என் மலர்
நீங்கள் தேடியது "பிச்சைக்காரர்கள்"
- சென்னை மாநகர சாலைகளில் பிச்சை எடுப்பவர்களில் ஆந்திர மாநில கிராமப்புறங்களில் இருந்து வந்தவர்களே அதிக அளவில் காணப்படுகிறார்கள்.
- கொரோனா காலத்துக்கு பிறகு பிச்சை எடுக்க வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது.
சென்னை:
சென்னை மாநகரில் போக்குவரத்து சிக்னல்களில் கை குழந்தைகளுடன் பெண்கள் பிச்சை எடுப்பதும் பள்ளிக்கூடம் செல்லும் வயதில் சிறுவர் சிறுமிகள் பிச்சை எடுப்பதும் சமீப காலமாக அதிகரித்துள்ளது. பிச்சை எடுப்பதை தடுப்பதற்காக கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பே பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்ட போதிலும் பிச்சை எடுப்பது என்பது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களிலும் தவிர்க்க முடியாததாகவே இருந்து வருகிறது.
பிச்சைக்காரர்களை ஒழித்து பிச்சைக்காரர்களே இல்லாத மாநகராக சென்னை மாநகரை மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த நடவடிக்கைகளில் இருந்து வரும் சுணக்கம் மற்றும் தாமதம் காரணமாக தற்போது பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
சிங்காரச் சென்னையை பிச்சைக்காரர்களே இல்லாத மாநகரமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை மாநகரில் பிச்சைக்காரர்கள் தங்குவதற்காக விடுதிகள் ஏற்படுத்தப்பட்டு முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளன. முதலில் 15 தங்கும் விடுதிகள் மட்டுமே இருந்த நிலையில் தற்போது கிட்டத்தட்ட 200 வார்டிலுமே பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுக்காக தங்கும் விடுதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் 9 பெண்கள் விடுதிகளும் 12 ஆண்கள் விடுதிகளும் உள்ளன. மொத்தமுள்ள 51 விடுதிகளில் மீதமுள்ளவை குழந்தைகளின் நலனுக்காக பேணப்பட்டு வருகிறது.
இந்த விடுதிகள் தேசிய ஊரக வாழ்வாதார மிஷன் மூலமாகவும் சென்னை மாநகராட்சி மூலமாகவும் நடத்தப்பட்டு வருகிறது. 60 சதவீதம் நிதி பங்களிப்பை தேசிய ஊரக வாழ்வாதார மிஷனும் 40 சதவீத நிதி பங்களிப்பை மாநகராட்சியும் வழங்கி வருகின்றன.
ஒரு விடுதிக்கு 13 லட்சம் என்ற வகையில் 51 விடுதிகளுக்கும் 6.68 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டு வருகிறது. என்.ஜி.ஓ.க்கள் தன்னார்வலர்களும் இந்த விடுதியை நடத்துவதில் தங்களது பங்களிப்பை கொடுத்து வருகிறார்கள்.
இந்த விடுதியில் மாநகராட்சி பணியாளர்கள் இருவர் பணியமர்த்தப்படுகிறார். ஆனால் இங்கு பணியமர்த்துபவர்களை நீண்ட நாட்களாகவே அங்கு பணியில் இருக்கச் செய்வதும் வேறு இடத்துக்கு பணி ஒதுக்காமல் இருப்பதும் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அங்கு பணிபுரிபவர்கள் சோர்வுற்று காணப்படுவதாகவும் இந்த பணிக்கு மாநகராட்சி பணியாளர்களை மாற்றி மாற்றி பணியமர்த்த வேண்டும் என்கிற கோரிக்கையும் உள்ளது. மீண்டும் மறுவாழ்வு மையம் போன்ற செயல்படும் இந்த விடுதிகளை சரியாக பராமரித்து பிச்சைக்காரர்களை அங்கு முறைப்படி கொண்டு போய் சேர்ப்பதில்லை என்கிற குற்றச்சாட்டும் உள்ளது.
அதே நேரத்தில் சாலைகளில் மீட்கப்படும் பிச்சைக்காரர்கள் இந்த விடுதியில் கொண்டு விட்டாலும் அங்கு அதிகாரிகள் ஆலோசனை கேட்டு அவர்கள் மனம் திருந்துவதில்லை. மீண்டும் பிச்சை எடுக்கவே சென்று விடுகிறார்கள். எனவே சாலைகளில் பிச்சை எடுப்பவர்களை முழுமையாக மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்துக்கு தேவையான வசதிகளை மேற்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கை நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.
