என் மலர்
நீங்கள் தேடியது "வள்ளி கும்மி நடனம்"
- தொகுதி வரையறை மறுசீரமைப்புக்கு எதிராக நாம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.
- மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு.
பெண்கள் என்றாலே சாதனை தான், சாதனை என்றாலே பெண்கள் தான் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா அரங்கத்தில் வள்ளி கும்மபி நடனம் மூலம் கின்னஸ் சாதனை படைத்தவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
வள்ளிக்கும்மி நிகழ்ச்சியில் பங்கேற்ற 16,000 பெண்களுக்கு வாழ்த்துகள். வள்ளிக்கும்மி விழாவில் 16,000 பெண்கள் பங்கேற்றது என்பது மிகப்பெரிய சாதனை.
பெண்கள் என்றாலே சாதனை தான், சாதனை என்றாலே பெண்கள் தான்.
2026 சட்டமன்ற தேர்தலி்ல திமுக கூட்டணி வெற்றி பெறுவது உறுதி. மேற்கு மண்டல வளர்ச்சிக்கு ஏராளமான திட்டங்களை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி உள்ளது.
தொகுதி வரையறை மறுசீரமைப்புக்கு எதிராக நாம் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறோம்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழ்நாட்டிற்கு பாதிப்பு.
தொகுதி மறுவரையறை மறுசீரமைப்பு தொடர்பாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம்.
40க்கு 40 வெற்றி என்பது மக்கள் நமது திராவிட மாடல் ஆட்சிக்கு கொடுத்த அங்கீகாரம்.
நமக்கு நிதியை முறையாக வழங்கும் மத்திய அரசு இருந்திருந்தால் இன்னும் பல சாதனைகளை படைப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பல்வேறு நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.
- மாலை 5 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் நடக்கிறது.
கோவை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல் மாதம் 5 மற்றும் 6-ந்தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியை திறந்து வைக்கிறார். மேலும் பல்வேறு நலத்திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.
நீலகிரி சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு 6-ந்தேதி மாலை கோவை வருகிறார். கோவையில் 10 ஆயிரம் பெண்கள் பங்கேற்கும் வள்ளி-கும்மி நடனத்தை அவர் நேரில் பார்வையிடுகிறார்.
இந்த நிகழ்ச்சி கோவை கொடிசியா வளாகத்தில் நடக்கிறது. இதுகுறித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் நித்தியானந்தம் நிருபர்களிடம் கூறிய தாவது:-
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் கடந்த ஆண்டு ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் 16 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற வள்ளி-கும்மி நடனம் நடந்தது. இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.
இந்தியாவில் அதிகபட்சமாக ஒரே நேரத்தில் அசாம் மாநிலத்தில் 11 ஆயிரம் பெண்கள் பங்கேற்ற நடனமே சாதனையாக இருந்தது.
அதை பெருந்துறையில் நடந்த நிகழ்ச்சி முறியடித்து உள்ளது. எனவே இந்த ஆட்டத்தில் பங்கேற்ற 16 ஆயிரம் பேருக்கு பாராட்டு விழா வருகிற 6-ந் தேதி மாலை 5 மணிக்கு கோவை கொடிசியா மைதானத்தில் நடக்கிறது.
இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சாதனை படைத்த பெண்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்குகிறார். அத்துடன் இந்த நிகழ்ச்சியில் 10 ஆயிரம் பெண்கள் கலந்து கொள்ளும் வள்ளி-கும்மி நடனமும் நடக்கிறது. இதனை முதல்-அமைச்சர் நேரில் பார்வையிடுகிறார்.
வள்ளிக்கும்மி ஆடுவதால் பெண்களுக்கு உடல் வலிமையும், மன வலிமையும் அதிகரிக்கிறது. தற்போது அதை பாரம்பரிய கலையில் ஏராளமான கிராமங்களில் பெண்கள் இந்த கலையை கற்று வருகின்றனர்.
இந்த கலையை ஊக்கப்படுத்த கொங்குநாடு கலைக்குழு தொடங்கப்பட்டு உள்ளது. பாராட்டு விழாவில் அமைச்சர் செந்தில்பாலாஜி, கொங்குநாடு மக்கள் தேசியகட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்.எல்.ஏ. மற்றும் பலர் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில பொருளாளர் கே.கே.சி. பாலு, இளைஞர் அணி செயலாளர் சூரியமூர்த்தி, துணை செயலாளர் பிரேம், மாவட்ட செயலாளர்கள் தனபால், ரமேஷ், மாநில ஆட்சி மன்ற குழு உறுப்பினர் வடிவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.
