என் மலர்
நீங்கள் தேடியது "மதபோதகர்"
- ஜான் ஜெபராஜ் போலீசார் தேடுவதை அறிந்து முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
- கைதான ஜான் ஜெபராஜ் கோவை காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டார்.
கோவை துடியலூர் அருகே உள்ள ஜி.என். மில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (வயது 37).
இவர் காந்திபுரம் பகுதியில் செயல்பட்ட கிறிஸ்தவ ஜெபக்கூடத்தில் போதகராக பணியாற்றி வந்தார். கிறிஸ்தவ பாடல்களில் பாப் இசையை புகுத்தி பாடல்கள் பாடி வந்ததால் ஜான்ஜெபராஜ் தமிழகம் முழுவதும் பிரபலம் ஆனார்.
இவர் தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கும் சென்று கிறிஸ்தவ பாடல்களை பாடி ஜெபக்கூட்டங்கள் நடத்தி வந்தார்.
இந்தநிலையில் ஜான்ஜெபராஜ் மீது கோவையில் 2 சிறுமிகள் பாலியல் புகார் கூறினார். கடந்த ஆண்டு மே மாதம் ஜான்ஜெபராஜ் வீட்டில் விருந்து நிகழ்ச்சி நடந்தது. இந்த விழாவில் 17 வயது மற்றும் 14 வயது மதிக்கத்தக்க 2 சிறுமிகள் பங்கேற்றுள்ளனர். அந்த 2 சிறுமிகளையும் ஜான்ஜெபராஜ் தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தை வெளியில் சொல்லக்கூடாது எனவும் சிறுமிகளை அவர் மிரட்டியதாக தெரிகிறது.
இதில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த விவரங்களை கூறி கண்ணீர் விட்டு அழுதார். இதனால் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
பாதிக்கப்பட்ட 2 சிறுமிகளின் தரப்பில் இருந்தும் ஜான்ஜெபராஜ் மீது கோவை காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் ஜான்ஜெபராஜ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
ஜான்ஜெபராஜை போலீசார் தேடிச் சென்றபோது அவர் தலைமறைவாகி இருந்தார்.
இதனால் அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. ஜான்ஜெபராஜின் சொந்த ஊர் தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஆகும். இதனால் அவரை தேடி தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களுக்கு தனிப்படையினர் விரைந்தனர்.
மேலும் கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களுக்கும் சென்று போலீசார் ஜான்ஜெபராஜை தேடி வந்தனர். அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு லுக்-அவுட் நோட்டீசும் வழங்கப்பட்டது.
இவ்வாறு ஜான்ஜெபராஜை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் கேரள மாநில சுற்றுலா பகுதியான மூணாறில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் மூணாறு சென்று ஜான்ஜெபராஜை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.
இன்று அவர் கோவை காந்திபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் போலீஸ்நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜான் ஜெபராஜுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 25-ந்தேதி வரை ஜெபராஜை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
ஜான்ஜெபராஜ் போலீசார் தேடுவதை அறிந்து முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பே அவர் கைது செய்யப்பட்டு விட்டார்.
- போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த ஜான்ஜெபராஜ் தலைமறைவாகிவிட்டார்.
- மத போதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.
கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (37). கிறிஸ்தவ மத போதகர். தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த இவர் தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஆராதனையும் நடத்தி வந்தார்.
கடந்த ஆண்டு மே மாதம் அவருடைய வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் 17 வயது மற்றும் 14 வயதான 2 சிறுமிகள் கலந்து கொண்டனர். அந்த சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்கள், கோவை காட்டூரில் உள்ள அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த ஜான்ஜெபராஜ் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு நெல்லை, குமரி மற்றும் தென்காசி மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வந்தனர்.
இதனிடையே, போக்சோ வழக்கில் தலைமறைவாக இருந்த மத போதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.
இந்த நிலையில், தனிப்படை போலீசாரால் தேடப்பட்டு வந்த மதபோதகர் ஜான் ஜெபராஜ் கைதாகி உள்ளார். கேரள மாநிலம் மூணாறு அருகே பதுங்கி இருந்த ஜான் ஜெபராஜை கோவை போலீசார் கைது செய்துள்ளனர்.
- சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
- ஜான் ஜெபராஜ் பெங்களூரு சென்று அங்கிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயற்சி செய்வதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (37). கிறிஸ்தவ மத போதகர். தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த இவர் தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஆராதனையும் நடத்தி வருகிறார்.
கடந்த ஆண்டு மே மாதம் அவருடைய வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் 17 வயது மற்றும் 14 வயதான 2 சிறுமிகள் கலந்து கொண்டனர். அந்த சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து அவர்கள், கோவை காட்டூரில் உள்ள அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தன்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த ஜான்ஜெபராஜ் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த தனிப்படையினர் நெல்லை, குமரி மற்றும் தென்காசி மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஜான் ஜெபராஜ் பெங்களூரு சென்று அங்கிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயற்சி செய்வதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
ஜான் ஜெபராஜ் விமானம் மற்றும் கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வதை தடுக்க அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த லுக்-அவுட் நோட்டீசில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர், முகவரி, அவரது புகைப்படம், பாஸ்போர்ட் குறித்த தகவல், அவர் என்ன வழக்கில் சிக்கி உள்ளார் என்ற விவரம் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் போக்சோ வழக்கில் தலைமறைவாக உள்ள மத போதகர் ஜான் ஜெபராஜ் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்துள்ளனார். ஜான் ஜெபராஜ் மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
- மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனிப்படையினர் நெல்லை, குமரி மற்றும் தென்காசி மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (வயது 37). கிறிஸ்தவ மத போதகர். தென்காசி மாவட்டம் செங்கோட்டையைச் சேர்ந்த இவர் தமிழகம் மற்றும் பிற மாநிலங்கள், வெளிநாடுகளுக்கு சென்று கிறிஸ்தவ பாடல்களை பாடியும், ஆராதனையும் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் அவருடைய வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் 17 வயது மற்றும் 14 வயதான 2 சிறுமிகள் கலந்து கொண்டனர். அந்த சிறுமிகளுக்கு ஜான் ஜெபராஜ் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த சிறுமிகள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பிடம் புகார் செய்தனர்.
இதையடுத்து அவர்கள், கோவை காட்டூரில் உள்ள அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தன்மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த ஜான்ஜெபராஜ் தலைமறைவாகிவிட்டார். அவரை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அந்த தனிப்படையினர் நெல்லை, குமரி மற்றும் தென்காசி மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே அவர் பெங்களூரு சென்று அங்கிருந்து வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல முயற்சி செய்வதாக தனிப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து ஜான் ஜெபராஜ் வெளிநாடு தப்பிச்செல்வதை தடுக்க போலீசார் தக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
பாலியல் புகாரில் சிக்கிய மதபோதகர் ஜான் ஜெபராஜ், எந்த பகுதியில் பதுங்கி உள்ளார் என்பது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வெளிநாடு தப்பிச்செல்ல முயற்சி செய்வதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அவர் விமானம் மற்றும் கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு தப்பிச்செல்வதை தடுக்க அனைத்து விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு லுக்-அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. அந்த லுக்-அவுட் நோட்டீசில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர், முகவரி, அவரது புகைப்படம், பாஸ்போர்ட் குறித்த தகவல், அவர் என்ன வழக்கில் சிக்கி உள்ளார் என்ற விவரம் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அத்துடன் அந்த நோட்டீசில் சம்பந்தப்பட்ட நபர் விமான நிலையம் மற்றும் துறைமுகத்தில் பிடிபட்டால் தகவல் தெரிவிக்க வேண்டிய போலீஸ் நிலைய எண், அதிகாரிகளின் விவரங்களும் தெரிவிக்கப்பட்டு உள்ளன. எனவே மதபோதகர் கண்டிப்பாக வெளிநாடு தப்பிச்செல்ல முடியாது. அத்துடன் அவரை விரைவில் பிடித்து விடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை
- ஆடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை:
கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்தவர் ஜான் ஜெபராஜ் (வயது37). இவரது சொந்த ஊர் நெல்லை. ஜான் ஜெபராஜ் கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோட்டில் செயல்பட்ட கிறிஸ்தவ சபையின் மத போதகராக இருந்தார். ஜான் ஜெபராஜ் பாப் இசையின் மூலம் பாடல்களை பாடி இளைஞர்களை கவர்ந்து வந்தார்.
