search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருந்தகம்"

    • பண உதவி செய்வதாக ஏமாற்றி தனது வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
    • ஆபாச வீடியோக்கள் வாட்சப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    கர்நாடகாவில் பல்வேறு பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ பதிவு செய்த மருந்தக உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

    தாவாங்கரே மாவட்டத்தில் சன்னகிரி நகரில் மெடிக்கல் கடை வைத்து நடத்தி வருபவர் அம்ஜத். இவர் தனது கடைக்கு வந்த பெண்களுக்கு பண உதவி செய்வதாக ஏமாற்றி தனக்கு சொந்தமான வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். குடும்பத்துடன் வசித்து வரும் அம்ஜத், இதற்கென்றே தனியாக ஒரு வீட்டை வைத்திருந்துள்ளார்.

    மேலும் வன்கொடுமை செய்வதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு அந்த பெண்களை மிரட்டி மீண்டும், மீண்டும் வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்து வந்தார்.

    இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண்களில் சிலர் சென்னகிரி போலீசிலும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்திடமும் புகார் செய்தனர். அதன்பேரில் இதுபற்றி விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் உத்தரவிட்டார்.

    வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் 30 பெண்களை அம்ஜத் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. அதில் ஒரு சிறுமியும் அடங்குவார்.

    அவரது செல்போனில் இருந்து 100-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களையும் போலீசார் கைப்பற்றினர். தனது கடைக்கு வரும் பெண்கள், சாலையில், பஸ்ஸில் என பொது இடங்களில் நடமாடும் பெண்களையும் அஜ்மத் படம்பிடித்து வைத்திருக்கிறார்.

    ஆபாச வீடியோக்கள் வாட்சப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த வீடியோக்களை யாரும் பகிர கூடாது என்றும் மீறி பகிர்ந்தால் கடுமையான நடவைடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் எச்சரித்துள்ளார். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஏய்... நான் சொல்றதைக் கேளு. என் முன்னாடி பேரம் பலிக்காது.
    • கடை நடத்துனமா வேண்டாமா? நேரடியாக எஃப்.ஐ.ஆர் போடும் அளவுக்கு உங்க கடையில் நிறைய குறைகள் இருக்கு

    உத்தரப் பிரதேசத்தில் மெடிக்கல் ஷாப் கடைக்காரரிடம் பெண் மருந்து ஆய்வாளர் [Drug inspector] ஒருவர் லஞ்சம் கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    உத்தரப் பிரதேசத்தில் ஷாமிலி மாவட்டத்தை சேர்ந்த மருந்து ஆய்வாளர் நிதி பாண்டே, மருந்தகம் ஒன்றில் ஆய்வு செய்தபோது உரிமையாளரிடம் லஞ்சம் கேட்கிறார்.

    'ஏய்... நான் சொல்றதைக் கேளு. என் முன்னாடி பேரம் பலிக்காது. எவ்வளவு சொன்னாலும் செய். கடை நடத்துனமா வேண்டாமா? நேரடியாக எஃப்.ஐ.ஆர் போடும் அளவுக்கு உங்க கடையில் நிறைய குறைகள் இருக்கு' என்று அவர் மருந்தக உரிமையாளரிடம் லஞ்சப் பணத்துக்கு பேரம் பேசுவது பதிவாகி உள்ளது.

    இந்த வீடியோ பரவியதை தொடர்ந்து டிசம்பர் 30 ஆம் தேதி பாண்டே பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். லஞ்சம் வாங்குதல் மற்றும் பேரம் பேசுதல், வியாபாரியை அச்சுறுத்தல் மற்றும் வியாபாரத்திற்கு இடையூறு செய்தல் போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் உ.பி. வருவாய், உணவு பாதுகாப்பு மற்றும் மருந்துகள் முதன்மை செயலர் பி.குருபிரசாத் இந்த பணிநீக்க உத்தரவை பிறப்பித்தார்.

