என் மலர்
நீங்கள் தேடியது "நடுத்தர மக்கள்"
- குளிர்சாதன பெட்டிகள் அதிகரிப்பு
- 2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளில் ஒரு பெட்டியில் 72 பயணிகள் பயணம் செய்ய முடியும்.
நாகர்கோவில் :
கடந்த 2015-ம் ஆண்டு முதல் பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் சாதாரண மக்களின் போக்குவரத்து தேவைக்கு ஏற்ப புதிய ரெயில்கள் இயக்குவதை மத்திய அரசு படிப்படியாக குறைத்து விட்டதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் ஏதேனும் புதிய ரெயில்கள் இயக்கப்பட்டாலும் அவை முழுவதும் குளிர்சாதன பெட்டிகள் கொண்டதாக இயக்கப்படுகிறது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிப்புக்குள்ளாகி வருவதாக கன்னியாகுமரி மாவட்ட ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் சார்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- முழுவதும் குளிர்சாதன பெட்டிகள் கொண்ட ரெயில்களுக்கு பதிலாக சாதாரண எக்ஸ்பிரஸ் அல்லது சூப்பர் பாஸ்ட் ரெயில் இயக்கப்பட்டால் அனைத்து தரப்பு மக்களுக்கும் பயன்படும் வகையில் இருக்கும். ஆனால் தற்போது உயர்வகுப்பு மக்கள் மட்டும் பயணம் செய்யும் படியாக அதிக கட்டணத்துடன் முழுவதும் குளிர்சாதன பெட்டிகள் கொண்ட ரெயில்கள் மட்டுமே புதிதாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் தற்போது இயங்கி கொண்டிருக்கும் ரெயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் மற்றும் சிலிப்பர் பெட்டிகளை அகற்றி விட்டு குளிர்சாதன பெட்டிகளை அதிக அளவில் இணைத்து வருகின்றனர்.
சென்னை எழும்பூரிலிருந்து நாகர்கோவிலுக்கு 2006-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் வாராந்திர ரெயிலில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரெயிலின் பெட்டிகளில் 2-ம் வகுப்பு படுக்கை மற்றும் முன்பதிவில்லாத பெட்டிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த ரெயில் சென்னையில் இருந்து ஜோத்பூருக்கு இயக்கப்படுகிறது. அதற்கு வசதியாக பெட்டிகள் மாற்றப்பட்டுள்ளது.
இந்த ரெயிலில் சென்னையிலிருந்து நாகர்கோவில் மார்க்கம் பயணிக்கும் போது 5 இரண்டாம் வகுப்பு படுக்கை பெட்டிகள் மற்றும் ஒரு முன்பதிவில்லாத பெட்டிகள் என ஆறு பெட்டிகளை எடுத்து விட்டு 6 மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் இணைக்கப்பட இருக்கிறது.
இவ்வாறு மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் போது பயணிகள் அதிக கட்டணம் கொடுத்து குளிர் சாதன பெட்டிகளில் பயணம் செய்யும் நிலைக்கு மறைமுகமாக தள்ளப்படுகிறார்கள்.
தற்போது 2 அடுக்கு படுக்கை பெட்டியில் ஒரு பயணியின் கட்டணம் ரூ.425 ஆகும். மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டியில் ஒரு பயணியின் கட்டணம் 1110 ரூபாய் ஆகும். இரண்டு பெட்டிகளுக்கும் இடையே உள்ள கட்டண வேறுபாடு 685 ரூபாய் ஆகும்.
2-ம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகளில் ஒரு பெட்டியில் 72 பயணிகள் பயணம் செய்ய முடியும். ஆனால் மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகளில் 64 பயணிகள் மட்டுமே பயணம் செய்ய முடியும்.
முன்பதிவில்லாத பெட்டி குறைக்கப்பட்டுள்ளதால், அதில்பயணிக்கும் சுமார் 200 முதல் 500 பயணிகள் பயணம் செய்ய முடியாது. அல்லது அவர்கள் தற்போது உள்ள 3 பெட்டிகளில் இட நெருக்கடிக்கு இடையே வட நாட்டு பயணிகள் போன்று கழிவறையில் உள்ளே இருந்து பயணம் செய்ய வேண்டி உள்ளது.
