search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுபழக்கம்"

    • ரத்த உறைவு ஏற்படும் அபாயம் உள்ளது.
    • ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

    பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 25 வயதிற்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

    இது எவ்வளவு தீவிரமானது என்பதைக் காட்டுகிறது. இது பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் காணப்படும். ஆனால் தற்போது 30 மற்றும் 40 வயதுக்குட்பட்ட பலர் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

    பக்கவாதத்தில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று-மூளைக்கு (இஸ்கிமிக்) ரத்தத்தை வழங்கும் பாத்திரங்களில் ரத்தக் கட்டிகளால் ஏற்படுகிறது. பக்கவாதம் ஏற்படும் சந்தர்ப்பங்களில் இது மிகவும் பொதுவானது.

    சுமார் 85 சதவீத மக்கள் இந்த வகையைக் கொண்டுள்ளனர். 2-மூளையில் உள்ள ரத்தக் குழாய்களின் சிதைவு மற்றும் ரத்தப்போக்கு ஆகியவற்றால் ஏற்படுகிறது. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 15 சதவீதம் பேர் பாதிக்கப்படுகின்றனர்.

    உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, புகைபிடித்தல், மெல்லுதல் ஜர்தா, குட்கா, கைனி, அதிகப்படியான மது அருந்துதல், குடும்பத்தில் பக்கவாதத்தின் முந்தைய வரலாறு ஆகியவை முக்கிய ஆபத்து காரணிகள். ஒழுங்கற்ற இதயத் துடிப்பு போன்ற சில இதயப் பிரச்சனைகளும் காரணமாக இருக்கலாம்.

    அத்தகையவர்களுக்கு ரத்த உறைவு ஏற்படும் அபாயம் உள்ளது. இவை மூளையின் ரத்த நாளங்களை அடைந்து செயலிழப்பை ஏற்படுத்தும். மறுபுறம் மரபணு இயல்பும் இந்தியர்களை அச்சுறுத்துகிறது.

    மேற்கத்திய நாடுகளை விட நம் நாட்டில் பக்கவாதம் 10 ஆண்டுகளுக்கு முன்பே தாக்குகிறது.

    தற்போது பெரியவர், சிறியவர் என்ற பாகு பாடின்றி பலர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஏராளமானோர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

    30 மற்றும் 40 வயதுக்குள் முடங்கிவிட்டால் நிலைமை எப்படி இருக்கும் என்று கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது. எனவே எல்லாம் கவனமாக இருக்க வேண்டும்.

    பக்கவாதத்தின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள் உள்ளன. இவற்றை அடையாளம் கண்டுகொ ள்வது மிகவும் அவசியம்.

    சிறுமூளையில் பக்கவாதம் ஏற்படும் போது, உடல் கட்டுப்பாட்டை இழந்து தலைச்சுற்றல் ஏற்பட்டு கீழே விழலாம். உங்களுக்கு தூக்கம் வரலாம்.

    வாய் முகத்தில் பக்கவாட்டில் திரும்பும். ஒரு கையின் பலவீனம்.

    பேச்சில் வேறுபாடு, தடுமாற்றம், தடுமாற்றம். இந்த அறிகுறிகள் எதுவும் புறக்கணிக்கப்படக்கூடாது. பக்கவாதத்திற்கு சிகிச்சை அளிக்க அனைத்து வசதிகளும் உள்ள மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லுங்கள்.

    சுமார் 30 சதவீத மக்கள் பக்கவாதத்திற்குப் பிறகு முழுமையாக குணமடைகிறார்கள். மற்றவர்களுக்கு ஊனம் ஏற்படுகிறது. சரியாக நடக்க முடியாமல், பேச முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். மெல்ல மெல்ல முன்னேறி வருகிறார்கள். மறுவாழ்வு சிகிச்சையானது விரைவான மீட்புக்கு வழிவகுக்கும். இதில் பிசியோதெரபி முக்கியமானது.

    பக்கவாதம் ஏற்படும் போது உடல் வலிமை மட்டுமின்றி தன்னம்பி க்கையும் குறைகிறது. முதலில் கை கால்களை பிடித்து அவர்களை நம்ப வைக்கிறார்கள்.

    ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருப்பது முக்கியம். உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

    உணவில் உப்பைக் குறைக்கவும். நீரிழிவு நோயாளிகள் குளுக்கோஸ் அளவை கண்டிப்பாகக் கட்டுப்படுத்த வேண்டும். கார்போஹைட்ரேட் குறைக்கப்பட வேண்டும். மருந்துகள் பயன்படுத்தப்பட வேண்டும்.

    கொலஸ்ட்ராலையும் குறைக்க வேண்டும். உடற்பயிற்சியும் முக்கியமானது. புகைபிடிப்பதை நிறுத்துங்கள்.

