என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரிக்கு"

    • தனது இரவு நேர கடையில் சேர்ந்த குப்பை களை கொட்டியுள்ளார்.
    • வீடியோவாக பதிவு செய்து அப்பகுதி நகர்மன்ற உறுப்பினருக்கு அனுப்பியு ள்ளார்.

    கோபி, 

    கோபிசெட்டிபாளையம் நகராட்சி வார்டு எண் 16 வள்ளியம்மன் கோவில் வீதி பகுதியில் உள்ள நீர் ஓடை அருகே ஹரிநிவாஷ் என்பவர் தனது இரவு நேர கடையில் சேர்ந்த குப்பைகளை கொட்டியுள்ளார்.

    இதனை அப்பகுதியில் வசிக்கும் ராஜா என்பவர் ஏன் குப்பைகளை தெருவில் கொண்டுவந்து கொட்டுகிறீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

    பின்னர் அவர் குப்பை களை கொட்டியதை வீடியோவாக பதிவு செய்து அப்பகுதி நகர்மன்ற உறுப்பினருக்கு அனுப்பியு ள்ளார். நகர்மன்ற உறுப்பினர் ராமு நகராட்சி அதிகாரிகள் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள் உள்ள வாட்ஸ் அப் குரூப்பில் இதை பகிர்ந்துள்ளார்.

    இதைப்பார்த்த நகராட்சி பொது சுகாதார பிரிவு அலுவலர்கள் உடனடியாக சம்மந்தப்பட்ட நபரின் கடைக்கு சென்று அபரா தமாக ரூ.500 வசூலிக்க ப்பட்டது.

    மேலும் நகராட்சி அதிகா ரிகள் கடைக்காரரிடம் தங்களது கடையில் சேகர மாகும் திடக்கழிவு களைமக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக தரம் பிரித்து நகராட்சி பணியாளரிடம் ஒப்படைக்க வேண்டும். வீதியிலோ, நீர்நிலைகளிலோ கொட்டினால் உடனடி அபராதம் விதித்து சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்த னர்.

    • 4 பேர் மீது வழக்கு; வாலிபர் கைது
    • வீட்டுடன் சேர்த்து சிறிய கடை வைத்துள்ளார்.

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே உள்ள கோழிப்போர்விளையை சேர்ந்தவர் ஜான்ரோஸ் (வயது 70). இவர் வீட்டுடன் சேர்த்து சிறிய கடை வைத்துள்ளார்.

    இவரது கடையில் பலரும் பொருட்களை வாங்கி வருகின்றனர். இதில் சிலர் கடனுக்கு வாங்குவதுண்டு. அதே பகுதியைச் சேர்ந்த அஸ்வின் சிஜோ (24) என்பவரது தாயாரும் பொருட்களை கடனுக்கு வாங்கினாராம்.

    இந்த நிலையில் அஸ்வின் சிஜோவிடம், அவரது தாயார் வாங்கிய கடன் தொகையை ஜான்ரோஸ் கேட்டுள்ளார். இது அஸ்வின் சிஜோவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அவர்களுக்குள் விரோதம் ஏற்பட்டது. இந்த முன் விரோதத்தில் அஸ்வின் சிஜோ தனது நண்பர்களுடன் ஜான்ரோஸ் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

    அவர்கள், வீடு புகுந்து ஜான்ரோசை கத்தியை காட்டி மிரட்டிய தாகவும் கடையில் உள்ள பொருட்களை சூறையாடியதாகவும் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. அதன்பேரில் விசாரணை நடத்திய தக்கலை போலீசார், அஸ்வின் சிஜோ, வினீத்(24), அபினேஷ் (19), ஆகாஷ் (23) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதில் அபினேஷ் கைது செய்யப்பட்டார்.

    ×