search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பென்னாகரம்"

    • அரிய வகை பூக்களில், பிரம்ம கமலம் பூக்களும் ஒன்றாகும்.
    • வெண்ணிறத்தில் 3 இதழ்கள் கொண்டுள்ள இந்த மலர், மிகவும் அழகாக காணப்படும்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில், வீடு ஒன்றில் பிரம்ம கமலம் பூக்கள் மலர்ந்துள்ளன.

    அரிய வகை பூக்களில், பிரம்ம கமலம் பூக்களும் ஒன்றாகும். இதை 'நிஷகாந்தி' என்றும் அழைப்பர். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, இரவில் பூக்கும் அபூர்வ மலராகும். வெண்ணிறத்தில் 3 இதழ்கள் கொண்டுள்ள இந்த மலர், மிகவும் அழகாக காணப்படும்.

    இந்த மலரானது அமெரிக்காவின், மெக்சிகோவை பிறப்பிடமாக கொண்ட பிரம்ம கமலம், பொதுவாக ஜூலை மாதத்தில் பூக்கும். இலங்கையில் இந்த மலரை, 'சொர்க்கத்தின் பூ' என வர்ணிக்கின்றனர்.

    இந்து மதத்தில் பிரம்ம கமலம், புனிதமானதாக கருதப்படுகிறது. ஆன்மிக ரீதியிலும் இந்த மலருக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    பென்னாகரத்தை சேர்ந்த ஐயப்ப குருசாமி என்பவரின் வீட்டில் பிரம்ம கமலம் செடி உள்ளது. இவரது வீட்டில் உள்ள பிரம்ம கமலம் செடியில் 2 பிரம்ம கமலம் பூக்கள் மலர்ந்துள்ளது. நேற்று இரவு, 9 மணியளவில் இப்பூக்கள் மலர்ந்தன.

    இதை பார்த்து, அவ்வீட்டினர் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த பூக்கள் மலரும் போது, என்ன வேண்டினாலும் நடக்கும் என்பது ஐதீகம். எனவே அவரது குடும்பத்தினர், பூக்களுக்கு பூஜை செய்து வேண்டி கொண்டனர்.

    தகவலறிந்து சுற்றுப்பகுதி மக்கள், வீட்டில் மலர்ந்த பிரம்ம கமலத்தை பார்க்க ஆர்வத்துடன் வந்து செல்லுகின்றனர்.

    • பிரகாஷ், பெருமாள் ஆகிய 4 பேரும் காட்டு பன்றிக்கு வெடி வைத்து வேட்டையாடி இறைச்சியை சமைத்துக் கொண்டிருந்தனர்.
    • 4 பேரை வனத்துறையினர் கைது செய்து அபராதமாக ரூ.90 ஆயிரம் வசூலித்தனர்.

    பென்னாகரம்:

    தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே வனப் பகுதியில் காட்டுப்பன்றியை வெடிவைத்து வேட்டையாடி சமைத்ததாக 4 பேரை பென்னாகரம் வனத்துறையினர் கைது செய்து அபராதம் வசூலித்தனர். தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே மூங்கில்மடுவு கிரமத்தையொட்டி உள்ள வனப்பகுதிகளில் வனவிலங்குகள் வேட்டையாடப்பட்டு வருவதாக மாவட்ட வன அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

    இந்த நிலையில் மாவட்ட வன அலுவலர் அப்பால நாயுடு உத்தரவின் பேரில் பென்னாகரம் வனசரக அலுவலர்கள் செந்தில்குமார், ஆலயமணி, வனவர்கள் புகழேந்திரன், முனுசாமி, சக்திவேல் மற்றும் வனப்பணியாளர்கள் உள்ளிட்ட வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, மூங்கில் மடுவு பகுதியைச் சேர்ந்த தங்கராஜ், மாது, சிடுவம்பட்டி பகுதியைச் சேர்ந்த பிரகாஷ், பெருமாள் ஆகிய 4 பேரும் காட்டு பன்றிக்கு வெடி வைத்து வேட்டையாடி இறைச்சியை சமைத்துக் கொண்டிருந்தனர். உடனே 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்து அபராதமாக ரூ.90 ஆயிரம் வசூலித்தனர்.

    மேலும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளில் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாடும் நபர்கள் மீது வன சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் பென்னாகரம் வனத்துறையினர் தெரிவித்தனர்.

    ×