- 100 கோடி மக்கள் அத்தியாவசிய செலவுகளைத் தவிர வேறு எதையும் வாங்க பணம் இல்லாத சூழலில் உள்ளனர்.
- இந்தியாவின் 10 சதவீத மேல்தட்டு மக்கள் தேசிய வருமானத்தில் 57.7 சதவீதத்திற்கு அதிபதிகளாக உள்ளனர்.
இந்தியாவில் வாழும் 140 கோடி மக்களில் 90 சதவீதம் பேர், அதவாது சுமார் 100 கோடி மக்கள் அத்தியாவசிய செலவுகளைத் தவிர வேறு எதையும் வாங்க பணம் இல்லாத சூழ்நிலையில் உள்ளனர் என்று அதிர்ச்சி அறிக்கை வெளியாகி உள்ளது.
ப்ளும் வெண்ட்சர்ஸ் (Blume Ventures) எனும் முதலீட்டு` நிறுவனம் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வாங்கும் திறன்:
அதில், இந்தியாவின் 140 கோடி மொத்த மக்கள் தொகையில் வெறும் 14 கோடி மக்கள் மட்டுமே சந்தையில் பங்களிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் நுகர்வோர்களாக இருக்கும் 30 கோடி மக்கள் பெரும் தயக்கத்துடனேயே செலவு செய்கின்றனர். ஏறத்தாழ 100 கோடி மக்கள் அத்தியாவசிய செலவுகளைத் தவிர வேறு எதையும் வாங்க பணம் இல்லாத சூழலில் உள்ளனர்.
ஏழை - பணக்காரர் ஏற்றத்தாழ்வு:
இந்தியாவில் ஏற்கனவே உள்ள பணக்காரர்களின் செல்வம் அதிகரித்து வருவதைப் போல பணக்காரர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கவில்லை என்பதை இந்த அறிக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
இதன் பொருள் ஏழைகள் வாங்கும் சக்தியை இழந்து வரும் வேலையில் ஏற்கனவே பணக்காரர்களாக இருப்பவர்கள் மேலும் பணக்காரர்களாகி வருகிறார்கள். ஆனால் புதிய பணக்காரர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லை.
இந்த நுகர்வுத் திறனில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு, மக்களிடம் கடன் சுமை அதிகரித்து வருவதும், நிதி சேமிப்பு குறைந்திருப்பதும் முக்கியக் காரணம் என்கிறது ப்ளும் வெண்ட்சர்ஸ் ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது. .இந்திய ரிசர்வ் வங்கியை மேற்கோள் காட்டி, இந்தியக் குடும்பங்களின் நிகர சேமிப்பு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை சந்திதுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
1990 ஆம் ஆண்டில், இந்தியாவின் 10 சதவீத மேல்தட்டு மக்கள் தேசிய வருமானத்தில் 34 சதவீதத்தை வைத்திருந்தனர். இன்று அதே 10 சதவீத மக்கள் தேசிய வருமானத்தில் 57.7 சதவீதத்திற்கு அதிபதிகளாக உள்ளனர்.

அதேசமயம், நாட்டின் ஏழ்மையான 50 சதவீத மக்களின் வருமானம் 22.2 சதவீதத்திலிருந்து வெறும் 15 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதாவது பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகவும், ஏழைகள் மேலும் ஏழைகளாவும் மாறியுள்ளனர்.
நசுங்கும் நடுத்தர வர்க்கம்:
பணவீக்கத்தால் நடுத்தர வர்க்கத்தினரின் சம்பளத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எதுவும் ஏற்படவில்லை. கடந்த பத்து ஆண்டுகளில், வரி செலுத்தும் நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் கிட்டத்தட்ட தேக்க நிலையில் உள்ளது, அதாவது அவர்களின் சம்பளம் பாதியாகக் குறைந்துள்ளது.
நடுத்தர வர்க்கத்தினரின் சேமிப்பு கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த மட்டத்தில் உள்ளது. மக்களின் தேவைகள் அதிகரித்து வருகின்றன.

ஆனால் வருமானம் அப்படியே உள்ளது. இந்தியாவின் நுகர்வோர் தேவைக்கான உந்து சக்தியாக விளங்கும் நடுத்த வர்க்கத்தினர் நசுக்கப்பட்டு வருவதாகத் ப்ளும் வெண்ட்சர்ஸ் ஆய்வறிக்கை நிறுவியுள்ளது.