search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்க்கட்சி"

    • இங்கு அமர்ந்திருப்பவர்கள் தான் மிகப்பெரிய பயங்கரவாதிகள் என்று ஆளும் கட்சி எம்.பிக்களை சுட்டிக்காட்டி பேசினார்.
    • ஆத்திரத்தால் ஆளும் கட்சி எம்.பி ஒருவர் திடீரென்று ஓடிச் சென்று பேசிக்கொண்டிருந்த அஹ்மத் சிக்கின் முகத்தில் தாக்கி கீழே தள்ளினார்.

    துருக்கியில் அரசுக்கு எதிரான போராட்டங்களை ஏற்பாடு செய்த குற்றச் சாட்டில் எதிர்க்கட்சியாக உள்ள தொழிலாளர் கட்சியின் தலைவர் கேன் அட்டால் கைதாகி சிறையில் உள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாகப் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி அஹ்மத் சிக் பேசும்போது, அதிபர் எர்டோகனின் ஆளும் கட்சியை "பயங்கரவாத அமைப்பு என்று குறிப்பிட்டார். உங்களுக்கு [ஆளும் கட்சி] ஆதரவாக இல்லையென்று கேன் அட்டாலை பயங்கரவாதி என்கிறீர்கள்.ஆனால் இங்கு அமர்ந்திருப்பவர்கள் தான் மிகப்பெரிய பயங்கரவாதிகள் என்று ஆளும் கட்சி எம்.பிக்களை சுட்டிக்காட்டி பேசினார்.

    இதனால் ஆளும் கட்சி எம்.பிக்கள் தரப்பில் கூச்சல் எழுந்தது. ஆத்திரத்தால் ஆளும் கட்சி எம்.பி ஒருவர் திடீரென்று ஓடிச் சென்று பேசிக்கொண்டிருந்த அஹ்மத் சிக்கின் முகத்தில் தாக்கி கீழே தள்ளினார். தொடர்ந்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் கைகலப்பில் ஈடுபட்டனர்.

    ஒருவருக்கொருவர் சரமாரியாகத் தாக்கிக் கொண்டனர் துணை சபாநாயகர் சொல்லச் சொல்ல கேட்காமல் எம்.பி.க்கள் மாறி மாறி தாக்கிக் கொண்டனர். அவர்களை பாது காப்பு அதிகாரிகள் விலக்கி விட்டனர். இந்த தாக்குதலில் பெண் எம்.பி. ஒருவர் உட்பட சிலருக்குக் காயம் ஏற்பட்டது. இதில் சிலரின் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் பாராளுமன்றமே களேபரமாகக் காணப்பட்டது.

    • இருஅவைகளிலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.
    • எதிர்க்கட்சகள் தங்களது பிரச்சினை குறித்து பேசலாம்.

    இந்தியாவில் மூன்றாவது முறையாக பிரதமர் பதவியேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் முதல் பாராளுமன்ற கூட்டத் தொடர் கடந்த மாதம் 27 ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரின் முதல் நாளில் இருஅவைகளிலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.

    இதைத் தொடர்ந்து ஜனாதபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடைபெற இருந்தது. ஆனால் நீட் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டது. எனினும், ஜனாதிபதி உரை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சகள் தங்களது பிரச்சினை குறித்து பேசலாம் என்று தெரிவித்தார்.

    இதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், ஜனாதிபதி உரை மீதான விவாதம் இரு அவைகளிலும் தொடங்க இருந்தது.

    இதனிடையே பாராளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

    அப்போது, "நாடாளுமன்றத்திற்கு நீட் முறைகேடு விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற செய்தியை மாணவர்களுக்கு அனுப்ப விரும்புகிறோம். எனவே இந்த செய்தியை அனுப்ப நாடாளுமன்றம் இதனை விவாதிக்க வேண்டும், என்று தெரிவித்தார்.

    இதற்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுந்து பதில் அளிக்கையில், "மக்களவை கூட்டம் சட்டத்துக்கும் விதி முறைகளுக்கும் உட்பட்டே செயல்படுகிறது" என்றார். எனினும் ராகுல் அந்த பதிலால் திருப்தி அடைய வில்லை. மீண்டும் நீட் விவாதம் குறித்து கேள்வி எழுப்பினார்.

    நீட் விவகாரம் தொடர்பாக நாள் முழுக்க இந்த சபையில் நாம் விவாதிக்க வேண்டும் என்று ராகுல்காந்தி கோரிக்கை விடுத்தார். அதற்கு அரசு தரப்பில் நீட் குறித்து உரிய முறையில் விவாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் நாள் முழுக்க விவாதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சபாநாயகர் ஏற்க வில்லை.

