என் மலர்
நீங்கள் தேடியது "உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப்"
- ஐசிசி தொடர்களில் இந்திய அணி நாக்அவுட் சுற்றில் தடுமாற்றம் அடைவது நீடிக்கிறது
- அதிக அழுத்தம் தருகின்ற சூழல் வரும் பொழுது ஒருவிதமான இறுக்கமான மனநிலைக்கு சென்று விடுகிறார்கள்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 2013-ம் வருடம் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்றபின் பல தொடர்களில் இந்திய அணி, நாக் அவுட் சுற்றுடன் வெளியேறியுள்ளது. இதனால் தற்பொழுது நடைபெறும் போட்டி, இந்தியாவிற்கு இழந்த நற்பெயரை மீட்கும் ஒரு அரிய வாய்ப்பாக எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்த போட்டி, உலகெங்குமுள்ள கிரிக்கெட் ரசிகர்களால் கூர்ந்து கவனிக்கப்படுகிறது.
ஆனால் தற்போதைய இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவிக்க, பிறகு பேட்டிங் செய்து வரும் இந்தியா சொற்ப ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. பந்து வீச்சிலும், பேட்டிங்கிலும் இந்தியாவின் ஆட்டம் எதிர்பார்த்ததை விட மோசமாக உள்ளதால் ரசிகர்களும் விமர்சகர்களும் பல விமர்சன கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளரும், இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் பங்கேற்று விளையாடிய சாதனையாளருமான ஹர்பஜன் சிங் இந்த போட்டி குறித்து கூறியதாவது:-
ஒரு உலகக் கோப்பை போட்டியில் விளையாட தேவைப்படும் மன உறுதியும், தைரியமும் இந்திய அணி வெளிப்படுத்த தவறி விட்டது. நான்கு வேகப்பந்து வீச்சாளர்களுடன் விளையாடச் சென்றதும் சற்று அதீதமானது. ஒருவேளை இந்திய கிரிக்கெட் அணியின் நிர்வாகம், அணித்தேர்வுக்கு முன் முதல் நாள் சூழ்நிலையை கணக்கில் கொண்டு தெர்வு செய்திருக்கலாம்.
நம்முடைய வீரர்களின் திறனில் குறை இல்லை. ஆனால், அவர்கள் இன்னும் அதிகளவில் பெரிய கோப்பைகளுக்கான விளையாட்டில் பயமோ, கவலையோ இன்றி ஆடப் பழக வேண்டும். இப்பொழுது வீரர்கள், அதிக அழுத்தம் தருகின்ற சூழல் வரும் பொழுது ஒருவிதமான இறுக்கமான மனநிலைக்கு சென்று விடுகிறார்கள். அவர்களால் இயல்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்த இயலவில்லை. ஆட்டத்தின் முடிவை பற்றி கவலைப்படாமல் உற்சாகமாக விளையாட வீரர்கள் பழகிக் கொள்ள வேண்டும்.
வீரர்களுக்கு அவர்களின் இயல்பான விளையாட்டை ஆடுவதற்கு ஊக்கமளிக்கப் பட வேண்டும். அணி தோல்வியடைந்தால், தாம் உடனே வெளியேற்றப்படுவோம் என்ற வகையில் அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டால் அவர்களின் தன்னம்பிக்கை தகர்ந்து விடும். மாறாக அவர்கள் தங்களின் திறமையை முழுதும் வெளிக்கொண்டு வந்து சிறப்பான ஆட்டத்தை காண்பித்தால் போதும் என ஊக்குவிக்கப்பட வேண்டும்
இவ்வாறு ஹர்பஜன் தெரிவித்தார்.
இரண்டாவது இன்னிங்சில் இந்தியா சிறப்பாக விளையாடும் என அனைவரும் நம்புகின்றனர்.
- கே.எஸ். பரத் இன்று ரன்ஏதும் எடுக்காமல் அவுட்
- கம்மின்ஸ் பந்தில பவுண்டரி, சிக்ஸ் அடித்து அரைசதம் கடந்தார்
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 38 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் எடுத்திருந்தது. ரகானே 29 ரன்களுடனும், கே.எஸ். பரத் 5 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கே.எஸ். பரத் ரன்ஏதும் எடுக்காமல் நேற்றைய ரன்னுடன் போலண்ட் பந்து வீச்சில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து ஷர்துல் தாகூர் களம் இறங்கினார். ஷர்துல் தாகூர் உடலில் அடி வாங்கினாலும் ஆட்டமிழக்காமல் தடுத்து ஆடினார்.
மறுமுனையில் ரகானே நம்பிக்கையுடன் விளையாடினார். 46-வது ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரகானே, கடைசி பந்தில் சிக்சர் அடித்து அரரைசதம் அடித்தார்.
