search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "20 ஓவர் உலக கோப்பை"

    • ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது.
    • வங்காளதேசம் புள்ளி எதுவும் பெறவில்லை.

    செயின்ட்லூசியா:

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் 'சூப்பர் 8' சுற்று ஆட்டத்தில் 'குரூப் 1' பிரிவில் உள்ள இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    இந்திய அணி ஆப்கானிஸ்தான் (47 ரன்), வங்காளதேசம் (50 ரன்) அணிகளை வீழ்த்தி இருந்தது. ஆஸ்திரேலியாவை தோற்கடித்து அரை இறுதிக்கு நுழையும் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது.

    இந்திய அணி தோற்றாலும் பாதிப்பு இருக்காது. ஏனென்றால் ரன்ரேட் நன்றாக இருக்கிறது. அதே நேரத்தில் மோசமாக தோற்கக் கூடாது. இந்த நிலைமை நடைபெறாமல் இருக்க ஆஸ்திரேலியாவை வீழ்த்துவது நல்லதாகும்.

    இதே பிரிவில் நாளை காலை 6 மணிக்கு நடைபெறும் கடைசி ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன. 'குரூப் 1'-ல் இந்தியா 4 புள்ளிகளுடனும், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் 2 புள்ளிகளுடனும் உள்ளது. வங்காளதேசம் புள்ளி எதுவும் பெறவில்லை.

    • சூப்பர்-8 சுற்று இன்று தொடங்குகிறது.
    • விளையாடும் 8 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    பிரிட்ஜ்டவுன்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர்-8 சுற்று இன்று தொடங்குகிறது. இதில் விளையாடும் 8 அணிகளும் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    குரூப் -1 பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா ஆப்கானிஸ்தான், வங்காள தேசமும், குரூப் 2 பிரிவில் அமெரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கவும் இடம் பெற்றுள்ளன.

    சூப்பர் 8 சுற்றில் இன்று இரவு 8 மணிக்கு நடை பெறும் தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

    குரூப் 1 பிரிவில் இடம் பெற்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை நாளை (வியாழக்கிழமை) இரவு 8 மணிக்கு எதிர்கொள்கிறது. அரை இறுதியில் நுழைய 2 ஆட்டத்தில் வெல்ல வேண்டும். இதனால் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முன்னேற இந்திய அணி முயற்சிக்கும்.

    அமெரிக்க ஆடுகளங்கள் பந்துவீச்சுக்கு மிகவும் ஏற்றதாக இருந்தது. பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பது சவாலாக இருந்தது. இனி வரும் ஆட்டங்கள் அனைத்தும் வெஸ்ட் இண்டீசில் தான் நடக்கிறது. இங்குள்ள 'பிட்ச்கள்' சமமானதாக இருக்கும்.

    இந்திய அணி லீக் சுற்றில் அயர்லாந்து (8 விக்கெட்), பாகிஸ்தான் (6 ரன்), அமெரிக்கா (7 விக்கெட்) ஆகிய அணிகளை வீழ்த்தி இருந்தது. கனடாவுடன் மோத வேண்டிய ஆட்டம் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப் பட்டது. தோல்வியை சந்திக்காத இந்திய அணி நம்பிக்கையுடன் ஆப் கானிஸ்தானை சந்திக்கும்.

    'சூப்பர் 8' சுற்றில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது. அதேநேரத்தில் ஆப்கானிஸ் தானை சாதாரணமாக கருதிவிட முடியாது. அந்த அணி இந்த தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இருந்தது. இதனால் கவனமுடன் விளையாட வேண்டும்.

    கடந்த 2 போட்டியிலும் இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. முக்கியமான 'சூப்பர் 8' சுற்றில் மாற்றம் செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

    அணியின் முன்னணி சுழற்பந்து வீரரான குல்தீப் யாதவ் இதுவரை ஒரு ஆட்டத்தில் கூட விளையாட வில்லை. அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டால் அக்ஷர் படேல் அல்லது ஜடேஜா கழற்றி விடப்படலாம். முகமது சிராஜ் ஒரு விக்கெட் மட்டுமே கைப்பற்றி இருக்கிறார். இதனால் அவரது நிலையும் கேள்வி குறியாக இருக்கலாம். அர்ஷ்தீப் சிங், பும்ரா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் பந்து வீச்சில் சிறப்பாக உள்ளனர்.

