என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Counsel"

    • ராஜபாளையத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அமைச்சர்களுடன் ஆலோசனை நடந்தது.
    • தென்காசி மாவட்ட செயலாளராக யாரை நியமிப்பது? என்று அமைச்சர்களுடன் ஆலோசித்தார்.

    ராஜபாளையம்

    தென்காசியில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு கடையநல்லூர், சிவகிரி, சொக்கநாதன் புத்தூர் விலக்கு வழியாக ராஜ பாளையம் வந்து சேர்ந்தார்.

    ராஜபாளையம்- தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அமிழ் ஓட்டலில் அவர் மதிய உணவு சாப்பிட்டு ஓய்வெடுத்தார். பின்னர் இரவு 7 மணி வரை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோ சனை நடத்தினார். தென்காசி மாவட்ட செய லாளராக யாரை நியமிப்பது? என்று அமைச்சர்களுடன் ஆலோசித்தார்.

    ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலு வலகம், புதுப்பாளையம் மாரியம்மன் கோவில், காந்தி கலை மன்ற விலக்கு, காந்திசிலை ரவுண்டானா, பழைய பஸ் நிலையம், பஞ்சு மார்க்கெட் வழியாக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார்.

    அவருடன் மனைவி துர்கா ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி ஆகியோரும் உடன் சென்றனர்.

    தமிழக அமைச்ச ரவையில் மாற்றம் குறித்தும், உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சரவையில் இடம் அளிப்பது தொடர்பாகவும் ஆலோசனை செய்ய ப்பட்டதாக தெரிகிறது.

    • ஜோதிமணிக்கு தலைவர் பதவி வழங்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
    • புதிய தலைவரா? அல்லது இருக்கும் தலைவருக்கே பதவி நீட்டிப்பா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரியின் பதவிக்காலம் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதால் புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்ற பேச்சு கடந்த ஒரு வருடமாகவே அடிபடுகிறது. ஆனால் டெல்லி மேலிடம் எந்த முடிவும் எடுக்கவில்லை.

    இந்நிலையில் தற்போது புதிய தலைவர் நியமனம் தொடர்பாக டெல்லி மேலிடம் பரிசீலித்து வருகிறது.

    இதையடுத்து தலைவர் பதவிக்கான ரேசில் பலர் இறங்கி இருக்கிறார்கள். இந்த போட்டியில் எம்.பி.க்கள் ஜோதிமணி, செல்வக்குமார், கார்த்திக் சிதம்பரம், முன்னாள் எம்.பி. பி.விசுவநாதன், செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் இருக்கிறார்கள்.

    செல்வப்பெருந்தகை தலித் என்ற துருப்பு சீட்டை வைத்துள்ளார். அதே நேரம் அவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து காங்கிரசுக்கு வந்தவர். அவருக்கு எதிராக கட்சியினரும் பல புகார்களை மேலிடத்துக்கு அனுப்பி உள்ளார்கள்.

    ஜோதிமணி எம்.பி ராகுலுக்கு நெருக்கமானவர். எனவே ராகுலின் தேர்வு ஜோதிமணியாகத் தான் இருக்கும் என்கிறார்கள்.

    ஆனால் ஜோதிமணிக்கும் கூட்டணியின் பிரதான கட்சியான தி.மு.க.வுக்கும் சுமூகமான உறவு இல்லை. கரூர் தொகுதியை சேர்ந்த அமைச்சர் செந்தில்பாலாஜி ஜோதிமணிக்கு எதிராக உள்ளார்.

    வருகிற தேர்தலிலும் கரூர் தொகுதியில் தி.மு.க. போட்டியிட விரும்புகிறது. எனவே ஜோதிமணிக்கு தலைவர் பதவி வழங்கப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

    டாக்டர் செல்வக்குமார் எம்.பி. இளைஞர் காங்கிரஸ் தலைவராக இருந்தபோது கட்சியை திறம்பட வளர்த்தவர். தனக்கு தலைவர் பதவி கொடுத்ததால் ஏற்க தயார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    கார்த்தி ப.சிதம்பரம் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு தனக்கு அனைத்து தகுதியும் இருப்பதாக பகிரங்கமாகவே கூறினார். அவரும் தலைவர் பதவியை பெறுவதற்கு டெல்லியில் தலைவர்களை சந்தித்து வருகிறார். தனது தந்தையான ப.சிதம்பரத்திடமும் வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது.

