search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணக்காரர்கள் பட்டியல்"

    • பல்வேறு தொழில்களில் நடிகர் ஷாருக் கான் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்.
    • ஷாருக் கான் மட்டுமின்றி மேலும் சில பாலிவுட் பிரபலங்கள் இந்த பட்டியலில் உள்ளனர்.

    இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இடம்பிடித்துள்ளார். 2024 ஹூருன் இந்தியப் பணக்காரர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. அதில் முதல் முறையாக இடம்பிடித்துள்ள நடிகர் ஷாருக் கானின் சொத்து மதிப்பு ரூ. 7 ஆயிரத்து 300 கோடி ஆகும்.

    திரைத்துறை மட்டுமின்றி பல்வேறு தொழில்களில் நடிகர் ஷாருக் கான் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. உலகளவில் பிரபலமான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் சொந்த படத்தயாரிப்பு நிறுவனம் ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் உள்ளிட்டவை ஷாருக் கானுக்கு சொந்தமானவை ஆகும்.

    தற்போது வெளியாகி இருக்கும் இந்தியப் பணக்காரர்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மட்டுமின்றி பாலிவுட் துறையை சேர்ந்த மேலும் சிலரும் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் பட்டியல் பின்வருமாறு..

    ஷாருக் கான் மற்றும் குடும்பத்தார் மொத்த சொத்து மதிப்பு ரூ. 7 ஆயிரத்து 300 கோடி

    ஜூஹி சாவ்லா மற்றும் குடும்பத்தார் மொத்த சொத்து மதிப்பு ரூ. 4 ஆயிரத்து 600 கோடி

    ஹிருத்திக் ரோஷன் மொத்த சொத்து மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி

    அமிதாப் பச்சன் மற்றும் குடும்பத்தர் மொத்த சொத்து மதிப்பு ரூ. 1,600 கோடி

    கரண் ஜோஹர் மொத்த சொத்து மதிப்பு ரூ. 1,400 கோடி 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சுந்தர் பிச்சை கூகுளில் இணைந்ததில் இருந்து நிறுவனத்தின் பங்குகள் 400 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.
    • சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பு சுமார் 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.8,342 கோடி) டாலர்கள் ஆகும்.

    புதுடெல்லி:

    கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தற்போது உலகிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் இந்திய தலைமை நிர்வாக அதிகாரியாக திகழ்கிறார். ஐ.ஐ.டி. பட்டதாரியான சுந்தர் பிச்சை கடந்த 2004-ம் ஆண்டு முதல் கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

    ஆன்ட்ராய்டு இயங்கு தளம், கூகுள் குரோம் போன்ற பல திட்டங்களில் முக்கிய பங்கு வகித்த அவர் 2015-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக உயர்ந்தார்.

    2016 மற்றும் 2020-ம் ஆண்டுகளில் 2 முறை டைம்ஸ் இதழில் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்த அவரின் ஆண்டு சம்பளம் ரூ.1,800 கோடியாகும். கடந்த 2022-ம் ஆண்டில் அவருக்கு சம்பளம் ரூ.1,869 கோடியாக இருந்தது. இது இந்தியாவில் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் சம்பளத்தை விட அதிகம்.


    சுந்தர் பிச்சை கூகுளில் இணைந்ததில் இருந்து நிறுவனத்தின் பங்குகள் 400 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது.

    ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஏற்றத்தால் கூகுள் ஒவ்வொரு நாளும் புதிய உயரங்களை தொட்டு வரும் நிலையில் சுந்தர் பிச்சையும் உலகின் பெரும் பணக்காரர்களின் ஒருவராக மாறி உள்ளார்.

    அவரின் சொத்து மதிப்பு சுமார் 1 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.8,342 கோடி) டாலர்கள் ஆகும். உலகின் நிறுவனம் அல்லது தொழில் அதிபர்கள் அல்லாத கோடீஸ்வர தொழில்நுட்ப தலைமை நிர்வாகிகள் சிலரே உள்ளனர். அதில் சுந்தர் பிச்சையின் இந்த சாதனை மிகவும் அரிதானதாகும்.

    கடந்த 2022-ம் ஆண்டு அவரது நிகர மதிப்பு 1,310 மில்லியன் டாலர்கள் அல்லது ரூ.10 ஆயிரத்து 215 கோடி என ஹூருன் பட்டியல் மதிப்பிடப்பட்டு உள்ளது.

    • நண்பர்களைப் போன்ற வாழ்க்கை முறையைப் பெறுவதே பணக்காரர்களாக உணர வைப்பதாக பாதிக்கும் மேற்பட்டவர்கள் கூறியிருக்கின்றனர்.
    • மக்கள் செல்வநிலைக்கான அளவுகோலை தங்களுக்கும் பிறருக்கும் வித்தியாசமாக வைத்திருக்கின்றனர்.

    அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல நிதி சேவை நிறுவனமான சார்லஸ் ஷ்வாப் நிறுவனம், அமெரிக்காவில் பணக்காரர்களுக்கான சொத்து மதிப்பு தொடர்பாகவும், பணக்காரர்கள் பட்டியலில் இணைய வேண்டுமானால் அதற்கு தேவைப்படும் நிகர சொத்து மதிப்பு குறித்தும் கணக்கெடுப்பு நடத்தியது. உங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? நீங்கள் பணக்காரரா, இல்லையா? உங்களைப் பணக்காரராகக் கருதுவதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும்? என்பது போன்ற கேள்விகள் கேட்கப்பட்டு அவர்கள் அளிக்கும் பதில்கள் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டன.

