என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மணப்பாறை"

    • கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள மர்ம நபர்கள் வீட்டின் பின் பகுதியில் இட்லி பொடியை தூவி உள்ளனர்.
    • மைசூர் சென்றவர்கள் வந்த பின்னரே கொள்ளை போன நகை, பணம் குறித்த முழு விபரம் தெரிய வரும்.

    மணப்பாறை:

    திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கருமலை அருகே உள்ள எஸ்.மேட்டுபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகசுந்தர ராஜா பெருமாள் (வயது 55). தொழிலதிபரான இவர் புத்தானத்தம் பகுதியில் மின்சாதன பொருட்கள் விற்பனை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இன்று அவருக்கு திருமண நாள் ஆகும். இதையடுத்து அதனை கொண்டாடுவதற்காக தனது குடும்பத்தினருடன் மைசூர் சென்று விட்டார். இந்த நிலையில் இன்று காலை வழக்கம் போல் அவரது வீட்டை சுத்தம் செய்வதற்காக அங்கு வேலை செய்யும் பெண் சென்றார்.

    அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்ட நிலையில் கிடந்தது. மேலும் வீட்டினுள் இருந்த அறையின் கதவுகளில் இருந்து பூட்டுகளும் உடைந்த நிலையில் கீழே கிடந்தன. அறையில் இருந்த பீரோவும் உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உடனே வீட்டின் உரிமையாளருக்கு தகவல் கொடுத்தார்.

    மேலும் சம்பவம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன் மற்றும் புத்தானத்தம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 70 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரொக்கப்பணம் கொள்ளை போயிருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

    வீட்டில் உள்ளவர்கள் வெளியூர் சென்றிருப்பதை நோட்டமிட்டு முன்கூட்டியே அறிந்துகொண்ட கொள்ளையர்கள் நள்ளிரவில் வந்து நகை, பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

    இந்தநிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற தடயவியல் நிபுணர்கள் கொள்ளையர்கள் விட்டுச்சென்ற தடயங்களை சேகரித்தனர். விரல் ரேகையையும் பதிவு செய்தனர். இதேபோல் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு நாய் வீட்டில் இருந்து அருகில் உள்ள தோப்பில் சென்று நின்றது.

    கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ள மர்ம நபர்கள் வீட்டின் பின் பகுதியில் இட்லி பொடியை தூவி உள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மைசூர் சென்றவர்கள் வந்த பின்னரே கொள்ளை போன நகை, பணம் குறித்த முழு விபரம் தெரிய வரும்.

    • பிரசவவலி அதிகமாகவே தனலட்சுமிக்கு ஆம்புலன்சிலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது.
    • தாய் சேய் இருவரும் நலமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    மணப்பாறை:

    மணப்பாறையை அடுத்த கே பெரியபட்டி அருகில் உள்ள தெற்கு சேர்பட்டியை சேர்ந்தவர் வெங்கடாசலம். இவரது மனைவி தனலட்சுமி. நிறைமாத கர்ப்பிணியகா இருந்த தனலட்சுமிக்கு நேற்று பிரசவ வலி ஏற்பட்டது.

    உடனே அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அதன்படி மணப்பாறையில் இருந்து 108 ஆம்புலன்ஸ் அவரது வீட்டிற்கு சென்று தனலட்சுமியை ஏற்றிக் கொண்டு மணப்பாறை நோக்கி சென்றது.

    வரும் வழியில் பிரசவவலி அதிகமாகவே தனலட்சுமிக்கு ஆம்புலன்சிலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது. தனலட்சுமிக்கு 108 ஆம்புலன்சில் அவசர கால மருத்துவ நிபுணர் நல்லழகர், ஓட்டுனர் காளிமுத்து பணியில் இருந்தனர்.

    பின்னர் தாய் சேய் இருவரும் நலமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

    • கலாமணி மின் கம்பத்திலேயே உடல் கருகி பலியானார்.
    • மாணிக்கம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார்.

    கே.கே.நகர்:

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள கல்லுப்பட்டியை சேர்ந்தவர் கலாமணி(வயது 45). அதே பகுதி அருணா பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம்(32). இவர்கள் இருவரும் திருச்சி கே.கே.நகரில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்தனர்.