    பேட்டிங்கில் ரிஷப்பண்ட், கேப்டன் ரோகித் சர்மா, சூர்ய குமார் யாதவ் ஆகியோர் சிறப்பான நிலையில் உள்ளனர். உலகின் முன்னணி பேட்ஸ்மேனான வீராட் கோலி இந்த தொடரில் ஜொலிக்க வில்லை. 3 ஆட்டத்திலும் சேர்த்து 5 ரன்களே எடுத்தார். ஐ.பி.எல்.

    போட்டியில் அதிரடியாக விளையாடியதால் வாய்ப்பை பெற்றார். தொடக்க வீரரான அவரது வரிசையில் ஜெய்ஷ்வாலுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்ற கருத்து எழுந்துள்ளது. வெற்றி அணியே போதுமானது என்று கருத்தினால் மாற்றம் இருக்காது.

    ரஷீத்கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்து விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அணி லீக் ஆட்டத்தில் உகாண்டா (125 ரன்), நியூசிலாந்து (84 ரன்) பப்புவா நியுகினியா (7 விக்கெட்) ஆகியவற்றை தோற்கடித்து இருந்தது.

    வெஸ்ட் இண்டீசிடம் (104 ரன்) மட்டும் தோற்றது.

    ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சம பலத்துடன் இருக்கிறது. ரகுமதுல்லா குர்பாஸ், இப்ராகிம் சர்தான் ஆகியோர் பேட்டிங்கிலும், பரூக்கி, ரஷீத்கான் பந்து வீச்சிலும் நல்ல நிலையில் உள்ளனர்.

    • அபார பந்து வீச்சால் வங்காளதேசம் திணறியது.
    • வங்காளதேசம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கிங்ஸ்டவுன்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

    செயினட் வின்சென்டில் இந்திய நேரப்படி இன்று காலை 5 மணிக்கு தொ டங்கிய 37-வது லீக் ஆட்டத்தில் டி பிரிவில் வங்காள தேசம்-நேபாளம் அணிகள் மோதின.

    டாஸ் ஜெயித்த நேபாளம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் அபார பந்து வீச்சால் வங்காளதேசம் திணறியது.

    எந்த வீரரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. வங்காளதேசம் 19.3 ஓவர்களில் 106 ரன்னுக்கு ஆல்-அவுட் அனது.

    நேபாளம் தரப்பில் சோம்பால்கமி, சந்தீப் லமிச்சனே, ரோகித் பவுடல், திபேந்திர சிங் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடி நேபாளமும் திணறியது.

    அந்த அணி 26 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்தது. அதன்பின் குவுல்மல்லா, திபேந்திர சிங் ஜோடி சிறிது தாக்குபிடித்து விளையாடியது. அவர்கள் அவுட் ஆனதும் விக்கெட்டுகள் சரிந்தன. நேபாளம் 19.2 ஓவரில் 85 ரன்னுக்கு ஆல்-அவுட் அனது. இதனால் வங்காளதேசம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வங்காளதேசம் தரப்பில் தன்சிம் ஹசன் சாகிப் 4 விக்கெட்டும், முஸ்தாபிசுர் ரகுமான் 3 விக்கெட்டும், ஷகீப்-கல்-ஹசன் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இந்த வெற்றி மூலம் வங்காளதேசம் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி 4 ஆட்டத்தில் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றது.

    ஏற்கனவே இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, நெதர்லாந்து, அயர்லாந்து, கனடா, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், உகாண்டா, பப்புலா நியூகினியா, நேபாளம் ஆகிய அணிகள் வெளியேற்றப் பட்டன.

    சூப்பர்-8 சுற்றுக்கான ஆட்டம் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.

    • மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.
    • தென் ஆப்பிரிக்கா ‘சூப்பர் 8’ சுற்றுக்கு தகுதி பெற்றது.

    புளோரிடா:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்ஹில்லில் 23-வது 'லீக்' ஆட்டம் இன்று நடை பெற இருந்தது. இதில் 'டி' பிரிவில் உள்ள இலங்கை-நேபாளம் அணிகள் மோத வேண்டியது.

