search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருச்செங்கோடு"

    • வட இமயம் தொடங்கி தென் குமரி வரை உள்ள சிவத்தலங்கள் 1008.
    • செந்நிறம் கொண்ட மலை என்பதால் செங்கோடு என அழைக்கப்பட்டது.

    காலத்தால் அளவிட முடியாத பழம் பெருமையும், புராண வரலாறும் கொண்டது திருச்செங்கோடு என்ற திருக்கொடி மாட செங்குன்றூர். வட இமயம் தொடங்கி தென் குமரி வரை உள்ள சிவத்தலங்கள் 1008. இதில் பாடல் பெற்ற தலங்கள் என்னும் புகழ் பெற்றவை 274 கோவில்கள்.

    இதில் தமிழகத்தில் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் திருப்புக்கொளியூர் என்னும் அவினாசி, திருமுருகன் பூண்டி, திருநனா என்றழைக்கப்படும் பவானி, திருக்கொடி மாடச் செங்குன்றூர் என்றழைக்கப்படும் திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர். திருவெஞ்சாமக்கூடல், திருப்பாண்டி, கொடுமுடி, திருக்கருவூரணி நிலை என்னும் கரூர் ஆகிய 7 தலங்கள் பாடல் பெற்ற தலங்கள் ஆகும்.

    செந்நிறம் கொண்ட மலை என்பதால் செங்கோடு என அழைக்கப்பட்டது என்றாலும், செந்நிறமாக திகழ புராணம் சொல்லும் காரணம் என்ன தெரியுமா?

    திரிபுரம் எரிக்க புறப்பட்ட சிவபெருமான் மேரு மலையை வில்லாக்கி, வாசுகி என்னும் பாம்மை நாணாக்கி, அக்கினி தேவனை அம்பு முனையில் பொருத்தி, வாயுவை விசையாக்கி எடுத்து சென்றார். எல்லாம் சிவம் என்றிருக்க நம் துணையின்றி சிவனால் முப்புரத்தை எரிக்க முடியாது என மேரு, வாசுகி, அக்கினி, வாயு ஆகியோர் ஆணவம் கொண்டனர்.

    இதனை உணர்ந்த எம் பெருமான் இவர்கள் துணையின்றி தம் சிரிப்பாலேயே முப்புரத்தையும் எரித்து அழித்தார். இந்த நிலையில் வாயுவுக்கும் மும்மூர்த்திகளின் ஆபரணமாக திகழும் ஆதிசேஷனுக்கும் தங்களுக்குள் யார் பெரியவர் என்ற பெரும் போட்டி, சண்டை எழ இதில் தலையிட்ட தேவர்கள் மேரு மலையை வாயு தன் பலத்தால் தகர்க்க வேண்டும்.

    ஆதிசேஷன் தன் பலத்தாலும் படத்தாலும் அதனை தடுக்க வேண்டும் எனவும் அவ்வாறு போட்டியிட்டு வெல்பவர்களே பலசாலி என்று கூறினார்கள். அதன்படி மேரு மலையை ஆதிசேஷன் பற்றிக் கொள்ள,வாயுதேவன் தன் பலம் முழுவதையும் பிரயோகித்தும் வெற்றி காண முடியவில்லை.

    தோல்வியில் ஆத்திரம் கொண்ட வாயுதேவன் தன் சக்தியால் ஈரேழு லோகங்களிலும் காற்றே இல்லாமல் செய்கிறான். சுவாசிக்க காற்று இல்லாமல் உயிரினங்களும், பயிரினங்களும் மயங்கி விழ பயந்து போன தேவர்கள் வாயுவிடம் மன்றாடினார்கள்.

    வாயுதேவன் மறுக்கவே தெய்வ குணம் கொண்ட ஆதிசேஷனை போட்டியில் விட்டுக் கொடுக்கும்படி வேண்டினார்கள். மனமிறங்கிய ஆதிசேஷன் தன் பிடியை தளர்த்த வாயு தன் பலத்தால் மோதி ஆதிசேஷனின் தலையையும், மேருமலையின் சில பாகங்களையும் பிய்த்து கொண்டு போகும் படி செய்தார்.

    இதில் ஆதிசேஷனின் ஐந்து தலைகளும், மேருவின் ஐந்து மலைகளும் பெயர்ந்து விழுந்தது. ஆதிசேஷனின் நடுநாயகமான தலையும், அதில் இருந்து பீறிட்ட ரத்தம் தோய்ந்து விழுந்ததால் செங்குன்றூர் எனவும், பின்னர் திருக்கொடி மாடச்செங்குன்றூர் எனவும் வழங்கப்பட்டு காலப் போக்கில் மருவி திருச்செங்கோடானது. 

    • குறையற்ற இல்லறத்தையும், செல்வங்களையும் பெறலாம்
    • மூலவருக்கு முன்னால் மரகத லிங்கம், உள்ளது.

