search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்ஆர் விஜயபாஸ்கர்"

    • எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு.
    • முன் ஜாமின் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளதாக கூறி, வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    இதுதொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இதையடுத்து தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் கரூர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் அவரது சகோதரர் சேகர் முன் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

    வழக்கு தொடர்பான ஆவணங்களை காவல் துறையினர் ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில், தங்களிடம் விசாரணை நடத்த எந்த அவசியமும் இல்லை என்பதால் முன் ஜாமின் வழங்க வேண்டும் என கோரி இருந்தார்.

    இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்.ஆர். விஜயபாஸ்கர் சகோதரருக்கு முன்பு ஜாமின் வழங்கக் கூடாது என்றும், அவருக்கு முன் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்றும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது என்றும் காவல்துறை தரப்பு வழக்கறிஞர் உதயகுமார் எதிர்ப்பு தெரிவித்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சகோதரர் சேகரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    இந்நிலையில், ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாரின் சகோதரர் சேகர், செல்வராஜ் ஆகியோர் சிபிசிஐடி போலீசாரால் கைது செய்ய்பப்பட்டுள்ளனர்.

    • தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டார்.
    • எம்.ஆர். விஜயபாஸ்கர் சகோதரருக்கு முன் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்று வழக்கறிஞர் எதிர்ப்பு தெரிவித்தார்.

    சென்னை:

    கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளதாக கூறி, வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

    இதுதொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு பின்னர் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    இதையடுத்து தலைமறைவாக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் கரூர் நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டது. இந்த நிலையில் அவரது சகோதரர் சேகர் முன் ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனுவில், புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை. அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

    வழக்கு தொடர்பான ஆவணங்களை காவல் துறையினர் ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில், தங்களிடம் விசாரணை நடத்த எந்த அவசியமும் இல்லை என்பதால் முன் ஜாமின் வழங்க வேண்டும் என கோரி இருந்தார்.

    இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, எம்.ஆர். விஜயபாஸ்கர் சகோதரருக்கு முன்பு ஜாமின் வழங்கக் கூடாது என்றும், அவருக்கு முன் ஜாமின் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார் என்றும் அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியுள்ளது என்றும் காவல்துறை தரப்பு வழக்கறிஞர் உதயகுமார் எதிர்ப்பு தெரிவித்தார்.

    வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் சகோதரர் சேகரின் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

    • கழுத்தில் காயம் ஏற்பட்ட பிரவீன் கரூர் தனியார் மருத்துவமனை சிகிச்சை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    • பிரவீன் மீது நடந்த தாக்குதல் பின்னணியில் திமுகவினர் இருப்பதாக சந்தேகம் உள்ளது.

    கரூர்:

    22 ஏக்கர் நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுதலையான முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகிய இருவரும் நிபந்தனை அடிப்படையில் கரூர் சிபிசிஐடி காவல் நிலையத்தில் தினமும் இரண்டு முறை கையெழுத்து போட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காலை சுமார் 11 மணியளவில் பிரவீன் கரூர் ரெட்டிபாளையம் பகுதியில் உள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்த போது காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பிரவீனை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடினர்.

    இந்த தாக்குதலில் கழுத்தில் காயம் ஏற்பட்ட பிரவீன் கரூர் தனியார் மருத்துவமனை சிகிச்சை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அதிமுக பிரமுகரும், முன்னாள் அரசு வக்கீலுமான கரிகாலன் கூறுகையில், பிரவீன் மீது நடந்த தாக்குதல் பின்னணியில் திமுகவினர் இருப்பதாக சந்தேகம் உள்ளது. கரூர்-கோவை சாலையில் பொது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் பிரவீனை தாக்கி விட்டு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் அந்த கும்பல் மிரட்டல் விடுத்துள்ளது. தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகளை சேகரித்து போலீசாரிடம் வழங்கியுள்ளோம். அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பிரவீன் ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.

    • இரு வழக்குகளிலும் தனக்கு ஜாமின் வழங்க கோரி கரூர் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்தார்.
    • கைதான காவல் ஆய்வாளர் பிருத்விராஜூக்கும் கரூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

    கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

    இவ்வழக்கில் ஜாமின் கோரி எம்.ஆர். விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு தள்ளுபடியானதை அடுத்து அவர் தலைமறைவானார். இதையடுத்து அவரை தேடி வந்த சிபிசிஐடி போலீசார் கடந்த 16-ந்தேதி கேரளாவில் வைத்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    இதைதொடர்ந்து இந்த இரு வழக்குகளிலும் தனக்கு ஜாமின் வழங்க கோரி கரூர் குற்றவியல் நீதித்துறை நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று நடைபெற்றது.