    முன்னாள் எம்.பி. பி.விசுவநாதன் தலித் சமூகத்தை சேர்ந்தவர். இதுவரை தலித்துக்கு தலைவர் பதவி வழங்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக எந்த பதவியிலும் இல்லை. அதேநேரம் கேரள மாநில பொறுப்பாளராக இருந்து கட்சியை வளர்த்ததையும், ராகுல் யாத்திரையை சிறப்பாக நடத்தியதையும் குறிப்பிட்டுள்ளார். மாநில தலைவர் பதவி வழங்கினால் எம்.பி. தேர்தலில் சீட் கேட்கப்போவதில்லை என்றும் அவர் உத்தரவாதம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

    திருநாவுக்கரசர் ஒரு முறை தலைவராக இருந்துள்ளார். மற்ற தலைவர்களை போல் தனக்கும் மீண்டும் ஒரு முறை வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

    இதற்கிடையில் ஐ.ஏ.எஸ். அதிகாரியான சசிகாந்த் செந்தில் தலைவர் பதவிக்கு முயற்சிப்பதாக கூறப்படுகிறது. இது பற்றி அவர் கூறும்போது, தலைவர் பதவிக்கான ரேசில் நான் இருக்கிறேனா? இல்லையா என்பது எனக்கு தெரியாது. அது கட்சி மேலிடம் எடுக்க வேண்டிய முடிவு என்றார்.

    இதற்கிடையில் கே.எஸ்.அழகிரியும் டெல்லி சென்றுள்ளார். தனது பதவி காலத்தில் கோஷ்டி பூசல் இல்லை. சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. எனவே அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலையும் சிறப்பாக எதிர்கொள்ள தனக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

    இன்று பிற்பகலில் காங்கிரஸ் தலைவர் கார்கே, ராகுல் ஆகியோர் தமிழகத்துக்கு புதிய தலைவர் நியமனம் தொடர்பாக ஆலோசிக்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் கூட் டணி கட்சிகளுடன் சுமூகமாக செல்லக்கூடியவர், கூட்டணி கட்சிகள் விரும்பக் கூடியவருக்கு முன்னுரிமை கொடுத்து புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

    புதிய தலைவரா? அல்லது இருக்கும் தலைவருக்கே பதவி நீட்டிப்பா என்பது இன்னும் ஓரிரு நாட்களில் தெரிந்துவிடும்.

    • திருச்சுழியில் கட்சி நிர்வாகிகள், முக்கியஸ்தர்களுடன் ஆலோசனை நடத்தினர்.
    • கட்சியின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    திருச்சுழி

    தியாகி இமானுவேல் சேகரனாரின் 66-வது குரு பூஜை விழா வருகிற 11-ந் தேதி அனுசரிக்கப்படுகிறது. இதற்காக ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பை சேர்ந்த நிர்வா கிகள், முக்கிய பிரமுகர்கள், சமுதாய தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் நேரில் சென்று மாலையணி வித்து நினைவஞ்சலி செலுத்த உள்ளனர்.

    இந்த நிலையில் விருதுந கர் மாவட்டம் திருச்சுழியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தியாகி இமா னுவேல் சேகரன் நினைவி–டத்திற்கு அஞ்சலி செலுத்த வருவோர் கடைபிடிக்க வேண்டிய வழிமு றைகள் மற்றும் அனுமதிக் கப்பட்ட வழித்தடங்களில் வருவது குறித்த ஆலோசனைக் கூட் டம் திருச்சுழி டி.எஸ்.பி. ஜெகநாதன் தலைமையில் நடைபெற்றது.

