search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாக்ஸ்கான்"

    • அதிக குடும்ப பொறுப்புகள் கொண்டுள்ளதால் திருமணமான பெண்கள் தவிர்க்கப்படுகின்றனர்
    • பாக்ஸ்கான் தலைவர் யாங் லீயு கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    இந்தியாவில் ஐபோன் உற்பத்தி செய்யும் தொழிலில் தாய்வானை சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம் முன்னணியில் உள்ளது. இந்தியா முழுவதிலும் இந்நிறுவனத்தில் 48 ஆயிரம் பணியாளர்கள் உள்ளனர். இதில் 70 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். இந்நிலையில் திருமணமான பெண்களை வேலைக்கு எடுப்பதில் பாக்ஸ்கான் நிறுவனம் பாரபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    அதிக குடும்ப பொறுப்புகள் கொண்டுள்ளதால் திருமணமான பெண்கள் தவிர்க்கப்படுகின்றனர் என்று ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த சர்ச்சைக்கு மத்தியில் தற்போது, இந்தியாவில் பாக்ஸ்கான் நிறுவனத்தில் பெண்கள் முக்கிய பொறுப்புகளுக்கு வரவேண்டும், டிசைனிங் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த பொறுப்புகளில் அவர்கள் அங்கம் வகிக்க வேண்டும்  என்று நிறுவனம் விரும்புவபதாக பாக்ஸ்கான் தலைவர் யாங் லீயு கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் புதிதாக வேலையில் சேர்ந்த பெண்களில் 25 சாத்வீதம் பேர் திருமணமான பெண்களே ஆவர் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

     

    சமீபத்தில் பாக்ஸ்கான் நிறுவனம் சார்பில் இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.706.50 கோடி மதிப்பில் ஸ்ரீபெரும்புதூர் வல்லம்-வடிகால் கிராமத்தில் பெண் பணியாளர்கள் தங்கும் சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் கட்டப்பட்டுள்ளது. 18,720 பெண் பணியாளர்கள் தங்கி பயன்பெறும் வகையில் கட்டப்பட்ட இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி திறந்து வைத்தார். இதில் பாக்ஸ்கான் தலைவர் யாங் லீயு கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

     

    • ஸ்ரீபெரும்புதூரில் பெண் பணியாளர்கள் தங்கும் விடுதியை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.
    • இந்தியாவிலேயே 2-வது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது என்றார்.

    காஞ்சிபுரம்:

    பாக்ஸ்கான் நிறுவனம் சார்பில் இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.706.50 கோடி மதிப்பில் பெண் பணியாளர்கள் தங்கும் சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் ஸ்ரீபெரும்புதூர் வல்லம்-வடிகால் கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது. இதில் 18,720 பெண் பணியாளர்கள் தங்கி பயன்பெறும் வகையில் மிக பிரமாண்டமாக இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது.

    இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தின் திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தக் குடியிருப்பு வளாகத்தை திறந்துவைத்தார். விழாவில் பாக்ஸ்கான் நிறுவன தலைவர் யாங் லீயு முன்னிலை வகித்தார்.

    பெண் பணியாளர்கள் தங்கும் விடுதியை திறந்துவைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் பாக்ஸ்கான் நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஐபோன் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

    இந்தியாவிலேயே 2-வது மிகப்பெரிய பொருளாதார மாநிலமாக தமிழகம் உள்ளது.

    தொழில் வளர்ச்சியில் தனி கவனம் செலுத்தியும், தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறோம்.

    மத்திய அரசின் நிதி ஆயோக் குறியீட்டில் தொழில் வளர்ச்சியில் முதல் 10 புள்ளிகளுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.

    இந்தியாவில் தொழிற்சாலைகளில் பெண் பணியாளர்கள் தமிழகத்தில்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.

    பெண்களுக்கான புதுமையான திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

    தெற்கு ஆசியாவிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

    • விழாவில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யாங் லீயு முன்னிலை வகித்தார்.
    • இதில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

    காஞ்சிபுரம்:

    பாக்ஸ்கான் நிறுவனம் சார்பில் இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.706.50 கோடி மதிப்பில் பெண் பணியாளர்கள் தங்கும் சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் ஸ்ரீபெரும்புதூர் வல்லம்-வடிகால் கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது.

