என் மலர்
நீங்கள் தேடியது "2000 ரூபாய் நோட்டு"
- ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை வழங்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி சார்பில் வங்கிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறது.
- செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பின் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது.
இந்தியாவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதன்படி இந்தியாவில் இனி ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்காது. வங்கி சேவையை பயன்படுத்தும் பொது மக்களிடம்ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை வழங்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி சார்பில் வங்கிகளுக்கு அறிவுறுத்தி இருக்கிறது.
மக்கள் தங்களிடம் இருக்கும் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகளிடம் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம். செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பின் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது.
- செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது.
- ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்காக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்து இருக்கிறது.
இந்தியாவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்து இருக்கிறது. விரைவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் புழக்கத்தில் இருக்காது. மேலும், ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகளிடம் கொடுத்து பொது மக்கள் மாற்றிக்கொள்ளலாம் என்று ரிசர்வ் வங்கி அறிவித்தது.
ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை தொடர்ந்து, செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு பிறகு ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது. இந்த நிலையில், ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை மாற்றிக் கொள்வதற்காக ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை அறிவித்து இருக்கிறது.

- மே 23 ஆம் தேதி முதல் பொது மக்கள் தங்களிடம் இருக்கும் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ள முடியும்.
- பொது மக்கள் ஒரே சமயத்தில் பத்து 2000 ரூபாய் நோட்டுக்களை மட்டுமே வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ள முடியும்.
- ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை பொது மக்களிடம் வழங்க வேண்டாம் என்று ரிசர்வ் வங்கி சார்பில் வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
- செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் தொடர்ந்து சட்டப்பூர்வ பயன்பாட்டுக்கு உகந்ததாகவே இருக்கும்.
- பாஜகவின் கொள்கைகள் பற்றி அவர்களுக்கே தெளிவு இல்லை என்பது வருத்தமளிக்கிறது.
- மக்கள் கவனத்தை திசை திருப்பவே ரூ.2 ஆயிரம் நோட்டுக்கு தடை முயற்சி.
இந்தியாவில் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. அதன்படி மக்கள் தங்களிடம் இருக்கும் ரூ. 2 ஆயிரம் நோட்டுக்களை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் வங்கிகளிடம் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் செப்டம்பர் 30ம் தேதிக்கு பிறகு ரூ. 2 ஆயிரம் நோட்டுக்கள் இந்தியாவில் சட்டப்பூர்வ பணபரிவர்த்தனைக்கு செல்லாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ரூ.2000 நோட்டுகள் நிறுத்தம் குறித்து கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியாதாவது:-
பிரதமர் மோடியால் மீண்டும் ரூபாய் நோட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் கொள்கைகள் பற்றி அவர்களுக்கே தெளிவு இல்லை என்பது வருத்தமளிக்கிறது.
ரூ.2000 நோட்டுகளை தடை செய்யும் திட்டம் இருந்தால் ஏன் அதனை அறிமுகப்படுத்த வேண்டும் ? பாஜகவின் தோல்விகளில் இருந்து மக்கள் கவனத்தை திசை திருப்பவே இந்த முயற்சி.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவது என்பது எளிதானது அல்ல.
- ஆர்.பி.ஐ. 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்ப பெற்றுள்ளது.
புதுடெல்லி :
முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
எதிர்பார்த்தது போலவே மத்திய அரசு, ஆர்.பி.ஐ. 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்ப பெற்றுள்ளது. இந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற செப்டம்பர் 30-ந் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவது என்பது எளிதானது அல்ல என 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் சொன்னோம். தற்போது அது நிரூபிக்கப்பட்டுள்ளது.
எளிதாக பரிமாற்றம் செய்வதற்கு வசதியாக இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை பணமதிப்பு நீக்கம் என்ற முட்டாள்தனமான முடிவின் மூலம் செல்லாததாக்கி விட்டு அதனை மறைக்க ரூ.2 ஆயிரம் நோட்டுகள் கொண்டுவரப்பட்டன.
பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட சில வாரங்களுக்கு பிறகு அரசும், ஆர்.பி.ஐ.யும் ரூ.500 நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
1,000 ரூபாய் நோட்டை அரசும், ஆர்.பி.ஐ.யும் மீண்டும் அறிமுகம் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ரூ.2,000 நோட்டு வாபஸ் அறிவிப்பை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
- 2-வது பணமதிப்பிழப்பு பேரழிவின் தொடக்கம்.
புதுடெல்லி
ரூ.2,000 நோட்டு வாபஸ் அறிவிப்பை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதியன்று துக்ளக் பாணி பேரழிவு நடவடிக்கைக்கு பிறகு பெரும் ஆரவாரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ரூ.2,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுகின்றன.
இது, தன்னைத்தானே 'விஸ்வகுரு' என்று சொல்லிக்கொள்பவரின் வழக்கமான பாணி. 'முதலில் செய், பிறகு யோசி' என்ற அவரது பாணியை இது காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், ''2-வது பணமதிப்பிழப்பு பேரழிவின் தொடக்கம்'' என்று வர்ணித்துள்ளார்.
- 2,000 ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டால் ஊழலுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும்.வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்து தேர்தலில் வெற்றி பெற அரசியல்வாதிகள் முயற்சித்து வருகின்றனர்.
- அனைத்துப் பொருட்களின் விலைகளும், கியாஸ் எரிபொருள் மற்றும் ஏனைய பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
திருப்பதி:
2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் இந்திய ரிசர்வ் வங்கியின் முடிவை ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு வரவேற்றுள்ளார்.
இது குறித்து சந்திரபாபு நாயுடு தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஊழல், பதுக்கல் மற்றும் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுப்பதற்கு மூல காரணமான அதிக மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை ரத்து செய்ய வேண்டும் என்று நான் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறேன்.
இது பொருளாதாரத்தை உயர்த்துவது மட்டுமல்லாமல், மக்களின் பெரிய நன்மைக்காக நேர்மையுடன் உழைக்கும் நேர்மையான நபர்களின் முயற்சிகளுக்கு மிகப்பெரிய மதிப்பையும் சேர்க்கும்.
இந்த நடவடிக்கை வாக்காளர்களிடையே பணப் பட்டுவாடாவை பெரிய அளவில் தடுக்க உதவும்.
2,000 ரூபாய் நோட்டுகளை தடை செய்யும் முடிவு நிச்சயமாக நல்ல அறிகுறி. நான் நீண்ட காலத்திற்கு முன்பே டிஜிட்டல் கரன்சி குறித்த அறிக்கையை சமர்ப்பித்திருந்தேன்,
2,000 ரூபாய் நோட்டுகள் ரத்து செய்யப்பட்டால் ஊழலுக்கு நிச்சயம் தீர்வு கிடைக்கும்.வாக்காளர்களுக்கு பணம் வினியோகித்து தேர்தலில் வெற்றி பெற அரசியல்வாதிகள் முயற்சித்து வருகின்றனர். இதில் ரூ.2000 நோட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு பணப் பைத்தியம் அவர் மாநிலம் முழுவதையும் கொள்ளையடிக்கத் துடிக்கிறார். பணத்திற்காக யாரையும் கொல்ல அவர் தயாராக இருக்கிறார்.
அனைத்துப் பொருட்களின் விலைகளும், கியாஸ் எரிபொருள் மற்றும் ஏனைய பொருட்களின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.
இதற்கு எதிராக யாராவது குரல் எழுப்பினால், அத்தகைய நபர்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைக்கிறார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்கிற அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும்.
- பொதுமக்கள் வங்கியில் சென்று தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளுமாறு கூறி வருகிறோம்.
செல்லாது என்று அறிவிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் அவகாசம் அளிக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறியதாவது:-
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் மாதம் 30-ந்தேதி வரை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்கிற அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாதத்தில் 8 நாட்களும், அடுத்து வரும் 4 மாதங்களிலும் மட்டுமே கால அவகாசம் என்பது கண்டிப்பாக போதுமானதாக இருக்காது.
பொதுமக்களிடம் இருந்து வியாபாரிகள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்து வந்தாலும் வணிக ரீதியாக 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வியாபாரிகளிடம் அதிக அளவில் சேருவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.