92 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் கடந்து விளையாடி வருகிறார். தற்போது இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்துள்ளது. 270 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது.
- இந்திய வீரர்கள் போட்டி கட்டணத்தில் இருந்து 100 சதவீதம் அபராதம் செலுத்த வேண்டும்
- ஆஸ்திரேலிய வீரர்கள் 80 சதவீதம் அபராதமாக செலுத்த வேண்டும்
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த 7-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன்களும், இந்தியா 296 ரன்களும் சேர்த்தன. 2-வது இன்னிங்சில் ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இந்தியா 234 ரன்னில் சுருண்டது.
இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் சுப்மான் கில் ஆட்டமிழந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. கேமரூன் க்ரீன் அவரது கேட்சை பிடித்தபோது பந்து தரையில் பட்டதுபோல் இருந்தது. இதனால் 3-வது நடுவரை நெட்டிசன்கள் திட்டி தீர்த்தனர். சுப்மான் கில்லும் சமூக வலைத்தளத்தில் தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.
இந்த போட்டியில் இரண்டு அணிகளும் குறிப்பிட்ட நேரத்திற்குள் நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களை வீசி முடிக்கவில்லை. இதனால் இரு அணிகளின் அனைத்து வீரர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்திய வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 100 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய வீரர்களுக்கு 80 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சுப்மான் கில் ஐசிசி-யின் நன்னடத்தை விதிமுறையை மீறியதாக அவருக்கு 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக சுப்மான் கில்லுக்கு 115 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா 5 ஓவர்களும், ஆஸ்திரேலியா 4 ஓவர்களும் குறைவாக வீசியிருந்தன. இதனால் அபராதத்தை எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
- வங்கதேசக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
- டெஸ்டில் தோல்வி அடைந்த வங்கதேசம் புள்ளிப் பட்டியலில் சரிவை சந்தித்தது.
துபாய்:
இந்தியா, வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் தோல்வி அடைந்த வங்கதேசம் 6-வது இடத்திற்கு சரிந்தது.
இதில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 7 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி என 71.67 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது.
இந்தப் பட்டியலில் ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், நியூசிலாந்து 3-வது இடத்திலும் இடத்திலும் உள்ளது. இலங்கை 4வது இடத்திலும், இங்கிலாந்து 5வது இடத்திலும் உள்ளது.
தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.
- நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை வெற்றி பெற்றது.
- டெஸ்டில் தோல்வி அடைந்த நியூசிலாந்து புள்ளிப் பட்டியலில் சரிவை சந்தித்தது.
துபாய்:
இலங்கை, நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலேவில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி 63 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.
இதில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 7 போட்டிகளில் வெற்றி, 2 போட்டிகளில் தோல்வி என 71.67 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியா 2-வது இடத்தில் நீடிக்கிறது.
நியூசிலாந்துக்கு எதிராக வெற்றி பெற்ற இலங்கை ஒரு இடம் உயர்ந்து 3-வது இடத்திற்கு முன்னேறியது. தோல்வி அடைந்த நியூசிலாந்து ஒரு இடம் சரிந்து 4வது இடத்திற்கு சென்றது.
இங்கிலாந்து 5-வது இடத்திலும், வங்கதேசம் 6-வது இடத்திலும் உள்ளன. தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.
- இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வென்றது.
- இதனால் நியூசிலாந்து அணி புள்ளிப்பட்டியலில் சிறிது முன்னேற்றம் கண்டது.
துபாய்:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.
இதில் 12 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 8 போட்டிகளில் வெற்றி, 3 போட்டிகளில் தோல்வி என 68.06 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. ஆஸ்திரேலியா 2-வது இடத்திலும், இலங்கை 3-வது இடத்திலும் நீடிக்கிறது.
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் வென்றதை தொடர்ந்து நியூசிலாந்து 6வது இடத்திலிருந்து 4வது இடத்துக்கு முன்னேறியது.
இங்கிலாந்து 5-வது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா 6-வது இடத்திலும் உள்ளன. வங்கதேசம், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.
- இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 3-0 என கைப்பற்றியது.
- இதனால் இந்தியா புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை இழந்துள்ளது.
துபாய்:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மும்பையில் நடந்தது. இதில் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.
இந்நிலையில், இந்த டெஸ்ட் தொடருக்கு பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது.
இந்தியா 3 போட்டியிலும் தோற்றதால், ஆஸ்திரேலியா முதல் இடத்துக்கு முன்னேறியது.
இதில் 14 போட்டிகளில் விளையாடியுள்ள இந்தியா 8 போட்டிகளில் வெற்றி, 5 போட்டிகளில் தோல்வி, ஒரு டிரா என 58.33 சதவீதத்துடன் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது.
