search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சென்னை பயணம்"

    • பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட வாகன பேரணியில் பங்கேற்றார்.
    • ஊழலையும், குடும்ப ஆட்சியையும் ஊக்குவிப்பதில் திமுக மும்முரமாக உள்ளது.

    தமிழ்நாட்டில் பாராளுமன்ற தேர்தலுக்கு நடைபெற இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழ்நாட்டுக்கு இதுவரை 6 முறை வருகை தந்துள்ளார். நேற்று 7-வது முறையாக அவர் தமிழகம் வந்தார்.

    இந்நிலையில், தனி விமானம் மூலம் சென்னை வந்த பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு தி.நகர் பனகல் பார்க் பகுதியில் ரோடுஷோ நடைபெறும் இடத்தை வந்தார்.

    அங்கு, பா.ஜ.க. சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்ட வாகன பேரணியில் பங்கேற்றார்.

    ரோடு ஷோவில் பங்கேற்றது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பல ஆண்டுகளாக சென்னை மக்களிடம் வாக்குகளை பெற்று நகருக்கு திமுக பெரிதாக எதுவும் செய்யவில்லை. ஊழலையும், குடும்ப ஆட்சியையும் ஊக்குவிப்பதில் திமுக மும்முரமாக உள்ளது. அவர்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களை அணுகுவதில்லை, குறிப்பாக சவால்கள் நிறைந்த கடினமான நேரங்களில்.

    கச்சத்தீவை தாரை வார்த்தது குறித்த சமீபகால தகவல்கள், நமது நாட்டின் வியூக நலன்களுக்கும், நமது மீனவர்கள் மற்றும் மீனவப் பெண்களின் நலனுக்கும் தீங்கு விளைவிப்பதில் காங்கிரஸும் திமுகவும் எவ்வாறு உடந்தையாக இருந்தன என்பதைச் சுட்டிக் காட்டுகிறது. இம்முறை திமுகவையும், காங்கிரஸையும் நிராகரிக்க சென்னை தயாராகி இருப்பதில் வியப்பதற்கு எதுவுமில்லை.

    சாலைகள், துறைமுகங்கள், நகர்ப்புற போக்குவரத்து, கலாச்சாரம், வர்த்தகம், இணைப்பு, எரிசக்தி மற்றும் பல துறைகளில் என்டிஏ அரசு தொடர்ந்து பணியாற்றும். அதே நேரத்தில், பேரிடர் மேலாண்மை அமைப்பை வலுப்படுத்துவது, வெள்ளம் போன்ற பேரிடர்களின் போது நம்மை சிறப்பாக தயார்படுத்திக் கொள்வது போன்ற முக்கிய பிரச்சனைகளில் சென்னை எதிர்கொள்ளும் இடர்பாடுகளை களைய நாங்கள் முன்னுரிமை அளிப்போம். பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூணாக விளங்கும் குறு, சிறு, நடுத்தர தொழில் துறையையும் தொடர்ந்து ஆதரிப்போம்.

    சென்னை என் மனதை வென்றது!

    இந்த ஆற்றல் மிக்க நகரத்தில் இன்றைய ரோட்ஷோ என் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். மக்கள் சேவையில் தொடர்ந்து கடினமாக உழைக்கவும், நமது தேசத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்யவும் மக்களின் ஆசிகள் எனக்கு வலுவைத் தருகின்றன.

    சென்னையில் காணப்படும் இந்த உற்சாகம், தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரிய அளவில் ஆதரவளிக்கத் தயாராக உள்ளது என்பதைக் காட்டுவதாக உள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக நிர்வாகிகளும் வரவேற்பு அளித்தனர்.
    • சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் செல்கிறார்.

    பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகலில் விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அங்கு, பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பிரதமர் மோடியை அமைச்சர் காந்தி, சென்னை மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர். மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக நிர்வாகிகளும் வரவேற்பு அளித்தனர்.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் செல்கிறார்.

    அங்கு, 500 மெகாவாட் வேக ஈனுலை மின் உற்பத்தி திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    பின்னர், அங்கிருந்து நந்தனம் ஒய் எம் சி ஏ மைதானத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

    • சென்னை கோட்டை நோக்கி பேரணிக்கு செல்ல உள்ளனர்.
    • அனைத்து அரசு ஊர்தி ஓட்டுநர்களும் இதில் பங்கேற்க வேண்டும்.

    சென்னிமலை,

    ஈரோடு மாவட்ட அரசுத்துறை ஊர்தி ஓட்டுனர்கள் சங்க மாவட்ட செயலாளர் சென்னிமலை சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுத்துறை பல்வேறு துறைகளில் பணிபுரியும் 7000 அரசுத்துறை ஓட்டுநர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 22-ந் தேதி திங்கட்கிழமை ஒருநாள் விடுப்பு எடுத்து சென்னை கோட்டை நோக்கி பேரணிக்கு செல்ல உள்ளனர்.

    அரசுத்துறையில் பணிபுரியும் ஓட்டுனர்களுக்கு ஊதியம் முரண்பாடு, கல்வித் தகுதி அடிப்படையில் பதவி உயர்வு, கழிவு நீக்கம் செய்யப்பட்ட வாகனங்களுக்கு பதிலாக புதிய வாகனங்கள் அரசு வழங்க வேண்டும், காலியாக உள்ள ஓட்டுனர்கள் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் வேலைவாய்ப்பு துறை மூலம் நிரப்புதல், பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும்,

    ஈரோடு மாவட்டத்தில் வேளாண்துறையில் காலியாக உள்ள 35 க்கும் மேற்பட்ட ஓட்டுனர் பணியிடங்களை நிரப்புதல் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் 15 ஓட்டுநர் பணியிடங்கள் வருவாய் துறையில் 10 க்கும் மேற்பட்ட ஓட்டுனர் பணியிடங்கள், மருத்துவத்துறையில் 20 ஓட்டுனர் பணியிடங்கள்,

    இதே போல் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள ஓட்டுனர்கள் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி சென்னையில் வருகிற திங்கட்கிழமை நடைபெறும் பேரணிக்கு ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் அன்று விடுப்பு எடுத்து சென்னை செல்கின்றனர்.

    அனைத்து அரசு ஊர்தி ஓட்டுநர்களும் இதில் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    ×