    ஆனால் மழையால் ஒரு பந்து கூட வீசப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த போட்டி தொடரில் மழையால் கைவிடப்பட்ட 2-வது போட்டி இதுவாகும். ஏற்கனவே 'பி' பிரிவில் உள்ள இங்கிலாந்து-ஸ்காட் லாந்து அணிகள் மோதிய ஆட்டம் மழையால் பாதியில் ரத்தாகி இருந்தது.

    இலங்கை-நேபாளம் இடையேயான ஆட்டம் கைவிடப்பட்டதால் இந்த பிரிவில் தென் ஆப்பிரிக்கா 'சூப்பர் 8' சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி 6 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது.

    வெற்றிபெற வேண்டிய ஆட்டம் மழையால் ரத்தானதால் இலங்கைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்த அணி போட்டியில் இருந்து கிட்டத்தட்ட வெளி யேற்றப்படும் நிலையில் இருக்கிறது. இலங்கை அணி தென் ஆப்பிரிக்கா, வங்காள தேசத்திடம் தோற்று இருந்தது.

    1 புள்ளியுடன் இருக்கும் அந்த அணி கடைசி ஆட்டத்தில் நெதர்லாந்துடன் 17-ந் தேதி மோதுகிறது.

    ஒரு புள்ளியுடன் உள்ள நேபாளம் அடுத்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 15-ந் தேதி எதிர்கொள்கிறது. இந்த பிரிவில் வங்காள தேசம், நெதர்லாந்து அணிகள் தலா 4 புள்ளியுடன் உள்ளன. இரண்டு அணிகளுக்கும் 2 போட்டிகள் எஞ்சியுள்ளன.

    • ஹாட்ரிக் வெற்றியுடன் சூப்பர்-8 சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.
    • நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்குமா?

    நியூயார்க்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அயர்லாந்து அமெரிக்கா, கனடா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது. 2-வது போட்டியில் பாகிஸ்தானை 6 ரன்னில் வென்றது.

    இந்திய அணி 3-வது ஆட்டத்தில் போட்டியை நடத்தும் நாடுகளில் ஒன்றான அமெரிக்காவை நாளை (12-ந் தேதி) எதிர்கொள்கிறது. இந்த போட்டி நியூயார்க்கில் உள்ள நசாவு ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

    இந்திய அணி அமெரிக்காவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் சூப்பர்-8 சுற்றுக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.

    அயர்லாந்துக்கு எதிராக பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. பாகிஸ்தான் போட்டியில் பேட்டிங் மிகவும் ஏமாற்றத்தை அளித்தது. ரிஷப் பண்ட் ஒருவரே தாக்கு பிடித்து ஆடினார். அபாரமான பந்துவீச்சால் வெற்றி கிடைத்தது. கிட்டத்தட்ட தோற்க வேண்டிய ஆட்டத்தில் வெற்றி அமைந்தது. அமெரிக்க அணி பாகிஸ்தானை வீழ்த்தி இருந்ததால் மிகவும் கவனமுடன் விளையாட வேண்டும்.

    நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. வீராட் கோலி 2 ஆட்டத்திலும் தொடக்க வரிசையில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இதனால் ரோகித் சர்மாவுடன், ஜெய்ஷ்வால் தொடக்க வீரராக ஆடலாம். கோலி மிடில் வரிசையில் களம் இறங்கலாம். ஷிவம் துபே கழற்றி விடப்படலாம்.

    சூர்ய குமார் யாதவ், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா ஆகியோர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. 2 ஆட்டத்திலும் வெற்றியை பெற்றதால் மாற்றம் செய்ய அணி நிர்வாகம் விரும்பாது.

    பந்துவீச்சில் பும்ரா, அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா , அக் ஷர் படேல் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.இதனால் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம்.

    இந்தியாவை போலவே மோனக் படேல் தலைமையிலான அமெரிக்க அணியும் முதல் 2 ஆட்டத்தில் வெற்றி பெற்று உள்ளது. கனடாவை 7 விக்கெட் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை சூப்பர் ஓவரிலும் வீழ்த்தி இருந்தது.

    இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்து அமெரிக்கா விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா அணிக்கு அதிர்ச்சி கொடுத்து ஹாட்ரிக் வெற்றியை பெறும் வேட்கையில் அந்த அணி உள்ளது.