    இதில் திருச்சுழி மற்றும் அதனை சுற்றியுள்ள பல் வேறு கிராமங்களில் இருந்து கட்சி நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண் டனர். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்தியில் டி.எஸ்.பி. ஜெகநாதன் பேசும்போது, வருகிற செப் டம்பர் 11-ந்தேதி தியாகி இமானுவேல் சேகரானாரின் குருபூஜை விழா நடைபெறு கிறது. இதனையொட்டி திருச் சுழி மற்றும் நரிக்குடி வழி யாக மாவட்ட எல்லையான மானாசாலை சோதனைச்சா வடியை கடந்து சென்று ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபெற வுள்ள தியாகி இமானுவேல் சேகரனாரின் குருபூஜை விழாவிற்கு அஞ்சலி செலுத்த வாகனங்களில் வருவோர் முறையான அனு மதி பெற்று அரசு வகுத் துள்ள வழித்தடங்களில் வருவது உள்ளிட்ட அனைத்து வழிகாட்டு நெறி முறை களையும் தவறாது கடை பிடித்து அமைதியான முறையில் சென்று அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பி வர அனைவரும் தங்களது ஒத்து ழைப்பை வழங்க வேண்டு மெனவும் திருச்சுழி கேட்டுக் கொண்டார்.

    மேலும் தியாகி இமானு வேல் சேகரனாரின் குரு பூஜையை முன்னிட்டு நடை பெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் திருச்சுழி சரக இன்ஸ்பெக்டர் மணிகண் டன், நரிக்குடி சரக இன்ஸ் பெக்டர் ஜெகநாதன் ஆகி யோர் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் திருச் சுழி மற்றும் அதனை சுற்றி யுள்ள பல்வேறு கிராமங்க ளில் இருந்து சமுதாய தலை வர்கள், கட்சியின் நிர்வாகி கள் மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதேபோல் திருச்சுழி மற்றும் நரிக்குடி சரக காவல் நிலையத்திற்கு உட்பட்ட சப்-இன்ஸ்பெக்டர்கள், சிறப்பு சப்-இன்ஸ்பெக் டர்கள், அனைத்து பிரிவுக ளின் காவலர்கள் உட்பட ஏராளமானோர் இந்த கூட் டத்தில் கலந்து கொண்டனர்.

    • மணிப்பூர் புதிய முதல்-மந்திரி பதவிக்கு 4 பேர் பெயர் அடிபடுகிறது.
    • மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு.

    இம்பால்:

    மணிப்பூா் பா.ஜனதா முதல்-மந்திரி பிரேன் சிங் தனது பதவியை நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். புதிய ஆட்சி அமைவதற்கான சாத்தியம் இல்லாவிட்டால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

    இந்த நிலையில் புதிய முதல்-மந்திரியை தோ்வு செய்வது தொர்பாக பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுடன் மணிப்பூா் பா.ஜ.க. பொறுப்பாளா் சம்பித் பித்ரா ஆலோசனை நடத்தினாா்.

    இந்த கூட்டத்தில் பிரேன் சிங்குக்கு நெருக்கமானவா்களாக கருதப்படும் மணிப்பூா் சபாநாகர் தோக் சோம் சத்யபத்ரா, மந்திரிகள் ஒய். கேம்சந்த், பசந்த் குமாா் சிங், கோவிந்தா கோந்தோ ஜம் . பா.ஜ.க. எம்.எல்.ஏ. ராதே ஷியாம் உள்ளிட்டோா் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் குகி இன பா.ஜ.க. எம்.எல்.ஏ.க் கள் 7 பேர் பங்கேற்கவில்லை. மேலும் மேலிட பொறுப்பாளர் சம்பித் பித்ரா நாகா மக்கள் முன்னணி எம்.எல்.ஏ.க்களுடனும் தனியாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

    மணிப்பூர் புதிய முதல்-மந்திரி பதவிக்கு 4 பேர் பெயர் அடிபடுகிறது. ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட சபாநாயகர் மற்றும் 3 மந்திரிகள், முதல்-மந்திரி பதவிக்கான போட்டியில் உள்ளனர்.

    இதற்கிடையே மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

    ×