என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பென்னாகரம்"

    • பிரகாஷ், பெருமாள் ஆகிய 4 பேரும் காட்டு பன்றிக்கு வெடி வைத்து வேட்டையாடி இறைச்சியை சமைத்துக் கொண்டிருந்தனர்.
    • 4 பேரை வனத்துறையினர் கைது செய்து அபராதமாக ரூ.90 ஆயிரம் வசூலித்தனர்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே வனப் பகுதியில் காட்டுப்பன்றியை வெடிவைத்து வேட்டையாடி சமைத்ததாக 4 பேரை பென்னாகரம் வனத்துறையினர் கைது செய்து அபராதம் வசூலித்தனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மூங்கில்மடுவு கிரமத்தையொட்டி உள்ள வனப்பகுதிகளில் வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு வருவதாக மாவட்ட வன அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இந்த நிலையில் மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு உத்தரவின் பேரில் பென்னாகரம் வனசரக அலுவலர்கள் செந்தில்குமார், ஆலயமணி, வனவர்கள் புகழேந்திரன், முனுசாமி, சக்திவேல் மற்றும் வனப்பணியாளர்கள் உள்ளிட்ட வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, மூங்கில் மடுவு பகுதியைச் சேர்ந்த தங்கராஜ், மாது, சிடுவம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், பெருமாள் ஆகிய 4 பேரும் காட்டு பன்றிக்கு வெடி வைத்து வேட்டையாடி இறைச்சியை சமைத்துக் கொண்டிருந்தனர். உடனே 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்து அபராதமாக ரூ.90 ஆயிரம் வசூலித்தனர்.

    மேலும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாடும் நபர்கள் மீது வன சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் பென்னாகரம் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • அரிய வகை பூக்களில், பிரம்ம கமலம் பூக்களும் ஒன்றாகும்.
    • வெண்ணிறத்தில் 3 இதழ்கள் கொண்டுள்ள இந்த மலர், மிகவும் அழகாக காணப்படும்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில், வீடு ஒன்றில் பிரம்ம கமலம் பூக்கள் மலர்ந்துள்ளன.

    அரிய வகை பூக்களில், பிரம்ம கமலம் பூக்களும் ஒன்றாகும். இதை 'நிஷகாந்தி' என்றும் அழைப்பர். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, இரவில் பூக்கும் அபூர்வ மலராகும். வெண்ணிறத்தில் 3 இதழ்கள் கொண்டுள்ள இந்த மலர், மிகவும் அழகாக காணப்படும்.

    இந்த மலரானது அமெரிக்காவின், மெக்சிகோவை பிறப்பிடமாக கொண்ட பிரம்ம கமலம், பொதுவாக ஜூலை மாதத்தில் பூக்கும். இலங்கையில் இந்த மலரை, 'சொர்க்கத்தின் பூ' என வர்ணிக்கின்றனர்.

    இந்து மதத்தில் பிரம்ம கமலம், புனிதமானதாக கருதப்படுகிறது. ஆன்மிக ரீதியிலும் இந்த மலருக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    பென்னாகரத்தை சேர்ந்த ஐயப்ப குருசாமி என்பவரின் வீட்டில் பிரம்ம கமலம் செடி உள்ளது. இவரது வீட்டில் உள்ள பிரம்ம கமலம் செடியில் 2 பிரம்ம கமலம் பூக்கள் மலர்ந்துள்ளது. நேற்று இரவு, 9 மணியளவில் இப்பூக்கள் மலர்ந்தன.

    இதை பார்த்து, அவ்வீட்டினர் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த பூக்கள் மலரும் போது, என்ன வேண்டினாலும் நடக்கும் என்பது ஐதீகம். எனவே அவரது குடும்பத்தினர், பூக்களுக்கு பூஜை செய்து வேண்டி கொண்டனர்.

    தகவலறிந்து சுற்றுப்பகுதி மக்கள், வீட்டில் மலர்ந்த பிரம்ம கமலத்தை பார்க்க ஆர்வத்துடன் வந்து செல்லுகின்றனர்.

    • பொதுமக்கள் மறியல் போராட்டம் செய்தனர்.
    • ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள கோடுபட்டி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் செல்போன் சிக்னல் கிடைக்காததால் மக்கள் தவித்து வருகின்றனர்.

