search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புலம்பெயர்ந்தோர்"

    • மத்தியில் ஆளும் பாஜக அரசால் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த மார்ச் மாதம் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது.
    • நாட்டில் ஏற்கனவே உள்ள புலம்பெயர்ந்தோரை சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி இந்திய குடியுரிமை பறிக்கப்படுமோ என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

    மத்தியில் ஆளும் பாஜக அரசால் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் கடந்த மார்ச் மாதம் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது. ௨௦௧௯ ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி, குடியுரிமை சட்டத்தில், மேற்கு வங்கம், பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான் பகுதியில் உள்ள முஸ்லீம் அல்லாத சமூகத்தினருக்கு முக்கியமாக ஹிந்துக்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜைனர்கள், கிறித்தவர்களுக்கு விரைந்து குடியுரிமை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யபட்டது.

    இஸ்லாமியர்களை பாதிக்கும் வகையில் பாரபட்சமாக இந்த சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதே எதிர்க்கட்சிகளின் வாதமாக உள்ளது. அனால் பாஜக இதை தொடர்ந்து மறுத்து வருகிறது. நாட்டில் ஏற்கனவே உள்ள புலம்பெயர்ந்தோரை சட்டவிரோத குடியேறிகள் என்று கூறி இந்திய குடியுரிமை பறிக்கப்படுமோ என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவிக்கின்றனர். முக்கியமாக தமிழ்நாட்டில் உள்ள புலம்பெயந்த இலங்கைத் தமிழர்களுக்கு இதனால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

    இந்நிலையில் சிஏஏ மூலம் நாட்டில் முதற்கட்டமாக 14 பேருக்கு குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியுரிமைக்கு விண்ணப்பித்த டெல்லியைச் சேர்ந்த 14 புலம்பெயர்ந்வர்களிடம் மத்திய உள்துறை செயலாளர் அஜய் குமார் பல்லா அவர்களுக்கான குடியுரிமை ஆவணங்களை வழங்கி அதன் நன்மைகள் குறித்து பேசினார்.இதில் பல்வேறு அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

    • குடிபெயர்ந்தவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி வெளியேற ஒத்துக் கொள்ள வேண்டும்.
    • இல்லையெனில் சட்டவிரோதமாக நுழைந்ததாக வழக்கு தொடரப்படும்.

    அமெரிக்காவின் எல்லையில் அமைந்துள்ளது மெக்சிகோ நாடு. தென்அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேற விரும்புபவர்கள் மெக்சிகோ எல்லை வழியாகத்தான் ஊடுருவி வருகிறார்கள்.

    இது அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது. இதனால்தான் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், இரு நாடுகளின் எல்லையில் சுவர் எழுப்ப இருப்பதாக தெரிவித்தார்.

    இந்த நிலையில்தான் டெக்சாஸ் மாநிலம் புதிய குடியேற்ற சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இந்த சட்டம் மூலம் மெக்சிகோவில் இருந்து குடிபெயர்ந்தவர்களை உடனடியாக அந்நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்க முடியும். இந்த சட்டத்திற்கு நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது.

    இந்த சட்டத்தின்படி, டெக்சாஸ் மாநிலத்திற்கு குடிபெயரும் நபர்களை அமெரிக்காவில் இருந்து வெளியேற்ற முடியும். அல்லது சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்ததாக வழக்கு தொடர முடியும்.

    ஆனால், டெக்காஸ் மாநிலத்தின் இந்த புதிய குடியேற்ற சட்டத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என மெக்சிகோ தெரிவித்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகம் "எந்தவொரு சூழ்நிலையிலும் டெக்சாஸ் மாநிலத்தால் திருப்பு அனுப்படுவதை ஏற்றுக் கொள்ளமாட்டோம்" எனத் தெரிவித்துள்ளது.

    • இத்தாலிக்கு வரும் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை வருடந்தோறும் அதிகரித்து வருகிறது.
    • இதனால் அல்பேனியா நாட்டுடன் கடந்த நவம்பர் மாதம் ஒப்பந்தம் செய்து கொண்டது.

    வட ஆப்பிரிக்காவில் உள்ள பெரும்பாலான நாடுகளில் உள்நாட்டு போர் நடைபெற்றது. மேலும், நிலையற்ற அரசியல் சூழ்நிலை நிலவுகிறது. இதனால் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது.