    • ஸ்காட் லாந்து 5 புள்ளிகளுடன் ‘பி’ பிரிவில் முன்னிலையில் உள்ளது.
    • ஸ்காட்லாந்து பெற்ற 2-வது வெற்றியாகும்.

    ஆன்டிகுவா:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடை பெற்று வருகிறது.

    ஆன்டிகுவாவில் இந்திய நேரப்படி இரவு 10.30 மணிக்கு தொடங்கிய 20-வது லீக் ஆட்டத்தில் 'பி' பிரிவில் உள்ள ஸ்காட்லாந்து-ஓமன் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற ஓமன் கேப்டன் அக்யூப் இல்யாஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் விளையாடிய ஓமன் அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன் எடுத்தது. இதனால் ஸ்காட்லாந்துக்கு 151 ரன் இலக்காக இருந்தது.

    தொடக்க வீரர் பிரதிக் அதாவாலே 40 பந்தில் 54 ரன்னும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), அயன்கான் 39 பந்தில் 41 ரன்னும் (4 பவுண்டரி) எடுத்தனர். ஷப்யான் ஷரீப் 2 விக்கெட்டும், மார்க் வாட், பிரட் வீல், கிறிஸ் சோலே, கிறிஸ் கிரீவ்ஸ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றி னார்கள்.

    பின்னர் ஆடிய ஸ்காட்லாந்து அணி 13.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    பிரண்டன் மெக்முல்லன் 31 பந்தில் 61 ரன்னும் (9 பவுண்டரி, 2 சிக்சர்), ஜார்ஜ் முன்சே 20 பந்தில் 41 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். பிலால் கான், அக்யூப் இல்யாஸ், மெக்ரன் கான் ஆகியோருக்கு தலா 1 விக்கெட் கிடைத்தது.

    ஸ்காட்லாந்து பெற்ற 2-வது வெற்றியாகும். அந்த அணி நமீபியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது. இங்கிலாந்துடன் மோதிய ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. ஸ்காட்லாந்து 5 புள்ளிகளுடன் 'பி' பிரிவில் முன்னிலையில் உள்ளது. அந்த அணி கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை 16-ந்தேதி எதிர்கொள்கிறது.

    ஓமனுக்கு 3-வது தோல்வி ஏற்பட்டது. அந்த அணி நமீபியாவிடம் சூப்பர் ஓவரிலும், ஆஸ்திரேலியா விடம் 39 ரன்னிலும் தோற்று இருந்தது. கடைசி ஆட்டத்தில் இங்கிலாந்துடன் 14-ந்தேதி மோதுகிறது.

    • 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது.
    • இந்த ஆடுகளத்தில் விளையாடுவது சவாலானது.

    நியூயார்க்:

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்திய அணி 'ஏ'பிரிவில் இடம் பெற்று உள்ளது. பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது.

    இந்திய அணி 2-வது போட்டியில் பாகிஸ்தானை இன்று (ஞாயிற்றுக்கிழமை) எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் நியூயார்க்கில் உள்ள நசாவு ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

    பாகிஸ்தானை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் இந்தியா இருக்கிறது. பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. அந்த அணி தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவிடம் அதிர்ச்சிகரமாக தோற்றது.

    இந்தப் போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறிய தாவது:-

    7 மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தானுக்கு எதிராக ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை போட்டியில் விளையாடினோம். தற்போது 20 ஓவர் உலக கோப்பையில் விளையாட இருக்கிறோம். பெரிதாக எந்த ஒரு மாற்றமும் இல்லை.

    அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஆட்டத்தின் சூழ் நிலைகளுக்கு ஏற்றவாறு விளையாட விரும்புகிறேன். நியூயார்க் ஆடுகளங்களைப் பற்றி புரிந்து கொள்வதற்கு கடினமாக இருக்கிறது. இந்த ஆடுகளத்தில் விளையாடுவது சவாலானது.

    ஆடுகளங்களை சீரமைப்பவர்களும் ஆடுகளம் குறித்து புரிந்து கொள்ள சிரமப்படுகிறார்கள். ஆடுகளங்கள் எப்படி இருக்கும் என்பது அவர்களுக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • தரமற்று இருப்பதாக முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.
    • விரும்பியபடி இல்லை என்பதை ஐ.சி.சி அங்கீகரிக்கிறது.

