search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்காலம்"

    • பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆட்டிச குறைபாடு கொண்ட இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.
    • ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடுதானே ஒழிய, நோயல்ல.

    பெங்களூரில் தனது ஆட்டிஸ குறைபாடு கொண்ட மூன்றரை மாத பெண் குழந்தையை தாய் கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு போலீசில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு ஆட்டிச குறைபாடு கொண்ட இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. ஒரு குழந்தைக்கு லேசான ஆட்டிச பாதிப்பு உள்ள நிலையில் மற்றோரு குழந்தை முழுமையாக ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

     

    பெண்ணின் கணவன் வெளிநாட்டில் வேலை செய்து வரும் நிலையில் குழந்தைகளுடன் தனியாக அப்பெண் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த வியாழனன்று தனது ஆட்டிச பாதிப்பு முழுமையாக உள்ள குழந்தையை கழுத்தை நெரித்து தாய் கொலை செய்துவிட்டு போலீசில் சரணடைந்துள்ளார். இதனைதொடர்ந்து அவரிடம் போலீஸ் விசாரணை நடத்தியதில், ஆட்டிச பாதிப்புடன் தனது குழந்தையின் எதிர்காலம் எவ்வாறு இருக்கும் என்ற கவலையில் அவளைக் கொல்ல முடிவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் கடந்த சில மாதங்களாகவே அதிக மன அழுத்தத்தில் தான் இருந்ததால் விரக்தியில் எனது மகளை கொலை செய்தேன் என்றும் வாக்குமூலம் அளித்துள்ளார். அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத் காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

    தந்தை வெளிநாட்டில் இருந்து இன்னும் வராததால் கொலை செய்யப்பட்ட சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரட்டைக் குழந்தைகளில் மற்றொரு குழந்தையின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது

    நரம்பியல் வளர்ச்சிக் கோளாறான ஆட்டிசம் என்பது மூளை, தகவல்களைப் பயன்படுத்திப் புரிந்துகொள்ளும் திறனைத் தடுக்கும் ஒரு குறைபாடு ஆகும். இந்த குறைபாடு உள்ளவர்களுக்கு பார்த்தல், கேட்டல் என உணரும் விஷயங்களைச் சரியாகப் பயன்படுத்துவதில் சிரமம்.

     

    ஆனால் ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடுதானே ஒழிய, நோயல்ல. ஆட்டிசம் உள்ள குழந்தைகள் அதிக புத்திசாலிகளாக இருக்கவும் அதிக வாய்ப்புண்டு. ஆட்டிசம் குறைபாடு உள்ளவர்கள் அறிவியல் உட்பட பல்வேறு துறைகளில் சாதனையாளர்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

     

    • குழந்தைகளின் எதிர்காலம் பயனுள்ளதாக இருக்கும் வகையில் பணி இருக்க வேண்டும் என்று கலெக்டர் கூறினார்.
    • முதுநிலை விரிவுரையாளர் டேவிட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் முகமது சதக் தஸ்தஹீர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி யில் பள்ளிக்கல்வி துறை யின் மூலம் 'எண்ணும் எழுத்தும்" திட்டத்திற்கு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான முதற்கட்ட பயிற்சி முகாம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனை கலெக்டர் விஷ்ணு சந்திரன் தொடங்கி வைத்து பேசியதாவது:-

    'எண்ணும் எழுத்தும்' என்னும் மாபெரும் திட்டம் கடந்தாண்டு தொடங்கப் பட்டு 1-ம் முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கின்ற குழந்தைகளுக்கு அவர்க ளின் மனநிலைக்கேற்ப நாடக வடிவில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் வாயி லாகவும், நடன வடிவிலும், கருத்தரங்கம் மூலமாக என பல்வேறு நிலைகளில் குழந்தைகள் எளிதாக கல்வியை கற்றுக் கொள்ளும் வகையில் இத்திட்டம் உள்ளது. அதற்காக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறு வனம் மூலம் வழங்கப்பட்டு உள்ளது. இத்தகைய திட்டம் குழந்தைக ளிடமும், பெற்றோர்களி டமும் நல்ல வரவேற்பை பெற்றதுடன், ஆரம்ப கல்வி யில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க தொடங்கியது.

    அதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு நடப்பாண்டிற்கு 4-ம் வகுப்பு மற்றும் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு இத்திட்டத்தை விரிவுப்ப டுத்தி எளிய முறையில் மாணவ, மாணவிகளின் மனநிலைக்கேற்ப கல்வி கற்பிக்க இத்திட்டம் தொடங்கி உள்ளது.

    இதன் நோக்கம் சுற்றுச்சூழலை அறிந்து குழந்தைகளுக்கு அச்சத்தை போக்கி எதிர்காலத்தின் நிலையை உணர்ந்து கல்வியை கற்பதற்கு ஏது வாக உங்களுடைய பணி இருந்திட வேண்டும். நீங்கள் மேற்கொள்ளும் இந்த பணியால் அந்த குழந்தைகளின் எதிர்காலம் பயனுள்ளதாக இருக்கும். அதற்கேற்ப உங்கள் பணி அமைந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலு முத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், சாந்தி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதுநிலை விரிவுரையாளர் டேவிட் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×