    அப்போது இரு வழக்குகளிலும் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், மறு உத்தரவு வரும் வரை சிபிசிஐடி அலுவலகம் மற்றும் வாங்கல் காவல் நிலையத்தில் தினமும் காலை, மாலை என இரு வேளையிலும் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.

    இதே வழக்கில் கைதான காவல் ஆய்வாளர் பிருத்விராஜூக்கும் கரூர் நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.

    • எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உதவியதாக சென்னை வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிருத்விராஜ் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.
    • வழக்கில் தொடர்பு உடைய மேலும் சிலரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    கரூர்:

    கரூரில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்து மோசடி செய்ததாக கரூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது ஆதரவாளர் பிரவீன் உட்பட சிலர் மீது சார் பதிவாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கரூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு கடந்த 16ம் தேதி கேரளா மாநிலம் திருச்சூரில் பதுங்கி இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளரான பிரவீன் ஆகிய 2 பேரை கைது செய்து மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் பிரவீன் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் 2 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரித்தனர். இந்த போலீஸ்காவல் நிறைவடைந்ததையடுத்து நேற்று பிற்பகல் 2 பேரையும் கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் ஒன்றில் நீதிபதி பரத் குமார் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். முன்னதாக கரூர் வாங்கல் போலீஸ் நிலையத்தில் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் எம்.ஆர் விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்ளிட்ட சிலர் மீது மீது கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த கொலை மிரட்டல் வழக்கில் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக வாங்கல் போலீசார் இன்னொரு மனு தாக்கல் செய்தனர். அந்த வகையில் முன்னாள் அமைச்சர் எம் ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பிரவீன் ஆகிய 2 பேரையும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி பரத் குமார் அனுமதி வழங்கினார்.

    அதைத் தொடர்ந்து வாங்கல் போலீசார் ரெண்டு பேரையும் அழைத்து சென்று ரகசிய இடத்தில் வைத்து நேற்று இரவு முதல் விடிய விடிய விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று 3-வது நாளாக அவரிடம் காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இந்த போலீஸ் காவல் இன்று நிறைவடைவதால் மாலை 5.30 மணிக்கு மீண்டும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதனிடையே ரூ.100 கோடி நிலம் மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு உதவியதாக சென்னை வில்லிவாக்கம் இன்ஸ்பெக்டர் பிருத்விராஜ் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்பு உடைய மேலும் சிலரை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

    இதற்காக சி.பி.சி.ஐ.டி போலீசார் சென்னையில் முகாமிட்டு கண்காணித்துவருகிறார்கள். இதனிடையே இந்த வழக்கில் சென்னையை சேர்ந்த மேலும் ஒருவரை போலீசார் இன்று காலை கைது செய்தனர். அவரை கரூருக்கு அழைத்து வந்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

    • வாங்கல் போலீசார் கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு.
    • 2 நாட்கள் சிபிசிஐடி காவல் முடிந்து நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜர்.

    ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே அந்த நிலத்தின் உரிமையாளர் பிரகாஷ் கொடுத்த புகாரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர், பிரவீன் உள்ளிட்டோர் மீது வாங்கல் போலீசார் கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த கொலை மிரட்டல் வழக்கு தொடர்பாக திருச்சி சிறையில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீசார் கைது செய்தனர். இதைதொடர்ந்து, திருச்சி மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீசார் வேனில் கரூருக்கு அழைத்து வந்தனர்.

    இந்நிலையில், 2 நாட்கள் சிபிசிஐடி காவல் முடிந்து நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆஜர்படுத்தப்பட்டார்.

    எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு மேலும் ஒரு நாள் போலீஸ் காவல் நீட்டித்து கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கொலை மிரட்டல், ஆள் கடத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் பதியப்பட்ட வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்த நீதிபதியிடம் போலீசார் அனுமதி கேட்டனர்.

    போலீசார் அனுமதி கேட்ட நிலையில், ஒரு நாள் மட்டும் போலீஸ் காவல் வழங்கி நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    • அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
    • திருச்சி மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீசார் வேனில் கரூருக்கு அழைத்து வந்தனர்.