இவர் தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநி லங்ளுக்கும் சென்று பாப் இசை நிகழ்ச்சி நடத்தி வந்தார்.
இந்த நிலையில் கோவை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது 2 சிறுமிகள் பாலியல் புகார் கொடுத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜான் ஜெபராஜ் கடந்த ஆண்டு மே மாதம் 21-ந் தேதி அவரது வீட்டில் நிகழ்ச்சி ஒன்றினை நடத்தியுள்ளார். இந்த நிகழ்ச்சியில், கோவையை சேர்ந்த 17 மற்றும் 16 வயதுடைய 2 சிறுமிகளும் பங்கேற்றுள்னர்.
அப்போது, ஜான் ஜெபராஜ் அந்த சிறுமிகளை தனியாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது.
மதபோதகர் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானதை தொடர்ந்து, மத போதகர் ஜான் ஜெபராஜ் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
அவரை கைது செய்வதற்காக ஜி.என்.மில்சில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றனர். ஆனால் அவர் இல்லை.போலீசார் வழக்குப்பதிவு செய்து தன்னை தேடுவதை அறிந்ததும் அவர் தலைமறைவாகி விட்டார்.
தலைமறைவான அவரை பிடிக்க இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.
இந்த நிலையில் தலைமறைவான ஜான் ஜெபராஜ் பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து தனிப்படை போலீசார் பெங்களூரு விரைந்துள்ளனர். பெங்களூர் நகர் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஜான் ஜெபராஜின் சொந்த ஊர் நெல்லை என்பதால் அவர் நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளது என்பதால் போலீசார் அங்கும் முகாமிட்டு, அவரை தேடி வருகின்றனர்.
இதற்கிடையே தலைமறைவாக உள்ள மதபோதகர் ஜான் ஜெபராஜ் பேசி முன்பு வெளியிட்ட ஆடியோ ஒன்று தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், அவர் தனது மனைவியிடம், என்ன நடந்தது என்று உனக்கும் தெரியும். உனக்கும், எனக்கும் இடையே உள்ள சிறிய பிரச்சினையை வைத்து, ஒருவர் நம்மிடம் விளையாண்டு விட்டார்.உனக்கு ஒரு விஷயம் புரிய வேண்டும். இந்த மாதிரி பிரச்சினைகள் நடக்கிறபோது எல்லா மனிதருக்கும் முதலில் தோன்றுவது தற்கொலை எண்ணம் தான்.
எனக்கும் அதுபோன்று தோன்றியது. நான் 4-5 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளேன். 3 மாதம் மன அழுத்தத்தில் இருந்தேன். சாப்பிடவில்லை. 9 கிலோ வரை குறைந்து விட்டேன்.
நான் தவறு செய்து விட்டு, அது செய்தேன். இது செய்தேன் என கூறுகிறாய் என நினைக்கலாம். என்ன நடந்தது என்று நமக்கு தெரியும். நான் தவறு செய்திருந்தால், அதனை கடவுள் பார்த்துக்கொள்வார்.
இவ்வாறு அந்த ஆடியோவில் அவர் பேசியுள்ளார்.
இதேபோல மேலும் சில ஆடியோக்களையும் ஜான்ஜெபராஜ் பதிவு செய்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த ஆடியோ விவரங்களையும் கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- தனது வீட்டில் 2 சிறுமிகளை பாலியல் சீண்டல் செய்ததாக புகார் எழுந்தது.
- ஜான் ஜெபராஜை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை கிராஸ் கட் சாலையில் உள்ள கிறிஸ்தவ சபையை சேர்ந்த மதபோதகர் ஜான் ஜெபராஜ் மீது பாலியல் புகார் தொடுக்கப்பட்டுள்ளது.
புகாரின் பேரில் கேவை மத்திய அனைத்து மகளிர் காவல் துறையினர் ஜான் ஜெபராஜ் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம் 21ம் தேதி, கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியில் உள்ள தனது வீட்டில் 2 சிறுமிகளை பாலியல் சீண்டல் செய்ததாக புகார் எழுந்தது.