    தீபாவளியை யொட்டி வரக்கூடிய கேதார கவுரி விரதத்துக்கும், அர்த்தநாரீஸ்வரருக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஐப்பசி மாத கிருஷ்ணபட்சம் - தேய்பிறை சதுர்த்தசியில், பார்வதி தேவியை எண்ணி நோன்பிருந்தால் நல்ல சுணவனையும். திருமணமாகி இருந்தால் கணவனின் அன்பையும், குறையற்ற இல்லறத்தையும், செல்வங்களையும் பெறலாம் என்பதற்காகத் தொடங்கியதே கேதார கவுரி விரதமாகும்.

    இந்த விரதத்தை முதலில் கடைப்பிடித்தவள் உமையவளே. விரதப் பலனாக ஐயனிடமிருந்து பிரிக்கப்பட முடியாத வகையில், அவரின் இட பாகத்தைப் பெற்று பாகம்பிரியாள் என்று பெயர் பெற்றாள். இங்ஙனம் ஆனொரு பாதியும், பெண்ணொரு பாதியுமாக அகிலத்தின் ஆதார உண்மையை வெளிப்படுத்தும் அர்த்தநாரீஸ்வர வடிவம் கொண்டு ஆண் இருக்குமிடம் திருச்செங்கோடு.

    இங்குள்ள அர்த்தநாரீஸ்வரர் திருமேனி - வெள்ளை பாஷாணத்தால் ஆன திருவருவம். இடப்பாதியில் பெண்மையின் நளினமும், வலப்பாதியில் ஆண்மையின் கம்பீரமும் இழையோடும். கண்களில்கூட, வலக்கண்ணுக்கும் இடக்கண்ணுக்கும் துல்லியமான வித்தியாசம் தெரிகிறது.

    மூலவர் திருமேனிக்குக் கீழே நீர் கரந்து கொண்டே இருக்கிறது. இதையே தீர்த்த பிரசாதமாக எல்லோருக்கும் தருகிறார்கள். அர்த்தநாரீஸ்வரர் மூலவருக்கு முன்னால் மரகத லிங்கம், உள்ளது. தவசீலரான பிருங்கி மகரிஷியின் உருவமும் உள்ளது. தீபாவளியை யொட்டி கேதார கவுரி நோன்பிருக்கும் பெண்மணிகள் அவசியம் திருச்செங்கோடு சென்று அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வாருங்கள். உங்களின் விரத பலன் பன்மடங்காகக் கிடைக்கும்.

    • ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் நடுப்பாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • போலீசார் விரைந்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று 3 பேரின் பிணத்தை மீட்டனர்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள வையப்பமலை நடுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் நடேசன் (வயது 65), தச்சுத்தொழிலாளி. இவரது மனைவி சிந்தாமணி (52). இவர்களுக்கு சசிரேகா என்ற மகள், ஜெயப்பிரகாஷ், நந்தகுமார், கோபி ஆகிய 3 மகன்கள் இருந்தனர்.

    இதில் சசிரேகா, ஜெயபிரகாஷ் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். மகன் கோபி திண்டுக்கல்லில் தச்சுவேலை செய்து வருகிறார். மற்றொரு மகன் நந்தகுமார் (35) பெற்றோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் நடேசனுக்கும், நந்தகுமாருக்கும் சர்க்கரை நோய் பாதிப்பு ஏற்பட்டது.

    இதற்காக அவர்கள் பல இடங்களில் வைத்தியம் பார்த்தனர். நடேசனுக்கு தச்சு தொழிலில் போதிய வருமானம் இல்லாததால், கடன் வாங்கி சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டது. பலரிடம் அவர் கடன் வாங்கி இருந்தார்.

    இதனிடையே கடன் கொடுத்தவர்கள் நடேசனிடம் பணத்தை கேட்டு நெருக்கடி கொடுத்தனர். ஏற்கனவே போதிய வருமானம் இல்லாமலும், நோய் பாதிப்பாலும் அவதிப்பட்ட நிலைியல் கடன் நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். விரக்தியில் இருந்த அவர் தனது மனைவி, மகனிடமும் இதை கூறியுள்ளார். இதனால் அவர்கள் குடும்பத்தோடு தற்கொலை செய்ய முடிவெடுத்ததாக தெரிகிறது.

    இந்த நிலையில் நேற்றிரவு அவர்கள் வீட்டை பூட்டிக்கொண்டு தூங்கச் சென்றனர். இன்று அதிகாலை வெகுநேரமாகியும் அவர்களது வீட்டின் கதவு திறக்கப்படாமல் பூட்டியே கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் வீட்டின் உள்ளே பார்த்தனர்.

    அங்கு நடேசன், சிந்தாமணி, நந்தகுமார் ஆகிய 3 பேரும் தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி எலச்சிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து, கதவை உடைத்து உள்ளே சென்று 3 பேரின் பிணத்தை மீட்டனர்.

    பின்பு பிரேத பரிசோதனைக்காக உடல்களை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 3 பேரின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் வையப்பமலை நடுப்பாளையம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×