எனவே செப்டம்பர் 30-ந்தேதி வரை மட்டுமே வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை நீட்டித்து வழங்க வேண்டும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்கிற அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட வேண்டும்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நேரத்தில் பொதுமக்களிடம் இருந்து வாங்கிய பணத்துக்கு வருமான வரித்துறையினரிடம் விளக்கம் அளிக்க வேண்டிய நிலையும் வியாபாரிகள் பலருக்கு ஏற்பட்டது. இதனால் கடுமையான பாதிப்புகளையும் வியாபாரிகள் சந்திக்க நேரிட்டது.
இதன்காரணமாகவே பொதுமக்கள் வங்கியில் சென்று தங்களிடம் உள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளுமாறு கூறி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 2000 ரூபாய் நோட்டு அதன் சட்டப்பூர்வ டெண்டர் அந்தஸ்தைத் தொடரும்.
- கணக்கு வைத்திருக்காதவர் எந்த வங்கிக் கிளையிலும் ஒரே நேரத்தில் ரூ.20,000 வரை 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.
2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக ரிசர்வ் வங்கி கேள்வி-பதில் வடிவத்தில் விரிவான விளக்கம் அளித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
2,000 ரூபாய் நோட்டுகள் ஏன் திரும்பப் பெறப்படுகின்றன?
ஆர்.பி.ஐ. சட்டம், 1934-ன் பிரிவு 24(1)-ன் கீழ் நவம்பர் 2016-ல் ரூ.2000 மதிப்புடைய நோட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. முதன்மையாக அனைத்து ரூ.500 மற்றும் சட்டப்பூர்வ டெண்டர் நிலையை திரும்ப பெற்ற பிறகு பொருளாதாரத்தின் நாணயத் தேவையை விரைவாகப் பூர்த்தி செய்யும் நோக்கத்துடன் அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.1000 நோட்டுகள் அந்த நோக்கம் நிறைவேறியதாலும், மற்ற வகை ரூபாய் நோட்டுகள் போதுமான அளவில் கிடைப்பதாலும், 2018-19-ல் ரூ.2000 நோட்டுகள் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது.
2000 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகளில் பெரும்பாலானவை மார்ச் 2017-க்கு முன் வெளியிடப்பட்டன மற்றும் அவற்றின் ஆயுட் காலம் 4 அல்லது 5 ஆண்டு கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த மதிப்பு பொதுவாக பரிவர்த்த னைகளுக்கு பயன்படுத்தப்படுவதில்லை என்பதும் கவனிக்கப்படுகிறது.
மேலும், பொதுமக்களின் கரன்சி தேவையை பூர்த்தி செய்ய மற்ற வகை ரூபாய் நோட்டுகளின் இருப்பு தொடர்ந்து போதுமானதாக உள்ளது.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கியின் "சுத்தமான நோட்டுக் கொள்கையின்" படி, 2000 ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது.
சுத்தமான குறிப்பு கொள்கை என்றால் என்ன?
பொதுமக்களுக்கு நல்ல தரமான ரூபாய் நோட்டுகள் கிடைப்பதை உறுதி செய்வதற்காக ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொண்ட கொள்கை இது.
2,000 ரூபாய் நோட்டுகளின் சட்டப்பூர்வ டெண்டர் நிலை நீடிக்குமா?
ஆம், 2000 ரூபாய் நோட்டு அதன் சட்டப்பூர்வ டெண்டர் அந்தஸ்தைத் தொடரும்.
சாதாரண பரிவர்த்தனைகளுக்கு 2,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தலாமா?
ஆம், பொதுமக்கள் தங்கள் பரிவர்த்தனைகளுக்கு 2000 ரூபாய் நோட்டுகளை தொடர்ந்து பயன்படுத்தலாம் மற்றும் பணம் செலுத்தி பெறலாம். இருப்பினும், அவர்கள் செப்டம்பர் 30, 2023 அன்று அல்லது அதற்கு முன் இந்த ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவும், அல்லது மாற்றவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை என்ன செய்ய வேண்டும்?
பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய அல்லது மாற்ற வங்கிக் கிளைகளை அணுகலாம். 2023 செப்டம்பர் 30-ந்தேதி வரை அனைத்து வங்கிகளிலும் 2,000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும் மாற்றுவதற்கும் வசதி இருக்கும். ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்களிலும் (ஆர்.ஓ.க்கள்) மாற்றும் வசதி ஏற்படுத்தப்படும்.
2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்ய வரம்பு உள்ளதா?
வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்வது, தற்போதுள்ள உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (கே.ஒய்.சி.) விதிமுறைகள் மற்றும் பொருந்தக்கூடிய பிற சட்டப்பூர்வ, ஒழுங்குமுறை தேவைகளுக்கு உட்பட்டு கட்டுப்பாடுகள் இல்லாமல் செய்யப்படலாம்.
மாற்றக்கூடிய 2,000 ரூபாய் நோட்டுகளின் செயல்பாட்டு வரம்பு உள்ளதா?
பொதுமக்கள் 2000 ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில் ரூ.20,000 வரை மாற்றிக்கொள்ளலாம்.
வணிக நிருபர்கள் மூலம் 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியுமா?
ஆம், 2,000 ரூபாய் நோட்டுகளை பி.சி.க்கள் மூலம் ஒரு கணக்கு வைத்திருப்பவருக்கு ஒரு நாளைக்கு ரூ.4,000 வரை மாற்றிக் கொள்ளலாம்.
எந்த தேதியில் இருந்து பரிமாற்ற வசதி கிடைக்கும்?
ஆயத்த ஏற்பாடுகளைச் செய்ய வங்கிகளுக்கு அவகாசம் அளிக்க, பொதுமக்கள் வருகிற 23-ந்தேதி முதல் ரிசர்வ் வங்கியின் வங்கிக் கிளைகள் அல்லது ஆர்.ஓ.க்களை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வங்கியின் கிளைகளில் இருந்து 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கியின் வாடிக்கையாளராக இருப்பது அவசியமா?
இல்லை. கணக்கு வைத்திருக்காதவர் எந்த வங்கிக் கிளையிலும் ஒரே நேரத்தில் ரூ.20,000 வரை 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம்.
ஒருவருக்கு வணிகம் அல்லது பிற நோக்கங்களுக்காக 20,000 ரூபாய்க்கு மேல் பணம் தேவைப்பட்டால் என்ன செய்வது?
கட்டுப்பாடுகள் இல்லாமல் கணக்குகளில் டெபாசிட் செய்யலாம். 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்து, அதன்பிறகு இந்த வைப்புத்தொகைகளுக்கு எதிராக பணத்தேவைகளைப் பெறலாம்.
பரிமாற்ற வசதிக்காக ஏதேனும் கட்டணம் செலுத்த வேண்டுமா?
இல்லை, பரிமாற்ற வசதி இலவசமாக வழங்கப்படும்.
மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் போன்றவர்களுக்கு, பரிமாற்றம் மற்றும் வைப்புத்தொகைக்கு சிறப்பு ஏற்பாடுகள் இருக்குமா?
2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அல்லது டெபாசிட் செய்ய முதியவர்கள் சிரமப்படுவதைக் குறைப்பதற்கான ஏற்பாடுகளை செய்ய வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உடனடியாக 2000 ரூபாய் நோட்டை டெபாசிட் செய்யவோ, மாற்றவோ முடியாவிட்டால் என்ன நடக்கும்?
முழு செயல்முறையையும் பொதுமக்களுக்கு எளிதாகவும் வசதியாகவும் செய்ய, 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும், அல்லது மாற்றுவதற்கும் 4 மாதங்களுக்கும் மேல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்கள் வசதிக்கேற்ப இந்த வசதியை குறிப்பிட்ட நேரத்திற்குள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
2,000 ரூபாய் நோட்டை மாற்ற, டெபாசிட் செய்ய வங்கி மறுத்தால் என்ன நடக்கும்?