    இதனால் உறவினர்கள், குடும்பத்தினர்களுக்கு பேச முடியாமல் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். அந்த பகுதியில் பி.எஸ்.என்.எல். டவர் அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்து வந்தனர். ஆனால் எந்த அதிகாரியும் இதனை கண்டுகொள்ளவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்றுகாலை 30-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களை சாலையின் நடுவே நிறுத்திவிட்டு மறியல் போராட்டம் செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்க ப்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்த பென்னாகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கிருந்து போராட்டகாரர்கள் கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.

    • கோவில் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பிளியனூர் அக்ரகாரம் முனியப்பன் கோவில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

    இந்தப் பகுதியில் முனியப்பன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாக இது விளங்குகிறது.

    இந்நிலையில் இந்த கோவில் பகுதியில் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது .

    அதனை இக்கோவிலில் பணிபுரியும் செயல் அலுவலர் மற்றும் பூசாரி ஆகியோர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து பி.அக்ரஹாரம் பகுதியில் உள்ள 200-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் 200-க்கும் மேற்பட்ட நபர்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தையும் நடத்தி வருகின்றனர்.

    அப்போது அவர்கள், கோவில் பகுதியில் சி.சி.டி.வி. கேமரா அமைக்க வேண்டும். அதற்கான செலவினங்களை ஊர் பொது மக்களே தருகிறோம் என கோரிக்கை விடுத்தும், அதை செயல்படுத்தவில்லை.


    மேலும், பூசாரி உண்டியலில் பணம் போடுவதை தடுத்து, காணிக்கையாக பணங்களைப் பெற்று வருகிறார் எனவும் குற்றம் சாட்டுகின்றனர். உண்டியல் பணத்தை எண்ணும் பொழுது வழக்கமான நடைமுறைகளை கடைபிடிக்காமல், முறைகேடாகவும், முறையாக கணக்கு காட்டுவதில்லை எனவும் குற்றம் சாட்டினர்.

    செயல் அலுவலர் மற்றும் பூசாரி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அவர்களை பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தியும், கோஷங்கள் எழுப்பினர்.

    இதுகுறித்து தகவலறிந்து பென்னாகரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.

    மேலும், அந்த பகுதியில் அசாம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க 30-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 15 வருடங்களாக சாலை வசதி இன்றி கிராம மக்கள் தவித்து வந்துள்ளனர்.
    • 300-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஒகேனக்கல்:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஈச்சம்பள்ளம், புதுப்பட்டி, எட்டிக்குழி, நெற்குந்தி, கருப்பயனூர், ஜீவா நகர் ஆகிய கிராமங்களில் சுமார் 2000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இந்த கிராமங்களில் சுமார் 15 வருடங்களாக சாலை வசதி இன்றி கிராம மக்கள் தவித்து வந்துள்ளனர். மேலும் சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் அடிக்கடி வாகன விபத்துகளும் ஏற்பட்டு வந்துள்ளது.

    மேலும் சாலை சரியில்லாததால் பிரசவ காலங்களில் மற்றும் உடல்நிலை சரியில்லாத நேரங்களில் 108 ஆம்புலன்ஸ் அழைத்தால் சாலை சரியில்லை என்றுகூறி இந்த வழித்தடத்தில் ஆம்புலன்ஸ் வருவதில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    மேலும் பஸ்களும் சாலை சரியில்லாததால் போதிய பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதாக குற்றம் சாட்டுகின்றனர். மேலும் இருசக்கர வாகனங்களில் செல்லும் பொழுது அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.

    எனவே சாலையை சீரமைத்து தர வேண்டி பலமுறை அரசு அதிகாரிக ளிடம் மனுக்கள் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறியும், கடந்த 15 ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று ஈச்சம்பள்ளம் கிராம மக்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவலறிந்த பெரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சுவார்த்தையில் உடன்படாத கிராம மக்கள் பின்பு பென்னாகரம் டி.எஸ்.பி. மகாலட்சுமி மற்றும் நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவ லர், தாசில்தார் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தி பிரதம மந்திரி சாலை திட்டத்தின் கீழ் சாலை அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததின் பெயரில் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    4 மணி நேரத்திற்கு மேலாக பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பும், போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

    ×