    எடை கூடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மதுபானத்தில் ஈடுபட வேண்டாம். பழக்கம் இருந்தால் வரம்பைப் பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி மதுரையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
    • மதுபழக்கம் 100 சதவீதம் எட்டுவதுதான் திராவிட மாடலா? என கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார்.

    மதுரை

    மதுரையில் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி மது இல்லா புதிய தமிழகம் படைப்போம் என்ற புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், கள்ளுக்கடைகளை மூட வேண்டும் என தொடர்ந்து அரசை வலியு றுத்தி வருகிறோம். தமிழகத் தில் மதுபான கடைகளை மூட வேண்டும் என இப்போதைய முதல்வராக உள்ள ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் குரல் கொடுத்தனர். ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடையை மூட முதல் கை யெழுத்திடுவோம் என்று ஸ்டாலின் கூறினார். ஆனால் அதற்கு மாறாக நடக்கிறார். தமிழகத்தில் அண்மைக்காலமாக இளம் விதவைகளின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக கனி மொழி எம்.பி. கூறியிருக்கிறார்.

    டாஸ்மாக் என்பது ஒட்டுமொத்த மக்களின் எதிரியாக உள்ளது. மது அருந்துவதால் உடல் ரீதி யான பாதிப்பு ஏற்படு கிறது என்று தெரியாமல் இளை ஞர்கள், பெரியோர்கள் அனைவரும் மது அருந்து கின்றனர்.

    மது அருந்துவதால் டாஸ் மாக் மூலம் வருவாய் ஈட்டும் முயற்சியில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வரு கிறது. தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும், டாஸ்மாக் மது கடைகளை மூட வேண்டும் என்பது தொடர்பாக புதிய தமிழகம் கட்சியின் சார்பாக பொதுக்கூட்டங்களை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

    டாஸ்மாக்கை நடத்து வதா? வேண்டாமா? என்று பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். பெண்களிடம் எழுத்துப்பூர்வமான கருத்தை கேட்க வேண்டும்.மதுவினால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    தமிழகத்தில் 60 சதவீதம் பேர் மது பழக்கத்திற்கு ஆளாகின்றனர்.100 சத வீதத்தை எட்டுவது தான் திராவிட மாடலா?.

    100 சதவீதம் கடைகள் திறந்து இருந்தாலும் மது அருந்தாத நிலையை தமிழ கத்தில் ஏற்படுத்த வேண்டும். தி.மு.க. கொடுத்த வாக்குறுதி களை நிறைவேற்ற தவறி விட்டது. மதுவால் பொது மக்கள் தவறான வழிக்கு சென்று விட்டனர். மக்கள் மதிப்பை தி.மு.க. இழந்து விட்டது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காவிரியில் செல்லும் உபரிநீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும் என்று கேட்கிறோம்.
    • இந்தியாவிலேயே அதிக அளவில் மது விற்பனை நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு தான்.

    தருமபுரி:

    தருமபுரியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை இன்று அன்புமணி ராமதாஸ் எம்.பி. தொடங்கி வைத்தார். அப்போது அன்புமணி ராமதாஸ் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:

    தருமபுரி மாவட்டத்தில் அதியமான் கிளப் சார்பில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியை நடத்தி வருகின்றது. இதில் 936 அணிகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள். 14 ஆயிரம் இளைஞர்கள் விளையாடுகிறார்கள்.

    இந்த போட்டி 2 வாரம் தொடர்ந்து நடைபெறும். போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.2 லட்சம் முதல்பரிசாக உள்பட மொத்தம் ரூ.10 லட்சம் வரை பரிசு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று விளையாட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் அதிகளவில் நடைபெற வேண்டும். அப்போதுதான் விடுமுறை காலத்தில் தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்களை வேறுவிதமாக திசை திரும்பாமல் விளையாட்டு போட்டிகளில் கவனம் செலுத்துவார்கள். அதற்காக தமிழ்நாடு முழுவதும் கோடைகாலத்தில் அதிகளவில் இளைஞர்கள் பங்கேற்கும் வகையில் விளையாட்டு போட்டிகள் அரசு நடத்த வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் இளைஞர்கள் மது, கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்களுக்கு அடிமையாகி வருகின்றனர். அதேபோல இணையதளம் வழியாக ஆன்லைன் மூலமும் நிறைய விபரீத விளையாட்டுகளாலும் இளைஞர்கள் திசை மாறி செல்கின்றனர். அதனை மாற்ற இதுபோன்ற விளையாட்டு போட்டிகள் நடத்த வேண்டும்.

