChallengersBangalore #RCBvsSRH @mufaddal_vohra @CricCrazyJohns @imVkohli pic.twitter.com/8DOzAR56c6
— Tarak Anna || Anil ? (@AnilTarakianNTR) May 15, 2023