    இந்த கணக்கெடுப்பில், பெரும்பாலானோர் அமெரிக்காவில் பணக்காரர் என்ற அந்தஸ்தை பெறுவதற்கு 2.2 மில்லியன் டாலர்கள் மதிப்பிலான சொத்து இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர். எனினும், இந்த கேள்விகளுக்கு பதில் அளித்தவர்களில் 48% பேர் தங்களிடம் சராசரி நிகர சொத்து மதிப்பு 5,60,000 டாலர் என்ற அளவில் இருக்கும்போதே தாங்கள் ஏற்கனவே செல்வந்தர்களாக உணர்கிறோம் என கூறியிருக்கிறார்கள்.

    இந்த ஆய்வறிக்கையில் கேட்கப்பட்ட கேள்விகளில் சில சுவையான தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அமெரிக்காவில் 1981லிருந்து 1996க்குட்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் "மில்லேனியல்ஸ்" எனவும், 1996லிருந்து 2010க்குட்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் "ஜென் இசட்" எனவும், 1965லிருந்து 1981க்குட்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் "ஜென் எக்ஸ்" எனவும், மற்றும் 1946லிருந்து 1964க்குட்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் "பேபி பூமர்ஸ்" எனவும் அழைக்கப்படுவர்.

    இளம் தலைமுறையினர் பணத்திற்காக போராடுகின்றனர் எனும் பரவலான கருத்து உள்ளது. இந்த கருத்துக்கு மாறாக மில்லேனியல்களும், ஜென் இசட் பிரிவினரும் தங்களை பணக்காரர்களாக உணர்கிறார்கள். அதிலும் 57% மில்லேனியல்ஸ் பிரிவினரும், 46% ஜென் இசட் பிரிவினரும் தாங்கள் வசதியாக இருப்பதாக கருத்துக் கணிப்பில் தெரிவித்திருக்கின்றனர். ஆனால், 41% ஜென் எக்ஸ் பிரிவினரும், 40% பேபி பூமர் பிரிவினரும் மட்டுமே தாங்கள் வசதியாக இருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

    இது அமெரிக்காவில் ஒருவரை செல்வந்தர் என கூறுவதற்கான குறியீடுகள் என்ன என்பதை கண்டறிவதில் உள்ள சிக்கலை காட்டுகிறது.

    அமெரிக்காவில் உயர்ந்து வரும் விலைவாசியையும், வீடுகளின் விலையையும் கணக்கில் கொண்டால் வாழ்க்கை நடத்த இதற்கு முன்பில்லாத அளவிற்கு பெரும் தொகை தேவைப்படுகிறது. நகரங்களில் இது மேலும் அதிகரிக்கும். ஆறு இலக்க சம்பளம் வாங்குவோர்களின் வாங்கும் திறன் நாட்டின் சில பகுதிகளில் மற்றவர்களை விட அதிகமாக இருக்கலாம். அதே சமயம் வீட்டில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை, சொந்த வீடு வைத்திருக்கிறார்களா, இல்லையா என்பது, அவரவர் வாங்கியிருக்கும் கடன் போன்ற சூழ்நிலைகள், ஒருவரின் நிதி ஆரோக்கியத்தில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தலாம்.

    சார்லஸ் ஷ்வாப் நிறுவனத்தின் நிதி திட்டமிடல் மற்றும் செல்வ மேலாண்மை அமைப்பின் நிர்வாக இயக்குனர் ராப் வில்லியம்ஸ் கூறுகையில், "மக்கள் செல்வநிலைக்கான அளவுகோலை தங்களுக்கும் பிறருக்கும் வித்தியாசமாக வைத்திருக்கின்றனர். இது ஒரு முரண்பாடான நிலை. நீங்கள் ஒருவரிடம் ஒரு டாலர் தொகையைக் கேட்டால், அவர்கள் அதை மீதமுள்ள தங்கள் வாழ்நாளில் மீதமுள்ள நாட்களின் அடிப்படையிலோ அல்லது நிதி ஆரோக்கியத்தின் அடிப்படையிலோ அர்த்தப்படுத்திக் கொள்வதில்லை" என தெரிவித்தார்.

    தங்களின் செல்வநிலை குறித்து எப்படி உணர்கிறார்கள் என்பதற்கு பதிலளிக்கும்போது தங்களுக்கு ஒப்பானவர்கள் குறித்து அவர்கள் கொண்டுள்ள எண்ணங்களும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

    கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் தங்கள் நண்பர்களைப் போன்ற வாழ்க்கை முறையைப் பெறுவதே தங்களை பணக்காரர்களாக உணர வைக்கிறது என்று கூறியிருக்கின்றனர்.

    சமூக ஊடகங்களைப் பயன்படுத்துபவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர், தங்கள் குடும்பம் மற்றும் நண்பர்கள் ஆன்லைனில் பதிவு செய்யும் வாழ்க்கைமுறையை ஒப்பிடுவதாக கூறியிருக்கின்றனர். குறிப்பாக, மில்லினியல்கள் மற்றும் ஜென் இசட் பிரிவினரிடையே இந்த கருத்து வெளிப்படுகிறது. கணக்கெடுப்பில் பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கினர், தங்கள் அன்புக்குரியவர்களுடன் ஒரு ஆரோக்கியமான உறவைக் கொண்டிருப்பதையே, நிறைய பணத்தை வைத்திருப்பதை விட மேலான செல்வநிலையாக கருதுவதாக கூறியுள்ளனர்.

    மேலும் 70% பேர் பெரிய வங்கிக் கணக்கை விட, பணத்தைப் பற்றி கவலைப்படாமல் இருக்கும் நிலையே செல்வம் என்று கூறியுள்ளனர்.

    ×