என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அண்ணா பல்கலைக் கழகம்"

    • முதலில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், விளையாட்டுப் பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது.
    • மாணவர்கள் இன்று காலை 10 முதல் மாலை 7 மணி வரை விருப்ப இடங்களை தேர்வு செய்ய வேண்டும்.

    சென்னை:

    அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் இயங்கி வரும் 430 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் 1.57 லட்சம் இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணைய வழியில் நடத்தப்பட உள்ளது.

    இதற்கு ஒரு லட்சத்து 87,693 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் ஒரு லட்சத்து 78 ஆயிரத்து 959 பேர் கலந்தாய்வில் பங்கேற்க தகுதி பெற்றனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 26-ந்தேதி வெளியிடப்பட்டது.

    அதைத் தொடர்ந்து கலந்தாய்வு இன்று தொடங்கியது. முதலில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், விளையாட்டுப் பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது.

    இதில் அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களில் சிறப்புப் பிரிவில் வரும் மாணவர்களுக்கு இன்றும், நாளையும் நடக்கிறது. இவர்களுக்கு விளையாட்டுப் பிரிவில் 38, முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவில் 11, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 579 இடங்கள் உள்ளன.

    இந்த இடங்களுக்கு 261 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். அதன்படி மாணவர்கள் இன்று காலை 10 முதல் மாலை 7 மணி வரை விருப்ப இடங்களை தேர்வு செய்ய வேண்டும். இவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை இரவு வெளியிடப்படும்.

    அதற்கு மறுநாள் மதியம் 3 மணிக்குள் ஒப்புதல் அளித்து உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.

    தொடர்ந்து இதர சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு 24-ந்தேதி முதல் 27-ந்தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது.

    அதன்பின் பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு 28-ந்தேதி தொடங்கி 3 சுற்றுகளாக நடைபெறும். அந்தந்த பிரிவில் வரும் மாணவர்கள் அவர்களுக்கான நாட்களில் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய மாணவர்கள் படிப்பதற்கு 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
    • இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்கனவே உள்ள கட்டணம் ரூ.6 லட்சத்து 23 ஆயிரமாக இருந்தது.

    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் இந்திய மாணவர்கள் படிப்பதற்கு 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

    ஒவ்வொரு பிரிவிலும் 5 சதவீத இடங்கள் வழங்கப்படுகின்றன.

    அண்ணா பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் ஒரு சில பிரிவுகளை தவிர அனைத்து வகைகளுக்கும் நிலையான கட்டணம் 7,500 அமெரிக்க டாலர் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் என்.ஆர்.ஐ.க்கள் கணினி அறிவியல் பொறியியல் (சி.எஸ்.இ.) தகவல் தொழில் நுட்பம் (ஐ.டி.) மற்றும் எலக்ட்ரா னிக்ஸ் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங் (இ.சி.இ.) உள்ளிட்ட 3 பாடப்பிரிவு களில் மட்டுமே சேருகிறார் கள். அதனால் இந்த 3 பாடப் பிரிவுகளுக்கான கட்டணத்தை 7,500 அமெரிக்க டாலராகவும் இவை தவிர எந்திர பொறியியல், சிவில் என்ஜினீயரிங் உள்ளிட்ட பிற கிளைகளுக்கு கட்டணத்தை குறைக்க முடிவு செய்துள்ளது.

    பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில் அடுத்த கல்வியாண்டு முதல் 3750 அமெரிக்க டாலராக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்கனவே உள்ள கட்டணம் ரூ.6 லட்சத்து 23 ஆயிரமாக இருந்தது.

    வரும் கல்வி ஆண்டு முதல் ரூ.3 லட்சத்து 11 ஆயிரமாக நிர்ணயித்துள்ளது. 50 சதவீதம் கட்ட ணத்தை குறைக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

    கல்வி கட்டணம் குறைப்பு நடவடிக்கை அதிக மாணவர்கள் தேர்வு செய்யாத படிப்புகளை பிரபலப்படுத்த உதவும் என்று அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் கூறினார்.

    • அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சிலும் இதில் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • கூட்டத்தில் அதன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    சென்னை:

    அண்ணா பல்கலைக் கழக கட்டுப்பாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகள் இணைப்பு அங்கீகாரம் பெறுவதற்காக பேராசிரியர்களை பணியில் நியமித்ததாக போலியாக கணக்கு காட்டி முறைகேடு செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    இது தொடர்பாக அறிக்கை தர வேண்டும் என தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார்.

    இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டம் துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அதன் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 124 பொறியியல் கல்லூரிகளின் அங்கீகாரத்தை திரும்ப பெறலாமா? முறை கேட்டில் ஈடுபட்ட கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

    இதற்கிடையில் முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரிகளுக்கு கருணை காட்டக் கூடாது, கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னர் ஆர்.என்.ரவி, துணைவேந்தரை கண்டித்ததாக கூறப்படுகிறது.

    அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சிலும் இதில் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் நடக்கும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது.

    • அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • பா.ஜ.க.வினர் 417 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

    இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு மாணவர் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.

    அந்த வகையில், மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தை கண்டித்து, சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் முன்பு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் நேற்று போராட்டம் நடத்தினர்.

    இந்த போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர்கள் விருகை ரவி, கே.பி.கந்தன், அசோக் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். அப்போது ஜெயக்குமார் உள்ளிட்டோரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

    உடனே அ.தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து ஜெயக்குமார் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

    இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தை முற்றுகையிட முயன்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், விருகை என்.ரவி உட்பட 900 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அனுமதியின்றி கூடுதல், சாலை மறியல் செய்த உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதைபோல மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக பா.ஜ.க.வினர் 417 பேர் மீதும் கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை மாணவிகளுக்கு தனியாக விடுதிகள் உள்ளன.
    • வெளியாட்கள் விடுதிக்குள் இருக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    கோவை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கி என்ஜினீயரிங் படிக்கும் மாணவிக்கு, பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் கோவை பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் செயல்படும் பெண்கள் விடுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருப்பதுடன் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.

    இது குறித்து கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது:-

    தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை மாணவிகளுக்கு தனியாக விடுதிகள் உள்ளன.

    இங்கு உள்ள பெரும்பாலான பகுதிகளில் 96 சி.சி.டி.வி. கண்காணிப்பு மேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.பெண்கள் விடுதிக்குள் சென்று வர ஒரே வழி தான் உள்ளது. அங்கு அதிநவீன கேமரா பயன்பாட்டில் உள்ளது. மேலும் கேமரா கண்காணிப்பு பணியில் 2 பேர் இருப்பர். மேலும் ஷிப்ட் அடிப்படையில் 14 பாதுகாவலர்கள் பணியில் உள்ளனர்.


    பல்கலைக்கழக விடுதியில் மாலை 6 மணிக்கு மாணவிகளுக்கு அட்டனன்ஸ் எடுக்கப்படுகிறது. முதுகலை மாணவிகளுக்கு லேப் பணி இருந்தால் சம்பந்தப்பட்ட துறைத்தலைவர் மற்றும் விடுதி வார்டன் ஒப்புதல் பெற்று 8 மணிக்குள் விடுதிக்கு வர வேண்டும்.

    மாணவிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இரவு நேரத்தில் கூடுதல் பாதுகாவலர்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். மேலும் போலீஸ் அக்கா திட்டம் மூலம் விடுதி மாணவிகளுக்கு பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர் ரூபா குணசீலன் (பொறுப்பு) கூறியதாவது:-

    பாரதியார் பல்கலைக்கழகத்தில் மொத்தம் உள்ள 11 விடுதிகளில் 6 பெண்கள் விடுதிகளாகும்.

    இந்த விடுதிகளில் 35-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    மேலும் கூடுதலாக தேவையுள்ள இடங்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

    வெளியாட்கள் விடுதிக்குள் இருக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இரவு 8 மணிக்குள் மாணவிகள் விடுதிக்குள் வர வேண்டும். வெளியே எங்கு சென்றாலும் அதுதொடர்பான தகவல்களை பதிவு செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    அதுவும்தவிர விடுதிகளில் கூடுதல் பாதுகாவலர்கள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதுடன் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
    • எந்த பிரச்சினையும் இல்லை என தெரியவந்துள்ளது.

    சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி கடந்த மாதம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இது தொடர்பாக போலீசார் ஞானசேகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் தகவல்களை கசியவிட்ட விவகாரம் தொடர்பாக சென்னை காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

    தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை ஜனவரி 27-ம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது. முன்னதாக சிறையில் அடைக்கப்பட்ட ஞானசேகரனை ஏழு நாட்கள் விசாரிக்க நீதிமன்ற அனுமதி பெற்று காவல் துறையினர், அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    காவல் துறையின் விசாரணையில் இருந்த ஞானசேகரன் திடீர் வலிப்பு ஏற்பட்டதாக கூற அவருக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை பிரவுக்கு அழைத்து செல்லப்பட்ட ஞானசேகரனுக்கு தலையில் ஸ்கேன் எடுக்கப்பட்டது. அதில் அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

