என் மலர்
நீங்கள் தேடியது "கார்த்திகை"
- சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும் நடந்தது
- திரளான பக்தர்கள் பங்கேற்பு
கன்னியாகுமரி:
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. குமரி மாவட்டத்தி லேயே மிகவும் உயரமான 5½ அடி உயர சிவலிங்க சிலை இந்த கோவிலில் அமைந்து உள்ளது சிறப்பாகும்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலில் கார்த்திகை மாத சோமவார பிரதோஷ வழிபாடு நடந்தது.இதையொட்டிமாலை 4.30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது எண்ணை, மஞ்சள்பொடி, மாபொடி, களபம், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம்ஆகிய 13 வகையான வாசனை திரவியங்களால் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.
பின்னர் 5.30 மணிக்கு மூலவரான சிவபெரு மானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. அதன் பிறகு 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாளுடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலைச் சுற்றி 3 முறை வலம் வந்த நிகழ்ச்சி நடந்தது. அதன் பிறகு பள்ளியறை எழுந்திருளும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து இருந்தனர்.
இதேபோல கன்னியா குமரி சன்னதி தெருவில் உள்ள விஸ்வநாதர் கோவில், கீழ ரதவீதியில் உள்ள சிவன் கோவில், விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த காசிவிசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் கோவில், பஞ்சலிங்க புரம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில், மகாதானபுரம் காசிவிசுவநாதர் கோவில், கொட்டாரம் வடுகன்பற்று அகத்தீஸ்வரர் கோவில், மருந்துவாழ் மலை ஜோதி லிங்கசாமி கோவில், பரமார்த்த லிங்க சுவாமி கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், தேரூர் எடுத்தாயுதமுடைய நயி னார் கோவில், குறண்டி சிவன் கோவில் ஆகிய 12 சிவாலயங்களிலும் கார்த்திகை மாத சோமவார பிரதோசத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- கார்த்திகை மாத அமாவாசையொட்டி சேலத்தில் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
- கோவில்கள், வீடுகளில் பூஜைக்காக அதிகளவில் பயன்படுத்துவதால் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.
அன்னதானப்பட்டி:
சேலம் பூ மார்க்கெட்டுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து டன் கணக்கில் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதே போல் சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இன்று கார்த்திகை மாத அமாவாசையையொட்டி கோவில்களுக்கும், வீடுகளில் சாமிக்கு பூஜைகள் செய்து படைக்கவும் பூக்கள் அதிகளவில் மக்கள் வாங்கிச் சென்றனர். இதன் காரணமாக சேலத்தில் உள்ள பூ , மார்க்கெட்டுகளில் அதிகாலை முதலே பூக்கள் விற்பனை களை கட்டியது.
சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் இன்றைய பூக்களின் விலை நிலவரம் (1 கிலோ கணக்கில்):-
மல்லிகை - ரூ.1000, முல்லை - ரூ500, ஜாதி மல்லிகை - ரூ.280, காக்கட்டான் - ரூ.280, கலர் காக்கட்டான் - ரூ.240, சி.நந்தியா வட்டம் - ரூ.80, சம்மங்கி - ரூ.50, சாதா சம்மங்கி - ரூ.50, அரளி - ரூ.220, வெள்ளை அரளி - ரூ.220, மஞ்சள் அரளி - ரூ.220, செவ்வரளி - ரூ.240, ஐ.செவ்வரளி - ரூ.240, நந்தியா வட்டம் - ரூ.80, என்கிற விலையில் விற்பனை செய்யப்பட்டது.
தொடர்ந்து வருகிற வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமையில் விற்பனை நன்றாக இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
- வரலாற்று சிறப்புவாய்ந்த கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது.
- சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அவினாசி :
திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரலாற்று சிறப்புவாய்ந்த கருணாம்பிகை உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. நேற்று கார்த்திகை அமாவாசை தினத்தை முன்னிட்டு ஸ்ரீகருணாம்பிகை அம்மன்- அவினாசியப்பர்சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கோவில் மண்டபத்தில் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அவினாசியிலுள்ள ஸ்ரீவீர ஆஞ்சநேயர் கோவில், கரிவரதராஜப்பெருமாள் கோவில், பழங்கரை பொன்சோழீசுவரர் கோவில், கருவலூர் மாரியம்மன் கோவில், அவினாசி ரங்கா நகரிலுள்ளவனபத்திரகாளியம்மன்கோவில், நடுவச்சேரி சிவளபுரியம்மன் கோவில், ராயம்பாளையம் காட்டு மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- ஸ்ரீஅண்ணாமலையார் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா துவங்கவுள்ளது.
- இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
திருப்பூர் :
திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபவிழா அன்னம்பாலிப்பு திருப்பணிக்குழு செயலாளர் சண்முகசுந்தரம் கூறியதாவது:- வருகிற 6-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) திருவண்ணாமலை, ஸ்ரீஅண்ணாமலையார் ஸ்ரீஉண்ணாமுலையம்மன் திருக்கோவிலில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா துவங்கவுள்ளது.
இதனை முன்னிட்டு எமது "திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபவிழா அன்னம் பாலிப்பு திருப்பணிக்குழு" சார்பில் 40-வது ஆண்டாக சுமார் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து, பக்தர்களின் வசதிக்காகவும், பொதுமக்களின் நலனை கருத்திற்கொண்டும், அங்குள்ள 18 திருமண மண்டபங்களில், கடந்த 39 ஆண்டுகளாக எமது திருப்பணிக்குழு சார்பில், சுமார் 90 லட்சம் மதிப்பீட்டில் இச்சேவை செயல்பட்டு வருகிறது. நமது திருப்பூர் மாவட்ட பக்தர்களின் பங்களிப்பாக ஆண்டுதோறும் சுமார் 5 டன் காய்கறிகள் -30 இலட்சம் மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் நன்கொடையாகப் பெறப்பட்டு இச்சேவா காரியத்திற்காக தொடர்ந்து அனுப்பப்படுகிறது.
மேலும் சுமார் 500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இங்கிருந்து வரவழைக்கப்பட்டு அங்குள்ள மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு அன்னதானம் வழங்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில், திருக்கார்த்திகை தீபத் திருவிழாவில் தன்னார்வமாக கலந்துகொண்டு, அன்னதானப்பணிகளில் சேவையாற்ற, இந்தாண்டும் சேவார்த்திகள் வேண்டப்படுகிறார்கள். விருப்பமுள்ள தன்னார்வலர்கள் மற்றும் அன்னதானத்திற்கு மளிகைப்பொருட்கள் கொடுக்க விரும்புவோர், திருப்பணிக்குழுவின் இணைச்செயலாளர் முருகேசன் , பொருளாளர் மோகன சுந்தரம் ஆகியோர்களை 94434 79279, 93616 26363 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மருந்துவாழ் மலை உச்சியில் ஏற்றப்பட்ட இந்த மகா தீபம் 3 நாட்கள் இரவு- பகலாக தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும்.
- பரம்பரை அறங்காவலரான மந்தாரம் புதூரை சேர்ந்த பெரியசாமி தேவர் குடும்பத்தினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.
கன்னியாகுமரி:
கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தன்று கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு நேற்று கார்த்திகை தீப திருவிழா விமரிசையாக கொண்டாடப் பட்டது.
கன்னியாகுமரி அருகே உள்ள பொற்றையடி வைகுண்டபதியில் 1800 அடி உயர மருந்துவாழ் மலை உச்சியில் நேற்று மாலை 6 மணிக்கு மகாதீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக பரமார்த்தலிங்க சுவாமி கோவிலில் சிறப்பு அபிஷேகமும் வழிபாடு களும் நடந்தது.
பரம்பரை அறங்காவ லரான மந்தாரம் புதூரை சேர்ந்த பெரியசாமி தேவர் குடும்பத்தினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து இருந்தனர். முன்னதாக மருந்துவாழ் மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்துக்கான எண்ணெய் கன்னியாகுமரி சுற்று வட்டார பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் இருந்து 51 குடங்களில் மருந்துவாழ் மலைஉச்சிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படட்டது.
இந்த ஊர்வலத்தை எம்.ஆர். காந்தி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலத்துக்கு மருந்துவாழ்மலை பாதுகாப்பு இயக்க தலைவர் ஜெகன் தலைமை தாங்கினார். இந்த ஊர்வலத்தில் விசுவ இந்து பரிசத் அமைப்பாளர் காளியப்பன், மாநில இந்து முன்னணி பேச்சாளர் வக்கீல் அசோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மருந்துவாழ் மலை உச்சியில் ஏற்றப்பட்ட இந்த மகா தீபம் 3 நாட்கள் இரவு- பகலாக தொடர்ந்து எரிந்து கொண்டே இருக்கும்.
