என் மலர்
நீங்கள் தேடியது "சாமிதரிசனம்"
- செல்வமணியை உடனடியாக மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
- செல்வமணி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த 11 ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்றுவிட்டு பழனிக்கு சென்றனர்.
அப்போது, செல்வமணி என்பவர் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தபோது திடீரென மூச்சுத்திணறல், நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கினார்.
பிறகு, செல்வமணியை உடனடியாக மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில், செல்வமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்றுக் கொண்டிருந்த பக்தர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
- ஆட்சிக்கு வந்து 2 ஆண்டில் கருப்பு பணத்தை ஒழிக்கப் போவதாக கூறி பண மதிப்பிழப்பு செய்தனர்.
- தி.மு.க. தற்போது ஆட்சிக்கு வந்த பின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது.
புதுச்சேரி:
2 ஆயிரம் நோட்டு தடையால் எந்த பலனும் இல்லை என பிரேமலதா விஜயகாந்த் கூறினார். புதுவை மாநிலம் காரைக்கால் திருநள்ளாறில் உள்ள சனீஸ்வர பகவான் கோவிலில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சாமி தரிசனம் செய்தார். ஸ்ரீதார்பார ண்யேஸ்வரர், விநாயகர், முருகர், அம்பாள் உள்ளிட் ட சுவாமிகளை அவர் தரிசனம் செய்தார். இறுதியாக சனீஸ்வரர் சன்னதியில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்றார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஆட்சிக்கு வந்து 2 ஆண்டில் கருப்பு பணத்தை ஒழிக்கப் போவதாக கூறி பண மதிப்பிழப்பு செய்தனர். தற்போது 2 ஆயிரம் ரூபாய் நோட்டை திரும்ப பெறுவதாக கூறுகின்றனர். இது கண்துடைப்பு நாடகம். இதனால் எந்த பலனும் இல்லை. கர்நாட காவில் பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் ஆட்சிக்கு விஜயகாந்த் சார்பிலும், எனது சார்பிலும் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். ஆட்சிக்கு வந்தால் மதுவை ஒழிப்பதாக கூறிய தி.மு.க. தற்போது ஆட்சிக்கு வந்த பின் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது. தமிழகத்தில் அதிக இளம் விதவைகள் உள்ளதாக முன்பு கருத்து கூறிய கனிமொழி எம்.பி. தற்போது அது குறித்து பேச மறுக்கிறார். தமிழகம் முழுவதும் தி.மு.க .வினர் கள்ளச்சா ராயம் விற்பனை யில் ஈடுபட்டுள்ளனர். இது தான் திராவிடமாடலா. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது புதுவை மாநில செயலாளர் வேலு, மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கஜபதி உடன் இருந்தனர்.
- நிர்வாகம் சார்பில் தெற்கு கோபுர வாசலில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
- பெருமாள் புகைப்படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.
திருச்சி:
ஜார்க்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டு பெருமாள் புகைப்படம் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
ஜார்க்கண்ட் மாநில ஆளுநரும் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி பொறுப்பு ஆளுனருமான சி.பி.ராதாகிருஷ்ணன் திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய இன்று காலை வந்தார்.
அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் தெற்கு கோபுர வாசலில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் கோவிலில் இருக்கும் கருடாழ்வார், மூலவர், பெரிய பெருமாள், தாயார், சக்கரத்தாழ்வார், இராமானுஜர் உள்ளிட்ட சன்னதிகளுக்கு நடந்தே சென்று தரிசனம் செய்தார்.
கோவிலுக்கு வருகை தந்த ஆளுநருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் கோவில் இணை ஆணையர் மாரியப்பன் மற்றும் அர்ச்சகர்கள் மரியாதை செய்யப்பட்டு பெருமாள் புகைப்படம் நினைவு பரிசாக வழங்கப்பட்டது.