என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
நீங்கள் தேடியது "பிளாஸ்டிக் கழிவு அகற்றம்"
- பசுவை பரிசோதித்தபோது வயிற்றில் அதிக அளவு பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
- ஒரு சில ஓட்டல்களில் வாழை இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் பேப்பர்களை பயன்படுத்தி குப்பையில் போடுகின்றனர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம் நந்தியால் நகரப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் சுற்றித் திரிகின்றன.
அங்குள்ள ஓட்டல்கள் மற்றும் கடைகளில் இருந்து சாலையோரம் கொட்டப்படும் வாழை இலைகள், மீதமான உணவுகளை தின்று வருகின்றன.
மேலும் தெருக்களில் சுற்றிவரும் பசுக்களை கோமாதாவாக எண்ணி வீட்டில் உள்ள பெண்கள் பசுகளுக்கு பழம், வீட்டில் மீதமான உணவுகள், அகத்திக்கீரைகளை வழங்கி வருகின்றனர்.
இந்த நிலையில் 8 மாத சினை பசு ஒன்று நடக்க முடியாமல், சாணம் மற்றும் கோமியம் கழிக்க முடியாமல் அவதி அடைந்து வந்தது. இதனை கண்ட பொதுமக்கள் இதுகுறித்து கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். கால்நடை டாக்டர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வலியால் அவதிப்பட்ட சினை பசுவை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டு கால்நடை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பசுவை பரிசோதித்தபோது வயிற்றில் அதிக அளவு பிளாஸ்டிக் கழிவுகள் இருப்பதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து கால்நடை டாக்டர்கள் சுதாகர் ரெட்டி அபிலாஷ் ரெட்டி ஆகியோர் பசுவிற்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்தனர். பசுவின் வயிற்றில் 60 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தது தெரியவந்தது.
பசுவின் வயிற்றில் இருந்த பிளாஸ்டிக் கழிவுகளை டாக்டர்கள் அகற்றினர்.
மேலும் பசுவின் வயிற்றில் இருந்த கன்றுக்கு இயற்கையான உணவு கிடைக்காததால் இறந்து இருந்தது. தொடர்ந்து பசுவும் பலியானது.
ஒரு சில ஓட்டல்களில் வாழை இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் பேப்பர்களை பயன்படுத்தி குப்பையில் போடுகின்றனர்.
இவற்றை உண்ணும் கால்நடைகளில் வயிற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் சேர்ந்து விடுகின்றன. இதனால் கால்நடைகளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு இருக்க நேரிடுகிறது.
எனவே பிளாஸ்டிக்கை அரசு முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
- பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக நீலகிரியை மாற்ற மாவட்ட நிா்வாகம் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை
- கால்நடையை இழந்துள்ள விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் எடப்பள்ளி ஊராட்சியில் பல்வேறு இடங்களில் குப்பை முறையாக அகற்றப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
எடப்பள்ளி, இளித்தொரை, பெட்டட்டி ஆகிய பகுதிகளில் மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் ஆங்காங்கே சிதறிக்கிடக்கும் குப்பைக் கழிவுகளை உண்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடா்கதையாகி உள்ளது.
இந்த நிலையில் அப்பகுதியில் திடீரென இறந்துபோன பசுவை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது அதன் வயிற்றில் 35 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருந்ததை பார்த்தனர். உடனடியாக கால்நடை டாக்டர்கள் அதனை அகற்றினர்.
இதுகுறித்து குன்னூா் நுகா்வோா் பாதுகாப்பு சங்கத் தலைவா் மனோகரன், கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில்,
பிளாஸ்டிக் இல்லாத மாவட்டமாக நீலகிரியை மாற்ற மாவட்ட நிா்வாகம் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை என்பதையே இது மாதிரியான கால்நடைகளின் இறப்புகள் காட்டுகின்றன. இதற்கு காரணமானவா்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கால்நடையை இழந்துள்ள விவசாயிக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.