கார்த்திகை தீபத் திருவிழாவை யொட்டி கன்னியா குமரி விவேகா னந்தர் பாறையிலும் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
அந்த பாறையில் பகவதி அம்ம னின் ஒற்றை கால் பாதம் இயற்கை யாகவே பதிந்துள்ள தாக கருதப்படு வதால் ஆண்டு தோறும் இங்கு கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. நேற்று மாலை 4 மணிக்கு பகவதி அம்மன் கோவில் மேல்சாந்தி விட்டல்போற்றிமற்றும் கீழ் சாந்தி ஸ்ரீராம் மற்றும் கோவில் பணியாளர்கள், அதிகாரிகள் தனிப்படகில் சென்று பாறையில் கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை நடத்தினர்.
இதையொட்டி ஸ்ரீபாத மண்டபத்தில் உள்ள பாறையில் இயற்கையாகவே அமைந்துஉள்ள பகவதி அம்மன் கால் தடம் பதிந்து இருந்த இடத்தில் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. கன்னியாகுமரி விவே கானந்தா கேந்திர நிர்வாக செயலாளர் ராதா கிருஷ்ணன், கேந்திர நிர்வாக அதிகாரி ஆனந்த ஸ்ரீ பத்ம நாபன், விவேகானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் ஆர்.சி. தாணு, பாறை நினைவாலய மக்கள் தொடர்பு அதிகாரி அவினாஷ், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆனந்த், கணக்காளர் ராமச்சந்திரன் பூம்புகார் கப்பல்போக்கு வரத்து கழக துணை மேலாளர் பழனி, கடல் சார் வாரிய துறைமுக உதவி பாதுகாப்பாளர் ராஜேந்திரன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
- தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார்.
- தங்கரதத்தில் எழுந்தருளிய சாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் கார்த்திகை உற்சவ விழா நடைபெற்று வருகிறது. அதன்படி ஆனி மாதத்துக்கான கார்த்திகை உற்சவ விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. 4.30 மணிக்கு விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சந்நியாசி அலங்காரமும், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரமும் நடைபெற்றது.
தொடர்ந்து 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரம், பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையில் வைதீகாள் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜஅலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு 9 மணிக்கு ராக்கால பூஜையில் பல்வேறு வண்ண மலர்களால் சுவாமிக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது.
கார்த்திகை உற்சவத்தையொட்டி அதிகாலை முதலே கேரளா மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிகம் பேர் வருகை புரிந்தனர். எனவே கோவில் சார்பில் சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதேபோல் கூட்டம் காரணமாக தரிசன வழிகள், மலைக்கோவில் செல்வதற்கான ரோப்கார், மின்இழுவை ரெயில்நிலையம் ஆகிய இடங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சென்றனர்.
கார்த்திகை உற்சவத்தையொட்டி பழனி கோவிலில் நேற்று மாலை விளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டு விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பின்னர் மாலை 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார். அதையடுத்து தங்கரத புறப்பாடு நடைபெற்றது. தங்கரதத்தில் எழுந்தருளிய சாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை பழனி கோவில் அலுவலர்கள் செய்திருந்தனர்.
- வடபழனி முருகன் கோவிலில் செவ்வாய் பகவானுக்கு தனி சன்னதி உள்ளது.
- செவ்வாய் ஓரையில் வழிபடுவது சிறப்பு.
வைத்தீஸ்வரன் கோவிலில், செவ்வாய் பகவானைத் தை மாத செவ்வாய்களிலும், குறிப்பாக தை மாத கடைசி செவ்வாயில், செவ்வாய் ஓரையில் வழிபடுவது சிறப்பாகும். மேலும் செவ்வாய் பகவான் உச்சம் பெறும் தை மாதம், ஆட்சி பெறும் சித்திரை, கார்த்திகை மாதங்களில், செவ்வாயின் நட்சத்திரகளாகிய மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் வரும் செவ்வாய் கிழமைகளில் வழிபடலாம்.
செவ்வாய் ஓரையில் செவ்வாய்க்கிழமையில், செவ்வாய் ஓரை காலை 6 மணி முதல் 7 மணி வரை இரவு 8 மணி முதல் 9 மணி வரை வழிபட்டு பரிகாரம் செய்வது மிக மிகச்சிறப்பாகும்.