    படகு மூலம் ஆபத்தான பயணம் மேற்கொண்டு இவ்வாறு ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றனர். இதனால் நடுக்கடலில் படகு கவிந்து உயிரிழக்கும் சம்பவமும் நடைபெற்றது.

    ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஐரோப்பிய நாடுகள் அடைக்கலம் கொடுக்க மறுத்தன. மத்திய தரைக்கடல் கரையோர நாடான இத்தாலிதான் இவர்களை வரவேற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அவர்களை நடுக்கடலில் தடுத்து நிறுத்தி வந்தது. ஆனால் வருடத்திற்கு வருடம் புலம்பெயர்வோரின் வருகை அதிகரித்து வண்ணம் உள்ளது.

    இந்த நிலையில்தான் இந்த சிக்கலை தீர்க்க இத்தாலி அல்பேனியா நாட்டுடன் கடந்த நவம்பர் மாதம் ஒரு ஒப்பந்தம் போட்டது. அந்த ஒப்பந்தத்தின்படி அல்பேனியாவும் புலம்பெயர்ந்தோரை தங்கள் நாட்டில் தற்காலிகமாக தங்க வைக்க வேண்டும். அதன்பின் விண்ணப்பம் கொடுப்பவர்களை ஏற்றுக் கொள்ளலாம். இதனால் இத்தாலியின் சுமை ஓரளவு குறையும்.

    ஆனால் இந்த ஒப்பந்தத்தை அல்பேனிய எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. என்றபோதிலும் இன்று பாராளுமன்றத்தில் இந்த ஒப்பந்தம் தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிகள் கலந்து கொள்ளவில்லை. என்றபோதிலும், போதுமான வாக்குகள் பதிவாக பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியது.

    இந்த ஒப்பந்தத்தின்படி ஒரே நேரத்தில் 3 ஆயிரம் புலம்பெயர்ந்தோருக்கு அல்பேனியா அடைக்கலம் கொடுக்க முடியும். அதன்பின் அகதிகளாக இருக்க விண்ணப்பம் செய்ய வேண்டும். இதற்கு சுமார் ஒரு மாத காலம் எடுத்துக் கொள்ளும். ஒரு வருடத்தில் அடைக்கலம் கோரும் அகதிகளின் எண்ணிக்கை 36 ஆயிரத்தை தொடக்கூடும் எனக் கூறப்படுகிறது.

    இரு நாட்டின் ஒப்பந்தத்தின்படி, இந்த செயல்முறை முழுவதும் அகதிகளுக்கு இத்தாலி சட்டப்பூர்வமாக பொறுப்பேற்க வேண்டும். மேலும் அவர்களுக்கு சர்வதேச பாதுகாப்பு வழங்கப்பட்டால் அவர்களை வரவேற்கும் அல்லது மறுத்தால் அல்பேனியாவிலிருந்து நாடுகடத்தப்படுவதற்கு ஏற்பாடு செய்யும்.

    கடந்த ஆண்டில் மட்டும் 2022-ஐ காட்டிலும் 50 சதவீதம் பேர் அகதிகளாக வந்துள்ளனர். 1,55,750 பேர் இத்தாலி கடற்கரைக்கு வந்துளற்ளனர். இதில் 17 ஆயிரம் சிறுவர்கள் துணையின்றி வந்துள்ளனர். 2022-ல் 1,03,850 பேர் வந்துள்ளனர்.

    • படகு விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள் என தெரிய வந்துள்ளது.
    • லிபியாவிலிருந்து, மத்திய தரைக்கடல் வழியாக சட்டவிரோத பயணம் தொடங்குவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    பாகிஸ்தானில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும், வேலையின்மை, வறுமை, போன்றவற்றிலிருந்து தப்பிக்கவும், சில வருடங்களாகவே பாகிஸ்தானிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு சட்ட விரோதமாக குடியேற பாகிஸ்தானியர் முயற்சி செய்து வருகின்றனர்.

    இதற்கென இருக்கும் மனித கடத்தல்காரர்களிடம் பெரும் பொருட்செலவு செய்து, ஆபத்தான முறையில் நீண்ட காலம் பயணித்து வெளிநாடுகளுக்கு, குறிப்பாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழைய முயற்சி செய்கிறார்கள். இவ்வாறு செல்பவர்கள் சில சமயம் பல்வேறு விபத்துகளில் சிக்கி உயிரிழக்க நேர்வது பல வருடங்களாக தொடர்கிறது.

