search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சினிமா பாணி"

    • லாரியில் இருந்து பொருட்கள் அடங்கிய சரக்கு மூட்டைகளை தூக்கி ரோட்டில் எறிந்தனர்.
    • காணொளியின் உண்மைத் தன்மை தெரிந்தவுடன் விசாரணை மேற்கொள்ளப்படும் என தகவல்.

    மத்திய பிரதேசத்தில் ஓடும் சரக்கு லாரியில் இருந்து மூன்று பேர் பொருட்களை திருடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஆக்ரா- மும்பை நெடுஞ்சாலையில் தேவாஸ்- ஷாஜாப்பூர் வழித்தடத்திற்கு இடையே சரக்கு லாரியில் இருந்து சிறிது தூரத்தில் கார் ஓட்டிச் சென்ற ஒருவர் இந்த சம்பவத்தை படம் பிடித்துள்ளார்.

    அந்த வீடியோவில், சரக்குகளை ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று ஆக்ரா- மும்பை நெடுஞ்சாலையில் வேகமாக சென்றுக் கொண்டிருக்கிறது.

    அப்போது, பின்னாள் பைக்கில் வந்த நபர் அவரது இரண்டு கூட்டாளியின் உதவியுடன் ஓடும் நிலையிலேயே பைக்கில் இருந்து லாரியில் ஏறுகிறார். இதேபோல், மற்றொரு நபரும் லாரியில் ஏறி இருவரும் சரக்குகளை மூடியிருந்த தார்பாயை கிழிக்கின்றனர்.

    பின்னர், லாரியில் இருந்து பொருட்கள் அடங்கிய சரக்கு மூட்டைகளை தூக்கி ரோட்டில் எறிந்தனர்.

    அதன்பிறகு, இருவரும் லாரியில் இருந்து இறங்கி, அந்த நபர் ஓட்டி வந்த பைக்கின் பின் இருக்கையில் கவனமாக இறங்கி அங்கிருந்து தப்பினர்.

    லாரி நகர்ந்ததும், சாலையில் கிடந்த சரக்கு மூட்டைகளை எடுக்க பைக்கை திருப்பினர். சினிமா பாணியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக தங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என்றும், காணொளியின் உண்மைத் தன்மை தெரிந்தவுடன் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று மத்தியப் பிரதேசத்தின் ஷாஜாபூர் மாவட்டத்தின் மக்சி காவல் நிலையத்தின் போலீஸ் அதிகாரி பீம் சிங் படேல் தெரிவித்துள்ளார்.

    • சசிகுமார் தனது குடும்பத்துடன் நெய்வேலியில் வீடு வாடகை எடுத்து வசித்து வருகிறார்.
    • கடலூர் சிறையில் இருந்து கொள்ளை நடந்த நாளில் தான் வெளியில் வந்தனர் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஒரையூர் கிராமத்தை சேர்ந்தவர் சசிகுமார் (வயது 29). இவர் நெய்வேலியில் உள்ள தனியார் வங்கியில் கேஷியராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் நெய்வேலியில் வீடு வாடகை எடுத்து வசித்து வருகிறார்.இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள் கடந்த 22-ந்தேதி இரவு இவரது பூட்டிய வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கிருந்த பீரோவை உடைத்து, அதிலிருந்த 18 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணத்தை திருடினர். மேலும், வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த காரையும் திருடிச் சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் அதே நாளில் பண்ருட்டி பகுதியில் மேலும், 2 இடங்களில் கொள்ளை நடந்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, 3 இடங்களில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனித்தனியே தனிப்படைகளை அமைத்தார்.


    அதன்படி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜாராம் உத்தரவுபடி புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமையில் ஒரையூர் கிராமத்தில் கொள்ளையடித்த நபர்களை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இதில் தனிப்படை போலீசார் சம்பவத்தன்று அந்த பகுதியில் பயன்படுத்தப்பட்ட செல்போன் நெம்பர்கள், அந்த செல்போனில் இருந்த சிம் கார்டை எடுத்துவிட்டு புதிய சிம் கார்டு போட்டு பயன்படுத்துகின்றனரா, காணாமல் போன கார் எந்தெந்த டோல்கேட்டை கடந்து சென்றது என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    அந்த நேரத்தில் திருட்டு போன கார் உளுந்தூர்பேட்டை டோல்கேட்டை கடந்து சென்றதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு செல்லும் வழியில், உளுந்தூர் பேட்டை, திருவண்ணாமலை சாலையில் கார் செல்வதாக போலீசாருக்கு மற்றொரு தகவல் கிடைத்தது. இதனையடுத்து திருவண்ணாமலைக்கு விரைந்த போலீசார் செல்போன் டவர் மூலம் திருட்டில் ஈடுபட்டவர்களின் இருப்பிடத்தை கண்டறிய முயற்சித்தனர். அவர்கள் சிம் கார்டை மாற்றியதை கண்டறிந்து, புதிய நெம்பரின் டவர் எங்குள்ளது என்பதை கண்டறிந்தனர்.உடனடியாக திருவண்ணாமலை கிரிவல பாதைக்கு சென்றபோது, திருடு போன காரின் பதிவு எண்ணை திருடர்கள் மாற்றிக் கொண்டிருந்தனர். போலீசாரை கண்ட கொள்ளையர்கள் காரை எடுத்துக் கொண்டு தப்பினர். அவர்களை பின்தொடர்ந்து விரட்டிய போலீசார் கிரிவல பாதையில் இருந்து ஒரு கிராமத்திற்கு செல்ல முயன்ற போது அவர்களின் காரை முந்தி போலீஸ் ஜிப்பை நிறுத்தி சுற்றி வளைத்தனர்.

    காரில் இருந்து இறங்கிய 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் சென்னையை சேர்ந்த பாலாஜி (வயது 26), யுவராஜ் (22) என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும், இவர்கள் கடலூர் சிறையில் இருந்து கொள்ளை நடந்த நாளில் தான் வெளியில் வந்தனர் என்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இந்த சம்பவத்தில் இவர்களு டன் சேர்ந்து கொள்ளையில் ஈடுபட்டவர்கள் யார்? யார்?, கொள்ளையடித்த நகை, பணத்தை எங்கு வைத்துள்ள னர். வேறு எங்கெங்கு கொள்ளை யடித்தனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற னர். திருவண்ணாமலை கிரிவல பாதையில் கொள்ளையர்கள் சென்ற காரை போலீசாரின் ஜிப் பின் தொடர்ந்து சென்று அவர்களை மடக்கி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×