- 2 ஆயிரம் ஆண்டு கொங்கு பாரம்பரிய கலையான வள்ளி கும்மி கலையை மீட்டெடுக்கும் வகையில் இந்த வள்ளி கும்மி நடனம் நடைபெற்றது.
- ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வள்ளி கும்மி நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது.
மொடக்குறிச்சி:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுக்கா பூந்துறை கிராமம் சின்னியகவுண்டன் வலசில் ஆசிரியர் வெள்ளநத்தம் சண்முகசுந்தரத்தின் மங்கை வள்ளி கும்மி குழுவின் 64-வது அரங்கேற்ற விழா நடைபெற்றது.
2 ஆயிரம் ஆண்டு கொங்கு பாரம்பரிய கலையான வள்ளி கும்மி கலையை மீட்டெடுக்கும் வகையில் இந்த வள்ளி கும்மி நடனம் நடைபெற்றது. சின்னியகவுண்டன் வலசில் வண்ண விளக்குகள் நடுவே 500-க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் ஒரே வண்ண உடை அணிந்து நாட்டுப்புற பாடல்கள் பாடி அதற்கு ஏற்ப நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் வள்ளி கும்மி நடனமாடியது அனைவரையும் கவர்ந்தது. மேலும் மங்கை வள்ளி கும்மி குழு கொங்கு பாரம்பரிய கலைகளில் ஒன்றாக கருதப்படுவதால் வள்ளி கும்மி நடனத்தை மீட்டெடுக்கும் வகையில் இந்த விழா வெகு விமரிசயைாக நடைபெற்றது.
- வள்ளி கும்மி நடனமும், அதனுடன் தொடர்புடைய பாடல்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- ஒரே இடத்தில் பெண்கள் ஏராளமானோர் கூடி ஆடிய இந்த நடனத்தை வடமாநில பக்தர்கள் மிகவும் ரசித்து பார்த்துள்ளனர்.
கோவை:
கொங்கு மண்டலத்தில் புகழ் பெற்ற வள்ளி கும்மி நடனம் தற்போது புத்துயிர் பெற்றுள்ளது. தொடக்கத்தில் ஆண்கள் மட்டுமே ஆடிய இந்த நடனத்தை இப்போது பெண்களும் ஆர்வமுடன் கற்று வருகிறார்கள்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் இந்த நடனத்தை கோவை, ஈரோடு, திருப்பூர் போன்ற பகுதிகளில் வசிக்கும் பெண்கள், சிறுமிகள் என ஏராளமா னோர் உற்சாகத்துடன் கற்று அரங்கேற்றம் செய்து வருகிறார்கள்.
இதன் காரணமாக கோவில் விழாக்கள் மற்றும் விசேஷ நாட்களில் வள்ளி கும்மி நடனம் முக்கியத்துவம் பெற்று வருகிறது. ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கானோர், ஆயிரக்கணக்கானோர் திரண்டு வள்ளி கும்மி நடனம் ஆடுவது கவருவதாக அமைந்துள்ளது. வள்ளி கும்மி நடனமும், அதனுடன் தொடர்புடைய பாடல்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மங்கை வள்ளி கும்மி நடனக்குழுவினர் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு கோவில் முன்பு தங்கள் பாரம்பரிய வள்ளி கும்மி நடனத்தை அரங்கேற்றி அங்கு திரண்டு இருந்த வடமாநில பக்தர்களை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளனர். ஒரே இடத்தில் பெண்கள் ஏராளமானோர் கூடி ஆடிய இந்த நடனத்தை வடமாநில பக்தர்கள் மிகவும் ரசித்து பார்த்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் தாங்களும் இந்த கலையை கற்க விரும்புவதாக பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இதுபற்றி மங்கை வள்ளிக்கும்மி குழுவின் தலைமை பயிற்சியாளரான பொங்கலூரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் கூறியதாவது:-