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக அமெரிக்காவின் நியூயார்க்கில் நாசாவ் கவுண்டி ஸ்டேடியத்தில் கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டது. இதில் புதிதாக உருவாக்கப்பட்ட ஆடுகளம் உருவாக்கப்பட்டது.

    இந்த செயற்கை ஆடு களத்தில் பந்து கணிக்க முடியாத அளவுக்கு சீரற்ற முறையில் பவுன்ஸ் ஆகிறது. இது சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டுக்கு ஏற்றதல்ல என்றும் தரமற்று இருப்பதாகவும் முன்னாள் வீரர்கள் சிலர் கருத்து தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இவ் விவகாரம் குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூறும்போது, 'நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இது வரை பயன்படுத்தப்பட்ட ஆடுகளங்கள் நாம் அனைவரும் விரும்பியபடி இல்லை என்பதை ஐ.சி.சி அங்கீகரிக்கிறது. உலகத் தரம் வாய்ந்த மைதானக் குழு, நிலைமையை சரி செய்யவும், மீதமுள்ள போட்டிகளுக்கு சிறந்த மேற்பரப்புகளை வழங்கவும் கடினமாக உழைத்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.

    • கோப்பையை வென்றால் தரவரிசையில் மேம்பாடு அடைந்து ஸ்பான்சர்கள் கிடைப்பார்கள்.
    • நிதி நெருக்கடியை குறைத்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு நன்மை கிடைக்கும்.

    கயானா:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்காவில் இன்று காலை தொடங்கியது.

    முதல் ஆட்டத்தில் அமெரிக்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் கனடாவை (ஏ பிரிவு) தோற்கடித்தது.

    2-வது போட்டி வெஸ்ட் இண்டீசில் இன்று நடக்கி றது. கயானாவில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத் தில் 'சி' பிரிவில் உள்ள வெஸ்ட் இண்டீஸ்-பப்புவா நியூ கினியா அணிகள் மோதுகின்றன.

    2 முறை 20 ஓவர் உலக கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸ் வெற்றியுடன் கணக்கை தொடங்க இருக்கிறது.

    இந்த நிலையில் உலக கோப்பையை வெல்வது வெஸ்ட் இண்டீசுக்கு நிதி நெருக்கடியை குறைத்து பெரும் ஊக்கத்தை ஏற்படுத்தும் என்று அந்த அணி கேப்டன் போவெல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

    உலக கோப்பையை 3-வது முறையாக வெல்வது வெஸ்ட் இண்டீசுக்கு நல்லதாக இருக்கும். சொந்த மண்ணில் கோப்பையை வென்றால் சிறப்பாக இருக்கும். கோப்பையை வென்றால் எங்கள் குழந்தைகள், பேரக்குழந்தைகளிடம் நினைவு கூர்வோம்.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டின் நிதி நிலைப்பாடு குறித்து நாங்கள் அறிவோம். உலக கோப்பையை வெல்வது நிதி ரீதியாக எங்களுக்கு ஊக்கம் கிடைக்கும். நிதி நெருக்கடியை குறைத்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு நன்மை கிடைக்கும்.

    மேலும் கோப்பையை வென்றால் தரவரிசையில் மேம்பாடு அடைந்து ஸ்பான்சர்கள் கிடைப்பார்கள்.

    இவ்வாறு போவெல் கூறியுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்திய அணி இரண்டு குழுவாக அமெரிக்கா செல்கிறது. ஒரு பகுதி வீரர்கள் இன்று செல்கிறார்கள்.
    • ஐ.பி.எல். இறுதிப்போட்டி முடிந்த பிறகு மற்றொரு குழு செல்கிறது.

    9-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.

    'ஏ'பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா, கனடா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.

    இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அயர்லாந்தை ஜூன் 5-ந்தேதி எதிர் கொள்கிறது. பாகிஸ்தானுடன் 9-ந்தேதியும் அமெரிக்காவுடன் 12-ந்தேதியும் கனடாவுடன் 15-ந்தேதியும் மோதுகிறது. இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு போட்டிகள் நடக்கிறது.

    உலக கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் அமெரிக்கா-கனடா (இந்திய நேரப்படி ஜூன் 2, காலை 6 மணி) மோதுகின்றன.