    கரூர்:

    ரூ.100 கோடி நிலமோசடி வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    இதற்கிடையே அந்த நிலத்தின் உரிமையாளர் பிரகாஷ் கொடுத்த புகாரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது தம்பி சேகர், பிரவீன் உள்ளிட்டோர் மீது வாங்கல் போலீசார் கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த கொலை மிரட்டல் வழக்கு தொடர்பாக திருச்சி சிறையில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். நேற்று திருச்சி மத்திய சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீசார் வேனில் கரூருக்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-2-ல் நீதிபதி (பொறுப்பு) மகேஷ் முன்பு நேற்று காலை 11.50 மணி அளவில் அவரை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி வருகிற 31-ம் தேதி வரை எம்.ஆர்.விஜயபாஸ்கரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    இதனையடுத்து மதியம் 1.15 மணியளவில் கரூர் கோர்ட்டில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர்.

    எம்.ஆர்.விஜயபாஸ்கரை கோர்ட்டில் ஆஜர்படுத்தும் தகவல் தெரிந்தவுடன் ஏராளமான அதிமுகவினர் அங்கு திரண்டனர். இதனையொட்டி கரூர் கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    • எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்பட 13 பேர் மீது வாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    • விஜயபாஸ்கர் ஆஜர்படுத்தப்படுவதை அறிந்த அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் கோர்ட்டு முன்பு திரண்டார்கள்.

    கரூர்:

    கரூரில் ரூ. 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிப்பு செய்ததாக முன்னாள் அமைச்சர் மற்றும் கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர்களான செல்வராஜ், பிரவீன் உள்பட 7 பேர் மீது கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் மேலக்கரூர் சார்பதிவாளர் முகமது அப்துல் காதர் புகார் அளித்தார். இந்த வழக்கில் தனது பெயரும் சேர்க்கப்படலாம் என கருதிய முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கரூர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு 2 முறை தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

    இதற்கிடையே இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து கரூர் வாங்கலை சேர்ந்த பிரகாஷ் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அவரது சகோதரர் சேகர் மற்றும் பிரவீன் உள்பட 13 பேர் தன்னை மிரட்டி அந்த ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்து விட்டதாக புகார் அளித்தார். இதில் எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்பட 13 பேர் மீது வாங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதை அறிந்து எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமறைவானார். பின்னர் ஒரு மாத கால தேடுதல் வேட்டைக்கு பிறகு கேரள மாநிலம் திருச்சூரில் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர் பிரவீன் ஆகியோரை கைது செய்து கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். அதன்பின்னர் ஆவணங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என போலியான நான் டிரேசபிள் சான்றிதழ் வழங்கிய வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரிதிவிராஜ் கைது செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் நேற்று மேலும் ஒரு வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டார். பிரகாஷ் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட கொலை மிரட்டல், நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளில் சம்பிரதாய கைது (பார்மல்) நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கான உத்தரவை திருச்சி மத்திய ஜெயில் அடைக்கப்பட்டுள்ள எம்.ஆர். விஜயபாஸ்கரிடம் போலீசார் வழங்கினர்.

    இந்த நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள வழக்கில் எம்.ஆர். விஜயபாஸ்கரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தினர். இதற்காக கரூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருச்சி சிறையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் அவரை அழைத்து வந்தனர்.

    விஜயபாஸ்கர் ஆஜர்படுத்தப்படுவதை அறிந்த அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் கோர்ட்டு முன்பு திரண்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது.

    • எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
    • எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது தொழில் அதிபர் பிரகாஷ் வாங்கல் போலீஸ் நிலையத்தில் மேலும் ஒரு புகார் அளித்தார்.

    கரூர்:

    கரூரில் உள்ள மேலக்கரூர் சார்பதிவாளர் (பொ) முகமது அப்துல் காதர் கரூர் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரில், போலி சான்றிதழ் கொடுத்து மோசடியாக பத்திரப்பதிவு செய்ததாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவரது சகோதரர் சேகர், பிரவீண் உள்ளிட்ட 13 பேர் மீது சி.பி.சி.ஐ.டி. போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பிரவீண் ஆகியோரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று முன்தினம் கேரளா மாநிலம் திருச்சூரில் கைது செய்தனர்.

    இதையடுத்து கரூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்-1 நீதிபதி பரத்குமார் முன்னிலையில் 2 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். இதை தொடர்ந்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையிலும், பிரவீன் குளித்தலை கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கில் போலியான 'நான்டிரேசபிள்' சான்றிதழ் கொடுத்து உடந்தையாக இருந்ததாக கூறி சென்னை வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிருதிவிராஜும் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது தொழில் அதிபர் பிரகாஷ் வாங்கல் போலீஸ் நிலையத்தில் மேலும் ஒரு புகார் அளித்தார்.