இலங்கை 3-வது இடத்திலும் நீடிக்கிறது. இந்தியாவுக்கு எதிராக வெற்றி பெற்ற நியூசிலாந்து (54.55 சதவீதம்) என 4-வது இடத்தில் உள்ளது.
தென் ஆப்பிரிக்கா 5வது இடத்திலும், இங்கிலாந்து 6-வது இடத்திலும் உள்ளன.
பாகிஸ்தான், வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் ஆகியவை 7, 8, 9-ம் இடத்தில் உள்ளன.
- இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து அபார வெற்றி பெற்றது.
- நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து கைப்பற்றியது.
துபாய்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடியது. முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை ஏற்கனவே கைப்பற்றியது.
இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டியில் அபாரமாக செயல்பட்ட நியூசிலாந்து 423 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து வெற்றி பெற்றதை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது. இந்தப் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா (63.33 சதவீதம்), ஆஸ்திரேலியா (60.71 சதவீதம்), இந்தியா (57.29 சதவீதம்) ஆகிய அணிகள் முதல் 3 இடங்களில் தொடர்கின்றன.
இங்கிலாந்துக்கு எதிரான வெற்றியின் மூலம் 6-வது இடத்தில் இருந்த நியூசிலாந்து (48.21 சதவீதம்) 4-ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இலங்கை 5-ம் இடத்திலும், இங்கிலாந்து 6-ம் இடத்திலும் உள்ளன.
தொடர்ந்து 7 முதல் 9 இடங்களில் முறையே பாகிஸ்தான், வங்காளதேசம், வெஸ்ட் இண்டீஸ் அணிகள் உள்ளன.
- மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வருகிறது.
- தொடரானது சமனில் முடியும் பட்சத்தில் இலங்கை அணியானது ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 358 ரன்கள் குவித்திருந்தது. நிதிஷ் 105 ரன்னிலும் சிராஜ் 2 ரன்னிலும் களத்தில் உள்ளனர். இன்னும் இந்திய அணி 116 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் ஆஸ்திரேலிய அணி வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கும் அல்லது போட்டி டிரா ஆகும் பட்சத்தில் உள்ளது.
இந்த தொடரில் இந்திய அணி 3-வது மற்றும் 4-வது போட்டிகளில் வெற்றிகளை பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். ஆனால் முதல் மூன்று போட்டிகளின் முடிவில் ஒரு வெற்றியை மட்டுமே இந்திய அணி பெற்றுள்ளது. இதன் காரணமாக மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்திய அணி 4-வது போட்டியில் தோல்வியடைந்து 5-வது போட்டியில் வெற்றி பெற்றால் இந்த தொடரானது இரண்டுக்கு இரண்டு கணக்கில் சமநிலையில் முடியும். அப்படி நடந்தால் இந்திய அணியின் வெற்றி சதவீதம் 55.26 ஆக இருக்கும்.
ஒருவேளை இரண்டு போட்டியிலும் தோல்வியை சந்தித்தால் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்ல தகுதி பெறாது. இரண்டிலும் வெற்றி பெற்றால் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றுவிடும்.
இந்த தொடரானது 2-2 என்ற கணக்கில் சமனில் முடியும் பட்சத்தில் இலங்கை அணியானது ஆஸ்திரேலிய அணியை வீழ்த்த வேண்டும். 3-வது மற்றும் 4-வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்து 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தால், இலங்கை அணி ஆஸ்திரேலியாவை 1-0 என்ற கணக்கில் வீழ்த்தினால் போதும்.
சமநிலையில் அப்படி இல்லையெனில் பாகிஸ்தான் அணி தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்த வேண்டும். இப்படி இந்திய அணி மற்ற அணிகளின் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படும்.
- பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
- இந்த வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு தென் ஆப்பிரிக்கா சென்றது.
துபாய்:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் அபாரமாக செயல்பட்ட தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றதை அடுத்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டது. இந்த வெற்றியால் தென் ஆப்பிரிக்கா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முதல் அணியாக முன்னேறி அசத்தியது.
இந்தப் பட்டியலில் தென் ஆப்பிரிக்கா (66.67 சதவீதம்), ஆஸ்திரேலியா (58.89 சதவீதம்), இந்தியா (55.88 சதவீதம்) ஆகிய அணிகள் முதல் 3 இடங்களில் தொடர்கின்றன.
நியூசிலாந்து (48.21 சதவீதம்), இலங்கை (45.45 சதவீதம்), இங்கிலாந்து (43.18 சதவீதம்), வங்கதேசம் (31.25 சதவீதம்) அணிகள் அடுத்த 4 இடங்களில் உள்ளன.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தோல்வி அடைந்த பாகிஸ்தான் 8வது இடத்துக்கு சரிந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி இடத்தில் உள்ளது.