ஹோம பலன்
உத்திராடம், உத்திரட்டாதி, உத்திரம்-இந்த நட்சத்திரங் களில் ஸ்ரீமகாலட்சுமியை ஆவாகானம் செய்து ஆயிரம் நந்தியாவட்டை மலர்களால் ஹோமம் செய்து ஐஸ்வர்யம் நிலையாய் இருக்கும் பெளர்ணமியில் பால், தேன் நெய், பழத்தை தோய்த்து ஹோமம் செய்ய அரசனாவான்.
பஞ்சமி திதியிலும், வெள்ளிக்கிழமையிலும் வாசனை புஷ்பத்தால் ஹோமம் செய்ய ஒரு வருடத்திற்குள் அனைத்து சம்பத்துக்களையும் அடைந்து செல்வந்தனாவான்.
விஷ்ணு பரிவார சக்திகளில் ஸ்ரீ மஹாலட்சுமி
பத்மபுராணம் கூறுகிறது விஷ்ணுவின் பரிவார சக்திகள் எட்டு பேர் என்று புதிதாக இருக்கிறதல்லவா? அதில் இருப்பரிவார சக்திகள் சற்று வித்தியாசமாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தகதகக்கும் தங்க நிறம் உடைய ஸ்ரீ தேவி, வெள்ளை நிறமுடைய பூமிதேவி, வெள்ளை நிறமுடைய சரஸ்வதி தேவி, பச்சை நிற முடைய பரீதி தேவி, சிவப்பு நிறமுடைய கீர்த்தி தேவி, நிறமற்று ஸ்படிகம் போல ஊடுருவும் கண்ணாடித் தன்மையுள்ள சாந்தி தேவி, மஞ்சள் நிறமுடைய துஷ்டி தேவி, பச்சை நிறமுடைய புஷ்டி தேவி, என்பவர்களே அந்த விஷ்ணுசக்திகள்.
இவர்கள் எண்மரும் நான்கு திருக்கரங்கள் கொண்டு அவற்றில் மேல் இரு திருக்க்கரங்களில் இரு தாமரை மலர்களும், கீழே வலது கரம் அபயகாஸ்தமாகவும் இடது கரம் வரத காஸ்தமாகவும் அபிநயம் புரியும்படி பரிவார சக்திகளாக அமைந்திருப்பார்கள்.
வடபழனி
சென்னை வடபழனி முருகன் கோவிலில் செவ்வாய் பகவானுக்கு தனி சன்னதி உள்ளது. செவ்வாய் தோஷம் உடையவர்களும், செவ்வாய்க் கிரகத்தால் பாதிப்பு அடைந்தவர்களுக்கும் இதனை வழிபட மிகச்சிறப்பான பலனைத்தரும்.
செவ்வாய் தோஷம் நீங்கிட வடக்குவாசி என்று அழைக்கப்படும் ஸ்ரீதுர்க்கை அம்மன் தெற்கு நோக்கி இருக்கும் சங்கரன் கோவிலில் வழிபாடு செய்வது சிறந்த பரிகாரமாக அமையும். மேலும் செவ்வாய் பகவானின் தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் பழனி, சுவாமிமலை, நீங்கலாக மற்ற இடங்களில் உள்ள முருகப்பெருமாளை வழிபடுவது சிறப்பாகும்.
செவ்வாய், கடகம், மகரம், மீனம் இவற்றில் அமர்ந்து தோஷம் ஏற்படுத்தினால் திருச்செந்தூர் முருகனை வழிபடுவது சிறப்பு. பொதுவாக செவ்வாய் பகவானால் திருமண தோஷம் அடைந்தவர்கள் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமானை வழிபடுவதே சிறப்பை தரும்.
- 108 தீபங்கள்: நினைத்த காரியம் கை கூடும்.
- 508 தீபங்கள்: திருமண தடை நீங்கும்.
1 தீபம்: மன அமைதி
9 தீபங்கள்: நவக்கிரக பிணி நொடியில் அடங்கும்.
12 தீபங்கள்: ஜென்ம ராசியில் உள்ள தோஷம் நீங்கும்.
18 தீபங்கள்: சக்தி தரும் சக்தி தீபம்.
27 தீபங்கள்: நட்சத்திர தோஷம் நீங்கும், விரும்பியது கிட்டும்.
48 தீபங்கள்: தொழில் வளரும், பயம் நீங்கும்.
108 தீபங்கள்: நினைத்த காரியம் கை கூடும்.
508 தீபங்கள்: திருமண தடை நீங்கும்.
