என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண் ரசிகை"
- பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது.
- 4 போட்டி கொண்ட டி20 தொடரில் 2-0 என இங்கிலாந்திடம் பரிதாபமாக தோற்றது.
லண்டன்:
பாகிஸ்தான் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என இங்கிலாந்திடம் பரிதாபமாக தோற்றது.
4-வது டி20 போட்டி நடைபெற்ற நேற்று முன்தினம் பாகிஸ்தான் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஷதாப் கானை பெண் ரசிகை ஒருவர் சந்தித்து அவரது பார்ம் குறித்து வெளிப்படையாக கேள்வி எழுப்பினார்.
இதுதொடர்பான உரையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரின்போது ஷதாப் கான் ரசிகர்களுடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்தார். அப்போது ஒரு பெண் ரசிகர், ஷதாப் கானிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினார். நீங்கள் ஏன் இவ்வளவு சிக்சர்களை விட்டுக் கொடுக்கிறீர்கள்? நீங்கள் மீண்டும் பார்மிற்கு திரும்ப வேண்டும். அதிக விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என வற்புறுத்தினார்.
பெண் ரசிகையின் கேள்விக்கு ஷதாப் கான் மௌனமாக புன்னகைத்தார். இந்த உரையாடல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் விரைவாக பரவியது.
- போலீஸ்காரர் குடிபோதையில் இருந்ததாகவும், அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் சிலர் கூறுகின்றனர்.
- மேலும் சிலர் போலீசாருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அகமதாபாத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று நடைபெற இருந்தது. ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது. இன்று மீண்டும் ஆட்டம் நடக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மழை பெய்து கொண்டிருந்த போது ரசிகர்கள் மைதானத்தில் நீண்ட நேரமாக காத்திருந்தனர். அப்போது பெண் ரசிகை ஒருவர் தனக்கு அருகில் இருந்த போலீஸ் அதிகாரி ஒருவரை தாக்கினார்.
அவர் கீழே விழுந்து மீண்டும் எழுந்தபோதும் அந்த பெண் மறுபடியும் தாக்கினார். ஆனால் அந்த அதிகாரி எதிர்த்து ஏதும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்தார். இந்த சண்டை ஏன் நடந்தது என்பது குறித்த சரியான காரணம் தெரியவில்லை. ஆனால் சமூக வலைதளங்களில் இது குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.
Shameless fanbase. #IPL2023 #GTvCSK pic.twitter.com/RVjSkYKppp
— Mayur (@133_AT_Hobart) May 28, 2023
போலீஸ்காரர் குடிபோதையில் இருந்ததாகவும், அந்த பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் சிலர் கூறுகின்றனர். போலீசாரிடம் உடலை சுத்தப்படுத்தியதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சிலர் போலீசாருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்