    அதில் தன்னை எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக குறிப்பிட்டிருந்தார். இதை தொடர்ந்து வாங்கல் போலீசார் திருச்சி வந்து சிறையில் இருக்கும் எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ததாக குறிப்பாணை கடிதத்தில் கையெழுத்து பெற்றனர்.

    • எம்.ஆர்.விஜயபாஸ்கரை வரும் 31ஆம் தேதி வரை திருச்சி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டுள்ளார்.
    • இதுவரை தாம்பரம் காவல் நிலையத்தில் பிரித்விராஜ் பொறுப்பேற்காத நிலையில் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    போலி பத்திரம் மூலம் ரூ.100 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் தலைமறைவாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

    நேற்று காலை கேரளா சென்று எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்த சி.பி.சி.ஐ.டி போலீசார், மதியம் சுமார் 2.10 மணியளவில் கரூருக்கு அழைத்து வந்து திண்ணப்பா நகரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

    இதையடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கரை வரும் 31ஆம் தேதி வரை திருச்சி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், நில மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் சி.பி.சி.ஐ.டி. போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கரூர் சார் பதிவாளர் வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் விசாரித்த போது, ஆய்வாளர் பிரித்விராஜ் அதுபோன்று சான்று கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார். ஆய்வாளர் பிரித்விராஜ் கரூர் நகர காவல் நிலையத்தில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    வில்லிவாக்கம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த பிரித்விராஜ் தாம்பரம் காவல் நிலையத்திற்கு மாற்றம் வாங்கி சென்றுள்ளார். இதுவரை தாம்பரம் காவல் நிலையத்தில் பிரித்விராஜ் பொறுப்பேற்காத நிலையில் சி.பி.சி.ஐ.டி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    • கொலை மிரட்டல் விடுத்ததாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
    • காவல் நிலையம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்ஆர் விஜயபாஸ்கர். ரூ. 100 கோடி மதிப்பிலான நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக இவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

    இதையடுத்து தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கரை நேற்று சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை வரும் 31ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

    வருகிற 31 ஆம் தேதி வரை திருச்சி மத்திய சிறையில் நீதிமன்ற காவலில் வைக்க குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த விவகாரத்தில் எம்ஆர் விஜயபாஸ்கருக்கு எதிராக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. பிறகு இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. அதன்படி வழக்கில் ஜாமின் கோரி மனுத்தாக்கல் செய்த எம்ஆர் விஜயபாஸ்கர் கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தலைமறைவாக இருந்தார்.

    இதைத் தொடர்ந்து அவர் கேரளாவில் இருப்பதாக கிடைத்த தகவலை கொண்டு, கேரளா விரைந்த சிபிசிஐடி போலீசார் அம்மாநிலத்தில் வைத்து எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்தனர்.

    • சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து விஜயபாஸ்கரை தேட தொடங்கினார்கள்.
    • எம்.ஆர்.விஜயபாஸ்கரின் முன் ஜாமின் மனுவும் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

    அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.

    கரூர் மாவட்டம் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப் பதிவு செய்து விட்டதாகவும், இதுபற்றி கேட்ட போது கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கரூர் போலீஸ் நிலையத்திலும் சூப்பிரண்டு அலுவலகத்திலும் புகார் செய்தனர்.

    இது தொடர்பாக கரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தார்கள்.

    இந்த நிலையில் ஐகோர்ட்டு மதுரை கிளையில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது சகோதரர் சேகர் ஆகியோர் முன் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்தனர்.

    அரசியல் முன் விரோதத்தில் பொய் புகார் அளிக்கப்பட்டிருப்பதாக அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தனர்.

    ஏற்கனவே கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன் ஜாமின் மனு தள்ளுபடியாகி இருந்த நிலையில் ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே சி.பி.சி.ஐ.டி. போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து விஜயபாஸ்கரை தேட தொடங்கினார்கள். இதை அறிந்ததும் விஜயபாஸ்கர் தலைமறைவானார். அவர் வெளிமாநிலத்தில் தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்டது. ஒரு மாதமாக அவரை கண்டு பிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் அவரது முன் ஜாமின் மனுவும் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் அவர் கேரளாவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே போலீசார் கேரளா விரைந்தனர். அங்கு நண்பர் ஒருவரது வீட்டில் தங்கி இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கரை போலீசார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.

    இதன் பின்னர் கைது செய்யப்பட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்துவதற்காக கரூர் அழைத்து வரப்பட்டார். கரூர் திண்ணப்பா நகரில் உள்ள அலுவலகத்தில் வைத்து சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×