search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நரமாமிசம்"

    • 2017 ஆம் ஆண்டு 63 வயதான தனது தாயை அவரது மகன் குச்சொரவி கொலை செய்தார்.
    • கொலை செய்ததோடு மட்டுமில்லாமல் இறந்த தாயின் உடல் பாகங்களை வெட்டி சாப்பிட்டுள்ளான்.

    தனது தாயைக் கொன்று, அவரது உடல் உறுப்புகளை சமைத்து சாப்பிட்ட மகனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது.

    2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 ஆம் தேதி 63 வயதான தனது தாயை அவரது மகன் குச்சொரவி கொலை செய்தார். கொலை செய்ததோடு மட்டுமில்லாமல் இறந்த தாயின் உடல் பாகங்களை வெட்டி சாப்பிட்டுள்ளான். பின்னர் தாயின் இதயத்தையும் விலா எலும்புகளையும் எண்ணையில் வறுத்து சாப்பிட முயன்ற போது போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த குற்றத்திற்காக 2021 ஆம் ஆண்டு குச்சொரவிக்கு கோலாப்பூர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் குச்சொரவி மேல்முறையீடு செய்தார்.

    இந்த வழக்கு மும்பை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, "நாங்கள் இதைவிட கொடூரமான மற்றும் காட்டுமிராண்டித்தனமான வழக்கை சந்தித்ததில்லை. குச்சொரவிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால், அவர் மற்ற கைதிகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பார். இவரை திருத்துவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை" என்று நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.

    இறுதியாக கோலாப்பூர் நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய குச்சொரவிக்கு 30 நாட்கள் அவகாசம் உள்ளது.

    • டெக்சாஸ் மாகாணத்தில் 18 வயது இளைஞர் தனது குடும்பத்தினரை கொன்றதற்காக கைது செய்யப்பட்டார்.
    • விசாரணையில், அவர்கள் நரமாமிசம் உண்பவர்கள் என்பதால் பெற்றோர், உடன்பிறந்தவர்களைக் கொன்றேன் என்றார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 18 வயது இளைஞர் ஒருவர் தனது சொந்த குடும்பத்தினரை கொன்றதற்காக கைது செய்யப்பட்டார். சீசர் ஒலால்டே என்ற அந்த இளைஞர் தனது பெற்றோர் மற்றும் உடன்பிறந்தோரை கொடூரமான முறையில் கொலை செய்துள்ளான் என போலீசார் தெரிவித்தனர்.

    கடந்த செவ்வாயன்று ஒரு நபர் தற்கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அங்கிருந்த சீசர் உள்ளே பலர் இறந்து கிடப்பதாக கூறினார். இதனால் சந்தேகத்தின் பேரில் போலீசார் அவரை கைதுசெய்தனர்.

    சீசரின் பெற்றோரான ரூபன் ஒலால்டே, ஐடா கார்சியா, மூத்த சகோதரி லிஸ்பெட் ஒலால்டே மற்றும் இளைய சகோதரர் ஆலிவர் ஒலால்டே ஆகியோரின் உடல்கள் குளியலறையில் மீட்கப்பட்டன. வீட்டின் பல்வேறு இடங்களில் இருந்து அவர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று, பின்னர் கழிவறைக்கு இழுத்துச் சென்றிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில், தனது குடும்பத்தினர் நரமாமிசம் உண்பவர்கள். அவர்கள் தன்னை சாப்பிட திட்டமிட்டதால் அவர்களை நான் கொன்றேன் என தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×