search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமலாக்கதுறை"

    • அமலாக்கத்துறை கைது செய்ததால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
    • உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியதும், ஜூலை 4-ந்தேதி மீண்டும் முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் உள்ளார். இவர் பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அமலாக்கத்துறை கைது செய்ததால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

    சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார்.

    இந்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு பி.ஆர். கவாய் மற்றும் கே.வி. விஸ்வநாத் ஆகிய நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமின் உத்தரவுக்கு தடைவிதிக்க மறுத்து அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது இந்த பெஞ்ச்.

    உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதியால் மிகவும் நியாயமான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதைக் காண்கிறோம். அந்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் ஹேமந்த் சோரனுக்கு வழங்கப்பட்ட ஜாமின் விசாரணை நிலை அல்லது எந்வொரு விசாரணையிலும் விசாரணை நீதிபதிக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது எனவும் தெரிவித்தனர்.

    ஜனவரி 31-ந்தேதி அமலாக்கத்துறையால் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கிய பின், ஜூலை 4-ந்தேதி மீண்டும் முதல்வராக பதவி ஏற்றார்.

    ராஞ்சியின் பார்கெய்ன் பகுதியில் 8.86 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முதலமைச்சர் பதவியை அவர் தவறாக பயன்படுத்தினார் என அமலாக்கத்துறை குற்றம்சாட்டியிருந்தது.

    பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் ஹேமந்த் சோரன் ஆஜராக நிலையில், அவரது வீட்டிற்குச் சென்று அவரிடம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை ஜனவரி 31-ந்தேதி கைது செய்தது.

    • நாடு தழுவிய அளவில் டெல்லியில் அனைத்து மாநில நிர்வாகிகள் கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெறுகிறது.
    • முன்னதாக, பெருந்துறையில் வணிகர் சங்க பேரமைப்பின் கொடியை ஏற்றி வைத்த விக்கிரமராஜா சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    ஈரோடு:

    தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா பெருந்துறையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு, ஜி.எஸ்.டி. வரி விதிக்கும் போது வரி ஏய்ப்பு இருக்காது. கூடுதல் வரி வசூல் கிடைக்கும், வணிகர்கள் நலன் பாதுகாக்கப்படும் என்று அரசு சொன்னது. இதுவரை 12 முறை சட்டம் மாற்றப்பட்டது. அரசுத்துறை அதிகாரிகளுக்கே சட்டத்தின் முழுமையான நடைமுறைகள் தெரியவில்லை.

    சாமானிய வியாபாரிகளை வாட்டி வதைக்கும் வகையில் ஜி.எஸ்.டி. துறை அதிகாரிகள் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறார்கள். தற்போது புதிதாக அமலாக்கத்துறை கையில் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் விசாரிப்பார்கள் என்று செய்திகள் வெளியிட்டு இருக்கிறார்கள்.

    அந்த நிலை கட்டாயம் ஏற்பட கூடாது. அந்த நிலையை அரசு கொண்டு வந்தால் அதை எதிர்த்து வணிகர் சங்க பேரமைப்பு போராட்டத்தை முன்னெடுக்கும்.

    போராடுவதை தவிர வேறு வழியே இல்லை. நாடு தழுவிய அளவில் டெல்லியில் அனைத்து மாநில நிர்வாகிகள் கூட்டம் இம்மாத இறுதியில் நடைபெறுகிறது. இது போன்று அமலாக்கத்துறையை, வணிகர் மத்தியில் நுழைய விட்டால் ஜி.எஸ்.டி. சோதனை என்ற அடிப்படையில் முழு அதிகாரத்தை பயன்படுத்தி சாமானிய வணிகர்கள், வணிகத்தை விட்டு வெளியேறக்கூடிய சூழ்நிலை ஏற்படும், அச்சத்துடன் பணியாற்ற வேண்டிய சூழல் ஏற்படும்.

    மத்திய, மாநில அரசுகள் அமலாக்கத்துறையை ஜி.எஸ்.டி. விசாரணைக்கு அனுமதிக்க கூடாது. அதனை மீறி அனுமதித்தால் வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக, பெருந்துறையில் வணிகர் சங்க பேரமைப்பின் கொடியை ஏற்றி வைத்த விக்கிரமராஜா சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    • ஐ.சி.யூ. வார்டில் வைத்து அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வந்தனர்.
    • எங்களை பொறுத்தவரை உடல் நலம் என்பதை அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதாபிமானத்தோடுதான் அணுகி வருகிறோம்.

    சென்னை:

    அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    ஐ.சி.யூ. வார்டில் வைத்து அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வந்தனர். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று மாலையில் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். ஆஸ்பத்திரியின் 4-வது தளத்தில் அறை எண். 435-ல் தற்போது செந்தில்பாலாஜி தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    அவரது உடல்நிலை குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவர்கள் கண்காணிப்பிலேயே இருக்கிறார். மருத்துவர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். அவர் உடல் நிலை தேறி வருவதாக தெரிவித்தார்கள். விரைவில் பூரண குணம் அடைவார்.

    எங்களை பொறுத்தவரை உடல் நலம் என்பதை அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதாபிமானத்தோடுதான் அணுகி வருகிறோம்.

    சமீபத்தில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் சி.வி.சண்முகம் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்ற போது கூட மருத்துவமனை நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து கேட்டேன்.

    இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.

    ×