search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெங்களூரூ"

    • கடந்த 15-ம் தேதி முதல் கர்நாடகத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது.
    • பெங்களூருவில் கடந்த 10 ஆண்டுக்கு முன் குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவி ஏற்ற ஓராண்டுக்குள் 5 உத்தரவாத திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டங்களால் கர்நாடக அரசு நிதிச்சுமையில் சிக்கித்தவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன.

    இதற்கிடையே, கடந்த 15-ம் தேதி முதல் கர்நாடகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு தலா ரூ.3 உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பெங்களூருவில் குடிநீர் கட்டணத்தை உயர்த்த கர்நாடக அரசும், பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியமும் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், குடிநீர் கட்டணத்தை உயர்த்த பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் முடிவு செய்துள்ளது. பெங்களூரு நகர வளர்ச்சித் துறையை தன்வசம் வைத்துள்ள துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார், குடிநீர் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக, துணை முதல் மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியதாவது:

    கடந்த 10 ஆண்டுகளாக பெங்களூருவில் குடிநீர் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதனால் பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் பெரும் இழப்பை சந்தித்து வருகிறது.

    புதிய திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்துக்கு எந்த வங்கியும் நிதியளிக்க முன்வருவதில்லை.

    70 சதவீதம் மின் கட்டணம் மற்றும் தொழிலாளர் செலவு. ஒவ்வொரு ஆண்டும் பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் ஒரு பெரிய இழப்பை சந்தித்து வருகிறது. இழப்பை ஈடுகட்ட மாதாந்திர குடிநீர் கட்டணத்தை உயர்த்த உள்ளோம் என தெரிவித்தார்.

    பெங்களூரு நகரில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2014-ம் ஆண்டு குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆட்டிச குறைபாடு கொண்ட இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.
    • ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடுதானே ஒழிய, நோயல்ல.

    பெங்களூரில் தனது ஆட்டிஸ குறைபாடு கொண்ட மூன்றரை மாத பெண் குழந்தையை தாய் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு போலீசில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆட்டிச குறைபாடு கொண்ட இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. ஒரு குழந்தைக்கு லேசான ஆட்டிச பாதிப்பு உள்ள நிலையில் மற்றோரு குழந்தை முழுமையாக ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

     

    பெண்ணின் கணவன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் குழந்தைகளுடன் தனியாக அப்பெண் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வியாழனன்று தனது ஆட்டிச பாதிப்பு முழுமையாக உள்ள குழந்தையை கழுத்தை நெரித்து தாய் கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்துள்ளார். இதனைதொடர்ந்து அவரிடம் போலீஸ் விசாரணை நடத்தியதில், ஆட்டிச பாதிப்புடன் தனது குழந்தையின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்ற கவலையில் அவளைக் கொல்ல முடிவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் கடந்த சில மாதங்களாகவே அதிக மன அழுத்தத்தில் தான் இருந்ததால் விரக்தியில் எனது மகளை கொலை செய்தேன் என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத் காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

    தந்தை வெளிநாட்டில் இருந்து இன்னும் வராததால் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரட்டைக் குழந்தைகளில் மற்றொரு குழந்தையின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது

    நரம்பியல் வளர்ச்சிக் கோளாறான ஆட்டிசம் என்பது மூளை, தகவல்களைப் பயன்படுத்திப் புரிந்துகொள்ளும் திறனைத் தடுக்கும் ஒரு குறைபாடு ஆகும். இந்த குறைபாடு உள்ளவர்களுக்கு பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களைச் சரியாகப் பயன்படுத்துவதில் சிரமம்.

     

    ஆனால் ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடுதானே ஒழிய, நோயல்ல. ஆட்டிசம் உள்ள குழந்தைகள் அதிக புத்திசாலிகளாக இருக்கவும் அதிக வாய்ப்புண்டு. ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்கள் அறிவியல் உட்பட பல்வேறு துறைகளில் சாதனையாளர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

     

    • தீ விபத்து ஏற்பட்டதால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
    • விமானத்தில் 175 பேர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

    பெங்களூரில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து டெல்லி விமான நிலையத்திற்கு திருப்பிவிடப்பட்டது.

    விமானத்தில் ஏர் கண்டிஷனிங் யூனிட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு, இன்று மாலை 6.40 மணியளவில் விமானம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக தரையிறக்கப்பட்டது.

    ஏஐ 807 என்ற விமானம் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியது. விமானத்தில் 175 பேர் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளன.

    இதைதொடர்ந்து, பயணிகளை பெங்களூரு செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக விமான நிறுவன அதிகாரி தெரிவித்தார்.

    • கனமழையால் பெங்களூரு சம்பகி சாலையில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது.
    • நகராட்சி நிர்வாகத்தை கடுமையாக சாடிய கடை உரிமையாளர், பருவமழை நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

    கர்நாடக மாநிலம், பெங்களூருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை வெளுத்து வாங்கியது. இதில், பெங்களூருவில் உள்ள சாலைகளில் மழை நீர் சூழ்ந்தது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    கனமழையால் பெங்களூரு சம்பகி சாலையில் மழைநீர் கரைபுரண்டு ஓடியது. இதில், அங்கிருந்த நகைக்கடை ஒன்றில் புகுந்த மழைநீர் அங்கிருந்த தங்க நகைகள், மரச்சாமான்கள் உள்ளிட்ட பொருட்களை அடித்து சென்றன. இதனால், நகைக்கடை உரிமையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

    மேலும், கடையில் இருந்த சுமார் 2.50 கோடி மதிப்புள்ள தங்க நகைகளும், மரச்சாமான்களும் அடித்து செல்லப்பட்டதாக கடை உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், நகராட்சி நிர்வாகத்தை கடுமையாக சாடிய கடை உரிமையாளர், பருவமழை நிலைமை குறித்து கவலை தெரிவித்துள்ளார்.

    ×