    இதில் 18,720 பெண் பணியாளர்கள் தங்கி பயன்பெறும் வகையில் மிக பிரமாண்டமாக இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது.

    இந்நிலையில், இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தின் திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்தார். விழாவில் பாக்ஸ்கான் நிறுவன தலைவர் யாங் லீயு முன்னிலை வகித்தார்.

    இந்த விழாவில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். மேலும் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு செயலாளர் வி.அருண் ராய், சிப்காட் மேலாண்மை இயக்குனர் செந்தில் ராஜ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

    • விழாவுக்கு பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யாங் லீயு முன்னிலை வகிக்கிறார்.
    • விழாவில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ. அன்பரசன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    பாக்ஸ்கான் நிறுவனம் சார்பில் இந்தியாவிலேயே முதல் முறையாக ரூ.706.50 கோடி மதிப்பில், பெண் பணியாளர்கள் தங்கும் சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் ஸ்ரீபெரும்புதூர் வல்லம்-வடிகால் கிராமத்தில் கட்டப்பட்டுள்ளது.

    18,720 பெண் பணியாளர்கள் தங்கி பயன்பெறும் வகையில் மிக பிரமாண்டமாக இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகம் அமைந்துள்ளது.

    இந்த சிப்காட் மெகா குடியிருப்பு வளாகத்தின் திறப்பு விழா இன்று மாலை 5 மணிக்கு நடக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த குடியிருப்பு வளாகத்தை திறந்து வைக்கிறார். விழாவுக்கு பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யாங் லீயு முன்னிலை வகிக்கிறார்.

    விழாவில் அமைச்சர்கள் டி.ஆர்.பி.ராஜா, தா.மோ. அன்பரசன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். மேலும் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு செயலாளர் வி.அருண் ராய், சிப்காட் மேலாண்மை இயக்குனர் செந்தில் ராஜ் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

    • காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் பாக்ஸ்கான் நிறுவனம் உள்ளது.
    • உதிரிபாகங்களை கொண்டு ஐபோன் செல்போன்களை தயாரித்து வருகிறது.

    தமிழகத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் பாக்ஸ்கான் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் உதிரி பாகங்களை கொண்டு ஐ-போன் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். உலகின் முன்னணி நிறுவனமாக உள்ளது.

    இந்த நிறுவனம் வேலைவாய்ப்பு தொடர்பாக விளம்பரம் செய்துள்ளது. அப்போது திருமணம் ஆன இரண்டு பெண்கள் வேலை கேட்டு நேரில் சென்றுள்ளனர். அப்போது கேட் அருகில் நின்ற அதிகாரிகள் திருமணம் ஆகிவிட்டதா? என்ற கேட்டுள்ளனர். அப்போது அந்த இரண்டு பெண்களும் திருமணம் ஆகிவிட்டதாக தெரிவித்துள்ளனர். அப்படி என்றால் இங்கு வேலை கிடையாது எனத் தெரிவித்துள்ளனர்.

    இது அந்த பெண்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இது தொடர்பான செய்தி மெல்லமெல்ல பரவியது. ராய்ட்டர்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் இந்த செய்தியை மிகப்பெரிய அளவில் கட்டுரையாக எழுதி உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் திருமணம் செய்த பெண்களுக்கு வேலைகிடையாது என்ற பாகுபாடு கடைபிடிக்கப்படுவதாக விமர்சித்திருந்தனர்.

    இந்த சம்பவம் தற்போது சர்ச்சையாகியுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசிடம் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்யும்படி கேட்டுள்ளது. மண்டல தலைமை தொழிலாளர் அலுவலக ஆணையரும் அறிக்கை தாக்கல் செய்ய கேட்டுக்கொண்டுள்ளது.

    திருமணமான பெண்களுக்கு வீட்டு பொறுப்பின் காரணமாக அடிக்கடி விடுமுறை எடுக்க வேண்டியிருக்கும் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வேலை மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதேவேளையில் ஐ-போன், பாக்ஸ்கான் நிறுவனங்கள் இதுபோன்ற நடைமுறை எங்கள் நிறுவனத்தில் இல்லை என இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது.