    அது போன்றதொரு சம்பவம் கிரீஸ் நாட்டில் சமீபத்தில் அரங்கேறியது. கிரீஸ் நாட்டில் ஒரு படகு விபத்தில் நூற்றுக்கணக்கான சட்டவிரோத புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழந்தனர். 750 பேரை ஏற்றிச் சென்ற அந்த படகு பாரம் தாங்காமல் கிரீஸ் கடல் பகுதியில் மூழ்கியது. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

    பலியானவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள் என தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மனித கடத்தல்காரர்களுக்கு எதிராக பாகிஸ்தானின் மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் அதிரடி சோதனை நடத்தி மனித கடத்தல் வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர்கள் கைது செய்யப்படுகின்றனர்.

    கிரீஸ் படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், மனித கடத்தல்காரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். இந்த படகு விபத்து பற்றிய உண்மைகளை விசாரிக்க நான்கு பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். மேலும் மனித கடத்தலில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடிக்க சட்ட அமலாக்க நிறுவனங்களுக்கு (LEAs) உத்தரவிட்டுள்ளார். வெளிநாட்டில் இருந்து செயல்படும் பாகிஸ்தானிய மனித கடத்தல்காரர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க, வெளிநாட்டில் உள்ள பாகிஸ்தான் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுமாறு வெளியுறவு அலுவலகத்திற்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

    ஜூன் 19 ஆம் தேதி நாடு முழுவதும் துக்க நாள் என்றும், தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் அவர் அறிவித்திருக்கிறார்.

    கடந்த வெள்ளிக்கிழமை முதல், கராச்சி சர்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய்க்கு விமானத்தில் ஏற முயன்ற ஒருவர் உட்பட, மனித கடத்தல்காரர்கள் என்று சந்தேகிக்கப்படும் 12 பேரைக் கைது செய்துள்ளதாக மத்திய புலனாய்வு முகமை (FIA) உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    "இந்த நபர்கள் மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா வழியாக ஐரோப்பாவிற்கு சட்டவிரோதமாக பாகிஸ்தானியர்களை கடத்தும் முயற்சிப்பதில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்களில் சிலர் கிரீஸில் மூழ்கிய படகில் பாகிஸ்தானியர்களை அனுப்புவதிலும் ஈடுபட்டுள்ளனர்" என்று டிஐஜி ஆலம் ஷின்வாரி கூறியிருக்கிறார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள குய்ராட்டா மற்றும் சார்ஹோய் பகுதியைச் சேர்ந்த 21 பாகிஸ்தானியர்கள் அந்த படகில் இருந்தனர் என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஷின்வாரி கூறினார்.

    மற்றொரு மூத்த புலனாய்வு அதிகாரி கூறுகையில், ஐரோப்பாவிற்கு மனித கடத்தலில் ஈடுபட்டுள்ள சவுத்ரி சுல்கர்னைன், தலாத் கியானி, மற்றும் காலித் மிர்சா போன்ற பாகிஸ்தானியர்களில் சிலர் லிபியாவில் உள்ளனர்.

    "பாகிஸ்தானில் அவர்களுக்கு துணை முகவர்கள் வேலை செய்கிறார்கள். ஒவ்வொரு நபரிடமிருந்தும் 1 முதல் 2 மில்லியன் ரூபாய் மற்றும் அதைவிட அதிகமாக வசூலித்து அவற்றை ஐரோப்பாவிற்கு கொண்டு செல்கின்றனர். "அவர்கள் முதலில் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு சட்டப்பூர்வமாக விமானம் மூலம் அனுப்பப்படுகின்றனர். பின்னர் எகிப்து மற்றும் லிபியாவிற்கு மாற்றப்படுகின்றனர். பின்பு, லிபியாவிலிருந்து, மத்தியதரைக் கடல் வழியாக சட்டவிரோத பயணம் தொடங்குகிறது" என்றும் அவர் தெரிவித்தார்.

    முகவர்களுக்கு அதிக தொகையை செலுத்திய போதிலும், இந்த சட்டவிரோத மனித கடத்தல் மோசடியில், அப்பாவி பாகிஸ்தானியர்கள் எப்படி உயிர் இழக்கின்றனர் என்பதை சமீபத்திய சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

    இவ்வாறு சட்டவிரோதமான வழிகளில் செல்வதில் ஒரு சிலர் அடையும் வெற்றி, மற்றவர்களுக்கு இப்பாதையைப் பின்பற்றுவதற்கான தூண்டுதலை உருவாக்குவதாக தெரிகிறது.

    ×