1008 தீபங்கள்: குழந்தை பாக்கியம் உண்டாகும்.
- தாமரை மலர் மேலுறையும் பிரம்ம தேவனைக் குறிக்கும்.
- தண்டுபாகம் போன்று உயரமாக இருப்பதால் நெடுமாலாகிய விஷ்ணுவைக் குறிக்கும்.
விளக்கின் அடிப்பகுதியான பீடம் மலர்ந்த தாமரைப்பூ போல் அகன்று வட்டமானதாக இருப்பதால்
தாமரை மலர் மேலுறையும் பிரம்ம தேவனைக் குறிக்கும்.
தண்டுபாகம் போன்று உயரமாக இருப்பதால் நெடுமாலாகிய விஷ்ணுவைக் குறிக்கும்.
தண்டுக்கு மேலுள்ள எண்ணெய் வார்க்கும் அகல், கங்கையை சடையுள் வைத்துள்ள சிவனைக் குறிக்கும்.
திரி எரிவதற்குரிய மூக்குகள் ஐந்தும், ஐந்து முகமுடைய மகேஸ்வரனைக் குறிக்கும்.
அகலின் மேல் அமைந்துள்ள கும்பக்கவசம் போன்ற உச்சிப்பகுதி சிவலிங்கம் போலிருப்பதால்
சதாசிவனை குறிப்பதாக உள்ளது.
ஆக ஐந்து தெய்வ வடிவங்களின் சின்னமாக அமையும் பெருமையுடையது திருவிளக்கு.
திருவிளக்கின் சுடரை சிவ ஜோதியாகவே கருதி திருவைந் தெழுந்து முதலிய மந்திரங்களை ஓதி வழிபட்டு வந்தால்
"விளக்கிட்டாருக்கு மெய்நெறி விளக்குவாய் போற்றி" என்ற சொல்லின் உண்மை புலப்படும்.
- கோவில்களில் ஒலித்த சரணகோஷம்
- கன்னி சாமிகளும் ஏராளமானோர் மாலை அணிந்து கொண்டனர்.
கன்னியாகுமரி, நவ.17-
சபரிமலைக்கு மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்திற்காக செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம் முதல் தேதி மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள். கார்த்திகை 1-ம் தேதியான இன்று சபரி மலைக்கு செல் லும் பக்தர் கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி னார்கள். இதையடுத்து முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலில் பக்தர்கள் புனித நீராடி னார்கள். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் கடலில் புனித நீராடினார்கள். பின்னர் கடற்கரையில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார்கள். குருசாமிகள் மற்ற சாமி களுக்கு மாலை அணிவித்தனர். கன்னி சாமிகளும் ஏராளமானோர் மாலை அணிந்து கொண்டனர். சிறுமிகளும் தங்களது பெற்றோருடன் வந்து மாலை அணிந்து விரதத்தை தொடங்கினார் கள். சாமியே சரணம் அய்யப்பா என்ற பக்தி கோஷம் கடற்கரையில் எதிரொலித்தது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலிலும் இன்று காலை பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அங்கும் பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங் கினார்கள். கடற்க ரையில் புனித நீராடிய பக்தர்கள் பகவதி அம்மனை வழிபட்டு சென்றனர். நாகர்கோவில் நாகராஜா கோவிலிலும் இன்று காலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. கருப்பு மற்றும் நீல உடை அணிந்து அய்யப்ப பக்தர்கள் விரதத்தை தொடங்கினார்கள். குருசாமிகள் கன்னிசாமிகளுக்கு மாலை அணிவித்தனர். துளசி மாலை அணிந்து பக்தர்கள் விரதம் தொடங்கினார்கள். கன்னிசாமிகள் குருசாமிகள் காலை தொட்டு வணங்கி மாலை அணிந்து கொண்டனர். சுசீந்திரம் தாணுமாலயன் சாமி கோவில், பூதப்பாண்டி பூதலிங்க சுவாமி கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், குமார கோவில், வேளிமலை முருகன் கோவில், பார்வதி புரம் அய்யப்பன் கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கி உள்ளனர். அனைத்து கோவில்களிலும் சாமியே சரணம் அய்யப்பா என்ற பக்தி கோஷம் எதிரொலித்தது. மாலை அணிந்து விரதம் தொடங்கிய பக்தர்கள் தினமும் காலை, மாலை கோவில்களில் வழிபட்டு சபரிமலை கோவில் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு தரிசனத்திற்கு இருமுடி கட்டி சபரிமலைக்கு செல்வார்கள்.
