என் மலர்
நீங்கள் தேடியது "சசிகாந்த் செந்தில்"
- மோடியின் பிரசாரத்தை சமூக வலைதளங்களில் பிசுபிசுக்க செய்ய வைத்ததிலும் சசிகாந்த் செந்திலுக்கு வெற்றி கிடைத்தது.
- சசிகாந்த் செந்திலை பாராளுமன்ற தேர்தலுக்கும் பயன்படுத்திக் கொள்ள ராகுல் திட்டமிட்டுள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதாவை படுதோல்வி அடையச்செய்ததில் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சசிகாந்த் செந்திலுக்கு முக்கிய பங்களிப்பு உண்டு. இவர்தான் கர்நாடக காங்கிரசுக்கு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ஆதரவை உருவாக்கி கொடுத்தார். இவர் ஏற்படுத்திய '40 சதவீத கமிஷன் கவர்மெண்ட்' என்ற கோஷம் பாரதிய ஜனதாவுக்கு மரண அடியாகவே மாறிப்போனது. இதுதவிர ஒவ்வொரு நாளும் காங்கிரஸ் சார்பில் ஒவ்வொரு கேள்வியை இவர் கேட்க வைத்தார்.
அவை அனைத்துக்கும் பாரதிய ஜனதா தலைவர்களால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. அதுமட்டுமின்றி மோடியின் பிரசாரத்தை சமூக வலைதளங்களில் பிசுபிசுக்க செய்ய வைத்ததிலும் சசிகாந்த் செந்திலுக்கு வெற்றி கிடைத்தது. சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் பா.ஜ.க. பிரசாரத்தை அனைத்து வகையிலும் சமாளித்ததோடு காங்கிரசுக்கு ஆதரவான மனநிலையை மக்களிடம் உருவாக்க செய்ததில் 100 சதவீதம் வெற்றி பெற்றார். இதனால் இவரை பாராளுமன்ற தேர்தலுக்கும் பயன்படுத்திக் கொள்ள ராகுல் திட்டமிட்டுள்ளார்.
அதற்காக சசிகாந்த் செந்திலும் தயாராகி வருகிறார். தமிழக அரசியல் நிலவரம் பற்றி அவர் சமீபத்தில் கூறுகையில், 'தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் சரியில்லை. அவர்கள் தற்போதைய அரசியல் நிலைக்கேற்ப செயல்பட்டால் தான் காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற முடியும்' என்று கூறி இருக்கிறார். இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் அரண்டு போய் இருக்கிறார்கள்.
- தமிழகத்தில் நமக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்ற எண்ணம் ஏற்பட்டது போலும்.
- சசிகாந்த் செந்தில் காய்களை நகர்த்தி வருவதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
காங்கிரசில் இணைந்த இளம் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சசிகாந்த் செந்தில் காங்கிரசில் உள்ள அணிகளின் ஒருங்கிணைப்பாளர் என்ற பொறுப்பை வகித்து வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக தேர்தலில் இவரது பங்களிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. சுமார் ஒரு வருடம் அங்கேயே தங்கி இருந்து தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்து கட்சி வென்ற பிறகு தமிழகத்துக்கு திரும்பி இருக்கிறார்.
ஏற்கனவே கர்நாடக காங்கிரசுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்த சுனில் முதல்-மந்திரியின் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த பதவி மந்திரி பதவிக்கு இணையானதாகும். இப்போது சசிகாந்த்தும் நினைத்தாரோ என்னவோ நம்மோடு இருந்தவர் மந்திரி பதவி அளவுக்கு உயர்ந்து விட்டார்.
தமிழகத்தில் நமக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்குமா என்ற எண்ணம் ஏற்பட்டது போலும். இங்குள்ள சூழ்நிலைக்கு அந்த வாய்ப்பு அரிதுதான் என்பதால் கட்சித்தலைவர் பதவிக்கு குறி வைப்பதாக கூறப்படுகிறது. தற்போது தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரி 4 ஆண்டுகளாக தலைவர் பொறுப்பில் இருக்கிறார்.
வருகிற 20-ந் தேதிக்கு பிறகு நாடுமுழுவதும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள். அந்த தருணத்தில் சில மாநில தலைவர்களும் மாற்றப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது. அப்போது அந்த பதவியை பெறுவதற்கான முயற்சிகளில் சசிகாந்த் செந்தில் காய்களை நகர்த்தி வருவதாக காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
- கே.எஸ். அழகிரியை மாற்ற வேண்டும் என்று கடந்த ஓர் ஆண்டாக மூத்த தலைவர்கள் மேலிடத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
- கர்நாடக சட்டமன்ற தேர்தலின்போது அவரது பங்களிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழுவின் புதிய தலைவருக்கான அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது.
இந்த தருணத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் அடுத்த தலைவராக முன்னாள் ஐ.ஏ.ஐ சசிகாந்த் செந்தில் நியமிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக காங்கிரஸ் மேலிட வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வருகின்றன.
தற்போது தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரி 4 ஆண்டுகளாக தலைவர் பொறுப்பில் இருக்கிறார். கே.எஸ். அழகிரியை மாற்ற வேண்டும் என்று கடந்த ஓர் ஆண்டாக மூத்த தலைவர்கள் மேலிடத்தில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவராக சசிகாந்த் செந்தில் அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸில் இணைந்த இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில், கர்நாடக சட்டமன்ற தேர்தலின்போது அவரது பங்களிப்பு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. சுமார் ஒரு வருடம் அங்கேயே தங்கி இருந்து தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்து கட்சி வென்ற பிறகு தமிழகத்துக்கு திரும்பினார். இதனால், கட்சி மேலிடத்தில் சசிகாந்த் மீது நன்மதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், பாஜகவின் மாநில தலைவரான முன்னாள் ஐ.பி.எஸ் அண்ணாமலைக்கு போட்டியாக, முன்னாள் ஐ.ஏ.எஸ்-ஆன சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
- பழவேற்காடு பகுதியில் சிறிய துறைமுகம் அமைக்கப்படும் என்றார்.