சென்னை மாநகரில் பிச்சைக்காரர்களின் தொல்லை பல மடங்கு அதிகரித்திருப்பதற்கு மாநகராட்சி அதிகாரிகளின் முறையற்ற விடுதி பராமரிப்பும் ஒரு காரணம் என்கிற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது. சாலைகளில் பிச்சை எடுப்பவர்களை மாநகராட்சி அதிகாரிகள் எப்போதுமே கண்டு கொள்வதில்லை என்றும் குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது.
எனவே இனி வரும் காலங்களில் பிச்சைக்காரர்களை மீட்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.
சென்னை மாநகர சாலைகளில் பிச்சை எடுப்பவர்களில் ஆந்திர மாநில கிராமப்புறங்களில் இருந்து வந்தவர்களே அதிக அளவில் காணப்படுகிறார்கள். கொரோனா காலத்துக்கு பிறகு பிச்சை எடுக்க வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரிய வந்துள்ளது. பிச்சைக்காரர்கள் இல்லாத மாநகராக சிங்கார சென்னையை மாற்றுவது மாநகராட்சி அதிகாரிகளின் கையிலேயே உள்ளது. அதனை அவர்கள் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்? என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
- மத்திய அரசு நடவடிக்கை எடுத்து அதற்கான பட்டியலை தயார் செய்து வருகிறது.
- பெண்கள் மற்றும் குழந்தைகளின் மறுவாழ்வுக்காக முதல் கட்டமாக 30 முக்கிய நகரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் ஆன்மிக நகரங்கள், வரலாற்று சிறப்பு மிக்க நகரங்கள் மற்றும் சுற்றுலா சிறப்பு வாய்ந்த பகுதிகள் அதிக அளவில் உள்ளன. இந்த பகுதிகளில் பிச்சைக்காரர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளன.
நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் அதிகரித்து வரும் பிச்சைக்காரர்கள் எண்ணிக்கை காரணமாக பல்வேறு வகைகளில் பிரச்சினைகள் ஏற்படுவதாலும், அவர்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் அமைச்சகம் முக்கிய முடிவுகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு முதல் கட்டமாக 30 நகரங்களை பிச்சைக்காரர்கள் இல்லாத பகுதியாக மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுத்து அதற்கான பட்டியலை தயார் செய்து வருகிறது.
இந்த நகரங்களில் இன்னும் 2 ஆண்டுகளில் பிச்சைக்காரர்களுக்கு தனியாக மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளது. ஆன்மிக நகரங்களில் சம்பந்தப்பட்ட மத அறக்கட்டளைகள் மற்றும் ஆலய நிர்வாகம் மூலமும் மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்த திட்டம் வகுக்கப்பட்டது வருகிறது.

இதற்காக நாட்டின் வட பகுதியில் அயோத்தியில் இருந்து கிழக்கே கவுகாத்தி வரையிலும், மேற்கு பகுதியில் திரிம்பகேஸ்வர் முதல் தெற்கே திருவனந்தபுரம் வரையிலும் பிச்சை எடுக்கும் தொழிலில் ஈடுபடும் முதியவர்கள், முக்கியமாக பெண்கள் மற்றும் குழந்தைகளின் மறுவாழ்வுக்காக முதல் கட்டமாக 30 முக்கிய நகரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் முக்கிய நோக்கமே பிச்சைக்காரர்கள் இல்லாத பகுதிகளாக மாற்றுவதாகும். இதற்காக மத்திய அரசு சம்பந்தப்பட்ட மாநிலத்தில் உள்ள மாவட்ட மற்றும் நகராட்சி அதிகாரிகளுக்கு இது தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் முழுமையாக செய்து கொடுக்க திட்டமிட்டுள்ளது. இந்த பணிகளை 2 ஆண்டுகளில் முடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவு (ஸ்மைல்) என்ற துணை திட்டத்தின் கீழ் பிச்சைக்காரர்களுக்கு மறுவாழ்வு மையங்களை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பிச்சை இல்லாத இந்தியா என்ற இலக்கை நிறைவேற்ற இந்த நடவடிக்கை உதவிகரமாக இருக்கும் என்றும் மத்திய அரசு கணித்துள்ளது.