இந்நிலையில், தலைமறைவாக உள்ள ஜான் ஜெபராஜை பிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- கார் ஓட்டுனராக இருந்து மத போதகராக மாறியவர் 2003-ல் குட் நியூஸ் இன்டர்நேஷனல் அமைப்பை தொடங்கியுள்ளார்.
- கடந்த ஏப்ரல் மாதம் மனைவியுடன் மதபோதகர் கைது செய்யப்பட்டுள்ளார்
கிழக்கு ஆப்பிரிக்க நாடான கென்யாவில் ஒரு வழிபாட்டு இயக்கத்தை நடத்திய மதபோதகர் ஒருவர் தன்னை பின்பற்றுபவர்கள் கடவுளை காண, குடிநீரோ, உணவோ எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருக்க வேண்டும் என மூளை சலவை செய்துள்ளார். இதனை மூடத்தனமாக நம்பி ஒரு காட்டில் அவருடன் விரதம் இருந்தவர்களில் 400 பேருக்கும் மேல் பலியாகியுள்ளனர்.
கார் ஓட்டுனராக இருந்து மத போதகராக மாறியவர் பால் என்தென்கே மெக்கன்ஸி. குட் நியூஸ் இன்டர்நேஷனல் எனும் வழிபாட்டு அமைப்பை 2003-ல் தொடங்கிய அவரை பலர் பின்பற்றி வந்தனர்.
தன்னை பின்பற்றும் நூற்றுக்கணக்கானவர்களை கடவுளை காண ஷகஹோலா காட்டில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள உபதேசம் செய்தார். இதனை நம்பியவர்களை குழந்தைகளுடன் அங்கேயே தங்கி தடையின்றி விரதம் இருக்க வைத்திருக்கிறார். இந்த அப்பாவிகள் திடீரென முடிவை மாற்றிக் கொண்டு தப்பியோட முயற்சிக்கும்போது குண்டர்கள் மூலம் தாக்கப்பட்டும் இருக்கிறார்கள்.
இதுகுறித்து தகவல் கிடைத்து காவல்துறையினர் கடந்த ஏப்ரல் 13 அன்றே அங்கு சென்றிருக்கின்றனர். அங்கே சிலர் இறந்தும், சிலர் மிகவும் மெலிந்து குற்றுயிராகவும் கண்டெடுக்கப்பட்டனர்.
அதில் இருந்து இறந்தவர்களின் உடல்களை தோண்டி எடுக்கும் நடவடிக்கை தொடர்கிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று 12-க்கும் மேற்பட்ட உடல்கள் கிடைத்த நிலையில் பலியானோர் எண்ணிக்கை 400-ஐ தாண்டியிருக்கிறது.
பிரேத பரிசோதனை அறிக்கையின்படி கடும்பசியால் பலர் இறந்திருந்தாலும் குழந்தைகள் உட்பட பலர் கழுத்து நெரிக்கப்பட்டும், அடிக்கப்பட்டும், மூச்சுவிட முடியாமலும் இறந்திருக்கின்றனர் என தெரிய வந்திருக்கிறது.
இந்த கூட்டு புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டதும், கடந்த ஏப்ரல் மத்தியில் மெக்கன்ஸி, அவர் மனைவி மற்றும் 16 பேருடன் கைது செய்யப்பட்டார். இனப்படுகொலைக்கான தண்டனையை எதிர்நோக்கும் மெக்கன்ஸிக்கு ஜூலை 3 அன்று மோம்பாஸா நகர நீதிமன்றம் காவலை நீடித்தது.
5 கோடிக்கு மேல் மக்கள் வசிக்கும் கென்யாவில் 4 ஆயிரத்திற்கும் மேம்பட்ட மத வழிபாட்டு அமைப்புகள் உள்ளதாகவும் அவற்றில் பெரும்பான்மையானவை தவறான போதனைகளை செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் மெக்கன்ஸியை பின்பற்றுபவர்களில் 65 பேர் உணவு உண்ண மறுத்து தற்கொலைக்கு முயன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். கென்யாவின் தேசிய மனித உரிமை ஆணையம் இதனை கண்டித்து அவர்களுக்கு தண்டனை வழங்காமல் இரக்கம் காட்ட வேண்டும் என கூறியது குறிப்பிடத்தக்கது.