    இதற்கிடையே தன் மீதான குற்றச்சாட்டுகளை பாண்டே மறுத்துள்ளார். தனியார் ஊடகத்திடம் பேசிய அவர், வைரலாகும் வீடியோ முற்றிலும் போலியானது. இது வியாபாரிகளால் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ. அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டுகள் என்று தெரிவித்துள்ளார். 

    • கடையில் இருந்த ஏராளமான மருந்து பொருட்கள் எரிந்து நாசமானது.
    • மின்கசிவு காரணமாக இந்த தீவித்து ஏற்பட்டதாக தெரிகிறது.

    சோழிங்கநல்லூர்:

    சோழிங்கநல்லூர், பொன்னியம்மன் கோவில் முதல் தெருவை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வம். இவர், ஓ.எம்.ஆர்.ராஜீவ் காந்தி சாலை, எம்.ஜி.ஆர். தெரு சந்திப்பில் மருந்தகம் நடத்தி வருகிறார்.

    வியாபாரம் முடிந்ததும் வழக்கம் போல் மருந்தகத்தை பூட்டிச்சென்றார். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் மருந்தகத்தின் உள்ளே இருந்து கரும்புகை வெளியேறியது.

    இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தமிழ்ச்செல்வனுக்கும் துரைப்பாக்கம் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சுமார் 2 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் கடையில் இருந்த ஏராளமான மருந்து பொருட்கள் எரிந்து நாசமானது. சுமார் ரூ.20 லட்சம் மதிப்பிலான மருந்துகள் சேதம் அடைந்ததாக தெரிகிறது.

    மின்கசிவு காரணமாக இந்த தீவித்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து செம்மஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மாவட்டத்தில், 1,500க்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் உள்ள நிலையில் 3 ஆய்வாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்
    • ஆய்வாளர்கள் எண்ணிக்கை குறைவால் ஆய்வு பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.

    திருப்பூர்:

    தமிழகத்தில் மருந்து கட்டுப்பாட்டு துறை 15 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு மருந்துக்கட்டுப்பாட்டு உதவி இயக்குனர், முதுநிலை மருந்தக ஆய்வாளர், மருந்தக ஆய்வாளர் என பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    கட்டுப்பாட்டுத்துறை தொடர்பான பிரச்னைகளை கண்டறியும் பொருட்டு மத்திய அரசு 2003ல் புதிய கமிட்டி ஒன்றை நியமித்தது.அந்த கமிட்டி பல்வேறு மாநிலங்களில் ஆய்வு மேற்கொண்டு 200 மருந்துக்கடைகளுக்கு ஒரு மருந்தக ஆய்வாளர் எனும் விகிதத்தை கடைபிடிக்க அறிவுறுத்தியது.

    அந்த நிலையே தற்போது வரை நீடிக்கிறது. ஆனால் திருப்பூர் மாவட்டத்தில், 1,500க்கும் மேற்பட்ட மருந்துக் கடைகள் உள்ள நிலையில் 3 ஆய்வாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர்.அவர்களுக்கு தனியே அலுவலகம் கிடையாது. மருந்துகள் துறை தொடர்பான கோர்ட்டு, வழக்கு விசாரணைக்கு விளக்கம் அளிக்க ஆய்வாளர்களே சென்னை செல்ல வேண்டியுள்ளது. குறைந்தது 6 முதல் 8 ஆய்வாளர் பணியில் இருந்தால் அவ்வப்போது மருந்தகங்களில் தேவையான சோதனை மேற்கொள்ள முடியும்.

    ஆய்வாளர்கள் எண்ணிக்கை குறைவால் ஆய்வு பணிகளில் தொய்வு ஏற்படுகிறது. எனவே முறையற்ற மற்றும் தடை செய்யப்பட்ட மருந்து விற்பனையைக் கண்டறிந்து தடுக்க போதிய எண்ணிக்கையில், மருந்தக ஆய்வாளர்கள் பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.  

    ×