    சம ஊதியச் சட்டம் 1976-இன் பிரிவு 5 ஆண் மற்றும் பெண் தொழிலாளர்களை பணியமர்த்துவதில் எந்தவித பாகுபாடும் காட்டக்கூடாது என்று தெளிவாக குறிப்பிடுகிறது என்று தொழிலாளர் அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

    • வேதாந்தாவுடன் இணைந்து குஜராத் மாநிலத்தில் தொழிற்சாலை அமைக்க கூட்டு ஒப்பந்தம் செய்திருந்தது.
    • இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி குறித்த தனது லட்சியங்களை இந்த முடிவு மாற்றாது என பாக்ஸ்கான் கூறியுள்ளது.

    மென்பொருள் துறையில் முன்னணியில் உள்ள உற்பத்தி நிறுவனம் தைவான் நாட்டை சேர்ந்த ஃபாக்ஸ்கான். இந்நிறுவனம் அமெரிக்காவின் முன்னணி செல்போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்திற்கு ஐபோன் தயாரிக்க தேவையான முக்கிய உதிரி பாகங்களை உற்பத்தி செய்து வருகிறது.

    இந்நிறுவனம் இந்தியாவை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான வேதாந்தாவுடன் குஜராத் மாநிலத்தில் செமிகண்டக்டர் மற்றும் டிஸ்ப்ளே உற்பத்தி செய்வதற்கு தொழிற்சாலை அமைக்க ரூ.16,000 கோடி மதிப்பிற்கு ஒரு கூட்டு ஒப்பந்தம் செய்திருந்தது.

    தற்போது இந்த ஒப்பந்தப்படி செயல்பட இயலாது என கூறி அந்நிறுவனம் விலகியுள்ளது.

    "பரஸ்பர ஒப்பந்தம் மூலம் முடிவு எடுக்கப்பட்டு, வேதாந்தாவுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் செமிகண்டக்டர் உற்பத்தி குறித்த தனது லட்சியங்களை இந்த முடிவு மாற்றாது" என கூறியுள்ளது.

    இது குறித்து வேதாந்தா தரப்பில் பதில் அளிக்கப்படவில்லை.

    இந்தியாவை உலகளாவிய, உயர் தொழில்நுட்ப உற்பத்தி சக்தியாக மாற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியங்களுக்கு இந்த நடவடிக்கை பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

    வேதாந்தாவுடனான ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்த தொழிற்சாலை வந்திருந்தால், இது மிகப்பெரிய ஒன்றாக இருந்திருக்கும்.

    இந்தியாவில் தெலுங்கானாவிலும் பெங்களூரூவிலும் தலா ஒன்று என இந்தியா முழுவதும் ஃபாக்ஸ்கான் தொழிற்சாலைகளை தொடர்ந்து உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார பதட்டங்கள் அதிகரித்து வருவதால், அமெரிக்க நிறுவனங்கள், தங்களுக்கு உதிரிபாகங்கள் வழங்கும் நிறுவனங்களை சீனாவிற்கு வெளியே தொழிற்சாலைகளை அமைக்குமாறு வலியுறுத்தி வருகின்றன.

    அமெரிக்காவின் ஆப்பிள், சீனாவின் கம்யூனிஸ்ட் ஆட்சிமுறை குறித்து பொதுவெளியில் நல்ல முறையில் கருத்துக்கள் கூறினாலும், தங்களுக்கு உதிரி பாகங்கள் வழங்கும் ஃபாக்ஸ்கான் உட்பட அனைத்து உற்பத்தியாளர்களிடமும் தங்கள் எதிர்கால உற்பத்தியின் வினியோக சங்கிலி பாதிக்காத வகையில் சீனாவிலிருந்து வெளியேற வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி வருவதாக தெரிகிறது.

    ஃபாக்ஸ்கானின் முடிவு இந்தியாவின் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலை இலக்கில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியுள்ளார்.

    ×