    இதையடுத்து இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக பாராளுமன்ற மக்களவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். ஜனாதிபதி உரை மீதான விவாதத்துக்கு பாராளுமன்றத்தில் நாளையும் (செவ்வாய்க்கிழமை), மாநிலங்களவையில் நாளை மறுநாளும் (புதன்கிழமை) பிரதமா் மோடி பதில் அளிப்பாா் என எதிர்பாா்க்கப்படுகிறது.

    • கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விஷச்சாராய சம்பவம் வருந்தத்தக்கது.
    • உயரதிகாரிகள் கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

    கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கி வருகிறது.

    சம்பவம் குறித்து அறிந்த அரசியல் கட்சி தலைவர்கள் கள்ளக்குறிச்சியில் குவிந்து பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.

    இதுவரையிலும் கள்ளச் சாராயம் அருந்தி பலியானோரின் எண்ணிக்கை 55தாக உயர்ந்துள்ளது. மேலும் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

    இந்நிலையில் தி.முக. எம்.பி தமிழச்சி தங்கபாண்டின் வருத்த பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் கூறியிருப்பதாவது,

    "கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற விஷச்சாராய சம்பவம் வருந்தத்தக்கது.

    தமிழ்நாடு அரசின் நிவாரண உதவிகள் அந்தக் குடும்பங்களை மீட்டெடுக்கட்டும். அதிகாரிகள் மாற்றப்பட்டு முழுமையான விசாரணையை மேற்கொள்ள ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது. எதிர்காலத்தில் விஷச்சாராய சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு எச்சரித்துள்ளது. நேற்றைய உயரதிகாரிகள் கூட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

    சாவில் அரசியல் செய்து கொண்டிருக்கும் எதிர்கட்சியினர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். சென்னையில் செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்ட போதும், தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின் போதும் ஒன்றுமே நடக்காதது போல மூடி மறைக்கப் பார்த்த அரசாங்கங்களைப் போலின்றி துணிச்சலுடன் களத்தில் நின்று 'எதிர்காலத்தில் நடக்காது' என்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அரசே மக்களுக்கான அரசு!" என்று கூறியுள்ளார்.

    • இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் 6 பேரின் தண்டனை உறுதியானால் பதவி பறிபோகும்.
    • சக்தி வாய்ந்த எதிர்க்கட்சியாக இந்தியா கூட்டணி இடம் பெற்றது.

    லக்னோ:

    உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 80 பாராளுமன்ற தொகுதிகளில் இந்தியா கூட்டணியின் கீழ் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட சமாஜ்வாடி 37 இடங்களையும் காங்கிரஸ் 6 இடங்களையும் வென்றன. பா.ஜனதாவினால் 33 இடங்களை மட்டுமே கைபற்ற முடிந்தது.

    இதனால் மத்தியில் மீண்டும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைந்தாலும் சக்தி வாய்ந்த எதிர்க்கட்சியாக இந்தியா கூட்டணி இடம் பெற்றது. இதற்கு உத்தரபிரேதசத்தில் அவர்கள் வென்ற 43 இடங்கள் முக்கிய காரணமாக அமைந்து உள்ளன.

    இந்த நிலையில், இந்தியா கூட்டணியின் கீழ் போட்டியிட்டு வெற்றிபெற்ற உத்தரபிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களில் 6 பேர் மீது உள்ள வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களது பதவி பறிபோகும் அபாயம் உள்ளது.

    இதில், காஜிபூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட சமாஜ்வாடி வேட்பாளர் அப்சல் அன்சாரி பா.ஜ.க.வின் பராஸ்நாத் ராயை 1, 24, 861 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இவர் மீது ஏற்கெனவே குண்டர் சட்டத்தில் விதிக்கப்பட்ட 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதால் அவரால் இம்முறை தேர்தலில் போட்டியிட முடிந்தது.

    ஜூலை மாதம் அவரது வழக்கில் வழங்கப்பட இருக்கும் தீர்ப்புதான் அவரது புதிய எம்.பி. பதவி நீடிக்கப்படுமா அல்லது பறிக்கப்படுமா என்பதை தீர்மானிக்கும்.

    இதேபோன்று அசம்கார் தொகுதியில் வென்ற தர்மேந்திரயாதவ் மீது 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஒருவேளை அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவரது எம்.பி. பதவியும் பறிபோகும்.

    ஜான்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற சமாஜ்வாடி கட்சியின் பாபு சிங் குஷ்வாஹா மீது உள்ள சொத்து மோசடி உள்ளிட்ட 8 வழக்குகளில் ஏதேனும் ஒன்றில் அவருக்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு அளிக்கப்பட்டாலும் அவரது எம்.பி. பதவியும் கைவிட்டுப் போய்விடும்.