சேவை குறைபாடு ஏற்பட்டால் குறைகளை நிவர்த்தி செய்ய, புகார்தாரர், பதிக்கப்பட்ட வாடிக்கையாளர் முதலில் சம்பந்தப்பட்ட வங்கியை அணுகலாம். புகார் அளித்த 30 நாட்களுக்குள் வங்கி பதில் அளிக்கவில்லை என்றால் அல்லது புகார்தாரர் பதில், தீர்வில் திருப்தி அடையவில்லை என்றால், புகார்தாரர் ரிசர்வ் வங்கி-ஒருங்கிணைந்த குறை தீர்ப்பு திட்டத்தின் (ஆர்.பி-ஐ.ஓ.எஸ்) கீழ் புகார் அளிக்கலாம்.
- 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி விதித்தது.
- இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தவண்ணம் உள்ளனர்.
சென்னை:
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக ரிசர்வ் வங்கி நேற்று இரவு அதிரடியாக அறிவித்தது. பொதுமக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30ம் தேதிவரை வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது. அதேசமயம் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு கட்டுப்பாடுகளையும் விதித்தது. இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சி தலைவர்கள் விமர்சனம் செய்தவண்ணம் உள்ளனர்.
அவ்வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
500 சந்தேகங்கள்
1000 மர்மங்கள்
2000 பிழைகள்!
கர்நாடகப் படுதோல்வியை மறைக்க ஒற்றைத் தந்திரம்!
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.
- முதலில் ரூ.2000 நோட்டு கொண்டு வருவதன் மூலம் ஊழல் ஒழியும் என்றார். இப்போது ரூ.2000 நோட்டுகளை தடை செய்வதன் மூலம் ஊழல் ஒழிந்துவிடும் என்று சொல்கிறார்.
- படிக்காத பிரதமரிடம் யார் வேண்டுமானாலும், என்ன வேண்டு மானாலும் சொல்லலாம்.
புதுடெல்லி:
ரூ.2000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்று அறிவித்தது. இதற்கு தான் பிரதமர் படித்திருக்க வேண்டும் என்று ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
முதலில் ரூ.2000 நோட்டு கொண்டு வருவதன் மூலம் ஊழல் ஒழியும் என்றார். இப்போது ரூ.2000 நோட்டுகளை தடை செய்வதன் மூலம் ஊழல் ஒழிந்துவிடும் என்று சொல்கிறார்.
அதனால் தான் நாங்கள் சொல்கிறோம், பிரதமர் படித்தவராக இருக்க வேண்டும். படிக்காத பிரதமரிடம் யார் வேண்டுமானாலும், என்ன வேண்டு மானாலும் சொல்லலாம். அவருக்கு எதுவும் புரியாது. பொதுமக்கள் தான் கஷ்டப்பட வேண்டும்.
இவ்வாறு கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
- நம் நாடு - இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டில் தவறான வழிகளில் பணம் சம்பாதித்து, பதுக்கி வைத்து, சுக வாழ்க்கை வாழ்ந்தவர்கள் ஏராளம்.
- நாட்டு மக்களுக்கும், நாட்டிற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் பெரும் பயனளிக்கும்.
சென்னை:
த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மத்திய ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெற வெளியிட்டிருக்கும் அறிவிப்பானது நாட்டு மக்கள், நாட்டின் முன்னேற்றம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது. நம் நாடு - இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டில் தவறான வழிகளில் பணம் சம்பாதித்து, பதுக்கி வைத்து, சுக வாழ்க்கை வாழ்ந்தவர்கள் ஏராளம்.
