என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "சகோதரன்"
- இதை வெளியே சொல்லக்கூடாது என்று சிறுமியை மிரட்டி பயமுறுத்தி வைத்துள்ளனர்.
- கத்த முயன்ற சிறுமியை அவர்கள் அடித்துச் சித்திரவதை செய்துள்ளனர்
பள்ளியில் நடத்தப்பட்ட குழந்தைகளுக்கான பாலியல் விழுப்புணர்வான குட் டச் பேட் டச் பயிற்சியின்மூலம் 13 வயது சிறுமிக்கு நேர்ந்த அவலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள பள்ளியொன்றில் நடந்த குட் டச் பேட் டச் விழுப்புணவர்வின்போது அப்பள்ளியில் பயின்று வரும் 13 வயது சிறுமி தான் தனது தந்தையாலும், ஒன்றுவிட்ட சகோதரனாலும், உறவினறாலும் தொடர்ச்சியாக வன்புணர்வு செய்யப்பட்டதாக கூறியது ஆசிரியர்களை அதிச்சிக்குள்ளாக்கியது.உடனே இதுகுறித்து போலீசிடம் தெரிவிக்கப்பட்டது.
சிறுமியின் தந்தையும், ஒன்றிவிட்ட சகோதரனும், உறவுக்கார அங்கிள்- உம் தொடர்ச்சியாக சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்துள்ளனர். மேலும் இதை வெளியே சொல்லக்கூடாது என்று சிறுமியை மிரட்டி பயமுறுத்தி வைத்துள்ளனர்.
துன்புறுத்தலின்போது கத்த முயன்ற சிறுமியை அவர்கள் அடித்துச் சித்திரவதை செய்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த மூவரையும் போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- ஜேம்ஸ்ராஜாவும், சகாய செல்வனும் மாறி மாறி அவதூறாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
- கைது செய்யப்பட்ட நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி :
இரணியல் அருகே உள்ள கண்டன்விளை குழியூரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 68). இவரது மகன்கள் ஜேம்ஸ்ராஜா (35), சகாய செல்வன் (33). கட்டிட தொழில் செய்து வந்த இவர்களுக்கு திருமணம் ஆகவில்லை.
இவர்கள் அடிக்கடி மது அருந்தி வந்துள்ளனர். கடந்த 9-ந் தேதி மாலை 2 பேரும் மது போதையில் வீட்டிற்கு வந்தனர். அப்போது ஜேம்ஸ்ராஜாவும், சகாய செல்வனும் மாறி மாறி அவதூறாக பேசி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது ஆத்திர மடைந்த ஜேம்ஸ்ராஜா, அருகில் கிடந்த மது பாட்டி லை உடைத்து சகாய செல்வன் கழுத்தில் குத்தி னார். இதில் பலத்த காயமடைந்த சகாய செல்வ னை அக்கம் பக்கத்தினர் மீட்டு உடனடியாக ஆசாரிப் பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை சகாயசெல்வன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து ஜேம்ஸ் ராஜா மீது பதியப்பட்டு இருந்த கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக போலீசார் பதிவு செய்தனர். ஜேம்ஸ் ராஜா ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாட்டிலை உடைத்து தம்பியை அண்ணன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்