    தருமபுரி மாவட்டத்தில் காவிரி உபரி நீர் திட்டம் செயல்படுத்த வேண்டும் என்று பா.ம.க. சார்பில் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கையாக அரசுக்கு வைத்தோம். அவ்வப்போது இதுகுறித்து அறிவிப்புகளும் வந்தன. ஆனால் இதுவரை இந்த திட்டம் நிறைவேற்றவில்லை. இது எங்களுக்கு மிகப்பெரிய வருத்தத்தை அளிக்கிறது. காவிரியில் செல்லும் உபரிநீரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களில் நிரப்ப வேண்டும் என்று கேட்கிறோம். அது என்ன மிகபெரிய தவறா, காவிரி ஆறு கர்நாடகவில் இருந்து தமிழகத்திற்கு முதன்முதலாக தருமபுரி மாவட்டம் வழியாக தான் வருகிறது.பிறகு தான் சேலம் மாவட்டத்திற்கு செல்கிறது. ஆனால், ஆண்டுக்கு 220 டி.எம்.சி தண்ணீர் கடலில் வீணாக கலக்கிறது. இந்த தண்ணீரில் 3 டி.எம்.சி. அளவில் நீர் இருந்தாலே போதுமானது தருமபுரி மாவட்டத்தில் ஏரி, குளங்கள் நிரப்பி விடலாம். இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள குடிநீர் பிரச்சினை, விவசாயம், வேலைவாய்ப்பின்மை பிரச்சினை தீர்தது விடலாம். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பா.ம.க. சார்பிலும், எங்களது கட்சி எம்.எல்.ஏ.க்கள் சார்பிலும் பலமுறை சட்டசபையிலும் பலமுறை அழுத்த கொடுத்துள்ளோம். இரு கட்சிகளின் முதலமைச்சரையும் மாறிமாறி நாங்கள் சந்தித்து அழுத்தம் கொடுத்தும், காவிரி உபரிநீர் நிரப்பும் திட்டம் குறித்து இதுவரை அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய 2 கட்சிகளும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இதேபோல 38 மாவட்டங்களில் 15 வடமாவட்டங்கள் 10 மற்றும் 12 வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைந்து கடந்த 40 ஆண்டுகாலமாக மிகவும் பின்தங்கியுள்ளது. அதனை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்தியாவிலேயே அதிக அளவில் மது விற்பனை நடைபெறும் மாநிலம் தமிழ்நாடு தான். தமிழ்நாட்டில் டாஸ்மாக் இருந்தால் கள்ளசாராயம் இருக்காது என்று அரசு கூறிவந்தது. மரக்காணம் பகுதியில் சாராயம் குடித்து 23 பேர் இறந்த விவகாரத்தில் அரசு மெத்தனமாக செயல்படுகிறது. எனவே, மதுவால் இங்கு அதிகளவில் கற்பழிப்பு, கொள்ளை, கொலை போன்ற குற்றச்சம்பவங்கள் நடைபெறுகின்றன.

    டாஸ்மாக் கடையில் ரூ.10 பாட்டிலுக்கு அதிகமாக வாங்குகிறார்கள் என்று புகார் அதிகளவில் எழுந்துள்ளன. ஆனால், மது தயாரிக்கும் ஆலையில் இருந்து நேரடியாக மது விற்பனை நடைபெறுவதால் அதிகளவில் கணக்கில் காட்டாத வகையில் சம்பாதித்து வருகின்றனர். இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும். மேலும், மது தயாரிக்கும் கம்பெனிகளின் மின் அளவுகள் மூலம் அதில் 100 யூனிட்டுக்கு எத்தனை மதுபாட்டில்கள் தயாரிக்க முடியும் என்று கணக்கீட்டு அதன்படி விசாரணை நடத்த வேண்டும். டாஸ்மாக் மூடப்படும் என்று இரு கட்சிகளும் மாறிமாறி கூறிவந்தாலும், இதுவரை முமுமையாக மதுவிலக்கு அமல்படுத்தாமல் திராவிட கட்சிகள் ஏமாற்றி வருகின்றன. இதுதான் திராவிட மாடல் ஆட்சியா?

    கடந்த தலைமுறை மதுவால் சீரழித்துவிட்டது. அடுத்த தலைமுறையாவது மதுவால் சீரழியாமல் பாதுகாக்க பூரண மதுவிலக்கு கொண்டுரப்பட வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் அதிக அளவில் சந்து கடைகளில் மதுவிற்பனை நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    10.5 சதவீதம் இடஒதுக்கீடு வன்னியர் சமுதாயத்திற்கு வழங்க வேண்டும் என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கிய பிறகும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அதற்கான உரிய நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேட்டியில் கூறினார்.

    ×