என் மலர்
நீங்கள் தேடியது "அரையிறுதி"
- டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 140 ரன்களை எடுத்தது.
தம்புல்லா:
9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையில் நடந்து வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
இந்தத் தொடரில் இன்று 2 அரையிறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. முதல் அரையிறுதியில் வங்காளதேசத்தை வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
இந்நிலையில், 2-வது அரையிறுதிப் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகள் நிதானமாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்த நிலையில் குல் பெரோசா 25 ரன்னில் அவுட்டானார். ஓரளவு தாக்குப் பிடித்த முனீபா அலி 37 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் நிதா தர் 23 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.
இதையடுத்து, 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்குகிறது.
- பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு இலங்கை முன்னேறியது
- இலங்கை அணியின் கேப்டன் சமாரி அட்டப்பட்டு ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தம்புல்லா:
9-வது பெண்கள் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (20 ஓவர்) இலங்கையில் நடந்து வருகிறது. லீக் சுற்று போட்டிகள் முடிந்த நிலையில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
முதல் அரையிறுதியில் வங்காளதேசத்தை வீழ்த்திய இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது.
இந்நிலையில், 2-வது அரையிறுதிப் போட்டியில் இலங்கை, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க வீராங்கனைகள் நிதானமாக ஆடினர். முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்த நிலையில் குல் பெரோசா 25 ரன்னில் அவுட்டானார். ஓரளவு தாக்குப் பிடித்த முனீபா அலி 37 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் நிதா தர் 23 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்துள்ளது.
இதையடுத்து, 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரரான விஸ்மி குணரத்னே டக் அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சமாரி அட்டப்பட்டு 63 ரன்கள் விளாசினார். கடைசி ஓவரில் 3 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 19.5 ஓவர்கள் முடிவில் 141 ரன்கள் அடித்து இலங்கை அணி த்ரில் வெற்றி பெற்றது.
பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்த இலங்கை அணியின் கேப்டன் சமாரி அட்டப்பட்டு ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றியின் மூலம் மகளிர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டிக்கு இலங்கை அணி முன்னேறியது.
நாளை நடைபெறும் மகளிர் ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் மோதுகின்றன.
- பர்பிள் பிரிவில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜாங் கின்வென்- ஜாஸ்மின் பாவ்லினி மோதினர்.
- ஜாங் கின்வென் 6-1, 6-1 என்ற நேர்செட்டில் ஜாஸ்மின் பாவ்லினியை வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.
ரியாத்:
உலகின் டாப்-8 வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றுள்ள டபிள்யூ.டி.ஏ. இறுதி சுற்று எனப்படும் பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் நடந்து வருகிறது.
இதில் 'பர்பிள்' பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனும், உலக தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவருமான ஜாங் கின்வென் (சீனா) 6-1, 6-1 என்ற நேர்செட்டில் 4-ம் நிலை வீராங்கனையான ஜாஸ்மின் பாவ்லினியை (இத்தாலி) விரட்டியடித்து 2-வது வெற்றியை சுவைத்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.
ஒரு வெற்றி, 2 தோல்வியை சந்தித்த ஜாஸ்மின் பாவ்லினி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தார்.
- இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது.
- இதன்மூலம் 4 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
லாகூர்:
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் லாகூரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் 50 ஓவர்களில் 273 ரன்களில் ஆல் அவுட் ஆனது. செடிகுல்லா அடல் 85 ரன்னிலும் அஸ்மத்துல்லா ஓமர்சாய் 67 ரன்கள் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் துவார்ஷியஸ் 3 விக்கெட்டும், ஸ்பென்சர் ஜான்சன், ஆடம் ஜாம்பா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 274 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா ஆடியது. தொடக்கமே ஆப்கானிஸ்தான் அணியின் மோசமான பீல்டிங்கால் 2 கேட்ச்சுகளை தவறவிட்டனர். மேத்யூஸ் ஷாட் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து டிராவிஸ் ஹெட் மற்றும் ஸ்மித் பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஹெட் அரை சதம் எடுத்தார். அப்போது மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. இதன்மூலம் 4 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதிபெற்றது.
- சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதுகிறது.
- லீக் சுற்றில் இந்திய அணி துபாய் மைதானத்தில் 3 போட்டியிலும் வெவ்வேறு ஆடுகளத்தில் விளையாடியது.
சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று விளையாட மறுத்தது. இதையடுத்து இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடந்து வருகிறது. இந்தியா, ஒரே மைதானத்தில் விளையாடுவது அந்த அணிக்கு சாதகமாக உள்ளது என்று முன்னாள் வீரர்கள் சிலர் விமர்சனம் செய்தனர்.
இந்த விமர்சனங்களுக்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பதிலடி கொடுத்தார். அவர் கூறும்போது, எங்களுக்கு எந்த சாதகமும் இல்லை. இங்கே 4-5 ஆடுகளங்கள் இருக்கிறது. அவை ஒவ்வொன்றும் வித்தியாசமான தன்மையை கொண்டிருக்கும். அது எப்படி விளையாடும் என்பது எங்களுக்குத் தெரியாது என்றார்.
இந்த நிலையில் துபாயில் இன்று மதியம் தொடங்கும் முதல் அரைஇறுதியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் சுற்றில் இந்திய அணி துபாய் மைதானத்தில் 3 போட்டியிலும் வெவ்வேறு ஆடுகளத்தில் விளையாடியது. இந்த நிலையில் அரைஇறுதிப்போட்டிக்கு புதிய ஆடுகளம் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துபாய் மைதான ஆடுகளங்களின் கண்காணிப்பாளரான மேத்யூ சாண்டரி, ஆடுகளத்தை மெதுவாகவும் சுழற்பந்து வீச்சுக்கு உகந்ததாகவும் இருக்கும் டிராக்குகளை அமைத்துள்ளார்.