search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொறுப்பு"

    • மாநில பொருளாளர் மற்றும் தேசிய செயலாளராக ஸ்ரீவை சுரேஷ்தேவன் உள்ளிட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
    • இளைஞரணி செயலாளர்கள் சின்னதம்பி, பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், ஆளுயர மாலை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    திருப்பூர்:

    அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில குழு கூட்டம் கடந்த 8-ந்தேதி மதுரையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கான புதிய பொறுப்பாளர்கள் பெயர்கள் மத்திய குழுவிடம் பரிந்துரை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கட்சியின் அகில இந்திய தலைவர் நரேன் ஜெட்டர்ஜி, தேசிய தொழிற்சங்க பொதுச்செயலாளர் சிவசங்கர் ஆகியோர் வழிகாட்டுதலின்படி, தேசிய பொதுச்செயலாளர் தேவராஜன் தமிழக புதிய பொறுப்பாளர்களை டெல்லி நேதாஜி பவனில் அறிவித்தார்.

    இதன்படி அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மாநில தலைவராக முன்னாள் எம்.எல்.ஏ. பி.வி.கதிரவன், மாநில பொதுச்செயலாளராக எஸ்.கர்ணன், மாநில பொருளாளர் மற்றும் தேசிய செயலாளராக ஸ்ரீவை சுரேஷ்தேவன் உள்ளிட்ட நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

    மாநில பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பிறகு எஸ்.கர்ணன் திருப்பூருக்கு முதல்முறையாக வந்தார். அவருக்கு திருப்பூர் எல்லையான தாராபுரம் ரோடு கோவில்வழியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் திருப்பூர் மாநகர் மாவட்ட தலைவர் மகாலிங்கம், மாவட்ட செயலாளர் மகேஷ்குமார் ஆகியோர் தலைமையில் துணைத்தலைவர் ரவி, அமைப்புச் செயலாளர் காளீஸ்வரன், இளைஞரணி செயலாளர்கள் சின்னதம்பி, பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும், ஆளுயர மாலை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

    மேலும் அங்குள்ள கருப்பராயன் கோவிலில் சிறப்பு பூஜையும் நடைபெற்றது. பின்னர் கட்சியின் மாநகர் மாவட்ட தலைமை அலுவலகத்தில் முக்குலத்தோர் தேசிய கழகத்தின் நிறுவனத்தலைவர் எஸ்.பி.ராஜா, மாநில இளைஞரணி செயலாளர் சுரேஷ் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மாநில பொதுச்செயலாளர் கர்ணனுக்கு சால்வை அணிவித்தும், புத்தகம் வழங்கியும் வாழ்த்து தெரிவித்தனர்.

    இதேபோல் பல்வேறு கட்சிகளை சேர்ந்த அரசியல் முக்கிய பிரமுகர்கள் நேரிலும், செல்போன் மூலமாகவும் கர்ணனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மாநில பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள கர்ணன் அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மத்திய குழு உறுப்பினராக இருப்பதுடன், மாநில துணைத்தலைவர், மாவட்ட பொதுச்செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளையும் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

    இதற்கான அறிவிப்பை மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் பிரேம் அறிவித்து உள்ளார்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் காட்டேரி பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர், பா.ஜ.க.வின் இளைஞர் அணி மாவட்ட பொதுசெயலாளராக அறிவிக்கபட்டு உள்ளார்

    தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வழிகாட்டுதல்படி, மாவட்ட தலைவர் மோகன்ராஜ் ஆலோசனைபடி இதற்கான அறிவிப்பை மாவட்ட இளைஞர் அணி பொறுப்பாளர் பிரேம் அறிவித்து உள்ளார்.

    பா.ஜ.க மாவட்ட இளைஞர் அணி மாவட்டபொது செயலாளராக பொறுப்பேற்று உள்ள காட்டேரி பிரகாஷ்சுக்கு அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • முதல்-அமைச்சர் அமைத்த குழுவில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசுவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
    • கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழா

    விருதுநகர்

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாட முதல்-அமைச்சர் ஸ்டாலின் 12 குழுக்களை அமைத்து உள்ளார். அதன்படி தமிழ் காப்பாளர் கலைஞர் என்ற குழுவுக்கு தலைவராக அமைச்சர் சாத்தூர் ராமச் சந்திரன் நியமிக்கப்பட்டு உள்ளார்.

    இணைத்தலைவர்களாக அமைச்சர் மெய்யநாதன், கணேசன், செயலாளராக கூடுதல் தலைமை செய லாளர் பிரபாகரன், உறுப்பி னர்களாக டாக்டர்கள் ஜெயநந்தன், நாகநாதன், திண்டுக்கல் லியோனி, தமிழ் காமராசன், பர்வீன் சுல்தானா, நாஞ்சில் சம்பத், சபாபதி மோகன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    இதேபோல் தமிழ்த்தாயின் தவப்புதல் வன் கலைஞர் என்ற குழுவுக்கு தலைவராக அமைச்சர் தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டு உள்ளார். இணைத் தலைவர் களாக அமைச்சர்கள் அனிதா ராதா கிருஷ்ணன், செந்தில்பாலாஜி, செயலாள ராக நிதித்துறை முதன்மை செயலாளர் உதயசந்திரன், உறுப்பினர்களாக கவிஞர் வைரமுத்து, ராஜேந்திரன், பொற்கோ, பேராசிரியர்கள் அருணன், மருதநாயகன், ராஜன் துறை மற்றும் கலிய பெருமாள், பாரதி கிருஷ்ணகுமார், அரவிந்த ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

    ×