    திருச்சி ஓலையூர் ரிங் ரோடு அருகே ஒரு பெட்ரோல் பங்க் அமைக்கப்பட்டு வருகிறது. இன்று மதியம் இந்த பங்குக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணி நடந்தது. இதில் கலாமணி, மாணிக்கம் ஆகிய 2 பேரும் ஈடுபட்டனர். இருவரும் மின் இணைப்பை துண்டித்துவிட்டு உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறினார்கள்.

    அப்போது மின்சாரத்தை சரியாக ஆப் செய்யவில்லை என தெரிகிறது. இதனால் மின் கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. 2 பேரும் கம்பத்தில் ஏறியதும் அவர்கள் உடலில் மின்சாரம் பாய்ந்தது. இதில் கலாமணி மின் கம்பத்திலேயே உடல் கருகி பலியானார்.

    மாணிக்கம் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உடனே அப்பகுதியில் நின்றவர்கள் திரண்டு மாணிக்கத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மின் கம்பத்திலேயே பலியான மாணிக்கம் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    உரிய பாதுகாப்பு உபகரணங்கள் இருந்தும் மின் ஊழியர்கள் 2 பேர் பலியானது சக ஊழியர்கள் மற்றும் பொது மக்களிடையே அதிர்ச்சியையும், பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    • விழா 7 நாட்கள் நடைபெறுகிறது.
    • 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் கலந்துகொள்கிறார்கள்.

    திருச்சி மாவட்டம், மணப்பாறை சிப்காட் வளாகத்தில் வருகின்ற 28- ந்தேதி முதல் பிப்-3 ந்தேதி வரை பாரத சாரண, சாரணியர் இயக்க வைரவிழா மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

    சாரணர் இயக்கத்தின் தேசிய அளவிலான வைர விழாவிற்கு தமிழக அரசு ரூ.39 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த மாதம் அரசாணை வெளியிட்டது. இந்த விழா 7 நாட்கள் நடைபெறுகிறது.

    விழாவில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

    இதற்காக பெருந்திரளணி சபை, திட்டக்குழு, தொழில்நுட்பக்குழு,செயல்பாட்டுக்குழு மற்றும் 33 துணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு இயக்குநர்களும் குழு ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


    இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சாரணர் இயக்க வைர விழா நடைபெறும் திருச்சி சிப்காட் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    * பாரத சாரணர் இயக்கத்தின் வைர விழாவை சிறப்பாக கொண்டாடுவதன் மூலம் தமிழகத்தின் பெருமையை உலகம் முழுவதும் நிலைநாட்ட ஒரு நல்ல வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது.

    * முதற்கட்டமாக 38 நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம்.

    * ஜனவரி 22-ந் தேதி, குடியரசுத் தலைவரை எங்கள் குழுவினர் சந்திக்க உள்ளனர். அதன்பிறகு அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்வாரா இல்லையா என்பது குறித்து தெரியவரும். விழா சிறப்பாக நடத்தி முடிப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம்.

    * இதற்கு முன்னதாக கர்நாடகாவில் சர்வதேச அளவிலும், ராஜஸ்தானில் தேசிய அளவிலும் பாரத சாரணர் இயக்குநரக நிகழ்வை நடத்தியுள்ளனர். தமிழ்நாட்டில் அதைவிட பிரம்மாண்டமாக நடத்த உள்ளோம்.

    * தமிழ்நாடு மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள், வெளிநாட்டினர் கலந்துகொண்டு தங்கள் நாட்டின் கலாச்சாரம், பண்பாடு போன்ற பல்வேறு நிகழ்வுகளை நிகழ்த்தி காட்ட உள்ளனர்.

    * சாரணர்கள் தங்குவதற்காக 1000 கூடாரங்கள் மற்றும் சாரணியர்கள் தங்குவதற்காக 900 கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன.

    திரிசாரண சாரணியர்கள் தங்குவதற்காக 550 கூடாரங்கள், ஒன்றிய மற்றும் அரசு அலுவலர்கள் தங்குவதற்காக 40 கூடாரங்கள், அலுவலக பணிக்கா 32 கூராடங்கள் என மொத்தம் 2,422-க்கும் மேற்பட்ட கூடாரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளியறைகள், கழிவறைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.



    ×