search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெற்றிலை பாக்கு"

    • உடலில் கபம் சேர்வதைத் தடுக்கிறது.
    • தைராய்டு சம்பந்தமான பிரச்சனைகளை குறைக்கிறது.

    பொதுவாக செரிமான சக்திக்கு நல்லது என்பதால் அந்த காலத்தில் மூன்று வேளையுமே வெற்றிலை, பாக்கு போடும் வழக்கம் இருந்தது. ஆனால் இன்று வெற்றிலை, பாக்கு போடுவது இமேஜை பாதிக்கிற விஷயமாக மாறிவிட்டது. மற்றும் வெற்றிலை, பாக்கு போட்டால் பற்கள் கறையாகும் என்று பல் மருத்துவர்கள் அதை தவிர்க்க சொல்கிறார்கள்.

    வெற்றிலை, பாக்கு போடுவது மிகவும் சரியானதே. நோயில்லாத வாழ்க்கைக்கு நம் முன்னோர்கள் காலம் காலமாகப் பின்பற்றிய நல்ல வழக்கம் இது. இதை ஆரோக்கியத்துக்கான அன்றாடப் பழக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

    வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும், கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின், வைட்டமின் சி மற்றும் 44 அளவிலான கலோரி ஆகியவை நிறைந்துள்ளது.

    வெற்றிலை குறித்து அண்மையில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அதில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால் (Chavicol) என்னும் பொருள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. கால்சியம், இரும்புச்சத்து ஆகியன அதிகம் உள்ள வெற்றிலையை பயன்படுத்தி பல நோய்களை குணப்படுத்த முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நம் உடலில் வாதம், பித்தம், கபம் என மூன்று விஷயங்கள் உண்டு. இந்த மூன்றும் குறையவும் கூடாது, அதிகரிக்கவும் கூடாது. சரியான அளவில் இருக்க வேண்டும். வெற்றிலை போடுவது உடலில் கபம் சேர்வதைத் தடுக்கிறது.

    ஆஸ்துமா, தலையில் நீர்கோர்த்தல் போன்ற பல விஷயங்களுக்கு வெற்றிலை மருந்தாக செயல்படுகிறது. வெற்றிலை போடுவதால் வைட்டமின் சி உள்ளிட்ட சத்துகள் கிடைக்கிறது. இதனால் ஒட்டுமொத்த ஆரோக்கியத்துக்கும் நல்லது. எலும்புகளுக்கும் வலுசேர்க்கக்கூடியது. வாயுத்தொல்லை வராது.

    வெற்றிலையோடு வால்மிளகு, ஏலக்காய், கிராம்பு, சிறிது ஜாதிக்காய் சேர்த்து சாப்பிடுவது செரிமான சக்தியை இன்னும் சிறப்பாக்கும்.

    வெற்றிலை பாக்கு போடுவதால் சில வகையான தைராய்டு பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். வெற்றிலை போடுவதால் தைராய்டு சம்பந்தமான பிரச்சனைகளை குறைக்கிறது.

    தைராய்டு பிரச்சனை இருப்பவர்களுக்கு வெற்றிலை பாக்கு மற்றும் சுண்ணாம்பு, தேவைப்பட்டால் கிராம்பு சேர்த்து போடுவதற்கு டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது நல்ல மாற்றத்தினை உணரமுடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    • அ.தி.மு.க. மாநாட்டில் பங்கேற்க வெற்றிலை பாக்கு வைத்து செல்லூர் ராஜூ அழைப்பிதழ் கொடுத்தார்.
    • தொண்டர்களுக்கு வேட்டி, சேலை வழங்கி மாநாட்டில் உற்சாகமாக பங்கேற்க அழைப்பி தழ்களை வழங்கி வருகிறார்.

    மதுரை

    மதுரையில் அ.தி.மு.க. எழுச்சி மாநாடு வருகிற 20-ந் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்கும் வகையில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மாநாட்டில் பங்கேற்கும் தொண்டர்களுக்கு உணவு மற்றும் குடிநீர் வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான தொண்டர்களை மாநாட்டில் பங்கேற்க செய்யும் வகையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் தீவிர களப்பணியாற்றி வருகி றார்கள்.

    மதுரையில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் அ.தி.மு.க. தொண்டர்களை மாநாட்டில் திரளாக பங்கேற்க செய்யும் வகையில் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகிறார்கள்.

    முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாநாட்டுக்கான அழைப்பிதழ்களை சர்வ சமய பிரார்த்தனைகள் செய்து பொதுமக்களுக்கு வழங்கி வருகிறார்.

    இன்று காமராஜர் சாலை பகுதியில் உள்ள கோவிலில் அழைப்பிதழ்களை வைத்து சாமி கும்பிட்ட செல்லூர் ராஜூ, அந்த பகுதியில் வீதி வீதியாக சென்று பொது மக்களுக்கு மாநாட்டு அழைப்பிதழ்களை வழங்கி னார். அப்போது வியாபா ரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோருக்கு வெற்றி லை பாக்குடன் அழைப்பி தழை வைத்து கொடுத்து மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

    அ.தி.மு.க. நிர்வாகிகள் வில்லாபுரம் ராஜா, எம். எஸ்.பாண்டியன், அண்ணாதுரை, குமார், சோலை ராஜா, கலைச் செல்வம், சண்முகவள்ளி மற்றும் முக்கிய நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    மதுரை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர், முன்னாள் அமைச்சர் ஆர். பி.உதயகுமார் மாநாட்டில் திரளான பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் அழைப்பிதழ்களை வழங்கி வருகிறார். பொது மக்களுக்கு மரக்கன்று களை வழங்கி மாநாட்டில் பங்கேற்கும்படி அழைப்பு விடுத்து வரும் ஆர்.பி. உதயகுமார் மதுரை புறநகர் மாவட்டத்தில் இருந்து சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்களை மாநாட்டிற்கு அழைத்துவர திட்டமிட்டு தீவிர பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

    பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் நல உதவிகளை வழங்கி மாநாட்டில் பங்கேற்க செய்யும் வகையில் அவர் அழைப்பு விடுத்து வருகிறார். மேலும் இருசக்கர வாகனங்கள், கார்களில் அ.தி.மு.க. மாநாட்டின் லோகோவை ஒட்டியும் மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து வருகிறார்.

    மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கிழக்கு மாவட்டத்தில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு வேட்டி, சேலை வழங்கி மாநாட்டில் உற்சாகமாக பங்கேற்க அழைப்பி தழ்களை வழங்கி வருகிறார்.

    மதுரை மாவட்டத்தில் இருந்து அதிகப்படியான தொண்டர்களை பங்கேற்க செய்யும் வகையில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் தீவிரப்பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் மாநாட்டிற்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில் தலைமைகழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் தமிழக முழுவதும் கட்சி தொண்டர்களை சந்தித்து மாநாட்டில் பங்கேற்க அழைப்பிதழ்களை வழங்கி வருகிறார்கள்.

    ×