- கவிதா மனோகரன், உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் சென்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர் .
திருவள்ளூர்:
திருவள்ளூர் (தனி) தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பெரிய மாங்கோடு, சின்ன மாங்கோடு, புதுகுப்பம், கோட்டைக்குப்பம், ரெட்டி பாளையம், கம்மார்பாளையம், பெரும்பேடு, சோம்பட்டு, கொல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று கை சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பளித்தனர்.
அப்போது பேசிய வேட்பாளர் சசிகாந்த் செந்தில், மத்திய அரசு பணிகளில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு, ஏழை குடும்ப பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதி உதவி, பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ பயின்றவர்களுக்கு தொழில் பயிற்சியுடன் ரூ.1 லட்சம் உதவி தொகை வழங்க நடவடிக்கை எடுப்பேன். ஊரக வேலை திட்டத்தை போல, நகர்ப்புற வேலை உறுதி திட்டம் அமல்படுத்த முயற்சி செய்வேன். மீனவ குடும்பத்தினருக்கு அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படும், மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு மீன் பிடிப்பதற்கு படகுகள், வலைகள், இன்ஜின்கள் மானிய விலையில் வழங்கப்படும்.
பழவேற்காடு பகுதியில் சிறிய துறைமுகம் அமைக்கப்படும் என்றார். வேட்பாளருடன் எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகர், டி .ஜே. கோவிந்தராஜன், மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி, துணை தலைவர், பரிமேலழகர், தமிழ்ச்செல்வி பூமிநாதன், காங்கிரஸ் மாநில செயலாளர் சம்பத் வட்டார தலைவர் ஜெயசீலன், புருஷோத்தமன், பழவை ஜெயராமன், கடல் தமிழ்வாணன், ரவி, தி.மு.க நிர்வாகிகள் அவை தலைவர் பகலவன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி, மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சம்பத், மாவட்ட துணை அமைப்பாளர் முரளி, கவுன்சிலர் வெற்றி, அன்பு, தமின்சா, ரமேஷ் பழவேற்காடு அலவி,பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, தலைவர் கவிதா மனோகரன், உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் சென்று கை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தனர் .
- எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்குவதற்காக பா.ஜ.க. செயல்பட்டு வந்தது.
- ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மாநில உரிமைகளை பறிக்கும் செயல்.
திருவள்ளூர்:
திருவள்ளூரில் காங்கிரஸ் எம்.பி.சசிகாந்த் செந்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வரலாறு காணாத வகையில் குளிர் கால பாராளுமன்ற கூட்டத் தொடர் நடந்து முடிவடைந்தது. கூட்டத்தொடர் ஆரம்பித்த தொடக்கத்தில் இருந்தே எதிர்க்கட்சிகளின் குரலை நசுக்குவதற்காக பா.ஜ.க. செயல்பட்டு வந்தது.
அதானி தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசினால் பா.ஜ.க.வுக்கு ஒரு வித பயம் உருவாவதை பார்த்தோம். ஜனநாயகம் அரசியல் வரலாறு உள்ள நாட்டில் அதானி என்ற ஒரு மனிதனுக்காக பா.ஜ.க. இறங்கி போகிறது.
பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின் பா.ஜ.க. அம்பேத்கரை பற்றி பேசுவதற்கான கருத்தை உருவாக்கி வைத்துள்ளது. பா.ஜ.க. இதுவரை அம்பேத்கரை பற்றியும், அரசியலமைப்பு சட்டத்தை பற்றியும் பேசியதை நான் பார்த்ததில்லை. பா.ஜ.க.வின் உண்மையான வெறுப்பு, கோபம் எல்லாமே அம்பேத்கர் இயற்றிய அரசியலமைப்புச் சட்டத்தின் மீது இருந்து வருகிறது.
ஒரு தேர்தலையே ஒரே பகுதியாக வைத்து நடத்த முடியாத நிலையில் எப்படி ஒரே நாடு, ஒரே தேர்தலை நடத்த முடியும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது மாநில உரிமைகளை பறிக்கும் செயல். அடிப்படை ஜனநாயக தவறு.
சென்னைக்கு அடுத்த படியாக முக்கிய ரெயில் நிலையமாக திருவள்ளூர் மற்றும் கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையங்கள் உள்ளது. இந்த ரெயில் நிலையங்களில் வருங்காலத்தில் அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும். அதற்காக ரெயில்வே துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.
திருவள்ளூரில் புதிய ரெயில் முனையம் அமைக்கவும் கோரிக்கை விடுத்து உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது திருவள்ளூர் தொகுதி பாராளுமன்ற பொறுப்பாளர் ஏ.ஜி.சிதம்பரம், மாநில நிர்வாகிகள் எம்.சம்பத், ஏகாட்டூர் ஆனந்தன், ஜெ.கே.வெங்கடேசன், ஆர்.சசிகுமார், ஆ.திவாகர், சதீஷ், உடன் இருந்தனர்.