அதாவது ஊழல், லஞ்சம், போதைப்பொருட்கள் கடத்தல், ஹவாலா மோசடி போன்ற குறுக்கு வழியில் பணத்தை சம்பாதித்து வைத்திருப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு பாதகமே. அதே சமயம் இந்த அறிவிப்பால் நியாயமாக, நேர்மையாக செயல்படுபவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மொத்தத்தில் இந்த அறிவிப்பானது பண ஆசையில் தவறாக, குறுக்கு வழியில் செயல்பட நினைப்பவர்களுக்கு பொருத்தமான ஒன்று. குறிப்பாக சாமானியர்களும், நல்லவர்களும் இந்த அறிவிப்பால் பாதிக்கப்படமாட்டார்கள். நாட்டு மக்களுக்கும், நாட்டிற்கும், பொருளாதார முன்னேற்றத்திற்கும் பெரும் பயனளிக்கும். எனவே ரிசர்வ் வங்கியின் 2,000 ரூபாய் நோட்டு சம்பந்தமான அறிவிப்பை த.மா.கா சார்பில் வரவேற்று, சாதாரணமானவர்கள், நேர்மையானவர்கள், நல்லவர்கள் வாழ்வில் மேம்பட இது போன்ற நல்ல நடவடிக்கைகள் தொடர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
- சாமானிய மக்களை மட்டுமன்றி சிறு, குறு, நடுத்தரவர்க்க வணிகர்களை பெருமளவு பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
- சில்லரை வணிகர்களே 20,000 ரூபாய்க்கு மேல், வங்கிக்கு செலுத்த செல்லுகின்றபோது அதனை வங்கிகள் ஏற்குமா? என்ற கேள்விக்குறியும் எழுப்பப்படுகிறது.
சென்னை:
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம். விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கடந்த 2016-ம் ஆண்டு பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகளுக்கு பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டவுடன், புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்த சமயத்தில் பொது மக்களுக்கும், வணிகர்களுக்கும் மிகப்பெரும் இடையூறுகளையும், துயரங்களையும், இழப்புகளையும் ஏற்படுத்தியது என்பது அனைவரும் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறார்கள்.
7 ஆண்டுகளுக்கு முன் புழக்கத்தில் விடப்பட்ட இந்த 2000 ரூபாய் நோட்டுகள், புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி நேற்றைய தினம் திடீரென அறிவித்திருக்கின்றது.
இது சாமானிய மக்களை மட்டுமன்றி சிறு, குறு, நடுத்தரவர்க்க வணிகர்களை பெருமளவு பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்த உடனேயே, சேமிப்பாக வைத்திருக்கக்கூடிய எளிமையான மக்களிடம் இருந்து, வணிகர்களிடமே அன்றாட தேவைக்காக புழக்கத்திற்கு கொண்டு வரப்படும்.
இந்நிலையில் வணிகர்கள் அந்த நோட்டுக்களை வாங்க மறுக்கும் நிலை ஏற்படும். அதுபோன்ற நிலை ஏற்படும்போது பொது மக்களுக்கும்-வணிகர்களுக்கும் சர்ச்சைகள் ஏற்படும் நிலை உருவாகும். மேலும், சில்லரை வணிகர்களே 20,000 ரூபாய்க்கு மேல், வங்கிக்கு செலுத்த செல்லுகின்றபோது அதனை வங்கிகள் ஏற்குமா? என்ற கேள்விக்குறியும் எழுப்பப்படுகிறது.
இவற்றிற்கெல்லாம் விடைகாணும் விதமாக, பொதுமக்களின் அன்றாட புழக்கத்திற்கும், வணிகர்களின் வங்கி பயன்பாட்டிற்கும், 2000 ரூபாய் நோட்டுக்களின் நிலையை மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் தெளிவுபடுத்திட வேண்டும்.
ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்களிடம் வைத்துள்ள 2000 ரூபாய் நோட்டுக்களை வணிக புழக்கத்திற்கு கொண்டு வந்து, அதனை மாற்றிக் கொள்வதற்கான எளிய நடைமுறைகளை, உரிய கால அவகாசத்துடன் தற்போது அறிவித்துள்ள 2023 செப்டம்பர் 30 என்பதை-டிசம்பர் 31 வரை கால நீட்டிப்பு அளித்தும், வணிகர்களும்-பொதுமக்களும் வங்கிகளில் 60,000 ரூபாய் வரை மாற்றிக்கொள்ள அனுமதி அளித்து பொதுமக்களும் வணிகர்களும் பதற்றமின்றி 2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக்கொள்ளும் நிலையை உருவாக்கி மத்திய அரசுக்கு எந்தவித அவப் பெயரும் ஏற்படாதவண்ணம் விதிகளை உடனடியாக அறிவித்திடுமாறு, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுமக்கள், உற்பத்தியாளர்கள், விநியோகஸ்தர்கள், வணிகர்கள் நலன் கருதி வேண்டுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.