என் மலர்
நீங்கள் தேடியது "சென்னை மாநில கல்லூரி"
- பி.ஏ. தமிழ் பாடப்பிரிவை 9,410 பேரும், பி.எஸ்.சி. வேதியியல் பாடப்பிரிவை 8,229 பேரும், பி.ஏ. ஆங்கிலம் படிக்க 6,717 பேரும் கேட்டுள்ளனர்.
- சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலை கல்லூரியில் 7,599 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் 164 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் மொத்தம் 1 லட்சத்து 7,299 இடங்கள் உள்ளன.
இந்த இடங்களுக்கு 3 லட்சம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். மதிப்பெண்கள் அடிப்படையில் கட்-ஆப் தயாரிக்கப்பட்டு ரேங்க் பட்டியல் அந்தந்த கல்லூரிகளுக்கு வெளியிடப்பட்டது. 29-ந்தேதி முதல் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.
வழக்கம் போல இந்த வருடமும் பி.காம் (பொது), பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.எஸ்.சி. வேதியியல், பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கடுமையான தேவை ஏற்பட்டுள்ளது.
மொத்தம் உள்ள அரசு கல்லூரிகளில் சென்னை மாநில கல்லூரியில் படிக்கத்தான் 40 ஆயிரம் பேர் விண்ணப்பித்து முதலிடத்தில் உள்ளது. அதில் பி.காம் (பொது), ஆங்கில வழி முதல் ஷிப்டிற்கு 11,604 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
பி.ஏ. தமிழ் பாடப்பிரிவை 9,410 பேரும், பி.எஸ்.சி. வேதியியல் பாடப்பிரிவை 8,229 பேரும், பி.ஏ. ஆங்கிலம் படிக்க 6,717 பேரும் கேட்டுள்ளனர்.
கோவை அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப் பிரிவுக்கு 8,003 பேரும், சென்னை வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலை கல்லூரியில் 7,599 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
சென்னை ராணி மேரி அரசு கலைக்கல்லூரியில் பி.காம் (பொது) பாடப்பிரிவுக்கு 7006 மாணவிகள், ஆர்.கே.நகர் அரசு கலைக் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்க 6,887 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.
தமிழகத்தில் அதிக மாணவர்கள் விண்ணப்பித்த கல்லூரியாக மாநில கல்லூரியும் 2-வதாக கோவை அரசு கல்லூரியில் 34,743 விண்ணப்பங்களும் 3-வதாக வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரியில் 29,260 பேரும், அதனை தொடர்ந்து ராணிமேரி கல்லூரிக்கு 24,256 பேரும், திருச்சி தந்தை பெரியார் அரசு கல்லூரிக்கு 23,700 பேரும், சேலம் அரசு கல்லூரிக்கு 22,913 பேரும், சென்னை ஆர்.கே.நகர் அரசு கலை கல்லூரிக்கு 20,141 பேரும் விண்ணப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- விடுதிக் கட்டிடங்களானது, சிறப்பு மாணவர்களுக்கு தனிக் கட்டிடமாகவும், சிறப்பு மாணவியருக்கு தனிக் கட்டிடமாகவும் கட்டப்பட்டுள்ளது.
- 38 மாணவர் அறைகள் மற்றும் 32 மாணவியர் அறைகளுடன், 114 மாணவர்களும், 96 மாணவியர்களும் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை மாநிலக் கல்லூரியில் 2022-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 300-க்கும் மேற்பட்ட சிறப்பு மாணவ, மாணவியர்கள் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் இருந்து இங்கே வந்து, தங்கிப் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுக்கு தேவையான வசதிகளுடன் கூடிய விடுதிகள் இல்லாத காரணத்தால், சிறப்பு மாணவ, மாணவியர்களுக்கான சிறப்பு வசதிகளுடன் மாநிலக் கல்லூரி வளாகத்திலேயே அவர்களுக்கு விடுதி அமைத்துத் தரப்படும் என்று கூறி இருந்தார்.
அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் 21 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சிறப்பு மாணவர் மற்றும் மாணவியர் விடுதிக் கட்டிடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றைய தினம் திறந்து வைத்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், விடுதிகளை திறந்து வைத்து பார்வையிட்ட பின், அங்கு தங்கியுள்ள சிறப்பு மாணவ, மாணவியர்களிடம், அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா என்றும், வேறு என்ன வசதிகள் தேவை என்றும் வினவினர். அதற்கு அம்மாணவ, மாணவியர்கள் தேவையான வசதிகள் உள்ளது என்றும், விடுதியை அமைத்து தந்ததற்கு தங்களது நன்றியினையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டனர்.
இவ்விடுதிக் கட்டிடங்களானது, சிறப்பு மாணவர்களுக்கு தனிக் கட்டிடமாகவும், சிறப்பு மாணவியருக்கு தனிக் கட்டிடமாகவும் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடங்கள் தரை மற்றும் இரண்டு தளங்களுடன் 64,455 சதுர அடி கட்டிட பரப்பளவில் 38 மாணவர் அறைகள் மற்றும் 32 மாணவியர் அறைகளுடன், 114 மாணவர்களும், 96 மாணவியர்களும் தங்கும் வசதியுடன் கட்டப்பட்டுள்ளது.
இச்சிறப்பு மாணவ, மாணவியருக்கான விடுதிகளின் அனைத்து தளங்களிலும் தொட்டுணரக்கூடிய வழிகாட்டும் மேற்பரப்பு குறிகாட்டிகளுடன் கூடிய தரை அமைப்பு, பார்வையற்ற சிறப்பு மாணவர்களுக்கான பிரெய்லி பலகைகள், அனைத்து அறையிலும் அவசர அழைப்பு மணி பொருத்தப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, கோவி. செழியன், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி நிலைக்குழுத் தலைவர் நே. சிற்றரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.