கார்த்திகை மாதம் தொடங்கியதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படும். தினமும் கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பூஜைகள் செய்யப்படும். கோவில்களில் அய்யப்ப பக்தர்கள் பஜனை பாடி வழிபடுவார்கள். பெண்கள் வீடுகளில் விளக்கேற்றியும், வழிபாடு நடத்துவார்கள்.
- சிவனுக்கு மிகவும் உகந்த விரதம், கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சோமவார விரதம்.
- கார்த்திகை மாத சோமவாரங்களில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் செய்வார்கள்.
சிவனுக்கு மிகவும் உகந்த விரதம், கார்த்திகை மாதம் வரும் திங்கட்கிழமை சோமவார விரதம்.
சிவனின் தலையில் இருக்கும் சந்திரன் சோமவார விரதத்தை கடைபிடித்து
சிவனுக்கு மிகவும் பிடித்தவனாகி சிவனின் தலையிலேயே இடம்பெற்றான்.
அந்த அளவிற்கு சோமவார விரதம் மிகவும் புகழ்பெற்றது.
ஒருமுறை இந்த விரதத்தை எப்படி கடைபிடிப்பது என்று பார்வதி சிவனிடம் கேட்க, சிவன், காலையில் எழுந்து நீராடி, தினக்கடமைகளை முடிக்க வேண்டும்.
வீட்டிலேயே விரிவாக சிவபூஜை தினமும் செய்யும் ஒரு வேதியரையும் அவரது மனைவியையும் அழைத்து அவர்களை சிவ-பார்வதியாக நினைத்து, அவர்களுக்கு முடிந்தவரை தானம் செய்ய வேண்டும்.
அதன் பின் பகல் முழுவதும் உண்ணாமல் விரதம் இருந்து முன் இரவில் ஒரு வேளை மட்டும் உணவருந்தி சிவ சிந்தனையுடன் விரதமிருக்க வேண்டும்.
வீட்டிலேயே விரிவாக பூஜை செய்ய இயலாதவர்கள் சிவன் கோவிலுக்கு சென்று சிவனுக்கு அபிஷேகம் செய்து வேதியர்களுக்கும், அடியவர்களுக்கும் அன்னதானம் செய்யவும்.
இந்த சோமவார விரதம் இருப்பவர்கள் எனக்கு மிகவும் விருப்பமானவர்கள்.
அவர்களுக்கு என்னிடத்தில் இடம் கொடுப்பேன் என்று சிவன் கூறுகிறார்.
கார்த்திகை மாத சோமவாரங்களில் சிவாலயங்களில் சங்காபிஷேகம் செய்வார்கள்.
கார்த்திகை மாதத்தில் இறைவன் அக்னிப் பிழம்பாக இருப்பார்.
எனவே குளிர்விக்கும் பொருட்டு சங்காபிஷேகம் செய்வார்கள்.
கார்த்திகை மாதம் சூரியன் பகை வீடான விருச்சிகத்தில் சஞ்சரிப்பார்.
அப்போது சந்திரன் நீச்சத்தில் இருப்பதால் தோஷம் என்பர்.
இந்த தோஷத்தை நீக்கவே சங்காபிஷேகம் நடத்தப்படுகிறது.
- இவ்விரத முறை உமாகமேஸ்வர விரதம் என்று அழைக்கப்படுகிறது.
- நவகிரகங்கள் இவ்விரதத்தை மேற்கொண்டே வரம் பெற்றனர்.
கார்த்திகை பௌர்ணமி அன்று அம்மை மற்றும் அப்பனை நினைத்து விரதமுறை மேற்கொள்ளும்
இவ்விரத முறை உமாகமேஸ்வர விரதம் என்று அழைக்கப்படுகிறது.
கார்த்திகை ஞாயிறு விரதம்
இவ்விரத முறை கார்த்திகை முதல் ஞாயிறு அன்று தொடங்கப்பட்டு தொடர்ந்து பன்னிரெண்டு வாரங்கள் கடைப்பிடிக்கப்படுகிறது.
நவகிரகங்கள் இவ்விரதத்தை மேற்கொண்டே வரம் பெற்றனர்.
எனவே இவ்விரதமுறையை கடைப்பிடிப்பதால் நவகிரகப் பாதிப்புகள் நீங்கி அம்மை, அப்பரின் பேரருள் கிடைக்கும்.