search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊத்துக்கோட்டை"

    • எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் அலங்கோலமாக கிடக்கின்றன.
    • கோப்புகள் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டையில் கடந்த 1989 -ம் ஆண்டு ஜூன் 24-ந் தேதி தாலுகா அலுவலகம் தொடங்கப் பட்டது. அப்போதைய வருவாய்த்துறை அமைச்சர் நாஞ்சில் மனோகரன் தாலுகா அலுவலகத்தை தொடங்கி வைத்தார்.

    சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் வீட்டுமனை பட்டா, பட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை, பிறப்பு, இறப்பு சான்று, முதியோர், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற இந்த அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்து பயன் அடைந்து வருகிறார்கள். சுமார் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலைபார்த்து வருகிறார்கள்.

    2 அடுக்கு மாடியில் செயல்படும் இந்த தாலுகா அலுவலகத்தின் கட்டிட சுவர்களில் பல இடங்களில் விரிசல்கள் காணப்படுகின்றன. மாடிகளின் மேற்கூரை சேதம் அடைந்துள்ளதால் மழை பெய்தால் ஒழுகி தண்ணீர் அலுவலகத்தின் உள்ளே வருகிறது. இதனால் கோப்புகள் வீணாகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    கம்ப்யூட்டர் அறையில் உள்ள மின் விசிறிகள் உடைந்து காணப்படுகின்றன. கம்ப்யூட்டர் மற்றும் இதர எலெக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் சின்னாபின்னமாக அகற்றப்படாமல் அலங்கோலமாக கிடக்கின்றன.

    மேலும் இங்கு செயல்படும் இ-சேவை மையத்தில் அடிக்கடி சர்வர் சரியாக வேலை செய்யவில்லை என்று கூறி அனுப்புவதால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள்.

    இதனால் அருகில் உள்ள தனியார் இ -ேசவை மையங்களில் பணம் கொடுத்து மனுக்களை பதிவு செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதேபோல் ஆதார் அட்டை விண்ணப்பிக்கும் அறை மேல்தளத்தில் உள்ளதால் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மேல்தளத்திற்கு நடந்து செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    எனவே ஆதார் பதிவு மையத்தை கீழ்தளத்துக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தாலுகா அலுவலக வளாகத்தில் எங்கு பார்த்தாலும் முள்செடிகள், புதர்கள் வளர்ந்து காடு போல் காட்சி அளிக்கிறது.

    அலுவலகத்தில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி சரிவர பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் மனு கொடுக்க வரும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

    ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலம் முறையாக பாராமரிப்பு இல்லாமல் அலங்கோலமாக காட்சி அளிக்கிறது. அங்கு சென்றால் அரசு அலுவலகத்துக்கு சென்றது போன்ற உணர்வு இல்லை. இதனை பராமரிக்க வேண்டும்.

    மேலும் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், கழிவறை வசதிகளை மேம்படுத்த வேண்டும். போதுமான கிராம நிர்வாகம், மற்றும் வருவாய் அலுவலர்கள் இல்லாததால் கோப்புகள் தேங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    மழை பெய்யும் போது தண்ணீர் செல்ல வழியில்லாததால் வளாகம் முழுவதும் தேங்கி நிற்கிறது. தாலுகா அலுவலகத்தை சுற்றிலும் முட்புதர்கள் அகற்றப்படாமல் கிடக்கின்றன.

    கடந்த ஆண்டில் மட்டும் 18 தாசில்தார்கள் இங்கு பணியாற்றிவிட்டு இடம்மாறுதல் பெற்று சென்று உள்ளனர். எனவே ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தை முறையாக பராமரிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • உபரி நீர் ஆரணி ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம்.
    • புது பாலம் அமைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை.

    ஊத்துக்கோட்டை:

    ஆந்திர மாநிலம் பிச்சாட்டூரில் ஆரணியாறு அணை உள்ளது. இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் உபரி நீர் ஆரணி ஆற்றில் திறந்து விடப்படுவது வழக்கம்.

    இப்படி திறந்து விடப்படும் தண்ணீர் ராமகிரி, நந்தனம், சுப்பாநாயுடு கண்டிகை, அச்சம

    நாயுடு கண்டிகை, காரணி, சுருட்டப்பள்ளி ஊத்துக்கோட்டை, பெரியபாளையம் ஆரணி, புதுவாயல் வழியாக பாய்ந்து கடலில் கலக்கிறது.

    தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்த்து நிலத்தடி நீர்மட்டம் பெருக சுருட்டபள்ளியில் 1950- ம் ஆண்டில் ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பு அணை கட்டப்பட்டது.

    இந்த தடுப்பு அணையில் இருந்து ஊத்துக்கோட்டை அருகே அம்பேத்கார் நகரில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரிக்கு ஆரணி ஆற்று கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.

    இப்படி திறந்து விடப் படும் தண்ணீர் அண்ணாநகர், ஊத்துக்கோட்டை வழியாக பாய்ந்து அம்பேத்கர் நகர் ஏரிக்கு செல்லும்.

    சுருட்டப்பள்ளி தடுப்பணையில் இருந்து அம்பேத்கர் நகர் ஏரிக்கு தண்ணீர் திறந்து விடும் போதெல்லாம் ஊத்துக்கோட்டை நகர எல்லையில் சக்திவேடு சாலையில் வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது.

    இதனை கருத்தில் கொண்டு 1953-ம் ஆண்டில் ஊத்துக் கோட்டை நகர எல்லையில் சத்தியவேடு சாலையில் சிறிய பாலம் அமைக்கப்பட்டது.

    இந்தப் பாலம் வழியாகத்தான் ஊத்துக்கோட்டையில் இருந்து ஆந்திராவில் உள்ள சத்தியவேடு, தடா, சூலூர்பேட்டை, நெல்லூர், ராக்கெட் ஏவுதளம் அமைந் துள்ள ஸ்ரீஹரிகோட்டாவுக்கு வாகன போக்குவரத்து நடைபெறுகிறது.

    குறிப்பாக இந்த சாலை வழியாகத்தான் சென்னை, ஸ்ரீபெரும்புதூர், ஒரகடத்தில் உள்ள சிப்காட் தொழிற் சாலைகளில் தயாரிக்கப்படும் ராக்கெட் உதிரி பாகங்கள், கனரக வாகனங்கள் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவிற்கு கொண்டு செல்லப்படுகிறது.

    மேலும் நெல்லூர் - சென்னை இடையே தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் வாகனங்களை இந்த பாலம் வழியாக ஊத்துக்கோட்டை, திருவள்ளூர், பூந்தமல்லி மற்றும் சுற்றி உள்ள பகுதிகளுக்கு திருப்பி விடப்படும்.

    இந்த நிலையில் ஊத்துக்கோட்டையில் உள்ள இந்த பாலம் கடந்த சில மாதங்களாக பழுதடைந்து உள்ளது. இதனால் வாகனங்கள் செல்லும் போது பாலத்தில் கடும் அதிர்வு ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்த அதிர்வால் பாலத்தில் சில இடத்தில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது.

    இதேபோல் பாலத்தை தாங்கி நிற்கும் தூண்களிலும் லேசாக விரிசல் ஏற்பட்டு உள்ளன. பாலத்தில் உள்ள விரிசல்களில் செடி கொடிகள் வளர்ந்துள்ளன.

    கடந்த சில் நாட்களுக்கு முன்னர் பாலத்தின் இடது புறத்தில் மெகா பள்ளம் ஏற்பட்டது. இதனால் சுமார் 8 மணி நேரம் வாகன போக்குவரத்து தடைப்பட்டது. பொதுமக்கள் ஒன்று திரண்டு மெகா பள்ளத்தை பாறாங்கற்களை கொண்டு சீரமைத்தனர்.

    இதனை கருத்தில் கொண்டு பழுதடைந்த இந்த பாலத்தை அகற்றிவிட்டு புது பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 2 சிக்னல் கம்பங்கள் திடீரென்று உடைந்து சாய்ந்தன.
    • 6 இடங்களில் புதிய சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    ஊத்துக்கோட்டையில் 6 இடங்களில் போக்குவரத்து போலீஸ் சார்பில் கடந்த 20 வருடங்களுக்கு முன்னர் சிக்னல்கள் அமைக்கப்பட்டன. பராமரிப்பு இல்லாத காரணத்தால் இவை பழுதடைந்தன.

    கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 2 சிக்னல் கம்பங்கள் திடீரென்று உடைந்து சாய்ந்தன. சிக்னல்கள் செயல்படாததால் ஊத்துக்கோட்டை பகுதியில் கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டாக புதிதாக பொறுப்பேற்ற கணேஷ்குமார், புதிய போக்குவரத்து சிக்னல்கள் அமைக்க முயற்சி மேற்கொண்டார். அதன்படி தற்போது 6 இடங்களில் புதிய சிக்னல் கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

    ×