search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முடிவிலி"

    • மதன் கார்க்கி ‘முடிவிலி’ என்னும் இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார்.
    • முடிவிலி ஆல்பத்தில் 10 பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

    கவிஞர் வைரமுத்து மகனான மதன் கார்க்கி திரை உலகில் பாடல் ஆசிரியர், வசனகர்த்தா என பன்முகங்கள் கொண்டவராக திகழ்ந்து வருகிறார்.

    பல படங்களுக்கு பாடல்களை எழுதி வரும் மதன் கார்க்கி தற்போது 'முடிவிலி' என்னும் புதிய இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளார். இது பற்றி மதன் கார்க்கி கூறியதாவது:-

    நான் உருவாக்கியுள்ள முடிவிலி ஆல்பத்தில் 10 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. காதல் சம்பந்தப்பட்ட பாடல்களாக உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆல்பத்தில் கிராமிய காதல், நகர காதல் என முழுவதும் காதலை மையமாகக் கொண்டு ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

    ஆல்பத்திற்கு நானே இசையமைத்துள்ளேன். ஆல்பத்தில் சிறப்பு அம்சமாக பாடலை பாடகர்கள் பாடவில்லை. முழுவதும் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் 10 பாடல்களையும் உருவாக்கியுள்ளேன். தமிழகத்தில் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஒரு இசை ஆல்பம் முழுவதும் உருவாக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறை.

    வருகிற 26-ந் தேதி ஸ்பார்ட்டி பைவ் மற்றும் சில வலைதளங்களில் இந்த இசை ஆல்பம் வெளியாகிறது. என் தந்தை வைரமுத்து ஆல்பத்தை கேட்டு விட்டு நன்றாக பாராட்டினார்.

    மேலும் ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்தி பாடல்களை உருவாக்கி இருப்பது பற்றி வியந்து கேட்டார்.

    ஏ.ஐ. தொழில் நுட்பத்தால் ஆபத்து கிடையாது. கிராம போன் வரும்போது பாடகர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

    எதிர்ப்புகளை மீறி கிராமபோன் அறிமுகமானது. ஏ.ஐ. தொழில்நுட்பம் தவிர்க்க முடியாதது. ஆனால் எல்லாவற்றையும் அதில் பண்ணி விட முடியாது. அதற்கும் மனிதன் தேவைப்படுகிறான்.

    மனிதனின் கட்டளைப்படி தான் ஏ.ஐ.தொழில்நுட்பம் மூலம் எதையும் உருவாக்க முடியும். புதிதாக அனிமேஷன் கிராபிக்ஸ் பணிகளுக்கு அடையாறில் 'பா' என்ற பெயரில் ஸ்டுடியோ தொடங்கியுள்ளேன்.

    திரைப்படங்களுக்கான கிராபிக்ஸ் பணிகள் இங்கு நடைபெறுகிறது. புராண கதையில் இந்தியில் உருவாகும் கர்ணா படத்துக்கு வசனம் எழுதியுள்ளேன். படத்தில் சூர்யா, ஜான்வி கபூர் இணைந்து நடிக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • நிகழ்ச்சியில் சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் செண்பகவிநாயகம், தென்காசி வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    சிவகிரி, வாசுதேவநல்லூர் பகுதியில் வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய செயலாளரும், யூனியன் சேர்மனுமான பொன் முத்தையா பாண்டியன் தலைமையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    இதில் சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் செண்பகவிநாயகம், தென்காசி வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன், பேரூராட்சி தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, மாவட்ட வக்கீல் அணி மருதப்பன், மாவட்ட மாணவரணி துணை செயலாளர் முத்துலட்சுமி, சுமதி, தங்கராசு, தங்கேஸ்வரன், அவைத் தலைவர் துரைராஜ், துணை செயலாளர் முனியாண்டி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி கார்த்திக், ஆனந்தா ஆறுமுகம், புல்லட் கணேசன், இளையராஜா, சி.எஸ். மணி, வாசு. பேரூர் செயலாளர் ரூபி பாலசுப்பிரமணியன், மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், சிக்கந்தர் பாபு, குட்டியப்பன், மாரிமுத்து, கட்டபொம்மன், பாண்டி, முருகன், சுந்தர், மாரியப்பன், செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×