இதற்காக மத்திய அமைச்சகம் ஒரு தேசிய போர்டல் மற்றும் மொபைல் செயலியை அடுத்த மாதம் தொடங்கவும் திட்டமிட்டுள்ளது. இந்த செயலி மூலம் பிச்சை எடுப்பதாக அடையாளம் காணப்பட்டவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள அதிகாரிகள் மூலம் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மறு வாழ்வு வழங்குவதற்கான முன்னேற்பாடுகளை செய்ய வாய்ப்பாக அமையும் என்றும் கருதப்படுகிறது.

முதல் கட்டமாக இந்த பட்டியலில் ஆன்மிக நகரங்களான அயோத்தி காங்கிரா, ஓம்காரேஸ்வர், உஜ்ஜயினி, சோம்நாத், பாவகர், திரிம்பகேஸ்வர், போத்கயா, குவா ஹாடியன், மதுரை ஆகிய நகரங்களும், சுற்றுலா பகுதிகளான விஜயவாடா, கேவாடியா, ஸ்ரீநகர், நம்சாய், குஷி நகர் போன்ற பகுதிகளும், வரலாற்று சிறப்புமிக்க நகரங்களான சாஞ்சி, கஜுராகோ, ஜெய்சல்மேர், திருவனந்தபுரம், அமிர்த சரஸ், புதுச்சேரி, உதய்ப்பூர், வாரங்கல், கட்டாக், இந்தூர், கோழிக்கோடு, மைசூரு, பஞ்ச் குலா, சிம்லா, தேஜ்பூர் ஆகிய பகுதிகளும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள சாஞ்சியில் பிச்சைக்காரர்கள் யாரும் இல்லை என்று அந்த பகுதிகளில் உள்ள மாவட்ட மற்றும் நகராட்சி அதிகாரிகள் மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ளனர். எனவே இந்த பட்டியலில் சாஞ்சிக்கு பதிலாக மாற்று நகரத்தை தேர்வு செய்யவும் மத்திய அரசு தீவிரமாக பரிசீலனை செய்து வருகிறது.
இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் பிச்சைக்காரர்கள் இல்லாத பகுதிகளை உருவாக்க வாய்ப்புகள் ஏற்படும் என்று மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
- பாகிஸ்தானை சேர்ந்த பலர் சவுதி அரேபியாவிற்குள் பிச்சை எடுக்க வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
- பிச்சை எடுக்க நுழைபவர்களை அரபு அமீரகம் பிடித்து மீண்டும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வருகிறது.
துபாய்:
பாகிஸ்தானில் கடந்த சில ஆண்டுகளாகவே பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு, வேலைவாய்ப்பின்மை என பல பிரச்சனைகளை அந்நாட்டு மக்கள் சந்தித்து வருகின்றனர்.
இதற்கிடையே, புனித யாத்திரை செல்வதாக அனுமதி வாங்கி அரபு நாட்டுக்குச் சென்று அங்கு பாகிஸ்தானியர்கள் பலர் பிச்சை எடுத்து வருகின்றனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
இவ்வாறு புனித யாத்திரை பெயரைச் சொல்லி பிச்சை எடுக்க நுழையும் பாகிஸ்தானியர்களை அரபு அமீரகம் பிடித்து மீண்டும் பாகிஸ்தானுக்கு அனுப்பி வருகிறது.
மேலும், அரபு அமீரகத்தில் பிடிபட்ட பிச்சைக்காரர்களில் 90 சதவீதம் பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என அரபு அமீரகத்திற்கான பாகிஸ்தான் வெளியுறவு அதிகாரி தெரிவித்தார்.
இந்நிலையில், புனிதயாத்திரை விசாவின்கீழ் பாகிஸ்தானிய பிச்சைக்காரர்கள் தங்கள் நாட்டிற்குள் நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தி சவுதி ஹஜ் அமைச்சகம் பாகிஸ்தானின் மத விவகார அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மத யாத்திரை என்ற போர்வையில் சவுதி அரேபியாவுக்கு பிச்சைக்காரர்கள் செல்வதைத் தடுக்கும் வழிகளைக் கண்டறியுமாறும் பாகிஸ்தான் அரசிடம் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
- சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த 3 பெண்கள் கைது.
- குழந்தைகளையும் போலீசார் பறிமுதல் செய்தார்கள்.