    • 2025-26-ம் கல்வியாண்டுக்கான 'டான்செட்' நுழைவுத் தேர்வு வருகிற மார்ச் மாதம் 22-ந்தேதி நடைபெறுகிறது.
    • டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் இணையதளத்தில் அடுத்த மாதம் 21-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்விலும் (டான்செட்), எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க் ஆகிய முதுநிலை என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் சேர பொது என்ஜினீயரிங் நுழைவுத் தேர்விலும் (சீட்டா) தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்த தேர்வை, அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

    அந்த வகையில், 2025-26-ம் கல்வியாண்டுக்கான 'டான்செட்' நுழைவுத் தேர்வு வருகிற மார்ச் மாதம் 22-ந்தேதி நடைபெறுகிறது. அதேபோல், சீட்டா நுழைவுத் தேர்வு மார்ச் மாதம் 23-ந்தேதி நடைபெற உள்ளது. டான்செட் மற்றும் சீட்டா நுழைவுத் தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று தொடங்குகிறது.

    இளநிலை பட்டப்படிப்பு முடித்த அல்லது இறுதி செமஸ்டர் தேர்வு எழுதும் மாணவர்கள் டான்செட், சீட்டா நுழைவுத் தேர்வுக்கு https://tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் அடுத்த மாதம் (பிப்ரவரி) 21-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அண்ணா பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வு துறை செயலாளர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

    • யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
    • ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் முடிவு செய்தனர்.

    சென்னை:

    சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி கடந்த மாதம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இது தொடர்பாக போலீசார் ஞானசேகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என அரசியல் கட்சி தலைவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக சட்டசபையிலும் விவாதிக்கப்பட்டது.

    யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

    இந்த நிலையில் சிறையில் இருந்த ஞானசேகரனை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் முடிவு செய்தனர். கோர்ட்டில் மனு தாக்கல் செய்து விசாரணைக்கு அனுமதி கேட்டனர். கோர்ட்டு 7 நாட்கள் விசாரிக்க அனுமதி அளித்தது.

    அதைத் தொடர்ந்து ஞானசேகரனை சிறையில் இருந்து அழைத்து வந்த போலீசார் எழும்பூர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரித்தனர். பின்னர் அடையாறு துணை கமிஷனர் அலுவலகத்திற்கு கொண்டு சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

    அவரிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், லேப்டாப் ஆகியவற்றின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வு போலீசார் விடிய விடிய விசாரணை நடத்தினர்.

    அப்போது சில தகவல்களை போலீசார் திரட்டியுள்ளனர். அதில் அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் கைதான பிரியாணி கடை உரிமையாளர் ஞானசேகரனுடன் 40 போலீசார் தொடர்பில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது

    • அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஞானசேகரன் கைது செய்யப்ட்டுள்ளான்
    • சென்னை காவல் ஆணையருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி கடந்த மாதம் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். இது தொடர்பாக போலீசார் ஞானசேகரனை கைது செய்து சிறையில் அடைத்தனர்

    இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பாலியல் பலாத்கார வழக்கையும், முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்த வழக்கையும் விசாரிக்க 3 பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து உத்தரவிட்டனர்.

    மேலும் விசாரணை ஆரம்பகட்ட நிலையில் உள்ளபோது, அரசு அனுமதி இன்றி செய்தியாளர் சந்திப்பை நடத்தி, வழக்கு குறித்த முக்கிய தகவல்களை பகிர்ந்த சென்னை போலீஸ் கமிஷனர் அருணுக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் எனவும் அரசுக்கு உத்தரவிட்டது..

    உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை FIR ஆவணம் எவ்வளவு நேரம் டவுன்லோட் செய்யும் வகையில் இருந்தது? மாணவி தொடர்பான விவரங்களை வெளியிட்டது யார் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

    அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில், சென்னை காவல் ஆணையர் மீதான உயர் நீதிமன்றத்தின் கருத்துகளுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

    மேலும், காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    • விசாரணையின்போது குடும்ப விவரங்களை போலீசார் ஏன் கேட்க வேண்டும்?.
    • எப்ஐஆர் கசிவு தொடர்பாக வேறு யாரை விசாரித்தீர்கள்?

    சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை தொடர்பாக பதிவான எப்.ஐ.ஆர். இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நிலையில் லீக் ஆனது. இதுகுறித்து சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    அந்த எப்.ஐ.ஆர். நகலை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்தவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரித்து வருகின்றனர். அந்த வரிசையில் குற்றங்கள் தொடர்பாக செய்தி சேகரித்து வரும் கிரைம் பிரிவு செய்தியாளர்களுக்கும் சம்மன் அனுப்பி விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

    அவர்களில் மூன்று பேரின் மொபைல் போன்களை பறிமுதல் செய்துள்ளனர். இதனை எதிர்த்து செய்தியாளர்கள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் "செய்தியாளர்களை போலீசார் துன்புறுத்தக்கூடாது. அவர்களிடம் பறிமுதல் செய்த மொபைல்போனை திருப்பி ஒப்படைக்க வேண்டும். செய்தியாளர்கள் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்" என உத்தரவிட்டது.

    மேலும், "விசாரணையின்போது குடும்ப விவரங்களை போலீசார் ஏன் கேட்க வேண்டும்?. பத்திரிகையாளர்களுக்கு மூன்று முறை சம்மன் அனுப்பியது ஏன்?. எப்ஐஆர் கசிவு தொடர்பாக வேறு யாரை விசாரித்தீர்கள்? எப்ஐஆர் இணையத்தில் பதிவேற்றம் செய்தது யார்?" என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியது. 

    • தடயவியல் சோதனை மையத்தில் ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை நடத்தப்பட்டது.
    • ஞானசேகரனின் நீதிமன்ற காவல் இன்றோடு முடிகிறது.

    சென்னை:

    அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஞானசேகரன் மிகவும் கொடூரமாக நடந்து கொண்டிருந்தார். அப்போது அவர் போனில் வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்த மாணவி அந்த சாருடனுடன் நீ உல்லாசமாக இருக்க வேண்டும் என்று தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

    இதைதொடர்ந்து ஞானசேகரனிடமிருந்து அவரது செல்போனை முக்கிய ஆதாரமாக போலீசார் கைப்பற்றியுள்ளனர். மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு என்பதால் இந்த வழக்கில் திரட்டப்பட்ட ஆதாரங்களை போலீசார் முதன்மையானதாக கருதி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அந்த வகையில் ஞானசேகரன் போனில் பேசியது தொடர்பாக குரல் பரிசோதனை நடத்துவதற்கு முடிவு செய்திருந்தனர். இது பற்றி சென்னை டி.ஜி.பி. அலுவலக வளாகத்தில் உள்ள தடயவியல் சோதனை மையத்தில் ஞானசேகரனுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. 3 மணி நேரமாக நடத்தப்பட்ட இந்த பரிசோதனையின் போது பல கோணங்களில் அவரை பேச வைத்து குரலை பதிவு செய்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை நடத்தவும் போலீசார் முடிவு செய்து உள்ளனர். இது தொடர்பாக கோர்ட்டில் அனுமதி கேட்டுள்ள போலீசார் விரைவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்துச் சென்று ரத்த பரிசோதனையை மேற்கொள்வதற்கு திட்டமிட்டு உள்ளனர்.

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் சம்பவத்தில் ஈடுபட்ட போது கைப்பற்றப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலேயே அடுத்த கட்டமாக இந்த ரத்த பரிசோதனை நடத்தப்படுகிறது. குரல் பரிசோதனை போன்று இந்த ரத்த பரிசோதனையும் பாலியல் வன்கொடுமை வழக்கில் முக்கியமான பரிசோதனையாகவே பார்க்கப்படுகிறது. இதற்கிடையே ஞானசேகரனின் நீதிமன்ற காவல் இன்றோடு முடிகிறது.

    இதை தொடர்ந்து அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்த உள்ளனர். அப்போது ஞானசேகரனின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட உள்ளது. இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய உள்ள போலீசார் வழக்கு விசாரணையை விரைந்து முடித்து ஞானசேகரனுக்கு கடும் தண்டனையை வாங்கி கொடுக்க திட்டமிட்டு உள்ளனர்.

    • கடந்த வாரம் ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை நடத்தப்பட்டது.
    • ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    அண்ணா பல்கலைக் கழக பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஞானசேகரனிடமிருந்து செல்போனை முக்கிய ஆதாரமாக போலீசார் கைப்பற்றி உள்ளனர்.

    மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு என்பதால் இந்த வழக்கில் திரட்டப்பட்ட ஆதாரங்களை போலீசார் முதன்மையானதாக கருதி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடந்த வாரம் ஞானசேகரனுக்கு குரல் பரிசோதனை நடத்தப்பட்டது. 3 மணி நேரமாக நடத்தப்பட்ட இந்த பரிசோதனையின்போது பல கோணங்களில் அவரை பேச வைத்து குரலை பதிவு செய்தனர்.

    இந்நிலையில் ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை செய்ய சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்ததையடுத்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.

    ×