என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "பொதுமக்கள் அவதி"
- நீர் நிலை கால்வாய் கால்நடை பயன்பாட்டிற்கும் விவசாயத்திற்கும் பயன்பட்டு வருகிறது.
- தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அடுத்த பெரிய ஓபுளாபுரம் ஊராட்சிக்கு உட்பட்டது நாகராஜகண்டிகை கிராமம். இங்கு, மாதர்பாக்கம் செல்லும் சாலையையொட்டி உள்ள முக்கிய நீர் நிலையாக ஓடை கால்வாய் உள்ளது. இந்த நீர் நிலை கால்வாய் கால்நடை பயன்பாட்டிற்கும் விவசாயத்திற்கும் பயன்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த கால்வாயில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வாத்துக்கள் செத்து மிதக்கின்றன. இதனால் சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் கடந்து செல்ல முடியாத அளவிற்கு கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.
மேலும் அப்பகுதியில் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டு உள்ளது. கால்வாயில் இவ்வளவு வாத்துக்கள் எப்படி இறந்தன என்பது மர்மமாக உள்ளது. அவை இறந்து ஒரு வாரத்திற்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது.
வாகனங்களில் கிராமம் தோறும் சென்று வாத்து வியாபாரம் செய்திடும் வியாபாரிகள் யாரோ சிலர், தங்களின் நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்து போன வாத்துக்களை மொத்தமாக கொண்டு வந்து இந்த ஓடைகால்வாயில் வீசினார்களா? அல்லது நீரோடையில் தொழிற்சாலைகளின் கழிவுகள் கலந்ததால் மேய்ச்சலுக்கு வந்த வாத்துக்கள் இறந்ததா? என்ற சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.
ஓடை கால்வாயில் செத்து மிதக்கும் அழுகிய வாத்துகளை அப்புறப்படுத்த பெரியஓபுளாபுரம் ஊராட்சியும், சுகாதார துறை அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- கவுன்சிலர், தில்ஷாத் அடிப்படைவசதிகள் நிறைவேற்றி தரவும், கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
- புதிய தரமான சாலைகளை அமைத்து தர வேண்டும்
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மாநகராட்சி 29-வது வார்டில், பாரதியார் நகர், ராஜகணபதி நகர், முல்லை நகர், சானசந்திரம், நஞ்சுண்டேஸ்வர நகர், ஆர்.கே.ரோடு ஹட்கோ, உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த வார்டு மாநகராட்சி கவுன்சிலராக, அ.தி.மு.க.வை சேர்ந்த தில்ஷாத் முஜிபுர் ரகுமான் உள்ளார்.
இந்த நிலையில், நேற்று வார்டு பகுதி மக்கள் திரளாக கவுன்சிலரிடம் சென்று, முல்லைநகர், பாரதியார் நகர் உள்ளிட்ட இடங்களில் சாலைகள் குண்டும், குழியுமாக மோசமான நிலையில் உள்ளன.
எனவே, புதிய தரமான சாலைகளை அமைத்து தர வேண்டும், மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேற வழியின்றி, மழைநீரும் கலந்து வீடுகளுக்குள் புகுந்துவிடும் நிலை இருந்து வருகிறது.
சுப்பிரமணிய சிவா நகரில் சாலை வசதி இல்லாததால், அவசரகாலத்தில் ஆம்புலன்ஸ் வண்டி கூட வந்து செல்லமுடியாத அவல நிலை இருந்து வருகிறது.
இந்த பிரச்சினைகளுக்கெல்லாம் தீர்வு காண வேண்டும் மற்றும் தெரு விளக்குகள் அமைத்து தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு கேட்டுக்கொண்டனர்.
அவர்களுக்கு பதிலளித்து பேசிய கவுன்சிலர், தில்ஷாத் முஜிபுர் ரகுமான், "வார்டு பகுதியில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்கவும் மற்றும் அடிப்படைவசதிகள் நிறைவேற்றி தரவும், கூட்டங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
மேலும், மாநகராட்சிக்கு பலமுறை கடிதங்கள் தந்துவிட்டேன். ஆனால் அதிகாரிகள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலை நீடித்தால், வார்டு மக்களை திரட்டி, மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.