தாம்பரம்:
சென்னை கடற்கரை-தாம்பரம் வழித்தடத்தில் செல்லும் மின்சார ரெயில்களில் பிச்சை எடுக்கும் பல பெண்களை காணலாம். அவர்கள் பெரும்பாலும் வடமாநில பெண்களாக இருப்பார்கள். கையில் கைக் குழந்தை ஒன்றை வைத்து இருப்பார்கள்.
அந்த குழந்தைகள் சரியான உணவு, பராமரிப்பு இல்லாமல் பரிதாபமாக இருக்கும். அதேபோல் அந்த பெண்களும் இளம் வயதினராக இருப்பார்கள்.
அவர்களும் சரியான உணவு கிடைக்காமல் கந்தலான உடையில் பார்க்க பரிதாபமாக இருப்பார்கள். இந்த மாதிரி வரும் பெண்கள் ஓடும் ரெயில்கள், மக்கள் கூடும் இடங்கள், சிக்னல்களில் நின்று பொதுமக்களிடம் 'அய்யா பசிக்குதுய்யா.... ஏதாவது குடுங்கய்யா...' என்று கையேந்துவார்கள்.
அவர்களின் நிலைமையை பார்த்து இரக்க மனம் கொண்ட பலர் பணம் கொடுத்து உதவுகிறார்கள். இந்த மாதிரி நடமாடும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்த மாதிரி பிச்சை எடுத்து வரும் பெண்களை தாம்பரம் ரெயில்வே போலீசாரும், ரெயில்வே பாதுகாப்பு படையினரும் கண்காணித்து சிலரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் வைத்து இருந்தது அவர்களின் குழந்தைகள் அல்ல என்பதும் அவர்கள் திருடிய குழந்தைகள் என்பதும் தெரிய வந்தது.
இதையடுத்து சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்த 3 பெண்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்தது குழந்தைகளையும் பறிமுதல் செய்தார்கள்.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 7 பச்சிளம் குழந்தைகள் மீட்கப்பட்டு செங்கல்பட்டு நலவாழ்வு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. முகாம்களில் இருக்கும் குழந்தைகளை மீட்க எந்த பெண்ணும் ஆர்வம் காட்டவில்லை.
இதன் மூலம் அவர்கள் பெற்றெடுக்காத குழந்தைகள் என்பது மேலும் உறுதி செய்யப்பட்டது. குழந்தைகள் அனைத்தும் பச்சிளம் குழந்தைகள் என்பதால் அவர்களால் எந்த தகவலும் சொல்ல முடியவில்லை. அவர்களின் பெற்றோர் யார் என்பதை கண்டு பிடிக்கவும் முடியவில்லை.
இதையடுத்து போலீசார் பொதுமக்களை உஷார்படுத்தி இருக்கிறார்கள். குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும், இந்த மாதிரி பிச்சை எடுக்கும் பெண்களை ஊக்குவிக்க வேண்டாம் என்றும் போலீசார் அறிவுறுத்தி இருக்கிறார்கள்.
மேலும் இந்த மாதிரி குழந்தைகளுடன் பிச்சை எடுக்கும் பெண்களை ரெயில்களிலோ, பொது இடங்களிலோ பார்க்க நேர்ந்தால் உடனடியாக போலீஸ் உதவி எண். 139-ல் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று கூறி இருக்கிறார்கள்.
- இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நகரம் இந்தூர்.
- பிச்சை கொடுப்பதன் மூலம் பாவத்தில் பங்குதாரர்களாக மாற வேண்டாம்
இந்தியாவின் தூய்மையான நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நகரம் இந்தூர். மத்திய பிரதேசத்தில் உள்ள இந்த நகரத்திலும் இந்தியாவில் உள்ள வேறெந்த நகரத்தையும் போலவே பிச்சைகாரர்கள் அதிகம் இருக்கிறார்கள்.
இந்த பிச்சைக்காரர்கள் நகரத்தின் தூய்மையைக் கெடுப்பதாகக் கருதிய மாவட்ட நிர்வாகம் அவர்களை ஒழித்துக்கட்ட புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதாவது வரும் ஜனவரி 1ம் தேதி முதல், பிச்சைக்காரர்களுக்குப் பிச்சை போடுபவர்கள் மீது வழக்குப்பதிவு [எஃப்.ஐ.ஆர்] பதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங் செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்தூரில் பிச்சை எடுப்பதைத் தடை செய்து நிர்வாகம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிச்சை எடுப்பதற்கு எதிரான எங்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் இந்த மாத இறுதி வரை தொடரும். ஜனவரி 1 முதல் யாராவது பிச்சை போடுவது, கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும். மக்களுக்கு பிச்சை கொடுப்பதன் மூலம் பாவத்தில் பங்குதாரர்களாக மாற வேண்டாம் என்று இந்தூரில் வசிப்பவர்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்
பிச்சை எடுப்பதற்கு எதிரான பிரச்சார திட்ட அலுவலர் தினேஷ் மிஸ்ரா கூறுகையில், நாங்கள் இதுதொடர்பாக ஆராயும்போது சில பிச்சைக்காரர்கள் வீடு வைத்திருப்பதையும், மற்றவர்களின் குழந்தைகள் வங்கியில் வேலை செய்வதையும் அறிந்தோம்.
