search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்கோபுரம்"

    • கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, அந்த மின் கோபுரத்தின் அடிப்பகுதி அரித்துச் செல்லப்பட்டது.
    • கொள்ளிடம் ஆற்றில் உள்ள மின் கோபுரத்திற்கு செல்லும் மின்சாரம் நிறுத்தப்பட்டது.

    ஸ்ரீரங்கம்:

    திருச்சி திருவானைக்காவல் கொள்ளிடம் நேப்பியர் பாலம் அருகே, ஆற்றுப்பகுதியில் 1 லட்சத்து 10 ஆயிரம் மெகாவாட் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்லும் ராட்சத கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக, அந்த மின் கோபுரத்தின் அடிப்பகுதி அரித்துச் செல்லப்பட்டது.

    எப்போது வேண்டுமானாலும் அந்த மின்கோபுரம் சாய்ந்து விழும் அபாய நிலையில் இருந்ததால் கொள்ளிடம் ஆற்றில் உள்ள மின் கோபுரத்திற்கு செல்லும் மின்சாரம் நிறுத்தப்பட்டது. பின்னர் மாற்று வழியில் மின்சாரம் வழங்கப்பட்டது.

    இந்நிலையில் நேற்று இரவு ஆற்றுப்பகுதியில் உள்ள மின் கோபுரத்தின் அடிப்பகுதி முழுவதுமாக அரித்து செல்லப்பட்டதால் உயர் மின்னழுத்த கம்பிகள் செல்லும் ராட்சத கோபுரம் சாய்ந்து ஆற்றில் விழுந்தது.

    மின் கோபுரம் இரவில் சாய்ந்ததாலும், மின்சாரம் நிறுத்தப்பட்டு இருந்ததாலும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. 

    • ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.
    • நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள், தி.மு.க. நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி தையல்நாயகி காய்கறி சந்தையில் ரூ. 10 லட்சம் மதிப்பில் உயர் மின்னழுத்த கோபுரத்தை ஞானதிரவியம் எம்.பி. திறந்து வைத்தார். நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கினார். மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ், கவுன்சிலர் உமாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் நெல்சன் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் நகர பொருளாளர் சந்திரன், 10-வது வார்டு கவுன்சிலர் சுந்தர், முன்னாள் கவுன்சிலர் ராஜதுரை, மாவட்ட பிரதிநிதிகள் அன்பழகன், சாமுவேல் என்ற நெப்போலியன், மகளிர் அணி சரஸ்வதி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் அசோக், ஒன்றிய பிரதிநிதி ஆதி மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆலங்குளம் சிறப்பு நிலை பேரூராட்சி செயல் அலுவலர் மாணிக்கராஜ் நன்றி கூறினார்.

    ×