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என மொத்தம் 477 பேருடன் ரெயில் மூலம் அயோத்தி சென்றோம். அயோத்தி ராமபிரான் கோவிலில் வள்ளி கும்மி ஆட்டம் அரங்கேற்றப்பட்டது. இதனை உள்நாட்டு பக்தர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களும் வெகுவாக கண்டு ரசித்தனர். நடனம் நிறைவு பெற்றதும் வடமாநிலத்தைச் சேர்ந்த சுமார் 10-க்கும் மேற்பட்டோர், எங்களுக்கும் வள்ளி கும்மி கற்றுத் தாருங்கள் என்று மனம் திறந்து கேட்டனர். வள்ளிக்கும்மிக்கு உரிய அங்கீகாரம் கிடைத்தது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
பண்டைய காலம் முதலே கும்மி ஆட்டம் என்பது அனைவராலும் ரசிக்கப்பட்ட கலையாக இருந்து வருகிறது. இந்த ஆட்டத்துக்கு கும்மி கொட்டுதல், அதாவது கை கொட்டுதல் என்று பொருள். இது தற்போது காலமாற்றத்துக்கு ஏற்ப மெல்ல நடந்து அடித்தல், நடந்து நின்று அடித்தல், குனிந்து நிமிர்ந்து அடித்தல், குதித்துக் குதித்து அடித்தல், கைக்கொட்டி அடித்தல், இணையுடன் சேர்ந்து கைகளை கொட்டுதல் என்று 6 நிலைகளில் கும்மியடிக்கப்படுகிறது.

கொங்கு மண்டலத்தில் பெரும்பாலும் மாரியம்மன், முருகன் கோவில் திருவிழாக்களின்போது முளைப்பாரி எடுத்து கும்மி அடிப்பது வழக்கத்தில் உள்ளது. அதாவது முளைப்பாரி வளர்க்கும் வீட்டின் முன்பாக 6 நாளும், கோவிலில் ஒரு நாளும் கும்மியடித்து ஆடுவோம். அப்போது பல்வேறு கருத்துக்கள் செறிந்த பாடலைப் பாடி கும்மியடித்து ஊர் மக்கள் முன்னிலையில் பண்டைய கால பழக்கவழக்கங்களை நினைவு கூறுவோம்.
எங்களின் வள்ளி கும்மி குழுவில் பெரும்பாலும் நாட்டுப் புறப்பாடல்களும் பாரதியார், பாரதிதாசன் பாடல்களும் பாடப்படுவது உண்டு. அகநானூறு, சிலப்பதிகாரத்திலும் கும்மி பற்றிய குறிப்புகள் உள்ளன. மேலும் பூந்தட்டு, குலவை, தீபம், கதிர், முளைப்பாரி என கும்மியில் பல்வேறு வகைகள் உண்டு. இதற்கான இலக்கியங்களும் சாத்திரங்களில் நடைமுறையில் உள்ளன. அவற்றில் வைகுந்தா் கும்மி, வள்ளியம்மன் கும்மி, பஞ்சபாண்டவா் கும்மி, சிறுத்தொண்ட நாயனார் கும்மி, அரிச்சந்திர கும்மி, ஞானோபசே கும்மி போன்ற இலக்கியங்கள் குறிப்பிடத்தக்கவை.
கும்மி என்பது உடலுக்கும், மனத்திற்கும் புத்துணர்வு அளிக்கும் சிறந்த கலை ஆகும். வள்ளி கும்மி ஆட்டத்தில் ஈடுபடுவோருக்கு மருந்து, மாத்திரை இன்றி உடலில் நீரிழிவு, அதிக ரத்தஅழுத்தம் போன்ற நோய்கள் குறைந்து உடல்நிலை இயல்புநிலைக்கு திரும்புகிறது. உடல் ஆரோக்கியமும் அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுகிறது.
வள்ளி கும்மியில் மொத்தம் 30 பாடல்கள் உள்ளன. முழு நிகழ்ச்சி நடத்த 2.5 மணி நேரம் ஆகும். கேரளாவில் செண்டை மேளம் உள்ளிட்ட பழங்கால கலையை வளர்க்கும் வகையில் அதனை சொல்லி கொடுக்கும் பயிற்சி ஆசிரியர்களுக்கு அரசு உதவி த்தொகை வழங்குகிறது. மேலும் பயிற்சி பெற விரும்புவோருக்கும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதுபோல தமிழக அரசும் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்க மேற்கண்ட திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.