ஒரு முறை பிச்சைக்காரர் ஒருவர் ரூ. 29,000 வைத்திருந்ததைப் பார்த்தோம். மற்றொரு பிச்சைக்காரர் வட்டிக்குப் பணம் கொடுத்து வாங்குவதை அறிந்தோம்.
இங்கு பிச்சை எடுப்பதற்காக ராஜஸ்தானைச் சேர்ந்த குழந்தைகளுடன் ஒரு கும்பல் வந்தது. அவர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து குழந்தைகளை மீட்கப்பட்டனர் என்று தெரிவித்தார்.
- பிச்சைக்காரர்கள் குறித்து அரசுக்கு தகவல் தெரிவிப்பதற்காக தனி மொபைல் எண் வழங்கப்பட்டுள்ளது.
- 64 குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்தூர்:
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற அரசு அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இந்தூரில் பிச்சை எடுப்பதும், பிச்சை போடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
பிச்சைக்காரர்கள் குறித்து தகவல் கொடுப்போருக்கு 1000 ரூபாய் வெகுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஜனவரி 2-ம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
பிச்சைக்காரர்கள் குறித்து அரசுக்கு தகவல் தெரிவிப்பதற்காக தனி மொபைல் எண் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துவருகின்றனர். பிச்சைக்காரர்களை அகற்றுவதற்கான இந்த திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும், மக்கள் தங்கள் பகுதிகளில் பிச்சை கேட்கும் நபர்களைப் பற்றிய தகவல்களை வழங்க முன்வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுபற்றி மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் சிங் கூறுகையில், "பிச்சைக்காரர்கள் பற்றி தகவல் கொடுப்பதற்காக வழங்கப்பட்ட எண்ணில் சுமார் 200 பேர் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளனர். அதில், 12 பேர் கொடுத்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 6 பேருக்கு தலா 1000 ரூபாய் வெகுமதி வழங்கப்பட்டுள்ளது" என்றார்.
பிச்சை எடுப்பதற்கான தடையை மீறுவோர் மீது பாரதிய நியாய் சன்ஹிதா சட்டத்தின் 223-வது பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடம் வரை சிறை தண்டனையும், 5,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும்.
இந்தூரில் கடந்த 4 மாதங்களில் மட்டும் 400-க்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் அடையாளம் காணப்பட்டு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். 64 குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இந்தூர் உள்ளிட்ட 10 முக்கிய நகரங்களை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்றும் கனவுத் திட்டத்தை மத்திய சமூக நலன் மற்றும் அதிகாரமளித்தல் துறை தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
- மத்திய பிரதேசத்தில் பிச்சை எடுப்பதும், பிச்சை போடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
- அரசின் உத்தரவை மீறி பிச்சை எடுத்தால் 1 ஆண்டுவரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
மத்திய பிரதேச மாநிலத்தை பிச்சைக்காரர்கள் இல்லாத நகரமாக மாற்ற அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் மத்திய பிரதேசத்தில் பிச்சை எடுப்பதும், பிச்சை போடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது.
பிச்சை எடுப்பதற்கான தடையை மீறுவோர் மீது பாரதிய நியாய் சன்ஹிதா சட்டத்தின் 223-வது பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடம் வரை சிறை தண்டனையும், 5,000 ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், மத்தியபிரதேச மாநில தலைநகர் போபாலில் சாலை சிக்னலில் பிச்சை எடுத்த நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
பிச்சை எடுத்தவரிடம் மாற்று வேலை தருவதாகவும் பிச்சை எடுப்பதை கைவிடுமாறும் போலீசார் தெரிவித்துள்ளனர். அதனை அவர் ஏற்காததால் பிச்சைக்காரர்கள் தடுப்பு சட்டத்தில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.