என் மலர்
நீங்கள் தேடியது "செக் மோசடி"
- ராஜேந்திரகுமார் ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை கொடுத்ததாக கூறப்படுகிறது.
- விசாரணைக்கு ராஜேந்திரகுமார் ஆஜராகவில்லை எனக்கூறப்படுகிறது.
திருப்பூர் :
பல்லடம் பனப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் என்கிற சண்முகம்(வயது 52). தையல் கலைஞரான இவர் தி.மு.க.வில் கிளை நிர்வாகியாக உள்ளார்.
இவருக்கும் தற்போது நகர செயலாளராக இருக்கும் ராஜேந்திரகுமார் என்பவருக்கும் வரவு - செலவு நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2020 ம் ஆண்டு, அவசர தேவைக்காக சண்முகத்திடம் ரூ.5 லட்சத்தை ராஜேந்திரகுமார் வாங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் பணத்தை திருப்பி தருமாறு சண்முகம் கேட்டுள்ளார். அப்போதும் அவர் பணத்தை திருப்பி தராததால் இதுகுறித்து முக்கிய பிரமுகர்களிடம் பேசி கடந்த 2022 ல் ராஜேந்திரகுமார் ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை கொடுத்ததாக கூறப்படுகிறது. அந்த காகோலையை வங்கியில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பியது. இதையடுத்து சண்முகம் பல்லடம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்ற போது விசாரணைக்கு ராஜேந்திரகுமார் ஆஜராகவில்லை எனக்கூறப்படுகிறது.
தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாததால், ராஜேந்திர குமாருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். வரும் ஜூன் 30-ல் விசாரணைக்கு கண்டிப்பாக ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
- கடந்த 2020ம் ஆண்டு அவசர தேவைக்காக சண்முகத்திடம் ரூ.5 லட்சத்தை ராஜேந்திரகுமார் வாங்கியுள்ளார்.
- விசாரணைக்கு ஆஜராகாததால், ராஜேந்திரகுமாருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் பனப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சம்பத் என்கிற சண்முகம்(வயது 52). தையல் கலைஞரான இவர் தி.மு.க.வில் கிளை நிர்வாகியாக உள்ளார்.
இவருக்கும் தி.மு.க. நகர செயலாளராக இருக்கும் ராஜேந்திரகுமார் என்பவருக்கும் வரவு - செலவு நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2020ம் ஆண்டு அவசர தேவைக்காக சண்முகத்திடம் ரூ.5 லட்சத்தை ராஜேந்திரகுமார் வாங்கியுள்ளார்.
இதையடுத்து சண்முகம் பணத்தை திருப்பி கேட்டபோது, ராஜேந்திரகுமார் ரூ. 5 லட்சத்திற்கான காசோ லையை கொடுத்துள்ளார். அந்த காசோலையை வங்கியில் செலுத்தியபோது பணம் இல்லாமல் திரும்பியது. இதையடுத்து சண்முகம் பல்லடம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்ற போது விசாரணைக்கு ராஜேந்திரகுமார் ஆஜராகவில்லை. தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகாததால், ராஜேந்திர குமாருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில் தி.மு.க. நகர செயலாளர் ராஜேந்திர குமார் இன்று காலை பல்லடம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
- வங்கதேசத்தை ஆண்ட அவாமி லீக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக ஷகிப் அல் ஹசன் இருந்தார்.
- வங்கதேசத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு அவர் தற்போது வரை வங்கதேசத்திற்கு திரும்பவில்லை.
கடந்தாண்டு ஜூலை மாதம் வங்கதேசத்தில் நடந்த கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் மரணமடைந்தனர். முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்தது அடுத்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
மாணவர்கள் போராட்டத்திற்கு முன்பு வரை வங்கதேசத்தை ஆண்ட அவாமி லீக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக ஷகிப் அல் ஹசன் இருந்தார். பின்பு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்பு அவர் தற்போது வரை வங்கதேசத்திற்கு திரும்பவில்லை.
இதனிடையே கிட்டத்தட்ட ரூ.3 கோடி மதிப்பிலான செக் மோசடியில் ஈடுபட்டதாக வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹசன் உட்பட 4 பேர் மீது IFIC வங்கி புகார் அளித்திருந்தது.
இதுதொடர்பான வழக்கில் ஷகிப் அல் ஹசனுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து டாகா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகு வங்கதேசம் திரும்பாத ஷகிப் அல் ஹசன், இந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாததால் நீதிமன்றம் அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.