    சுல்தான்பூர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் மேனகா காந்தியை தோற்கடித்த ராம்புவால் நிஷாத் மீது குண்டர் சட்டம் உட்பட 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. சந்தவுலி தொகுதியில் பா.ஜ.க.வி.ன் மகேந்திரநாத் பாண்டேவை தோற்கடித்த சமாஜ்வாடியின் வீரேந்திர சிங் மீதும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    சஹாரன்பூர் தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் தலைவர் இம்ரா மசூத் மீது அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு தாக்கல் செய்திருப்பதால் அவரது எம்.பி. பதவிக்கும் ஆபத்து காத்திருக்கிறது.

    இறுதியாக, உ.பி.யில் சுயேச்சையாக வென்ற பட்டியலின தலைவர் சந்திர சேகர் ஆசாத்மீது 30 வழக்குகள் தொடுக்கப்பட்டு இருப்பதால் அவரது அரசியல் வாழ்க்கைக்கே பேராபத்து நேரும் அபாயம் உள்ளது.

    இதனால் குற்ற வழக்குகளில் சிக்கி உள்ள இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் 6 பேரின் தண்டனை உறுதியானால் அவர்களின் பதவி பறிபோகும் நிலை உள்ளது.

    • 300க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை துணை பொதுச்செயலாளர் கனிமொழி வழங்கினார்.
    • மாற்று கட்சியினை சார்ந்தவர்கள் கனிமொழி எம்.பி., முன்னிலையில் திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் தலைமையில், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் கழக துணை பொதுச்செயலாளரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சுமார் 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 300க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு, தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி, ஊட்டச்சத்து பொருட்கள் மற்றும் பழங்குடியினர் பெண்களுக்கு அரிசி, மளிகை பொருட்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை துணை பொதுச்செயலாளர் கனிமொழி வழங்கினார்.

    மேலும் பல்வேறு மாற்று கட்சியினை சார்ந்தவர்கள் கனிமொழி எம்.பி., முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய கனிமொழி எம்.பி., கூறுகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தை அச்சுறுத்தலாம் என எதிர்க் கட்சிகளின் கனவு பலிக்காது. மேலும் தமிழக ஆளுநருக்கு தமிழ்நாடு என்று அழைப்பதில் பயம். ஏனென்றால் தமிழ்நாடு என்று அழைப்பதால் தனித்துவம் பெற்றுவிடும் .எனவே தமிழகம் என்று அழைக்க வேண்டும் என கூறுகிறார். மேலும் தமிழ்நாடு அமைச்சரவையில் யார் யார் எல்லாம் இருக்க வேண்டும் என்று முடிவு செய்வது ஆளுநர் இல்லை. முடிவு செய்யும் அதிகாரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மட்டும் தான் உள்ளது. அவ்வாறு ஆளுநர் முடிவு செய்ய நினைத்தால் தேர்தலில் நின்று வெற்றி பெற்ற பிறகு முடிவு செய்யட்டும் என தெரிவித்தார்.

    நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன், வெளிநாடு வாழ் தமிழ் நல உரிமை சங்க தலைவர் கார்த்திகேய சிவ சேனாதிபதி, மாநில மகளிர் அணி துணை செயலாளர் நாமக்கல் ராணி, தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர்,மாவட்ட துணை செயலாளர் பிரபாவதி, தாராபுரம் நகர அவைத்தலைவர் கதிரவன், தாராபுரம் நகர செயலாளர் முருகானந்தம், தாராபுரம் நகர் மன்ற தலைவரும் மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளருமான கு. பாப்பு கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் எஸ்.வி.செந்தில் குமார், சந்திரசேகர், பழனிச்சாமி,சிவ செந்தில், மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் செல்வராஜ், நகர துணை செயலாளர்கள் கமலக்கண்ணன், தவ செல்வன், பேரூர் செயலாளர்கள் மக்கள் தண்டபாணி, கொளத்துப்பாளையம் துரைசாமி, கன்னிவாடி சுரேஷ், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் அமுதா, துணை அமைப்பாளர்கள் ஹைடெக் அன்பழகன், ஆனந்தி,கொளத்துப்பாளையம் பேரூராட்சி தலைவர் சுதா கருப்புசாமி மற்றும் ஸ்ரீதர், ராசாத்தி பாண்டியன்,கபடி சக்தி வேல் உள்ளிட்ட நகர்மன்ற உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதி அய்யப்பன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பயனாளிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    ×