    20 ஓவர் உலக கோப்பை போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி இன்று அமெரிக்கா புறப்பட்டு செல்கிறது.

    இந்திய அணி இரண்டு குழுவாக அமெரிக்கா செல்கிறது. ஒரு பகுதி வீரர்கள் இன்று செல்கிறார்கள். ஐ.பி.எல். இறுதிப்போட்டி முடிந்த பிறகு மற்றொரு குழு செல்கிறது.

    கேப்டன் ரோகித் சர்மா, துணை கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சூர்யகுமார் யாதவ், பும்ரா, ரிஷப்பாண்ட், அர்ஷ்திப் சிங் உள்ளிட்ட வீரர்கள் இன்று நியூயார்க் புறப்பட்டு செல்கிறார்கள்.

    சஞ்சு சாம்சன், ஜெய்ஷ் வால், அவேஷ்கான், யசுவேந்திர சாஹல், ரிங்கு சிங், உள்ளிட்டோர் வருகிற 27-ந்தேதி அமெரிக்கா புறப்பட்டு செல்கிறார்கள்.

    20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள 15 வீரர்கள் விவரம்:-

    ரோகித் சர்மா (கேப்டன்), ஹர்திக் பாண்ட்யா (துணை கேப்டன்), ஜெய்ஷ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப்பண்ட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ஜடேஜா, அக்சர் படேல், பும்ரா, அர்ஷ்தீப் சிங், சாஹல், குல்தீப் யாதவ், முகமது சிராஜ்.

    மாற்று வீரர்களாக சுப்மன்கில், ரிங்குசிங், கலீல் அகமது, அவேஷ் கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நியூசிலாந்து உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.
    • வடக்கு பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    போர்ட் ஆப் ஸ்பெயின்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடக்கிறது.

    இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து உள்பட 20 நாடுகள் பங்கேற்கின்றன.

    ஏ பிரிவில் இந்திய அணி இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தானும் இதே பிரிவில் இருக்கிறது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் ஜூன் 9-ந் தேதி நியூயார்க்கில் மோதுகின்றன.

    இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் விடுத்து இருப்பதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) இன்று தெரிவித்து உள்ளது.

    வடக்கு பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் மிரட்டல் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதை டிரினிடாட் பிரதமரும் வெளிப்படுத்தி உள்ளார். இதை தொடர்ந்து போட்டி நடைபெறும் நகரங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று ஐ.சி.சி. தெரிவித்துள்ளது.

    • நாம் நீண்ட காலம் விளையாடி முன்னணி வீரர்களாக வலம் வரும்போது வயதைப் பற்றி பேசத் தொடங்குவார்கள்.
    • கோலி, ரோகித் சர்மா இந்தியாவிற்கு சிறந்த வீரர்களாக உள்ளனர்.

    20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது. இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு விராட் கோலி, ரோகித் சர்மா ஓய்வு பெற வேண்டும் என்று இந்திய அணி முன்னாள் வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

    நாம் நீண்ட காலம் விளையாடி முன்னணி வீரர்களாக வலம் வரும்போது வயதைப் பற்றி பேசத் தொடங்குவார்கள். உங்களது பார்மை மறந்து விடுவார்கள். கோலி, ரோகித் சர்மா இந்தியாவிற்கு சிறந்த வீரர்களாக உள்ளனர். அவர்கள் விரும்பும் போது ஓய்வு பெற தகுதியானவர்கள்.

    எப்போது நினைக்கிறார்களோ அப்போது அவர்கள் தங்களின் ஓய்வு குறித்து முடிவெடுக்கலாம். ஆனால் 20 ஓவர் கிரிக்கெட்டில் நிறைய இளம் வீரர்கள் விளையாட நான் விரும்புகிறேன். அது மூத்த வீரர்களின் வேலைப் பளுவை குறைக்கும். இந்த 20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு நிறைய இளம் வீரர்கள் அணிக்குள் வந்து அடுத்த 20 ஓவர் உலகக் கோப்பைக்கு அணியில் இடம் பெறுவதைப் பார்க்க விரும்புகிறேன். 20 ஓவர் உலக கோப்பைக்கு பிறகு கோலி, ரோகித் 20 ஓவர் அணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×